Jump to content

துரத்தியே விட்டனர் 90றில்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

22852948_2014208738814956_2987403787475478416_n.jpg

 

(யாழ். முஸ்லிம்கள் பலவந்தமாக - துப்பாக்கிச் சனியன் மூலம் தமது பூர்வீக மண்ணிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு - இன்றுடன் ஆண்டுகள் இருபத்தியேழு! அதனை நினைவுகூர்ந்து - சமர்ப்பணமாக இக்கவிதை)-மீலாத் கீரன்-இரு மணிநேர அவகாசத்தில் -

துரத்தியே விட்டார்கள்பெட்டி படுக்கையின்றி...

பால்மா பால்போத்தலின்றிபாலகர் பசியார ஒருதுண்டுப் பாணுமின்றி..

.கால்களில் செருப்பு மாட்டக்கூடகால அவகாசந் தராமல்அக்கால நகரப் பொறுப்பாளன்ஆஞ்சநேயர் மேற்பார்வையில்துப்பாக்கிகளின்

 குழாய்முனையில்குப்பைகளாய் கூளங்களாய்  யாழ். ஜின்னா மைதானத்தில்கூட்டிச் சேர்க்கப்பட்ட சருகுகளானோம்.

.பலவகைப் பொதுக்கூட்டங்களுக்கு  களம் பல தந்து -தடகளப் போட்டிகளாலும் தடையறா கால்பந்து போட்டிகளாலும் வெற்றிகள் பல கண்டவிளைநிலமாம் -

அம்மைதானம் எங்களது ஒரேயொருபொதுமைதானம் -

அன்றுதான் அழுதது சத்தமிட்டு அழுதது! அழுத அழுகையில் பக்கத்து மையவாடியில்அடக்கியிருந்த மையத்துக்கள் கூடஅன்று அழுதிருக்கும்...

!அன்றுமுதல் இன்றுவரை நாங்கள்இன்னும் தூங்கவில்லை -

சரியாய்.இன்றுடன் ஆண்டுகள்இருபத்தி யேழு.ஆனாலும் அழவில்லை

இப்போதும் !பெரும்சவால்களுக்கு மத்தியில்பெற்றெடுத்த இருநூறு வீடுகளும்கூடகேள்விக்குறியில் -

இன்று ..!ஆர்ப்பாட்டங்கள் செய்தும்அசைகின்றன ரில்லர்அதிகாரிகள் சிலர் -சில்லறையாகச்சிலவற்றைத் தந்துகணக்கினை முடிக்கும்கணக்குடன்!

இதுதான் இன்றும் நிலைமை!ஆனாலும் அழவில்லை ஒப்பாரி வைத்து வையவுமில்லை!

யாழ்தான் எங்களதும்தாயக மென்பதால்!l

www.tharaasu.com

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது உப்பிட்டொரை உள் அளவும் இல்லாவிடடாலும் 
ஒரு கணமாவது நினை . 

எங்களுக்கு செய்த துரோகம் .... எங்களுடன் போகட்டும் 
வந்து போற உலகுக்கு காட்ட என்றாலும் 
கூட்டி வைத்து சோறு போட்ட ... சிங்களவனுக்கு என்றாலும் 
தொப்பி பிராட்மால் இருக்க பழகுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க 90-இலை ஒழுங்கா அனுப்பி வைச்கவும்  போகலைன்னா எங்களோடை சேர்ந்து 95-இலை அதைவிட படுமோசமானநிலையிலை  போயிருப்பீங்க. எப்பிடி பார்த்தாலும் நீங்க அதிஸ்டகாரர்தான். 

எல்லாத்துக்கும் காரணம் சிங்கள அரசுதான் எண்டு நினைக்கிறதை விட்டுப்புட்டு தமிழ் மக்கள்ளை பழிய போடாதீங்க. உங்க நானா பதியுதீன் உட்பட அனைத்து முஸ்லிம் தலைமைகளும் சிங்களவனோட கூடநின்னு தமிழருக்கு குழிபறிச்சாங்க அதை நாங்க மறக்கலையா?. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்த வேலைக்கு.... திரத்தி விடாமல்,  வேறை...  என்னத்தை  செய்திருக்க வேண்டும்,  என்பதையும் சொல்லுங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ தமிழினத்துக்கு தியாகம் செய்து களைச்சுப்போன மாதிரி கவிதை வேறை.......செய்தது முழுக்க புரட்டும் புரளியும்....tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருந்து போனது மட்டும் தான் நினைவிருக்கிறது.

ஊர்காவல் படை என்ற பெயரில் செய்த அநியாயங்கள் எல்லாமே மறந்து போச்சு.

கிழக்கு மாகாணத்தில் ராணுவத்துடன் சேர்ந்து எல்லைக் கிராமங்களுக்குள் புகுந்து கொலை களவு பாலியல் வல்லுறவு என்று செய்ததொன்றுமே நினைவில் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.