Jump to content

 இந்த வாரம் தமிழக அமைச்சரவை... மாற்றம்!


Recommended Posts

 
 
 
 

 இந்த வாரம் தமிழக அமைச்சரவை... மாற்றம்!

 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

 

 
 இந்த, வாரம், தமிழக ,அமைச்சரவை,மாற்றம்!
 

அ.தி.மு.க., என்ற பெயரும், இரட்டை இலை சின்னமும், முதல்வர் பழனிசாமி அணிக்கு கிடைத்ததும், இந்த வாரம், தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுகிறது.

ஆட்சியில் உள்ள, 'ஸ்லீப்பர் செல்' அமைச்சர்கள், நான்கு பேருக்கு, 'கல்தா' கொடுக்கப்படுவதோடு, சசிகலா ஆதரவாளர்களாக கருதப்படும், 27 மாவட்ட செயலர்களை, பதவியில் இருந்து நீக்கவும் அதிரடி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா அணி,
பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்
அறிவிக்கப்பட்டதும், இரு அணியினரும், இரட்டை இலை சின்னம் கோரி, தேர்தல் கமிஷனில்,
மனு தாக்கல் செய்தனர்.

உடனே முடிவெடுக்க முடியாததால், அ.தி.மு.க., பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை,
தேர்தல் கமிஷன் முடக்கியது.பின், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன. கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட, சசிகலா குடும்பத்தினர், தனி அணியாக செயல்படுகின்றனர்.
 

 

வாதாடுகின்றனர்


'இரு அணிகளும் இணைந்ததால், தங்களுக்கு, கட்சியின் பெயரையும், சின்னத்தையும் தர வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி தரப்பில் வாதாடுகின்றனர். சசிகலா தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகி, இரட்டை இலையை முடக்கும் நோக்கத்தில், புது புது மனுக்களை தாக்கல் செய்து, முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில், டில்லி தேர்தல் கமிஷனில், இன்று இறுதிக்கட்ட விசாரணை நடக்கிறது. இதில், சின்னம்,
தங்களுக்கு கிடைத்து விடும் என, முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும், நம்பிக்கையுடன் உள்ளனர். இது, இரு அணிகள் இணைப்பை விட, முக்கியத்துவம் வாய்ந்ததாககருதப்படுகிறது.

சின்னம் கிடைத்ததும், முதற்கட்டமாக, இந்த வாரம் தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்படுகிறது. இதில், தினகரனின், 'ஸ்லீப்பர் செல்'களாக செயல்படும், நான்கு அமைச்சர்களை நீக்கவும், 27 மாவட்ட செயலர்களின் பதவியை பறிக்கவும், முதல்வர் பழனிசாமி தரப்பு, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

'சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, 25 பேர், ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர்' என, தினகரன், தங்கத்தமிழ்செல்வன் ஆகியோர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
 

 

பதிலடி


'அமைச்சர் செங்கோட்டையன் கூட எங்கள் ஆதரவாளர் தான்' என, செய்தி தொடர்பாளர், புகழேந்தி பேசி வருகிறார். அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் செங்கேட்டையன், 'நான் அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி அல்ல' என, காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
இருப்பினும், சசிகலா அணிக்கு, ஸ்லீப்பர் செல்லாக செயல்படும் அமைச்சர்களில், பெண் அமைச்சர் ஒருவர், கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர், தென் மண்டல அமைச்சர்கள் இருவர் என, நான்கு அமைச்சர்கள் களையெடுக்கப்பட உள்ளனர்.

நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், புதிய
அமைச்சர்களின் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.ஜெ., மறைவுக்கு பின், கட்சியின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா பொறுப்பேற்ற பின், தன் ஆதரவாளர்கள், 20க்கும் மேற்பட்டோரை, அமைப்பு செயலர்களாக நியமித்தார். அவர்களையும், களையெடுத்து விட்டு, குறைந்த எண்ணிக்கையில், புதிய அமைப்பு செயலர்கள்நியமிக்கப்பட உள்ளனர்.

சசி ஆதரவாளர்களாக கருதப்படும், 27 மாவட்ட செயலர்களை மாற்றி விட்டு, கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சும் வகையில், புதிய மாவட்ட செயலர்களும் நியமிக்கப்பட உள்ளனர். கட்சிக்கு சோதனையான காலத்தில், அணி மாறாமல், ஜெ., விசுவாசியாக செயல்பட்டு வரும், 10 பேருக்கு, வாரியத் தலைவர் பதவிகளை வழங்கவும், முதல்வர் பழனிசாமி தரப்பு வியூகம் வகுத்துள்ளது.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1885256

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.