Jump to content

அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்றுகாலை முஸ்லிம்கள் போராட்டம். (படங்கள்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாண மாவட்டத்தில்  மீள்குடியேறிய முஸ்லீம்   மக்கள்  அரசினால் வழங்கப்படும்  வீடமைப்பு விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து   போராட்டம்  ஒன்றினை  யாழ் மாவட்ட  செயலக வாயிலில் நடாத்தினர்.    யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில்  இன்று(26) வியாழக்கிழமை   காலை 8  மணி முதல் 10  மணிவரை   இவ்வடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த வீட்டுத்திட்டத்தில் தமக்கு   பல்வேறு காரணங்களை காட்டி இறுக்கமான நிபந்தனைகளை  அரச இயந்திரங்கள் மேற்கொள்வதாக தெரிவித்தே   இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதன் போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பின்வருமாறு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

அதாவது மீள்குடியேற்ற செயலணியின் மூலம் 200 வீடுகள் முஸ்லிம் மக்களுக்காக 2016 டிசம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் இன்றுவரை அதில் ஒரு வீட்டையாவது குறித்த  மக்களுக்கு வழங்கவில்லை எனவும்  2017ம் வருடம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்ற நிலையில் 20க்கும் குறைவானவர்களுக்கே வீடுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தனர்.

எனவே தான்  இந்த அநீதிக்கு எதிராக நாம் குரல்கொடுப்பதாகவும்  எமது தாய் மண்ணிலிருந்து வெளியேற்றும் அராஜகத்தை சில  அரச  அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். எனவே தான் எமது கோரிக்கை   மக்களுக்காக வழங்கப்பட்ட 200 வீடுகளும்  முழுமையாக வழங்கப்படல் வேண்டும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சமாதானமான முறையில்  உயர் அதிகாரிகளுடன் பேசினோம் ஆனால் எந்தப் பலனும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே எமது நிலையை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கு இந்த  அமைதியான அடையாள சத்தியாக்கிரகப் போராட்டத்தை மேற்கொண்டோம் என கூறினர்.

அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்றுகாலை முஸ்லிம்கள் போராட்டம். (படங்கள்)

அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்றுகாலை முஸ்லிம்கள் போராட்டம். (படங்கள்)

அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்றுகாலை முஸ்லிம்கள் போராட்டம். (படங்கள்)

அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்றுகாலை முஸ்லிம்கள் போராட்டம். (படங்கள்)

mus4.jpg

mus3.jpg

mus2.jpg

 

mus1.jpg

mus6.jpg

 


முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=178617 .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஆர்ப்பாட்டம்...தமிழரே எமது இதய பூமியை விட்டு வெளியேறு....இது விரைவில் யாழ் கச்செரிக்கு முன்பாக...

Link to comment
Share on other sites

இவர்கள் இடையில் வந்தவர்கள்.
கிழக்கில், மன்னாரில் பெருமளவு கள்ளக்காணிகளை கைப்பற்றியது போல ஏனைய வடக்கு பிரதேசங்களில் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். 

இவர்களுக்கு வீடுகள் வழங்குவது தமிழ் சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

இவர்கள் இடையில் வந்தவர்கள்.
கிழக்கில், மன்னாரில் பெருமளவு கள்ளக்காணிகளை கைப்பற்றியது போல ஏனைய வடக்கு பிரதேசங்களில் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். 

இவர்களுக்கு வீடுகள் வழங்குவது தமிழ் சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

மன்னாரில் கள்ள காணி கைபற்றினால் அதை நாம் சட்ட ரீதியாக மீட்க முடியாதா ??

நான் அவதானித்தவரை 1981 இல் 25% இருந்து 2012இல் 5% குறைவாக  இருந்து 2016இல் மன்னாரில் இவர்களது சன தொகை 46%க அதிகரித்து இருக்கின்றது

Link to comment
Share on other sites

8 hours ago, Dash said:

மன்னாரில் கள்ள காணி கைபற்றினால் அதை நாம் சட்ட ரீதியாக மீட்க முடியாதா ??

மீட்க முடியும்.

ஆனால் எங்கள் பெரும்பாலான மக்கள் திருந்த வேண்டும். அவர்களுக்கு தாங்கள் முயற்சி செய்யாமல் வேறு யாராவது தான் மீட்டு தரோணும் என்ட நினைப்பிருக்கு. அவரவர் தங்கள் காணிகளை மீட்க முன்வந்தால் இலகுவில் மீட்டு விடலாம்.

Link to comment
Share on other sites

இலங்கை சிங்களவரின் நாடு என்று பாரதியாரே "சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாடி உறுதி செய்து இருக்கிறார்.
இதற்குள் கள்ளத்தோணித் தமிழர் முஸ்லிம்களுடன் யார் முதலில் கள்ளக்காணி பிடித்தது என்று அடிபாடு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

இலங்கை சிங்களவரின் நாடு என்று பாரதியாரே "சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாடி உறுதி செய்து இருக்கிறார்.
இதற்குள் கள்ளத்தோணித் தமிழர் முஸ்லிம்களுடன் யார் முதலில் கள்ளக்காணி பிடித்தது என்று அடிபாடு!

தம்பிக்கு "விசயன் வருகை" தெரியாப்போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, MEERA said:

தம்பிக்கு "விசயன் வருகை" தெரியாப்போல

இந்த சரித்திரம் தெரியாத ஆட்களால்தான் தமிழனுக்கு தரித்திரம் .

Link to comment
Share on other sites

9 hours ago, Jude said:

இலங்கை சிங்களவரின் நாடு என்று பாரதியாரே "சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாடி உறுதி செய்து இருக்கிறார்.
 

இலங்கையில் பல தீவுகள் உள்ளன. பாரதியார் எந்தத் தீவைக் குறித்துப் பாடினாரோ.......?? சில வேளை நயினா தீவுப்பக்கம் அவர் வந்தபோது சிங்களப் புத்த துறவிகளைக் கண்டிருக்கலாம், பாடியிருக்கலாம்.!! :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பாரதியார் இந்தோனேசியா ?
மலேசியாவுக்கு பாலம் அமைக்கவேண்டும் என்று பாடவில்லை ?

சிங்களத்திகள் என்ன 
பாரதியாரின் சின்ன வீடோ ? 

யாரோ எங்கோ வாழ்ந்த தீவுக்கு 
பாலம் அமைக்கும் வேலை எதற்கு பாரதிக்கு ??

எமை இணைக்க வேண்டும் என்றுதான் அவர் பாடினார்.
இதுக்குள்ள .... இனத்துக்குள் வந்து புகுந்தவர்கள் 
இனி பாரதியையும் பிரிக்கலாம் 

Link to comment
Share on other sites

15 hours ago, MEERA said:

தம்பிக்கு "விசயன் வருகை" தெரியாப்போல

நீங்கள் பாரதியாரின் அக்காவா? அறிவதில் மகிழ்ச்சி. அகவை எத்தனையோ?

3 hours ago, Maruthankerny said:

ஏன் பாரதியார் இந்தோனேசியா ?
மலேசியாவுக்கு பாலம் அமைக்கவேண்டும் என்று பாடவில்லை ?

சிங்களத்திகள் என்ன 
பாரதியாரின் சின்ன வீடோ ? 

யாரோ எங்கோ வாழ்ந்த தீவுக்கு 
பாலம் அமைக்கும் வேலை எதற்கு பாரதிக்கு ??

எமை இணைக்க வேண்டும் என்றுதான் அவர் பாடினார்.
இதுக்குள்ள .... இனத்துக்குள் வந்து புகுந்தவர்கள் 
இனி பாரதியையும் பிரிக்கலாம் 

சிங்களத் தீவில் வாழ்ந்த எங்களை  இணைக்க வேண்டும் என்றுதான் அவர் பாடினார். நீங்களே சொல்லி விட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

நீங்கள் பாரதியாரின் அக்காவா? அறிவதில் மகிழ்ச்சி. அகவை எத்தனையோ?

சிங்களத் தீவில் வாழ்ந்த எங்களை  இணைக்க வேண்டும் என்றுதான் அவர் பாடினார். நீங்களே சொல்லி விட்டீர்கள்.

உங்களின் அறிவுக்கு நீங்கள் எங்கயோ இருக்க வேண்டிய ஆள் ...

பாரதி என்ன கிறிஸ்துவுக்கு முன் 3000 ஆண்டளவிலா பாடினார் ?
பாரதி பாடினது இப்போது எமது அப்பப்பா காலத்தில் 
அப்போ சிங்கள தேசம் ... சிங்கள மன்னர் ஆட்சி எல்லாம் இருந்து கொண்டுதான் 
இருந்தது அப்போது இலங்கை தீவில் பெரும்பான்மை சிங்களவர்கள்தான்.
கண்டி ராச்சியம் (தமிழ்) தெலுங்கு நாயக்கர் இடத்தில் இருந்தது. 

நல்ல வேளை .....
நீங்கள் கண்ணதாசன் பாடினார் ..
"அன்பு தெய்வம் கௌதமனின் அருள் மிகு ஆலயங்கள்" என்று (இலங்கையின் இளம் குயில் என்னோடு இசை பாடுதோ எனும் பாடலில்) 
ஆதலால் சைவமதம் வந்தேறு குடி என்று எழுதவில்லை என்று 
ஆச்சரியமாக இருக்கு ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Jude said:

நீங்கள் பாரதியாரின் அக்காவா? அறிவதில் மகிழ்ச்சி. அகவை எத்தனையோ?

பூச்சியம்

Link to comment
Share on other sites

13 hours ago, Maruthankerny said:

 

பாரதி பாடினது இப்போது எமது அப்பப்பா காலத்தில் 
அப்போ சிங்கள தேசம் ... சிங்கள மன்னர் ஆட்சி எல்லாம் இருந்து கொண்டுதான் 
இருந்தது அப்போது இலங்கை தீவில் பெரும்பான்மை சிங்களவர்கள்தான்.

நீங்களே சொல்லிவிட்டீர்களே?

7 hours ago, MEERA said:

பூச்சியம்

சைவர் இல்லையா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Jude said:

 

சைவர் இல்லையா?  

பாரதி தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

நீங்களே சொல்லிவிட்டீர்களே?

 

 

நீங்களே வாசித்து விட்டீர்களே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28.10.2017 at 9:47 AM, பெருமாள் said:

இந்த சரித்திரம் தெரியாத ஆட்களால்தான் தமிழனுக்கு தரித்திரம் .

அவைக்கு சிங்களத்தின்ரை உடம்புச்சூடு வேணும் போலை கிடக்கு....அதுதான் குத்திமுறியினம். tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.