Jump to content

சாதனங்களில் தவறு கிடையாது; பயன்படுத்தும் முறைதான் குற்றம்!


Recommended Posts

சாதனங்களில் தவறு கிடையாது; பயன்படுத்தும் முறைதான் குற்றம்!

 

 

smart_24102017_SPP_GRY.jpg

உலக மாற்றங்களுக்கு அமைய தற்கால மாணவர் சமூகமும் மாறி வருகின்றது. இந்த வகையில் அவரவர் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் ஏற்றாற் போல், இலத்திரனியல் சாதனங்கள் மனித வாழ்வின் வளர்ச்சிக்கும் கல்வியின் விருத்திக்கும் படிக்கற்களாக அமைந்திருக்கின்றன.

அதேவேளை, இவை இன்னொரு வகையில் தடைக்கற்களாகவும் காணப்படுகின்றன. இவற்றை நாம் பயன்படுத்தும் முறையிலேயே வளர்ச்சியும் தடையும் ஏற்படுகின்றன.

சரியாகவும் முறையாகவும் பயன்படுத்தும்போது வளர்ச்சி ஏற்படுகிறது. தவறாகப் பயன்படுத்தும் போது அல்லது உரிய முறையில் பயன்படுத்தத் தவறும் போது வளர்ச்சிக்குப் பதிலாகத் தடையும் சீரழிவும் ஏற்படுகின்றன. இதனால், இந்தச் சாதனங்களில் தவறு கிடையாது. அவற்றைப் பயன்படுத்தும் நமது முறையில்தான் சரியும் தவறும் உள்ளது. இதை இன்னொரு வகையில் சொன்னால் கருவி முக்கியமானதல்ல... அதைக் கையாளும் முறையே முக்கியமானது என்று குறிப்பிடலாம்.

சிந்தனை வளர்ச்சியில் உருவாகிக் கொண்டிருக்கும் புதியனவற்றின் வருகையின் போதெல்லாம், எப்போதும் இத்தகைய ஒரு நேர்மறை – எதிர்மறை என்ற இருநிலைப்பட்ட போக்கு ஏற்படுவது இயல்பு. இதையே பொதுவாக “எங்கள் காலம் போல இந்தக் காலம் இல்லை” என்று மூத்தோர் சொல்வதுண்டு.

இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைமுறையும் தமக்குப் பின்வரும் இளைய தலைமுறையைப் பற்றியும் அவர்களுடைய புதிய காலத்தைப் பற்றியும் விமர்சனத்தை முன்வைப்பதுண்டு. இதற்குக் காரணம், இந்தப் புதிய சிந்தனையின் உருவாக்கங்கள் உண்டாக்கும் சமூக விளைவுகளேயாகும். இவற்றைச் சரியாகப் பயன்படுத்தும் சமூகங்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்கின்றன. தவறாகப் பயன்படுத்தும் சமூகங்கள் வீழ்ச்சியடைகின்றன.

மனித வாழ்க்கை முன்னகர்ந்து செல்வதற்கான வழிகாட்டியாக இருப்பது நவீன யுகத்தின் முதன்மைச் சாதனமான ஊடகமே. இது தொடர்பாடல் யுகம் என்று சொல்லப்படுவதுண்டு. ஆகவே புதிய சாதனங்களை – புதிய ஊடகங்களைப் பயன்படுத்தாமல், அவற்றுடன் தொடர்பு கொள்ளாமல் இன்றைய சமூகம் இயங்க முடியாது. எதிர்காலச் சமூகமும் வாழ முடியாது.

எனவே, நவீன யுகத்திற்கு ஏற்ப நாமும் எமது இளம் சந்ததியினரும் மாற வேண்டியது உலக ஒழுங்கின் நியதியாகும். இதற்கு ஏற்றாற் போல இளம் தலைமுறையினர் மாறி வந்தாலும் இந்த மாற்றமானது ஆரோக்கியமான கல்வி விருத்திக்கு வித்திட்டுள்ளதா என்ற கேள்வியும் உண்டு.

நவீன உலகை உள்ளங்கையில் அடக்கும் அளவிற்கு நவீன இலத்திரனியல் சாதனங்கள் பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றன. நவீன யுகத்தின் உருவாக்கமான இலத்திரனியல் ஊடகங்கள் எம்மை ஆட்கொண்டு அடக்கி ஆளும் அளவிற்கு அதன் வருகையும் பயன்பாடும் வியாபித்துக் காணப்படுகின்றன.

இதனால் இவை பெற்றோர், ஆசிரியர்கள், கல்விசார்துறையினருக்கு பெரும் சவாலாக வளர்ந்து உருவெடுத்துள்ளன. தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி, வானொலி, கையடக்கத் தொலைபேசி என்று வியத்தகு விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளைக் கண்டு மகிழ்வதற்குப் பதிலாகச் சில சந்தர்ப்பங்களில் அச்சமடைய வேண்டியுள்ளது. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல, இவற்றைக் கையாளும் முறையினால் பாரிய பிரச்சினைகளே அதிகமாக உருவாகின்றன. ஆகவே இதற்குச் சரியான புரிதலும் முறையான வழிகாட்டலும் அவசியமாகிறது.

மாணவர்களின் கல்விக்கும் கற்றல் சூழலுக்கும் வாய்ப்ப்பாக விளங்கும் இலத்திர னியல் ஊடகங்கள் அவர்களுடைய கற்றலுக்கு படிக்கற்களாக அமைவதற்கு ஏற்றவாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அவற்றை அவ்வாறான நோக்கில் மாணவச் சமூகம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்களைச் செய்வது அவசியம். இத்தகைய நெறிமுறை ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொருந்தும்.

ஏனெனில் இந்தச் சாதனங்கள் அல்லது இவ்வாறான ஊடகங்கள் பல விடயங்களைக் கற்பதற்கும் தேடிப் பார்ப்பதற்கும் இன்னும் பல சௌகரியமான காரியங்களுக்கும் ஏணிப்படிகளாக அமைகின்றன. எனவே இவற்றின் பெறுமதியை நாம் முதலில் புரிந்து கொள்வது அவசியம்.

ஊடகங்களின் பயன்பாட்டை வளர்ச்சியடைந்த சமூகங்கள் முறைப்படி ஒழுங்கமைத்துள்ளன. இதன்படி அவை ஊடகமானது அல்லது இவ்வாறான சாதனங்களானவை முதலில் தகவலை வழங்குபவையாக இருக்க வேண்டும். அதாவது இவற்றிலிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக நாம் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவது. இந்தத் தகவலின் வழியாக கற்றல் நிகழ வேண்டும். அதாவது அறிவுட்டல் நடக்க வேண்டும். மூன்றாவதே களிப்படைதலாகும். அதாவது பொழுது போக்குக்கும் மகிழ்ச்சிக்குமானது.

இதை நாம் வரிசைப்படுத்தினால் 1.Information, 2.Education, 3. Entertainment என வரும்.

ஆனால், இந்த அடிப்படையை நமது சமூகத்தினர் புரிந்து கொண்டு நடக்கின்றனரா? இன்று கல்வி அபிவிருத்தியில் பாரிய தாக்கத்தைச் செலுத்தி வருவது நவீன சாதனங்கள் என்ற ஒரு அபிப்பிராயம் பொதுவாக உண்டு. சில ஆய்வுகளும் சுயமதிப்பீடுகளும் கூட இதைக் கண்டறிந்துள்ளன. ஆகவேதான் நவீன சாதனங்கள் கல்வி விருத்தியில் பாரிய பாதிப்பைப் செலுத்தி தடைக்கல்லாக அமைந்து விட்டனவா என்பது பற்றி நோக்க வேண்டியுள்ளது.

விஞ்ஞானத்தின் விந்தை மிகு கண்டுபிடிப்புக்கள் பல தற்கால சமூகத்திற்கு பாரிய அளவிலான சாதகமான கைங்கரியங்களை ஆற்றுகின்றன. இதனடிப்படையில் கணினியின் வருகையானது 1944ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனுடைய தேவை அன்றைய காலத்தில் இராணுவத்தினரின் செயல்களுக்கே பெரிதும் பயன்படத்தக்க வகையில் அமைந்தது. ஆனால் காலவோட்டத்தில் இதன் பயன்பாடு பற்றி ஆய்வுகளை மேற்கொண்டதன் விளைவாக உலகெங்கும் அனைத்துச் செயற்பாடுகளிலும் இன்று செறிந்து காணப்படுகின்றது.

இவ்வாறானதே இணைய வலையமைப்புமாகும். இதன் மூலம் உலகத்தின் எந்த மூலைமுடுக்குகளிலும் நிகழும் செயல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் எமக்கு பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தில் இருப்பவர்களுக்கான தகவலை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொள்வதற்கும் இந்த ஊடகம் மிகவும் பயனுறுதி வாய்ந்த ஒன்றாகவே காணப்படுகிறது.

இதனால் வீட்டுக்கு வீடு சாதாரண பாவனைப் பொருட்களைப் போன்று அன்றாடம் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருளாக கணினியும் இணையமும் மாறியது மட்டுமல்ல, நவநாகரிகமாகவும் மடிக்கணினி போன்ற சாதனங்களை வைத்திருப்பவர் உயர் தகுதி உடையவர், விடயப் புலமை உடையவர் என்றதொரு சமூகத்தின் பார்வையும் காணப்படுகின்றது. இதனால் மாணவர்களின் கல்வி தொடர்பான விடயங்களையும் உலக நடப்புக்களையும் அறிந்து நவீன உலக ஒழுங்கிற்கு ஏற்றாற் போல வாழ வேண்டும் என்பதற்காக மடிக்கணினிகள் மாணவர்களின் கைகளில் சரளமாகக் காணப்படுகின்றன.

 இதன் மூலம் மாணவன் யாருடைய உதவியும் இன்றி தானே தனித்து நின்று தன்னுடைய கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய அளவில் உற்ற நண்பனாக, நல்ல ஆசானாக கணினி விளங்குகிறது. இது எதிர்காலத்திற்கும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கும் ஏற்றால் போல மாணவர் தம்மைப் புடம் போட்டுக் கொள்ள இலத்திரனியல் ஊடகம் பெரும்பங்காற்றுகின்றது. இதன் விளைவாக மாணவரின் கல்வி விருத்தியில் பாரிய செல்வாக்கினைச் செலுத்தி, மாணவருக்கு நவீன உலகின் ஊன்றுகோலாக, அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு படிக்கற்களாகவே அமைந்து விடுகின்றது. கல்வியில் சிகரம் தொடுமளவிற்கு இந்த இலத்திரனியல் ஊடகம் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

மேலும், தொலைக்காட்சி என்ற இலத்திரனியல் கட்புல, செவிப்புல சாதனம் தொடக்கத்தில் வசதியுடையவர்களின் வீடுகளிலேயே காணப்பட்டது. வீடுகளிலே நிகழுகின்ற மங்களகரமான காரியங்களை வீடியோ மூலம் ஒளிப்பதிவு செய்து பார்ப்பதற்கும் பொழுதுபோக்கிற்குமாகவே எமது மக்கள் அதிகமாகப் பயன்படுத்தினர். அதனை ஒரு கற்றல் உபகரணமாகவோ, தொடர்பாடல் சாதனமாகவோ கொண்டது குறைவு. இப்போதும் இதுதான் நிலைமை. பெரும்பாலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலேயே நமது தொலைக்காட்சிப் பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரிதாக உதவுவதில்லை.

ஆனால் வளர்ச்சியடைந்த பிற சமூகங்களில் வீட்டுக்கு வீடு நவீன வடிவமைப்புக்களைக் கொண்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் மாணவரின் கல்வி விருத்தியில் உதவும்பொருளாக செய்திகள், கற்றல் முறையிலான வீடியோக்கள் எனச் சிறந்த சாதனமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவரின் கல்வி விருத்தியடைவதற்கு உறுதுணையாக அமைந்துள்ளது. இவ்வாறு நாமும் பயன்படுத்தினால் எமது சூழலும் முன்னேற்றமாக அமையும் என்பதில் ஐயமில்லை. இதனால் தொலைக்காட்சியானது மாணவரின் கல்வி விருத்திக்கு படிக்கல்லாகவே படைக்கப்பட்டது. அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் போது நிச்சயமாக நன்மை கிட்டும்.

அடுத்து தற்காலத்தில் கையடக்கத் தொலைபேசிப் பாவனை உலக மக்களின் எண்ணிக்கையில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் ஸ்மாட் போன், சாதாரணபோன் எனத் தனியான தேவை அலுவலகத்தேவை என்று பயன் படுத்துகின்றனர். ஆனால், வயதில் மிகச் சிறிய ஐந்து ஆறு வயதுப் பிள்ளைகள் கூட கைத்தொலைபேசியைக் கையாளும் நிலை உருவாகியுள்ளது. இது தவறான வழிகளுக்கும் கவனச் சிதைவுக்கும் வழியேற்படுத்துகிறது. மாணவர்களுக்கும் ஒரு எல்லைவரையில் கைத்தொலைபேசி சாத்தியங்களை வழங்குகின்றது. ஆனால், இது குறித்த சரியான புரிதலும் தெளிவான விளக்கமும் இல்லாத காரணத்தினால். மாணவர்கள் இதைத் தவறான முறையில் பயன்படுத்துவதே கூடுதலாக அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாணவர்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் வேண்டியவருடன் தேவையான தகவலைப் பெற்றுக் கொள்வதற்கு கையடக்கத் தொலைபேசிகள் பெரிதும் உறுதுணையாக அமைகின்றன. அதுவும் ஸ்மாட்போன் தற்கால மாணவருக்குத் தேவையான அளவுக்குத் தகவல் மூலங்களை வழங்குகின்றது. இதன் மூலம் நூலகம் சென்று வருவதற்கான நேரமோ நூல்களைத் தேடுதல், புரட்டுதல் போன்ற சிரமங்கள் எல்லாம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளன.

http://www.thinakaran.lk/2017/10/25/கட்டுரைகள்/20718/சாதனங்களில்-தவறு-கிடையாது-பயன்படுத்தும்-முறைதான்-குற்றம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.