Jump to content

டெங்கு... மெர்சல்...


Recommended Posts

டெங்கு... மெர்சல்...

கையில் பெரிய ஃபைலோடு வந்த கழுகார், ‘‘நீர் ‘மெர்சல்’ படம் பார்த்துவிட்டீரா?’’ எனக் கேட்டார்.

‘‘கழுகார் சினிமா பற்றிப் பேசுவது அபூர்வமாக இருக்கிறதே?’’

‘‘ஒரு வாரமாக தமிழக அரசியலே ‘மெர்சல்’ படத்தை வைத்துதானே ஓடிக்கொண்டிருக்கிறது. நான் மட்டும் சினிமா பற்றிப் பேசக்கூடாதா?’’ என்ற கழுகார், ‘‘இவ்வளவு நடந்தும், இந்த சர்ச்சைகள் பற்றி விஜய் வாயைத் திறக்கவில்லை; கவனித்தீரா’’ எனக் கேட்டார்.

‘‘ஆம்!’’

‘‘அது மட்டுமில்லை. முதல்வரில் தொடங்கி தமிழக ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்தும் யாரும் இதுபற்றிப் பேசவில்லை. அவர்கள் இந்த சர்ச்சையால் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார்கள். காரணம், இந்தப் பிரச்னையில் எல்லோரும் டெங்கு அவலங்களை மறந்துவிட்டார்களே!’’

‘‘தினம் தினம் டெங்கு மரணங்கள் தமிழகம் முழுக்கத் தொடரும் நிலையில், ‘மெர்சல்’ சர்ச்சையால் டெங்கு மறக்கடிக்கப்பட்டது என்ற கவலை சமூக அக்கறையுள்ள எல்லோருக்கும் இருக்கிறது.’’

p44a.jpg

கழுகார் கையில் வைத்திருந்த ஃபைலைத் திறந்தார். ‘‘தமிழக சுகாதாரத் துறையில் முக்கியப் பொறுப்பு வகித்த ஓர் அதிகாரி தந்திருக்கும் தகவல்கள் இவை. தமிழக அரசு எத்தனை அலட்சியத்தோடு டெங்கு விவகாரத்தைக் கையாள்கிறது என்பதைத் தோலுரிக்கின்றன இந்த விஷயங்கள். டெங்கு ஜுரத்தின் தீவிரத்தால் பலியாகும் பலரின் மரணங்கள், டெங்கு மரணங்களாகப் பதிவு செய்யப்படுவதில்லை. ‘விஷ ஜுரம்’ எனக் கணக்குக் காட்டுகிறார்கள். இப்படித் தப்புத்தப்பாகத் தந்திருக்கும் புள்ளிவிவரங்களேகூட தமிழக மக்களைப் பீடித்திருக்கும் ஆபத்தை உணர்த்துகின்றன.’’

‘‘என்ன அது?’’

‘‘இந்த ஆண்டு தமிழகம் போலவே பல மாநிலங்களை டெங்கு தாக்கியிருக்கிறது. ஆனால், தமிழகம் அளவுக்கு மரணங்கள் அங்கில்லை என்பதுதான் விஷயமே. இந்தியாவிலேயே கேரளாவில்தான் டெங்கு தாக்குதல் அதிகம்.
18,000 பேருக்கு மேல் பாதிப்பு. ஆனால், 35 மரணங்கள் மட்டுமே நிகழ்ந்தன. கர்நாடகாவில் 13,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், ஐந்து பேர் மட்டுமே இறந்தனர். டெல்லியில் 5,870 பேருக்கு டெங்கு தாக்கியதாக புள்ளிவிவரம் உள்ளது. ஆனால், இறந்தவர்கள் ஐந்து பேர் மட்டுமே. தமிழக அரசு 12,000 பேருக்கு மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகக் கணக்கு சொல்கிறது. அக்டோபர் 10-ம் தேதி வரை 40 பேர் இறந்ததாக அதிகாரபூர்வ கணக்கு சொல்கிறது. உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம். பாதிப்புகளுக்கும் மரணத்துக்குமான விகிதம் தமிழகத்தில் அதிகம் உள்ளதாக தொற்றுநோய் நிபுணர்கள் கவலை கொள்கிறார்கள்.’’

‘‘ஆனால், மத்தியக்குழுத் தமிழக அரசைப் பாராட்டியதாகச் சொல்கிறார்களே?’’

‘‘மத்தியக்குழுவில் இருந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் அஷுதோஷ் பிஸ்வாஸ் சொன்ன ஒரு விஷயத்தைச் சாமர்த்தியமாக மறைத்துவிட்டார்கள். ‘டெங்கு பாதிப்புகளோடு அரசு மருத்துவமனைகளுக்கு வந்த நிறைய பேர் இறந்துள்ளார்கள். மருத்துவமனைக்கு வந்தபிறகு அவர்கள் ஏன் இறந்தனர் என்பது புரியவில்லை. இதற்கான காரணங்களை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்’ என அவர் சொல்லியிருக்கிறார். ‘மருத்துவமனைக்கு வருபவர்களைக் காப்பாற்ற முடியாத நிலை ஏன் ஏற்பட்டது?’ என்ற கேள்விக்குப் பதிலில்லை.’’

‘‘நியாயமான கேள்விதான்.’’

‘‘பொதுவாக ‘90 நாள்களுக்குள் ஒரு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சுகாதார அவசரநிலைப் பிரகடனம் செய்ய வேண்டும்’ என்பது உலக சுகாதார நிறுவனம் வகுத்திருக்கும் விதி. தமிழக அரசு அதைச் செய்யவில்லை. இதைச் செய்தால் சர்வதேச அவமானத்தைச் சந்திக்க நேரும் என்பதுதான் தமிழக அரசின் கவலையாக இருந்தது. கடந்த மாதம் கர்நாடகாவிலும் கேரளாவிலும் விஷ ஜுரம் பரவியபோது, இரண்டு மாநிலங்களுக்கும் தலா இரண்டு மத்தியக் குழுக்கள் போய் நிலைமையை ஆராய்ந்தன. அவை பி.ஜே.பி அல்லாத கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள். தமிழகத்தில் இவ்வளவு மோசமாக பாதிப்பு இருந்தும், கடைசி நேரத்தில்தான் மத்தியக் குழு வந்தது. மத்திய அரசும் பாரபட்சம் காட்டுகிறது என்பதுதான் சமூக அக்கறையுள்ள டாக்டர்களின் வேதனை.’’    

‘‘மெர்சல் விவகாரம் பல தளங்களில் மெர்சலைக் கிளப்பியுள்ளதே?’’

‘‘ஆம். முதலில் நடிகர் விஜய்க்கும், தயாரிப்பாளர் முரளிக்கும் அது மெர்சலை உண்டாக்கியது. அதன்பிறகு, சென்சார் போர்டுக்குள் மண்டல அதிகாரி மதியழகனுக்கும் மத்திய சென்சார் போர்டு உறுப்பினராக இருந்த
எஸ்.வி.சேகருக்கும் இடையில் மோதலை உருவாக்கியது. இப்போது ஹெச்.ராஜாவை விமர்சனம் செய்ததற்காக, நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷாலுக்கு ரெய்டு வடிவத்தில் மெர்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், ‘நான் மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்தேன்’ என்று குறிப்பிட்டார். இதனால் இயல்பாக விஷால் கொந்தளித்துப் போனார். அதன்பிறகு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்ற அடிப்படையில் விஷால் காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். ‘ஒரு தேசியக் கட்சியின் தேசியச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தைச் சட்டவிரோதமாகப் பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஹெச்.ராஜா அவர்களே! மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? எனக்கு அதிர்ச்சியாக உள்ளது’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.’’

‘‘ரெய்டுக்கு இதுதான் காரணமா?’’

‘‘அப்படித்தான் விஷால் தரப்பு கருதுகிறது. இந்த அறிக்கை கடந்த 22-ம் தேதி வெளியானது. அதற்கு அடுத்த நாளே, வருமான வரித்துறையின் TDS பிரிவினர் விஷாலுக்குச் சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தினர். கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கும் மேல் ரெய்டு நடந்தது. அந்த நேரத்தில் விஷால், ‘பின்னி மில்’லில் ‘சண்டக் கோழி 2’ படப்பிடிப்பில் இருந்தார். ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பல லட்ச ரூபாய் வருமான வரியை அரசுக் கணக்கில் செலுத்தாமல் இருந்ததால்தான் ரெய்டு நடத்தியதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் வருமானவரிச் சோதனை நடந்தபோது, கணக்கில் வராத மூன்று கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றினார்கள். இதற்கு முறைப்படி வரி கட்டுவதாகச் சொல்லி, ‘காம்பவுண்டிங் அப்ளிகேஷன்’ கொடுத்திருக்கிறார் விஜய். இதுபற்றி ஒரு கமிட்டி கூடி முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரம் இன்னும் முடியாமல் உள்ளது. இதை வைத்து விஜய்க்கு ஏதாவது சிக்கல் கிளப்பக்கூடும் என்பதுதான் இப்போது டெல்லி வட்டாரங்களில் பேச்சு.’’ 

‘‘இங்கு எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது என்பது எல்லாரும் அறிந்ததுதானே!’’

‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான ரேஸ் ஆரம்பித்துவிட்டது. இப்போதைய தலைவர் திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என டெல்லிக்குக் கடிதங்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன. இதையடுத்து, தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ளும் வேலைகளில் திருநாவுக்கரசரும் தீவிரமாக இறங்கியுள்ளார். இளங்கோவன், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட சிலரும் இந்த ரேஸில் இறங்கியுள்ளனர். இளங்கோவன் டெல்லிக்குச் சென்று ராகுல் காந்தியையும் சந்தித்துவிட்டார்.’’

‘‘சந்திப்பில் என்ன நடந்ததாம்?’’

‘‘உள்கட்சித் தேர்தல் குளறுபடிகள் தொடர்பான ஆதாரங்களோடு டெல்லி போனார் இளங்கோவன். மூன்று நாள்கள் டெல்லியில் காத்திருந்தும், ராகுல் காந்தியின் அப்பாயின்ட்மென்ட் இளங்கோவனுக்குக் கிடைக்கவில்லை. நான்காவது நாள்தான் ராகுலைச் சந்திக்க வரச் சொன்னார்கள். ராகுல் வீட்டில் இளங்கோவன் காத்திருந்த நேரத்தில், திருநாவுக்கரசரும் அங்கு வந்துள்ளார். அவரைப் பார்த்த இளங்கோவன், அதிர்ச்சியும் எரிச்சலும் அடைந்தாராம். ஆனால், திருநாவுக்கரசர் நிலைமையைப் புரிந்துகொண்டு, ‘இளங்கோவன் முதலில் சந்திக்கட்டும்’ என்று விட்டுவிட்டார். இளங்கோவனை இரண்டு நிமிடங்கள் மட்டுமே சந்தித்துள்ளார் ராகுல். உள்ளேபோன வேகத்தில் இளங்கோவன் வெளிறிய முகத்தோடு வெளியேறிவிட்டார். அதன்பிறகு திருநாவுக்கரசருக்கு அழைப்பு வந்ததாம். அவர் பழங்களுடன் சென்று ராகுலைச் சந்தித்துள்ளார்.’’

‘‘திருநாவுக்கரசர் ராகுலிடம் என்ன சொன்னராம்?’’

‘‘புலம்பித் தள்ளினாராம். ‘தமிழ்நாடு காங்கிரஸில் எனக்கு யாரும் ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை. நான் என்ன செய்தாலும் அதற்கு எதிராகக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர்’ என்பதுதான் அவரது புலம்பல். ‘குஷ்புகூட தலைவராவதற்கு முயற்சி செய்வதாக செய்திகள் வருகின்றன’ என்று புலம்பினாராம். திருநாவுக்கரசருக்கு ஆறுதலான வார்த்தைகள் கிடைத்துள்ளன. சந்திப்புக்குப் பிறகு உற்சாகமான திருநாவுக்கரசர், ‘வரும் நாடாளுமன்றத் தேர்தல்வரை நான்தான் தலைவர்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். திருநாவுக்கரசரின் இந்த உற்சாகம், தலைவர் பதவிக்குக் கனவு கண்ட பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.’’

‘‘அப்படியா?’’

‘‘ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தங்கபாலு, வசந்தகுமார், கிருஷ்ணசாமி என அதிருப்தி கோஷ்டியினர் கடந்த வாரம் முழுவதும் சிதம்பரம் வீட்டுக்குப் படையெடுத்ததற்கு இதுதான் காரணம். ராகுலின் மனதைக் கரைக்க சிதம்பரத்தால்தான் முடியும் என்பது அவர்களின் கணக்கு. அதனால், அவரைப் போய்ப் பார்த்து தூபம் போட்டனர். அப்படிச் சந்தித்தப் பலரும், ‘கட்சித் தேர்தலில் எங்கள் ஆதரவாளர்கள் யாருக்கும் பதவி கிடைக்கவில்லை. அவருடைய ஆட்களுக்குத்தான் பதவி கொடுத்துள்ளார். எங்களை மதிப்பதில்லை. ஓரம்கட்டுகிறார்’ என ஆளுக்கொரு புகாரைச் சொல்லியுள்ளனர். அதோடு, ‘தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நீங்கள் வாருங்கள். நாங்கள் எல்லோரும் முழுமையாக ஒத்துழைப்பு தருகிறோம்’ என்றும் சொல்லியுள்ளார்கள்.’’

‘‘சிதம்பரம் பதில் என்னவாம்?’’

‘‘பொறுமையாக எல்லாவற்றையும் கேட்ட சிதம்பரம், ‘நான் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், டெல்லி தலைமைக்கு மொத்தமாகக் கடிதம் எழுதுங்கள்’ என்று சொன்னாராம்.  அத்துடன் தனக்குத் தமிழக அரசியலுக்கு வர விருப்பமில்லை என்பதைச் சுற்றிவளைத்துச் சொன்னாராம். அதைக் கேட்டவர்கள், ‘சரி, உங்களுக்கு வர விருப்பமில்லை என்றால், என் பெயரை ராகுலிடம் பரிந்துரை செய்யுங்கள்’ என ஒவ்வொருவரும் கோரிக்கை விடுத்தார்களாம். சிதம்பரத்தின் மன ஓட்டம் தேசிய அரசியலில்தான் இருக்கிறது. அகில இந்திய காங்கிரஸின் புதிய தலைவராக ராகுல் காந்தியை அறிவிக்கும்போது, சிதம்பரத்துக்கும், குலாம் நபி ஆசாத்துக்கும் துணைத் தலைவர் பதவி கொடுப்பதுப் பற்றி அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், டெல்லியில் இருக்கும் சில தலைவர்கள் சிதம்பரம், டெல்லி அரசியல் ஈடுபடுவது தங்களுக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்று நினைக்கின்றனர். அதனால் அவர்கள் ராகுலிடம், ‘தமிழகத்தில் இப்போதிருக்கும் அரசியல் சூழலில் சிதம்பரத்தைத் தலைவராக்குவது நல்ல முடிவு. அவர் தலைமையேற்றால்தான் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த முடியும்’ என்று தூபம் போட்டுள்ளனர். சிதம்பரமும் இதை அறியாமல் இல்லை.’’

p44.jpg

‘‘சிதம்பரம் வீட்டுக்குத் திருநாவுக்கரசரும் சென்றிருந்தாரே?’’

‘‘சிதம்பரம் வீட்டுக்குத் தலைவர்கள் படையெடுத்த தகவல் திருநாவுக்கரசருக்குத் தெரிந்தததும், அவரும் சிதம்பரத்தைப் போய்ச் சந்தித்தார். திருநாவுக்கரசர் வருகையைச் சிதம்பரமும் எதிர்பார்க்கவில்லை. ‘எனக்கு யாரும் ஒத்துழைப்புத் தருவதில்லை. நான் தனியாகக் கஷ்டப்பட்டுத்தான் கட்சியை வளர்க்கிறேன். நீங்களாவது எனக்கு ஆதரவாக இருக்கவேண்டும்’ என்று சிதம்பரத்திடமும் திருநாவுக்கரசர் புலம்பியுள்ளார். ‘ராகுல் உங்கள் மீது நல்ல மரியாதை வைத்துள்ளார். நீங்கள் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களை நடத்துங்கள்’ என்று சொல்லியுள்ளார். இந்தச் சம்பவங்களின் மூலம் ஒன்று நன்றாகத் தெளிவாகிறது. அதாவது, கோஷ்டிகளுக்குப் பஞ்சம் இல்லாத தமிழக காங்கிரஸில் ஒற்றை அதிகார மையமாக சிதம்பரம் உருவாகியிருக்கிறார் என்பதே அது!’’

‘‘இரட்டை இலை வழக்கு எப்போது முடியுமாம்?’’ என டாபிக்கை மாற்றினோம்.

‘‘முக்கிய வழக்குக்குள் இன்னும் போகவே இல்லையே! பிறகு, எப்படி அது முடிவுக்கு வரும்? தினகரன் தரப்பு அதற்காக மிக கவனமாகக் காய் நகர்த்தி வருகிறது. அக்டோபர் 23-ம் தேதி இறுதி விசாரணை என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததும், அதற்கு முட்டுக்கட்டை போடும் வேலைகளைத் தினகரன் அணி தொடங்கியது. விசாரணை நடைபெறும் தினத்துக்கு முந்தின இரவு அவசரமாக ஒரு மனு, சசிகலா பெயரில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டவர்களிடம் நாங்கள் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்’ என்று கேட்டுள்ளார்கள். இது தேர்தல் ஆணையத்துக்கும் சிக்கலைத்தான் ஏற்படுத்தியுள்ளது. அதோடு ராஜேந்திரபாலாஜி, ‘மோடி ஆதரவு எங்களுக்கு இருப்பதால், இரட்டை இலை எங்களுக்குக் கிடைத்துவிடும்’ என்று பொதுக்கூட்டத்தில் பேசியது தினகரன் தரப்புக்குச் சாதகமாகப் போய்விட்டது. அதைவைத்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை அமைச்சர் ஒருவர் கேள்விக்குறியாக்கிவிட்டார் என்று தினகரன் பெயரில் அடுத்த ஒரு மனுவைத் தாக்கல் செய்ய, இரட்டை இலை கைக்கு வந்துவிடும் என்று ஆவலில் இருந்த எடப்பாடி அணிக்கு இலை இப்போது எட்டாத உயரத்துக்குப் போய்விட்டது.’’

‘‘இந்த விஷயத்தில் நவம்பர் 10-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளதே?’’

“அதற்காகத்தான் தேர்தல் ஆணையமும் விசாரணையை வேகப்படுத்துகிறது. ஆனால், தினகரன் தரப்போ விசாரணையை இழுப்பதற்கான வேலையை வேகப்படுத்துகிறது’’ என்ற கழுகார், ஞாபகமாக ஃபைலை ஒழுங்குபடுத்தி எடுத்துக்கொண்டு பறந்தார்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.