Jump to content

‘இங்கிலீஷ்ல இருந்ததால கையெழுத்து போட்டுட்டாங்க!’ - ‘இரட்டை இலை’ விவாதத்தில் நடந்த காமெடி #VikatanExclusive


Recommended Posts

‘இங்கிலீஷ்ல இருந்ததால கையெழுத்து போட்டுட்டாங்க!’ - ‘இரட்டை இலை’ விவாதத்தில் நடந்த காமெடி #VikatanExclusive

 
 

இரட்டை இலை

Chennai: 

இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையின்போது, போலி அஃபிடவிட்களை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாக்கல்செய்துள்ளதாக தினகரன் தரப்பு வாதிட்டது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர், இங்கிலீஷ்ல அஃபிடவிட்கள் இருந்ததால கையெழுத்துப் போட்டுவிட்டதாகச் சொல்லியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, அ.தி.மு.க., இரட்டை இலைச் சின்னம் ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலையை மீட்டெடுக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தீபா தரப்பினரிடையே கடும் போட்டி நடந்துவருகிறது. இதற்காக, ஒவ்வொரு தரப்பிலும் லட்சக்கணக்கான அஃபிடவிட்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர். தற்போது, ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் இணைந்துவிட்டதால், இருவரும் இணைந்து இரட்டை இலையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இரட்டை இலை எங்களுக்குத்தான் என்று சசிகலா தரப்பும் தேர்தல் ஆணையத்திடம் வாதத்தை முன்வைத்துள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா தரப்பு வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக அஃபிடவிட்களைத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல்செய்தார். இதனால், இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதில் இழுபறி ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த 6-ம் தேதி இரட்டை இலை தொடர்பான முதல்கட்ட விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்தது. இதற்காக டெல்லி சென்ற ஒவ்வொரு தரப்பினரும், தங்களுக்குத்தான் கட்சியில் செல்வாக்கு இருப்பதாகக் கூறினர். வாதங்களைக் கேட்ட பிறகு அடுத்தகட்ட விசாரணை 16-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர் தேர்தல் அதிகாரிகள். அன்றைய தினம் நடந்த விசாரணையில், இரட்டை இலை குறித்த முடிவு எடுக்கப்படவில்லை. இதனால், 23-ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. இந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தீபா தரப்பினர் கலந்துகொண்டு வாதிட்டனர்.

வாதத்தின்போது, சசிகலா தரப்பினர் கொடுத்த புகார் மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, ஓ.பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் கொடுத்த 300-க்கும் மேற்பட்ட அஃபிடவிட்கள் போலியானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணியினர், இங்கிலீஷ்ல அஃபிடவிட்கள் இருந்ததால் கட்சியினர் தெரியாமல் கையெழுத்துப் போட்டுவிட்டனர் என்று பதிலளித்துள்ளனர். இதைக் கேட்ட தேர்தல் அதிகாரிகள், சிரித்தபடியே, கட்சியில் யாருக்கு செல்வாக்கு உள்ளதோ அவர்களுக்குத்தான் சின்னம் கிடைக்கும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இது, சசிகலா தரப்பினரை வருத்தமடைய வைத்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலா தரப்பினர், "இரட்டை இலைச் சின்னத்தை முடக்கக் காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இணைந்திருப்பதை கட்சியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால்தான் எங்களுக்குக் கட்சியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. எனவே, இரட்டை இலை நிச்சயம் எங்களுக்குத்தான் கிடைக்கும். தஞ்சாவூர், நெல்லை மாவட்டங்களில் உள்ள பொதுக்குழுவில் உள்ள உறுப்பினர்களில் பலர், எங்களை ஆதரித்து அஃபிடவிட்களைத் தாக்கல்செய்துள்ளனர். எனவே, இரண்டு தரப்பையும் ஆதரித்து அஃபிடவிட்டுகளைத் தாக்கல்செய்தவர்களிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். அதன்பிறகே சின்னம் யாருக்கு என்பதில் முடிவு எடுக்க வேண்டும் என்று வாதிட்டோம். அடுத்தகட்ட விசாரணை 30-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்றனர்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

 

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணைய விசாரணையில் பங்கேற்றவர்கள் கூறுகையில், "கட்சியில் எங்களுக்குச் செல்வாக்கு இருப்பது எல்லோருக்கும் தெரியும். சமீபத்தில் நடந்த பொதுக்குழு, செயற்குழுக் கூட்டமே அதற்கு ஆதாரமாக உள்ளது. சசிகலா குடும்பத்தினரின் சுயரூபம் கட்சியினருக்குத் தெரியும். தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்களுக்கு ஏற்பட்ட நிலைமை கட்சியினருக்குப் பாடமாக உள்ளது. இரட்டை இலை யாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதில் சசிகலா தரப்பு தேவையில்லாத வாதங்களை முன்வைத்து வருகிறது. இதனால், சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நவம்பர் மாதத்துக்குள் சின்னம் எங்களுக்குக்  கிடைத்துவிடும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட சோதனையால் கட்சி, சின்னம் முடக்கப்பட்டது. ஒற்றுமையாக அதை மீட்கப் போராடிவருகிறோம். சின்னத்தை மீட்க, கட்சியில் செல்வாக்கை நிரூபிக்க அஃபிடவிட்கள் ஒவ்வொரு தரப்பினரும் அவசர, அவசரமாகத் தயார்செய்தோம். தொண்டர்களில் பலர் குழப்பமடைந்திருந்த சமயத்தாலும் ஆங்கிலத்தில் அஃபிடவிட்கள் இருந்ததாலும் இரண்டு தரப்பினருக்கும் கட்சியினர் சிலர் கையெழுத்திட்டுள்ளனர். அதையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்" என்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/105876-humorous-discussions-at-two-leaf-symbol-enquiry.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

‘இங்கிலீஷ்ல இருந்ததால கையெழுத்து போட்டுட்டாங்க!’ - ‘இரட்டை இலை’ விவாதத்தில் நடந்த காமெடி #VikatanExclusive

கவுண்டன்/செந்தில்,வடிவேலுகூட இந்தளவுக்கு பகிடி விடேல்லை :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.