Jump to content

ஸ்மார்ட்போனை இலவசமாக வழங்கிய சாம்சங்:


Recommended Posts

67 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை இலவசமாக வழங்கிய சாம்சங்: காரணம் இது தான்

 

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை 200 விமான பயணிகளுக்கு இலசமாய் வழஙகியுள்ளது. சாம்சங் நிறுவனம் இலவசமாய் வழங்கியதற்கான காரணம் என்ன?

 
67 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போனை இலவசமாக வழங்கிய சாம்சங்: காரணம் இது தான்
 
புதுடெல்லி:

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரி பிழை காரணமாக வெடித்ததால் விமானங்களில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த சம்பவம் அரங்கேறியதை தொடர்ந்து இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. புதிய நோட் 8 ஸ்மார்ட்போன்கள் சாக்லேட்களை போன்று பாதுகாப்பானது என்பதை உணர்த்தும் வகையில் ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டு விமான பயணிகளில் 200 பேருக்கு இலவசமாக கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ளது. பயணிகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில் சாம்சங் நடவடிக்கை அமைந்தது. இலவச நோட் 8 ஸ்மார்ட்போன் மாட்ரிட்டில் இருந்து கொருனாவிற்கு செல்ல இருந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

இலவசமாக வழங்கப்பட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் பெட்டியில் கடந்த ஆண்டு இதனை ஸ்விட்ச் ஆஃப் செய்ய சொன்னோம், இம்முறை உங்களை வரவேற்கிறோம் என்ற வாசகம் ஸ்பெயின் மொழியில் எழுதப்பட்டிருந்தது. இது கடந்த ஆண்டு வெளியாகி பின் திரும்ப பெறப்பட்ட நோட் 7 ஸ்மார்ட்போன்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

201710241652465123_1_Note-8-flight._L_styvpf.jpg

பேட்டரி பிழை காரணமாக வெடித்து சிதறிய நோட் 7 ஸ்மார்ட்போன்கள் விமானங்களில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன் பின் நோட் 7 ஸ்மார்ட்போன்கள் திரும்ப பெறப்பட்டு அவை செயலிழக்க செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன்கள் அப்டேட் மூலம் செயலிழக்கப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்ய்ப்பட்டது. ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின் வெளியிடப்பட்டுள்ள கேலக்ஸி நோட் 8 வாடிக்கையாளர்கள் பயன்படுத்த பாதுகாப்பான சாதனம் என்பதை உணர்த்தும் வகையில் விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.67,900 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 இலவசமாக வழங்கப்படும் வீடியோவினை கீழே காணலாம்..,

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/24165239/1124786/Samsung-hands-out-free-Galaxy-Note-8-to-all-passengers.vpf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.