Jump to content

ரஜினி... கமல்... விஜய்... விஷால் - அரசியலுக்கு யார் ஃபர்ஸ்ட்?


Recommended Posts

ரஜினி... கமல்... விஜய்... விஷால் - அரசியலுக்கு யார் ஃபர்ஸ்ட்?

 

 

‘வரமாட்டேன்’ என்று சொல்லி வந்த கமல், இப்போது ‘கண்டிப்பாக வருவேன்’ என்கிறார். ‘வருவேன்... வருவேன்...’ என 20 ஆண்டுகளுக்கும் மேலாக போக்குக் காட்டிக்கொண்டிருந்த ரஜினியும் இம்முறை வந்துவிடுவார் என்றே தெரிகிறது. விஜய் இப்போதைய அரசியல் கள நிலவரத்தையும், தன் சீனியர்களான ரஜினி-கமல் இருவரின் நகர்வுகளையும் கவனித்து வருகிறார். விஷாலோ தனக்கான காலம் கனியும் எனக் காத்திருக்கிறார். ‘இந்த நால்வரும் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள்... அரசியலுக்கு வந்தால் கள நிலவரம் அவர்களுக்குக் கைகொடுக்குமா?’ இவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசியதிலிருந்து...

p36c.jpg

ரசிகர்களின் மனநிலையை ரஜினியிடம் தொடர்ந்து பிரதிபலிக்கும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரிடம் முதலில் பேசினோம். ‘அரசியலில் தடம்பதிக்க ரஜினிக்குத் தகுதியில்லை’ என்கிறவர்களுக்குப் பதிலாக இருந்தன அவரின் கருத்துகள். ‘‘இப்போது அரசாங்கம் தாலிக்குத் தங்கம் கொடுத்து வருகிறதே, இதற்கெல்லாம் முன்னோடியாக 1981-ம் ஆண்டே காஞ்சிபுரத்தில் நடந்த மூன்று ரசிகர்கள் திருமணங்களுக்குத் தாலிக்கு தலா இரண்டு சவரன் தங்கம் கொடுத்தவர் ரஜினி. அந்த ஒரு கல்யாணத்தோடு நின்றுவிடவில்லை. பவுன் தரும் பணிகள் தொடர்ந்து நடந்தன. ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பிறகு அந்தப் பெயரிலேயே அறக்கட்டளை ஆரம்பித்து மாணவ, மாணவிகளுக்கு எவ்வித சுயவிளம்பரமும் இல்லாமல் கல்விச் செலவுகள் செய்துவருகிறார்.

2005-ல் எங்கள் தலைவர் செய்த உதவி இன்றுவரை உலகத்துக்குத் தெரியவே தெரியாது. ராமேஸ்வரம் மண்டபத்துக்குப் படகில் வந்த இலங்கை அகதிகள் குடும்பங்கள், பசியில் தவிப்பதாக துயரச்செய்தி கிடைத்தது. பாய், தலையணை, உடைகள், குழந்தைகளுக்குப் பால் பவுடர், அரிசி மூட்டைகள், துவரம் பருப்பு என்று மொத்தம் 250 குடும்பங்களுக்கு ஒரு கன்டெய்னர் லாரியில் அனுப்பி வைத்தார். அதுபோலவே வேலூர், புழல் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் இலங்கை அகதிகளின் குடும்பங்களுக்கும் தேடிப்போய் உதவி செய்தார். அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் அகதிகளுக்குத் தன்னிச்சையாக உதவக்கூடாது என்று சட்டமே இருக்கிறது. இப்போதுகூட எழிலகம் சென்று அங்குள்ள ரெக்கார்டுகளைப் புரட்டிப் பார்த்தால், இந்த வரலாறு புரியும். அவரைப் பார்த்து  ‘நீங்கள் தமிழரா’ என்று கேட்பது எந்தவிதத்தில் நியாயம். 

p36d.jpg

சென்னையையும், கடலூரையும் வெள்ளம் தாக்கியபோது நிவாரணத் தொகையாக முதல்வரிடம் ஐந்து லட்ச ரூபாய் நிதி கொடுத்ததைக்கூட சிலர் கேலி பேசினார்கள். ஒரு உண்மை தெரியுமா? சென்னையிலிருந்து கடலூருக்கு லாரிகளில் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்தார். 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க வந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தன்னுடைய ஸ்ரீராகவேந்திரா மண்டபத்தில் தங்குவதற்கு இடம்கொடுத்தார்.

ரசிகர் மன்றங்கள் ஆரம்பித்த காலத்திலேயே ரஜினிக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மன்றங்கள் இருந்தன. ‘தலைவர் அரசியலுக்கு வருவாரோ, மாட்டாரோ’ என்ற சந்தேகத்தில் இடையே தொய்வு ஏற்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால், ஒரேயடியாக நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. கடந்த மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் ‘போருக்குத் தயாராவீர்’ என்று அவர் அறிவித்ததும், நாங்கள் தயாராகிவிட்டோம். அநேகமாக டிசம்பரில் ரசிகர்கள் சந்திப்பு நடைபெறும். அப்போது தமிழகமே ஆவலோடு எதிர்பார்க்கும் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிப்பார் தலைவர்’’ என விரிவாகச் சொன்னார் அவர்.

பினராயி விஜயன், அர்விந்த் கெஜ்ரிவால் சந்திப்புகள், ‘ஆனந்த விகடன்’ தொடர் என கமல்ஹாசன் அரசியல் டேக்ஆஃப் ஆகிவிட்டது. கமல் அரசியலுக்கு வருவது பற்றிப் பேசிய பாரதிராஜா, ‘‘கமலுக்கு அரசியல் தெரியாது என்று மட்டும் சொல்லாதீர்கள். அவன் வந்தான் என்றால் முழுசா கத்துக்கிட்டு வருவான். தாங்க மாட்டீங்க’’ என்றார். இப்போது அதுதான் நடக்கிறது. பல துறை நிபுணர்களைச் சந்தித்துவரும் கமல், தீர்வுகளாக அவர்கள் முன்வைக்கும் விஷயங்களையும் கேட்டறிந்து வருகிறார். தவிர மற்ற கட்சி நண்பர்கள் சிலரையும் கமல் தொடர்ந்து சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தன் நற்பணி இயக்க நிர்வாகிகளிடமும் விவாதித்து வருகிறார்.

p36a.jpg

இந்த நிலையில் கமலின் அரசியல் நிலைப்பாடு குறித்து, அவரின் மூத்த சகோதரர் சாருஹாசனிடம் கேட்டோம். ‘‘அரசியலில் வெற்றிபெற ஒரு பொய்யான தெய்வ வழிபாடு தேவை. அந்த வழிபாடு இல்லாதது கமலுக்கு ஒரு குறை. தமிழக மக்கள் பொய்யிலேயே வளர்ந்தவர்கள். உண்மை பேசும் கமல், தேர்தல் அரசியலுக்கு வரும்போது அவரை ஏற்பார்களா என்பது எனக்குத் தெரியாது. மக்கள் பொய்யை நம்பா விட்டாலும், அதை விரும்பி ஏற்றுக்கொள்பவர்கள். ‘மக்கள் வரிப் பணத்தைக் குறைந்தபட்சம் 60 கோடியை யாரெல்லாம் தனதாக்கிக்கொள்ளும் திறமை கொண்டவர்களோ, அவர்களே தமிழகத்தை ஆட்சிசெய்யத் தகுதியானவர்கள்’ என்பது நம் தமிழ் மக்கள், அரசியல்வாதிகளுக்கு விடுத்துள்ள கட்டளையாகத்தான் கடந்த தேர்தல் முடிவைப் பார்க்க வேண்டியுள்ளது.

p36.jpgஇந்தியாவில் இதுவரை எத்தனையோ சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்து வெற்றி கண்டுள்ளார்கள்; தோல்வியும் அடைந்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் கமல் அரசியல் பேசுவதுதான் மக்களுக்கு ஏனோ புதிதாக இருக்கிறது. இதுவரை ரஜினி, கமல் என்ற இந்த இரண்டு பெயர்களைத் தவிர வேறு யாரையும் நோக்கி இந்தளவுக்கு ஆச்சர்யக் கேள்விகள் எழுந்ததில்லை. இப்போது எனக்குத் தெரிந்த கேள்வி இது ஒன்றுதான். கமலைப் பார்த்து, ‘ஏன் அரசியலுக்கு வருகிறாய்?’ என்று கேட்பவர்கள், ரஜினியைப் பார்த்து, ‘நீங்கள் ஏன் இன்னும் அரசியலுக்குள் தீர்க்கமாக நுழையவில்லை?’ என்று கேட்காமல் இருப்பதிலேயே அவர்களின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது’’ என்றார் அவர்.

முதலில் நடிகர் சங்கம், அடுத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்று குறிவைத்து வெற்றிபெற்ற விஷாலின் அடுத்த அரசியல் மூவ் என்ன? விஷால் ரசிகர் மன்றத் தலைவர் ஜெயசீலனிடம் கேட்டோம். “எந்த நடிகருக்குத்தான் அரசியல் ஆசை இல்லை? இதில் விஷால் சார் மட்டும் விதிவிலக்கா என்ன? தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகப் போட்டியிட்டு வென்றார். இதுவரை யாரும் தொடுவதற்குப் பயந்த ஃபெப்சி பிரச்னையைத் தைரியமாகக்  கையாண்டார். சினிமாவில் ஜெயித்த விஷால் சார், அரசியலிலும் ஜெயிக்கவேண்டும் என்பது தமிழ்நாட்டின் 16 ஆயிரம் ரசிகர் மன்றங்களின் ஆசை. டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டது, ஒரத்தநாட்டில் விவசாயக் கடனைக் கட்ட முடியாததால் டிராக்டரைப் பறிகொடுத்த விவசாயிக்கு உதவியது என விஷால் சாருக்கு இரக்க குணம் இயல்பிலேயே இருக்கிறது. நிர்வாகத் திறனும் உதவி மனப்பான்மையும் கொண்ட விஷால் சார் அரசியலுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயம்” என்றார்.
 
எல்லாக் கட்சிகளும் ஒதுங்கி நின்று இவர்களை வேடிக்கை பார்க்கும் நிலைமை வருமோ?!

- எம்.குணா


மெர்சல் சொல்லும் மெஸேஜ் !

p36b.jpg

‘‘அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் இனி எப்போதும் அரசு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொண்டால் அரசு மருத்துவமனை தரமானதாக வளரும்... அனைவருக்கும் இலவச மருத்துவமும் கிடைக்கும்’’ என்ற சமூக வசனத்துக்கு தியேட்டரில் வெடி. தமிழன் வேட்டிப் பெருமிதம், வெளிநாட்டில் தாய்மொழியில் பேசுவதன் மூலம் தமிழ்ப் பெருமிதம் எனத் தமிழர் அடையாளம் இன்னொரு பக்கம். கம்யூனிச அடையாளத்தையும், சமூகப் போராளி அடையாளத்தையும் கலந்து கட்டியுள்ளார் விஜய்.

விஜய்யின் இப்போதைய ஆர்வம் பற்றி மன்ற முக்கிய நிர்வாகிகள் சிலர் விளக்கமாகப் பேசினர். “இன்று ஒரு கட்சி கட்டமைப்பைப் போல கிளை வரை வேர் பரப்பியுள்ளன எங்கள் மன்றங்கள். கிளைக்கு 28 பேர் என 65 ஆயிரம் மன்றங்கள் உள்ளன. (விஜய் மக்கள் இயக்கம் உட்பட) நேரம் கிடைக்கும்போதெல்லாம் தம்முடைய நீலாங்கரை வீட்டருகே உள்ள அலுவலகத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், மன்றத்தினரை விஜய் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்வார். அப்போது அவர்களிடமும் கருத்துகளைக் கேட்பார். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ‘மன்ற விழாக்களைப் பரவலாக்குங்கள்’ என மாநில தலைமையிடமிருந்து உத்தரவு வந்தது. அதன்பிறகு வந்த உத்தரவுக்கேற்ப, வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், ஏரிகளைத் தூர்வாரும் பணிகளை ரசிகர் மன்றத்தினர் செய்தனர். மாவட்ட அளவில் மன்றக் கூட்டங்கள் நடத்தி, அதில் பேச்சுப் பயிற்சியும், எழுதும் பயிற்சிகளும் மன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்டன. மேலும் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில், மக்களை இப்போது பாதிக்கும் பிரச்னைகள் பற்றியெல்லாம் பேசப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத்தான் ‘மெர்சல்’ டயலாக்குகள் அமைந்தன’’ என்றனர்.

விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்தியத் தலைவர் புஸ்ஸி ஆனந்திடம் பேசினோம். “பிரபலங்களைச் சுற்றி நிறைய யூகங்கள் வெளியாகும். விஜய் சாரை  பொறுத்தவரை மக்களுக்கு நல்ல நல்ல கருத்துகளைத் தமது படங்களின் மூலம் வெளிப்படுத்துபவர். அதையே தமது மன்றங்கள் மூலமும் செயல் வடிவத்தில் கொண்டுவருகிறார். அதனால்தான் மக்களுக்குப் பல நல்ல விஷயங்களை அவரால் செய்ய முடிகிறது. அவர் நினைப்பது போல நாங்களும் செயல்படுகிறோம்’’ என்றார்.

‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் என்று பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை கண்டனம் எழுப்பியுள்ளதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.

தமிழக அரசியல் வெற்றிடத்தில் தம்மை எம்.ஜி.ஆராக முன்னிறுத்தும் அரசியலுக்கு, ‘மெர்சல்’ மூலம் அடித்தளமிட்டுள்ளார் விஜய்.

- சே.த.இளங்கோவன்


‘‘விஜய்யின் முதல் மூவ்!’’

டைகளையும் டென்ஷனையும் தாண்டி தீபாவளிக்கு ரிலீஸான விஜய்யின் ‘மெர்சல்’ படத்தை, அவரின் அரசியல் பயணத்துக்கான முன்னோட்டம் எனச் சொல்லலாம். படத்தில் விஜய் தோன்றும் முதல் காட்சியின்போது பின்னணியில் எம்.ஜி.ஆர் பாடல் ஒலிக்கிறது. தொடர்ந்து எம்.ஜி.ஆரின் புகைப்படம், அவரின் திரைக்காட்சிகள்... என ஆங்காங்கே எம்.ஜி.ஆர் ரெஃபரென்ஸ்கள். ‘‘தலைமை இல்லாமல் தவிக்கும் அ.தி.மு.க-வினரைத் தன் பக்கம் நகர்த்திக்கொண்டுவர இது விஜய்யின் முதல் மூவ்’’ என்கின்றனர் அரசியல் அறிந்தவர்கள்.

அதேபோல படத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கலாய் விமர்சனங்கள் மூலம் குத்திக்காட்டியிருக்கிறார். கதைப்படி க்ளைமாக்ஸில் கைதாகும் விஜய், மீடியா முன் பேசுவார். அப்போது அவரின் பேட்டியை டி.வி-யில் பார்த்துக்கொண்டிருக்கும் மாநில அமைச்சர்கள் மிக்சர் சாப்பிட்டபடி காட்சி தருவார்கள். அதே பேட்டியில், ‘‘சிங்கப்பூரில் 7 சதவிகித ஜி.எஸ்.டி. ஆனால், அங்கு மருத்துவம் இலவசம். இங்கு 28 சதவிகித ஜி.எஸ்.டி, ஆனால் மருத்துவம் இங்கு மிகப்பெரிய வியாபாரம்’’ என்பார்.

முன்னதாக கதைப்படி விஜய்யும் வடிவேலுவும் ஃபாரின் செல்வார்கள். அங்கு வடிவேலுவின் பர்ஸை ஒரு கும்பல் வழிப்பறி செய்யும். ஆனால், அந்த பர்ஸில் பணமே இருக்காது. அதற்கு வடிவேலு அந்தக் கும்பலிடம், ‘‘இண்டியாவில் நோ மணி, ஒன்லி டிஜிட்டல் மணி’’ என்று பேசுவதாக டயலாக் வரும். முன்னதாக டி.வி ஒன்றுக்குப் பேட்டி தரும் மருத்துவர் விஜய்யிடம், ‘‘எப்படி 5 ரூபாய்க்கு ட்ரீட்மென்ட் சாத்தியம்’’ என்ற கேள்வி முன்வைக்கப்படும். அதற்கு, ‘‘இலவச டி.வி, மிக்ஸி, கிரைண்டர் தரும்போது மருத்துவத்தை இலவசமாகத் தரமுடியாதா’’ என்று எதிர்கேள்வி கேட்பார்.

நிச்சயம் ‘மெர்சல்’ அரசியல் வட்டாரத்தை மெர்சலாக்கியிருக்கிறது. 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.photobox.co.uk/my/photo/full?photo_id=10021608186

 

 

ஓடுங்க ஓடுங்க .. அந்த கொடிய மிருகங்கள் நம்மை நோக்கித்தான் ஒடி வருகுது..  ஓடுங்க எல்லாம் பாதுகாப்பான இடத்துக்கு !!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.