Jump to content

ஆபத்தான அமைதி!


Recommended Posts

ஆபத்தான அமைதி!

 

யாழ்ப்பாணத்­தில் மீண்­டும் ஒரு கொலை நிகழ்ந்­ துள்­ளது. துப்­பாக்­கி­யால் சுட்டு இளை­ஞர் ஒரு­வர் கொல்­லப்­பட்­டுள்­ளார். ஏற்­க­னவே இடம்­பெற்ற துப்­பாக்­கிச் சூட்­டுக் கொலை­கள் தீர்க்­கப்­ப­டா­மல் இருக்­கும் நிலை­யில் மற்­றொரு கொலை இடம்­பெற்­றுள்­ளது.

இந்­தக் கொலையை யார் செய்­தார்­கள் என்ற மர்­மம் நேற்று இரவு வரை­யில் துலங்­க­வில்லை. போதைக் கடத்­தல், சட்­டத்­துக்­குப் புறம்­பான செயல்­கள் என்­ப­வற்­று­டன் தொடர்­பு­ப­டுத்தி பல்­வேறு ஊகங்­க­ளும் வதந்­தி­க­ளும் உலா­வு­கின்­றன.

ஆனால், சம்­ப­வத்துக்கான கார­ணமோ குற்­ற­வா­ளி­கள் தொடர்­பான தக­வல்­களோ திட்­ட­வட்­ட­மாக வெளி­வ­ர­வில்லை. படை­க­ளின் புல­னாய்­வுக் குழுக்­கள் இந்­தக் கொலை­யு­டன் தொடர்­பு­பட்­டுள்­ளன என்­கிற ஊக­மும் கூட உலா­வு­கின்­றது.

கொலையை நேரில் கண்ட சாட்­சி­யான மோட்­டார் சைக்­கி­ளைச் செலுத்­திச் சென்ற நபர், சுட்­ட­வர்­க­ளில் ஒரு­வ­ரைத்தான் பொலிஸ் நிலை­யங்­க­ளில் கண்­டி­ருக்­கி­றார் என்­றும் அவர் புல­னாய்­வுப் பிரி­வைச் சேர்ந்­த­வர் என்­றும் பல­ரி­டம் கூறி­யி­ருக்­கி­றார்.

ஆனால், அது பற்றி விசா­ரணை நடப்­ப­தா­கவோ சந்­தே­க­ந­பர்­கள் யாரா­வதுஇனங்­கா­ணப்­பட்­டி­ருப்­ப­தா­கவோ எந்­தப் பகி­ரங்­கத் தக­வல்­க­ளும் இது­வ­ரை­யில் கிடை­யாது.

இந்­தச் சம­யத்­தில்­தான் ஒரு வரு­டத்துக்கு முன்­னர் நடந்த சம்­ப­வம் நினை­வில் ஊச­லா­டு­கி­றது. பல்­க­லைக்­க­ழக மாண ­வர்­கள் இரு­வர் பொலி­ஸா­ரால் சுட்­டுக்­கொல்­லப்­ப­ட்ட நிலை யில், அவர்­கள் இரு­வ­ரும் விபத்­தில் உயி­ரி­ழந்­தார்­கள் என்றே பொலி­ஸார் ஆரம்­பத்­தில் தக­வல்­களை வெளி­யிட்­டார்­கள்.

இப்­போது மணி­யந்­தோட்­டக் கொலை­யில் புல­னாய்­வா­ ளர்­க­ளின் தொடர்­பு­கு­றித்து அர­சல் புர­ச­லா­கக் கதை­கள் அடி­ ப­டும் நிலை­யில், பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் கொலை ­யின் போது பொலி­ஸார் நடந்­து­கொண்ட விதத்­தைச் சீர்­தூக்­கிப் பார்ப்­பது தவிர்க்க முடி­யா­தது.

அத்­தோடு எங்­கேயோ இடிக்­கும் மற்­றொரு விட­யம், நல்­லூ­ரில் நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப் பாது­கா­வ­லர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­போ­தும், கொக்­கு­வி­லில் பொலி­ஸார் இரு­வர் வாளால் வெட்­டப்­பட்­ட­போ­தும் குற்­ற­வா­ளி ­க­ளைப் பிடிப்­ப­தில் பொலி­ஸார் காட்­டிய வேக­மும் அவ­ச­ர­மும் இந்­தக் கொலை­யில் ஏன் இல்லை என்­ப­து ­தான்.

எந்­தக் கொலை­யாக இருந்­தா­லும் சட்­டம் ஒழுங்­குக் காவ­லர்­கள் அதனை ஒரே மாதி­ரி­யா­கத்­தானே அணு­கி­யி­ருக்க வேண்­டும். அப்­ப­டி­யில்­லா­மல் சாட்­சி­கள் தெளி­வான தக­வல்­களை வழங்­கி­னால்­ தான் சந்­தே­க­ந­பர்­களை இனங்­கண்டு நட­வ­டிக்கை எடுக்­க­ மு­டி­யும் என்­பது போன்று பொலி­ஸார் இந்த வழக்­கில் நடந்­து­ கொள்­வது நியா­ய­மான சந்­தே­கங்­களை எழுப்­பு­கி­றது.

அரி­யா­லைச் சம்­ப­வத்­தில் கொல்­லப்­பட்ட இளை­ஞன் மற்­றும் அவ­ரு­டன் கூடச் சென்­ற­வர் என இரு­வ­ருமே குற்­றப் பின்­னணி கொண்­ட­வர்­கள் அல்­லர் என்­கின்­றன தக­வல்­கள். அவர்­கள் மீது பொலிஸ் நிலை­யங்­க­ளில் முறைப்­பா­டு­களோ, நீதி­மன்­றங்­க­ளில் வழக்­கு­களோ இல்லை.

அப்­ப­டி­யி­ருக்­கும்­போது அவர்­க­ளில் ஒரு­வர் கொல்­லப்­பட்­ட­தும், அவர்­கள் சட்­டத்துக்குப் புறம்­பான பல்­வேறு சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்­கிற கதை­கள் பரப்­பப்­ப­டு­வ­தன் பின்­ன­ணி­யும் கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டி­யதே!

குற்­றங்­க­ளு­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள் என்­ப­தால் உயிர் வாழத் தகு­தி­யற்­ற­வர்­கள் என்­கிற மறை­மு­க­மான நியாயப்­ப­டுத்தல் இதற்­கூ­டாக சமூ­கத்­தின் ஏனைய கூறு­க­ளுக்­குக் கடத்­தப்­ப­டு­கின்­றதா என்ற கேள்­வி­யைத் தவிர்க்க முடி­ய­வில்லை.

ஏனெ­னில் கொலை நிகழ்ந்து இரண்டு நாள்­கள் கடந்த பின்­ன­ரும்­கூட மனித உரிமை அமைப்­பு­களோ, பொது அமைப்­பு­களோ எது­வும் இந்­தக் கொலை தொடர்­பில் மூச்­சுக்­கூட விட­வில்லை. அர­சி­யல் கட்­சி­க­ளும் வாய்­மூடி மௌனி­க­ளா­கவே இருக்­கின்­றன.

குற்­றங்­க­ளோடு தொடர்­பு­பட்­ட­வர்­கள் என்­றால் கேட்­டுக் கேள்­வி­யின்­றிக் கொல்­லப்­ப­ட­லாம் என்­ப­து­தான் நியா­யம் என்று ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளதா? இது மிக மிக ஆபத்­தான போக்கு. அதற்கு எதி­ராக ஒட்­டு­மொத்­தச் சமூ­க­மும் கிளர்ந்து எழ­வேண்­டும்.

http://newuthayan.com/story/39906.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.