Jump to content

இவர்தான் 10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி! #RealMersalDoctor


Recommended Posts

இவர்தான் 10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி! #RealMersalDoctor

 
 

``சாதாரண அழுக்கு உடையுடனும், உழைத்துக் களைத்த முகத்துடனும் கையில் இருபது ரூபாயுடன், `இவ்ளோதான் சார் இருக்கு. இதுக்குள்ள வைத்தியம் பார்த்துடுங்க'னு வந்து நிப்பாங்க. ரொம்பக் கஷ்டமா இருக்கும். அந்த இருபது ரூபாயை வாங்கிட்டு ஊசி போட்டு மாத்திரையையும் கொடுத்தனுப்பிருவேன். `எதுக்கு இருபது ரூபா வாங்குறீங்க... சும்மாவே ட்ரீட்மென்ட் கொடுக்கல?’னு நீங்க கேட்கலாம். இலவசமாக் கிடைக்கிற எதுக்கும் மரியாதை இருக்காது... அதோட அடிப்படை மருந்துச் செலவுக்கும், கிளினிக் மெயின்டெனென்ஸுக்காவது பணம் வேணுமில்லையா? அதனாலதான் அவங்களால முடிஞ்ச காசை வாங்கிக்கிறேன்...’’ மிக இயல்பாகப் பேசுகிறார் டாக்டர் ராமசாமி. தென்காசி மக்கள் ராமசாமிக்கு வைத்துள்ள பெயர், '10 ரூபா டாக்டர்.’

டாக்டர் ராமசாமி

 

தென்காசி, வாய்க்கால் பாலம் அருகில் இருக்கும் ராமசாமியின் கிளினிக் எல்லா நேரத்திலும் நிரம்பிவழிகிறது. காத்திருக்கும் எல்லா முகங்களிலும் ஏழ்மையின் அடையாளம். எவரிடமும் எந்தப் பாகுபாடும் இல்லாமல், கனிவும் கருணையும் ததும்பப் பேசி, விசாரித்து, சிகிச்சையளித்துக்கொண்டிருக்கிறார் ராமசாமி.

நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் சிறிதும் தயக்கமின்றி, `நிறைய பேஷன்ட் இருக்காங்க... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..." என்று கூறிவிட்டு கவனம் பிசகாமல் பணியில் இணைகிறார்.

உணவு இடைவேளையில் பேசினோம்.

"நான் பெரிசா என்ன பண்ணிட்டேன்னு என்னைப் பார்க்க வந்திருக்கீங்க... மருத்துவம்ங்கிறது சேவைதானே... நாங்க படிச்சப்போ, எங்க பேராசிரியர்கள் எல்லாம் அப்படித்தான் சொல்லிக்கொடுத்து வளர்த்தாங்க. கடந்த நாற்பத்தாறு வருசமா இப்படித்தான். ஆரம்பத்துல ஒரு ரூபா, ரெண்டு ரூபாதான் வாங்கினேன். இப்பதான் பத்து ரூபா. காசு பெருசில்லை... நாம பார்க்குற வேலைக்கு ஒரு மரியாதை இருக்கணுமில்லே... அதுக்காகத்தான் இது...’’

கிளினிக்

உற்சாகமாகப் பேசுகிறார் ராமசாமி.

``என்னோட சொந்த ஊர் கோவில்பட்டி பக்கத்துல நாலாட்டின்புத்தூர். அம்பாசமுத்திரம் அரசுப்பள்ளியில படிச்சேன். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில ரெண்டாவது பேட்ச் நாங்க. படிப்பு முடிஞ்சதும் கருங்குளம் அரசு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலை நேரம் போக, மீத நேரத்துல கருங்குளத்துலயே ஒரு கிளினிக் ஆரம்பிச்சேன். அப்ப இருந்தே, காசைப் பாக்குறதில்லை. இருந்தாக் கொடுப்பாங்க. இல்லேன்னா, போயிடுவாங்க. நானே சிலபேருக்கு பஸ்ஸுக்குக் காசு கொடுத்து அனுப்பிவைக்கிறதும் உண்டு. அப்படி, ஆரம்பிச்சது... இப்ப வரைக்கும் அந்தப் பாதை மாறலை..." - சிரிக்கிறார் ராமசாமி.

ஒரு மருத்துவர், குடும்ப மருத்துவராக இருப்பது இயல்புதான். ஆனால், குடும்பத்தில் ஒருவராக மாறுவது சிறப்பு. ராமசாமியை அப்படித்தான் மக்கள் நினைக்கிறார்கள். அது பற்றிக் கேட்டாலும் அதே புன்னகையை உதிர்க்கிறார் ராமசாமி.

``அது கொஞ்சம் பெருமிதமான விஷயம்தான். எவ்வளவு வேணும்னாலும் காசு சம்பாதிச்சுடலாம். மனிதர்களைச் சம்பாதிக்கிறது கஷ்டமில்லையா... நான் நிறைய மனிதர்களைச் சம்பாதிச்சுருக்கேன்.

மருத்துவத்தைப் பொறுத்தவரை, நம் மக்களுக்கு விழிப்புஉணர்வு போதலை. அதேநேரத்துல, நம்ம நாட்டுல மருத்துவத்துல ஏகப்பட்ட பாகுபாடு நிலவுது. ஏழைக்கு அரசு மருத்துவமனை, பணக்காரங்களுக்கு தனியார் மருத்துவமனைனு ஒரு நிலை இருக்கு. இது ரொம்பவே பாவம். கல்வி, மருத்துவம் ரெண்டும் அரசாங்கம் கையிலதான் இருக்கணும். அரசாங்கம் மக்களுக்கு நல்ல மருத்துவத்தை உறுதி செய்யணும்.

சிறந்த மருத்துவருக்கான சான்றிதழ்

இன்னைக்கு மருத்துவப் படிப்பு நிறையச் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கு. மருத்துவங்கிறது ஒரு சேவை. சேவை செய்ய ஆசை இருக்கிறவங்க மட்டும்தான் மருத்துவம் படிக்கணும். மக்கள், மருத்துவர்களை தெய்வமா நினைக்கிறாங்க. அதனால, மருத்துவம் படிக்கிற மாணவர்கள் இந்தத் தொழிலோட புனிதத்தைப் புரிஞ்சுக்கணும். நோயாளியை கனிவாக அணுகணும். அவங்களுக்கு நம்பிக்கை கொடுக்கணும். நம்பிக்கைதான் பாதி மருந்து. அதைக் கொடுக்கத் தவறக் கூடாது...’’ என்கிறார் ராமசாமி.

மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தால், அங்கேயும் பத்து பேர் சிகிச்சைக்காக வந்து நிற்கிறார்கள். ராமசாமியின் மனைவி பெயர் பகவதி... வீட்டு நிர்வாகி. ஒரு மகள், விஜயா... திருமணமாகிவிட்டது.

ராமசாமி, பால்வினை நோய்களுக்கான 'டிப்ளமோ இன் வெனீரியாலஜி' (Venereology) முடித்திருக்கிறார்.

விருது

பால்வினை நோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் சிறப்பு மருத்துவர்களுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. ஆயிரங்களில் ஃபீஸ் வாங்கலாம். ஆனால், பணத்தை ஒரு பொருட்டாக நினைக்காமல், மருத்துவத்தைச் சேவையாகச் செய்து வரும் ராமசாமி போன்றோரின் வாழ்க்கையை மருத்துவ மாணவர்களுக்குப் பாடமாகவே வைக்கலாம். 

http://www.vikatan.com/news/health/105697-poor-mans-doctor-thenkasi-ramasamy.html

Link to comment
Share on other sites

நோ ஃபீஸ்’ டாக்டர்! ராயபுரத்தில் ஒரு 'மெர்சல்' டாக்டர் #VikatanExclusive

 

``நைட் ரெண்டு மணி இருக்கும். என் மகன் பூவரசன் ஒடம்பு கொதியாக் கொதிக்குது. அடிக்கடி வாந்தி வேற எடுத்துட்டே இருந்தான். நானும் என் வீட்டுக்காரரும் பதறிப்போயி, டாக்டர் அப்பாகிட்ட கூட்டிட்டு வந்தோம். அந்த நட்ட நடு ராத்திரியிலயும் என் மகனுக்கு வைத்தியம் பார்த்தாரு. அவர் என் மகன் கையைத் தொட்டு பார்த்த கொஞ்ச நேரத்துலயே, ஜுரம் சரியாப்போச்சு. எத்தனை மணிக்கு வந்தாலும் சலிக்காமப் பார்ப்பாரு. ஃபீஸ்னு ஒண்ணைக் கேட்கவே மாட்டாரு. நாமளா ஏதாவது கொடுத்தா வாங்கிப்பாரு. கொஞ்சம் அதிகமா நாம கொடுத்துட்டதா தெரிஞ்சா, அவரே திருப்பிக் கொடுத்துடுவாரு. ரொம்ப நல்ல மனுசன். எங்களுக்கெல்லாம் சாமி மாதிரி, எங்க டாக்டர் அப்பா’’ என்று சிலாகித்துப் பேசுகிறார் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த காந்திமதி.

டாக்டர் ஜெயச்சந்திரன்

 

யார் இந்த டாக்டர் அப்பா... எங்கே இருக்கிறார்?

சென்னை, வண்ணாரப்பேட்டை, வெங்கடாச்சலம் தெருவில் இருக்கிறது டாக்டர் ஜெயச்சந்திரனின் கிளினிக். ஜெயச்சந்திரனின் வீடும் அதுதான். கிளினிக்கில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ``கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. ரொம்ப நேரமா நிக்குறாங்க முடிச்சுட்டு வந்துடுறேன்’’ என்று சொல்லிட்டுப் பணியில் தீவிரமாகிறார். அங்கே சிகிச்சைக்காக வந்திருந்த ரூமானா யாஸ்மின் என்பவரிடம் பேசினோம்...

ருமானா யாஸ்மின்``நாங்க கொடுங்கையூர்ல இருந்து வர்றோம். என் பொண்ணு ஃபௌமிதாக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி மிக அதிகமான காய்ச்சல். ஒரு தனியார் மருத்துவமனைக்குப் போனோம். உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட்டாங்க. எங்களுக்கு பயமாப் போயிடுச்சு. பதறிப்போயிட்டோம். உடனே என் பொண்ணை டாக்டர் அப்பாகிட்ட கூட்டிட்டு வந்துட்டோம். அப்பா பார்த்துட்டு, பிளட் டெஸ்ட் எடுக்கச் சொன்னாங்க, ரத்த தட்டணுக்கள் 80 ஆயிரம்தான் இருக்குனு சொல்லி, மாத்திரை எழுதிக் கொடுத்தாங்க. பப்பாளி ஜூஸும் கொடுத்தாங்க. அந்த மாத்திரையைத்தான் என் பொண்ணு தொடர்ந்து சாப்பிட்டுட்டு வந்தா. நேத்து மறுபடியும் பிளட் டெஸ்ட் எடுத்துப் பார்த்ததுல ஒரு லட்சம் தட்டணுக்கள் அதிகமாயிருக்கு. அப்பா ரொம்ப கைராசியான டாக்டர். அப்பாகிட்ட வைத்தியம் பார்க்க, ஃபீஸே கிடையாது. நாமா ஏதாவது கொடுத்தா வாங்கிப்பாரு. வைத்தியமும் பார்த்துட்டு, இவர்கிட்டயே பணமும் வாங்கிட்டு தங்களோட சொந்த ஊருக்குப் போறவங்க நெறயா பேரு இருக்காங்க. இப்பக்கூட என் மகளுக்குக் காய்ச்சல், எனக்கு முதுகுவலி, என் அம்மாவுக்கு மூட்டுவலி... அத்தனைக்கும் இவர்கிட்ட வைத்தியம் பார்த்தோம். மாத்திரை, மருந்தெல்லாம் அவரே குடுத்துட்டாரு. அதையும் வாங்கிக்கிட்டு மொத்தம் ஐம்பது ரூபாதான் கொடுத்தோம். அதுவும் அவர் எதுவும் கேட்கலை... நாங்களா கொடுத்ததுதான்’’ என்று நெகிழ்ந்துபோய் டாக்டர் ஜெயச்சந்திரனின் பெருமையை விளக்குகிறார் ருமானா யாஸ்மின்.

காந்திமதி தன் மகனுடன்

கூட்டம் குறைந்ததும் நம்மை அழைத்தார் ஜெயச்சந்திரன். அவராகவே பேச ஆரம்பித்தார்... ``செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்துக்குப் பக்கத்துல இருக்குற கொடைப்பட்டினம்தான் என் சொந்த ஊரு. அப்பா, அம்மா ரெண்டு பேருமே படிக்காதவங்க. விவசாயம் பார்த்தாங்க. சாப்பாட்டுக்கே ரொம்பக் கஷ்டம். ரொம்ப ஏழ்மையான நிலையில்தான் என் பள்ளிப் படிப்பை முடிச்சேன்.

முதல்ல லயலோ கல்லூரியில பி.எஸ்சிதான் படிச்சேன். முடிச்சதும் 1966-ம் வருஷம் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல ஸீட் கெடச்சது. என் தாய் மாமா உதவி செஞ்சதால, மருத்துவம் படிக்க முடிஞ்சுது. சேர்ந்த கொஞ்ச நாள்லயே எனக்குக் கனகவேல் நண்பனா கெடச்சான். அவங்க குடும்பம் ரொம்ப வசதியான குடும்பம். என்.வி.எஸ் பட்டணம் பொடி கம்பெனி அவங்களோடது. அவனோட நட்பு கெடச்சதுக்கு அப்புறம் அவங்க வீட்டுல இருக்குற நாலு புள்ளைகளோட, நான் அஞ்சாவது புள்ளையா ஆகிட்டேன்.

எனக்குச் சோறு போட்டதுல இருந்து மருத்துவம் படிக்கவெச்சது வரைக்கும் எல்லா உதவியையும் செஞ்சது அந்தக் குடும்பம்தான். படிப்பை முடிச்ச பின்னாடி கனகவேலுக்கும் எனக்கும் வண்ணாரப்பேட்டையில மகாராணி தியேட்டர் பக்கத்துல கிளினிக்வெச்சுக் கொடுத்ததுகூட அவங்கதான். அப்போ ரெண்டு ரூபாதான் ஃபீஸ் வாங்கினேன். அப்போ ஆரம்பிச்ச பழக்கம் இப்ப வரைக்கும் தொடருது. நண்பன் கனகவேல் இப்ப லண்டன்ல இருக்கான்.

சிகிச்ச செய்யும் மருத்துவர் ஜெயச்சந்திரன்

அந்த கிளினிக்லதான் 35 வருஷமா மருத்துவம் பார்த்தேன். இப்போ அஞ்சு வருஷமாத்தான் வீட்டுலயே பார்த்துட்டு இருக்கேன். நானா யார்கிட்டயும் ஃபீஸ் கேட்குறது இல்லை. அவங்க கொடுத்தா வாங்கிப்பேன். வைத்தியம் மட்டும் இல்லை. மாத்திரை, மருந்து, ட்ரிப்ஸ்னு எல்லாத்தையும் இலவசமாத்தான் பண்றேன். மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் பலபேரு இலவசமா மருந்துகள் கொடுப்பாங்க. பொதுமக்கள்ல சிலரும் உதவி செய்யுறாங்க. அதைவெச்சுத்தான் இதைச் செய்யுறேன்.

2012-ம் வருஷம், காசிமேடு ஜீவரத்னம் சாலையில ஒரு கிளினிக் வச்சுருந்தேன். அந்த நாள்கள் என் வாழ்க்கையில மறக்கவே முடியாதவை. அந்தப் பகுதி முழுவதும் மீனவ மக்கள்தான். என் மேல ரொம்பப் பாசமா இருப்பாங்க. `அண்ணா’, `அப்பா’ன்னுதான் என்னைக் கூப்பிடுவாங்க. அவங்க வீட்டு பல திருமணங்கள் என் தலைமையில நடந்திருக்கு. எனக்கு மீனவ மக்களை ரொம்பப் பிடிக்கும். அவங்க அன்பும் பாசமும் ரொம்ப தூய்மையானதா இருக்கும்.

சிகிச்சை

`நேதாஜி சமூக சேவை இயக்கம்’னு ஒண்ணைத் தொடங்கி பல சமூக சேவைகளையும் செஞ்சிட்டு வர்றோம். கண்தானம், ரத்ததானம், கண் புரை நீக்குதல்னு ரெண்டாயிரத்துக்கும் அதிகமான மருத்துவ முகாம்களையும் நடத்தியிருக்கிறோம். அதுக்குப் பல மருத்துவர்கள் உதவியிருக்காங்க. பல இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறோம். ஏழை எளியோருக்கு மருத்துவம், சுகாதாரம் தொடர்பா பல்வேறு விழிப்புஉணர்வு பிரசாரங்களையும் செய்துவருகிறோம். புயல் காலங்களில் எல்லாம் கடலூர்ல பல்வேறு பல மருத்துவ முகாம்களை நடத்தியிருக்கோம். ஆண்டவன் புண்ணியத்துல நல்லபடியா போயிட்டிருக்கு.

நம்ம இளம் மருத்துவர்களிடம் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான். தயவுசெஞ்சு கிராமங்களுக்குப் போங்க. நெறையா மருத்துவ முகாம்களை நடத்துங்க. ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்க. அவங்க வீட்டு உறுப்பினர்களைப்போல பழகுங்க. நம்ம ஜனங்க மருத்துவர்களைக் கடவுளாப் பார்க்குறாங்க. அவங்களைக் குழந்தைகள்போலப் பார்த்துக்க வேண்டியது, நம்ம கடமை. அதேபோல மருத்துவக் கல்லூரியிலேயே சேவைகளைப் பத்தி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும். மருத்துவம் புனிதமானது. அது வியாபாரமாகிடக் கூடாது. இன்னிக்கும், என்னிக்கும் அது சேவையா மட்டும்தான் இருக்கணும்’’ என்கிறார் டாக்டர் ஜெயச்சந்திரன்.

 

டாக்டர் ஜெயச்சந்திரன்

ஒரு ஜவுளிக் கடை அதிபர் வீட்டிலிருந்து ஜெயச்சந்திரனுக்கு மதிய உணவும், மாலையில் தேநீரும் கடந்த ஒரு வருடமாக வந்துகொண்டிருக்கிறது. டாக்டர் ஜெயச்சந்திரன் எவ்வளவு மறுத்தும் அந்த ஜவுளிக் கடை அதிபர் விட்டபாடில்லை. அவரும் டாக்டரிடம்தான் பல வருடங்களாக சிகிச்சை பெற்றுவருகிறார்.

எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல், மகிழ்ச்சியோடு தன்னிடம் வருபவர்களுக்குச் சிகிச்சையளிக்கிறார் ஜெயச்சந்திரன். இன்றைய இளைய தலைமுறையினர் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டியது டாக்டர் ஜெயச்சந்திரன் போன்ற சமூக அக்கறை உள்ளவர்களைத்தான். அதுதான் நம் அனைவரின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கும் நல்லது!

 

http://www.vikatan.com/news/health/106010-this-doctor-receives-no-fee-in-royapuram.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.