Jump to content

முஸ்லிம் பெரும்பான்மை இந்தோனீசியாவின் ரகசிய நிர்வாண சமூகம்


Recommended Posts

முஸ்லிம் பெரும்பான்மை இந்தோனீசியாவின் ரகசிய நிர்வாண சமூகம்

இந்தோனீசியாவின் ரகசிய நிர்வாண சமூகம்

பொது வெளியில் நிர்வாணத்தைத் தடை செய்த ஓர் நாட்டில், ஒரு நிர்வாண விரும்பியின் வாழ்க்கை எப்படி இருக்கும்? இந்தோனீசிய நாட்டில் உள்ள நிர்வாண சங்கத்தின் சில உறுப்பினர்களை பிபிசி இந்தோனீசிய சேவையை சேர்ந்த க்ளாரா ரோண்டான் சந்தித்தார்.

ஆதித்யாவின் உடலில் துணி என்ன... ஒரு நூல் கூட இல்லை.

அவர் என்னிடம் பேசும்போது, நண்டு, முட்டை, சீன முட்டைக்கோஸ் ஆகியற்றை வாணலில் வதக்கினார். அந்தப் பெரிய வாணலில் இருந்து சூடான எண்ணெய் துளிகள் அவரது வெறும் வயிற்றுப் பகுதியில் தெறித்தது.

"எனக்கான உணவைச் சமைப்பது உள்ளிட்ட தினசரி வேலைகளைச் செல்வதில் எனக்கு விருப்பம். நான் விரும்பும் நேரத்தில் நிர்வாணமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அடைகள் அணியாமல் வசதியாக இருப்பதுடன், இன்பமாகவும் உணருகிறேன்"

ஆதித்தியா ஆபத்தை எதிர்கொண்டு நிர்வாணத்தை கடைப்பிடிப்பதால், தனது முழுப் பெயர் வெளிவர வேண்டாம் என நினைக்கிறார். ஆபாசப் பட எதிர்ப்பு சட்டம் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட இந்தோனீசியாவில், பொது வெளியில் நிர்வாணமாக இருப்பது சட்டவிரோதமானது.

இன்னும் இவர் தனிப்பட்ட முறையில், நான்கு நிர்வாண விரும்பிகளுடன் சந்திக்கிறார். "நாங்கள் பொதுவெளியில் நிர்வாணமாகக் காணப்பட்டால், சிறையில் அடைக்கப்படலாம். இதன் காரணமாகவே நாங்கள் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறோம்" என்கிறார்.

இந்தோனீசியாவின் ரகசிய நிர்வாண சமூகம்

ஒரு நெருக்கமான பிணைப்பு குழு

ஆதித்தியா, கடந்த 2007 முதல் தனது ஓய்வு நேரத்தின் போது நிர்வாணமாக இருக்கிறார்.

"இணையத்தில் உலாவினேன். நிர்வாணம் பற்றிய கட்டுரைகளைத் தேடி படித்தேன். அதனுள் மூழ்கினேன். நான் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கை பாதை இதுதான் என தோன்றியது"என்கிறார் அவர்.

நாட்டில் உள்ள மற்ற நிர்வாண விரும்பிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அவர்கள் சிறுகுழுவாக இருந்தாலும், உறுதியான மற்றும் நெருக்கமாக அமைக்கப்பட்ட குழுவாக உள்ளனர். ஜகார்த்தா நிர்வாண குழுவின் ஆண்கள் பெண்கள் என கிட்டதட்ட 10-15 உறுப்பினர்கள் உள்ளனர்.

நிர்வாணம் அவர்களுக்கு வலுவான இணைப்பு மற்றும் நீடித்த பிணைப்பை தருவதாக ஆதித்தியா நினைக்கிறார்.

"நாங்கள் நாங்களாகவே இருக்க முடியும். எவ்வளவு குண்டாக இருந்தாலோ, தளர்வான ஆணுறுப்பு இருந்தாலோ, வயிற்றில் பிரசவ குறி இருந்தாலோ, மார்பக அளவுக்காகவோ நீங்கள் அசிங்கப்படமாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் நிர்வாணமாக இருக்கிறீர்கள்"

இந்தோனீசியாவின் ரகசிய நிர்வாண சமூகம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அவரது வாழ்க்கையை முறையை ஏற்றுக்கொள்ளும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள நிர்வாண குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டும் என்பது அவரது கனவு.

பொது நிர்வாணத்திற்கு இந்தோனீசிய சட்டத்தில் அனுமதி இல்லை என்றாலும், நிர்வாணமாக செல்வதற்கான வாய்ப்புகளே இல்லை என அர்த்தம் இல்லை.

விடுமுறை விடுதிகளை வாடகைக்கு எடுத்து, இக்குழுவினர் அவ்வப்போது சந்திக்கின்றனர்.

நாங்கள் சந்தித்த "ஒரு நொடிக்குள் ஆடைகளைக் களைந்துவிடுவோம்" என கூறுகிறார். அவர்கள் ஒன்றாக பொழுதைக் கழிக்கிறார்கள். அரசியல் முதல் வேலை வரை என அங்கு உரையாடல் நிகழ்கிறது.

பொறுப்பற்ற தன்மை?

ஆபத்துகளுக்கு மத்தியிலும், ஆதித்தியா தனது வாழ்க்கை பற்றி நிர்வாண இணையதளங்களில் வெளிப்படையாகப் பதிவிட்டு வருகிறார்.

அவரது பல இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு மத்தியில், நிர்வாண படங்களை பதிவிடுவதற்கான தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கும் வைத்திருந்தார். முழு நிர்வாணமாக தேவாலயத்திற்குள் அவர் நிற்கும் ஒரு படமும் அதில் இருந்தது.

இந்தோனீசியாவின் ஆபாசப் படம் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அவர் குற்றவாளி ஆக்கப்படலாம் என்பதால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீக்கியுள்ளார்.

இந்தோனீசியாவின் ரகசிய நிர்வாண சமூகம்படத்தின் காப்புரிமைAFP

"இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம், நான் கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் இருக்கிறேன் என சக நிர்வாண விரும்பிகள் கூறினர்" என்கிறார்.

தனது வாழ்க்கை பற்றி பல தவறான கண்ணோட்டங்களை மாற்ற, இந்தப் பதிவுகள் அவசியமானது என அவர் நினைக்கிறார்.

"இந்தோனேசியாவில் நிர்வாணமாகம் என்பது பாலுறவோடு தொடர்புடையது என்று நினைக்கிறார்கள். நாங்கள் ஒன்றாக ஆடை அவிழ்த்தால் அது செக்ஸ் பார்ட்டி என்று நினைக்கிறார்கள். உண்மையில் இதில் பாலுறவு தொடர்பான ஏதுமில்லை," என்கிறார் அவர்.

கடினமான வாழ்க்கை

இந்தோனீசியாவில் நிர்வாண விரும்பியாக இருப்பது "கடினமான வாழ்க்கை முடிவு" என போர்னியோவில் வாழும் மற்றோரு பெயர் கூற விரும்பாத நிர்வாண விருப்பி ஒப்புக்கொள்கிறார்.

பாலி தீவு நிர்வாண விரும்பிகளின் சிறந்த தேர்வாக உள்ளது. முஸ்லிம் பெரும்பான்மை இந்தோனீசியாவின் மற்ற பகுதிகளை விட இங்குக் கண்டிப்புகள் குறைவாக உள்ளது. இங்கு ஏற்கனவே உள்ள நிர்வாண விரும்பிகளை ஏற்கும் விடுதிகள் வெளிநாட்டினருக்கு மட்டுமே அனுமதியளிக்கின்றன" என்கிறார்.

40 வருடங்களுக்கு முன்பு பாலி தீவில் நிர்வாணம் என்பது சாதாரண ஒன்று. மேலாடை இல்லாமல் பெண்கள் செல்வதையும், நிர்வாணமாகக் குளிப்பதையும் பார்க்க முடியும்.

AFPபடத்தின் காப்புரிமைREUTERS

பாலி தீவில் உள்ள சுற்றுலா பகுதியான செமின்யாக்கில் மட்டும் நிர்வாண விரும்பிகளுக்கு 10 விடுதிகள் இருப்பதாகப் பாலி தீவில் உள்ள ஒரு விடுதியின் மேலாளர் கூறுகிறார். "அடை கட்டாயமல்ல" என இவர் நடத்தும் இரண்டு விடுதிகள் விளம்பரம் அளிக்கின்றன.

"உயர் வர்க்க மக்களுக்கு நிர்வாணம் வழக்கமானது" என்கிறார்.

நிர்வாண விருந்தினர்களில் வெளிநாட்டினருக்கு மட்டுமே தங்கள் விடுதியில் அனுமதிக்கப்படுவதாகவும், வேறு விடுதிகள் இந்தோனீசிய நிர்வாண விரும்பிகளை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.

தவறாக எண்ணம்

அவரும் அவரது சக நிர்வாண விரும்பிகளும், மற்றவர்களைப் போலவே மனிதர்களே எனச் சமூகத்திற்கு கற்பிக்க விரும்புவதாகக் கூறுகிறார் ஆதித்தியா.

"நான் செய்வது ஆபாசம் அல்ல" என்கிறார்.

"என்னை ஒழுக்கமற்றவனாக மதிப்பிடும் போது நான் வருத்தப்படுவேன். சிலர் எங்களை மிருகங்கள் என அழைக்கின்றனர். நான் நானாக இருக்கிறேன். நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை" என்கிறார் ஆதித்தியா.

http://www.bbc.com/tamil/global-41714559

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.