Jump to content

மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறி விட்டது....மத்திய குழு கூட்டத்தை அடுத்து சுரேஷ் குற்றச்சாட்டு


Recommended Posts

மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறி விட்டது

Sp12-0341e79226cb941310b4adc794c6c8d93759496e.jpg

 

மத்திய குழு கூட்டத்தை அடுத்து சுரேஷ் குற்றச்சாட்டு
வவு­னியா,

மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறி விட்டது. உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது குறித்து கட்­சியின் அர­சியல் குழு கூடி தீர்­மா­னிக்கும் என்று ஈ.பி­.ஆர்­.எல்.எவ். கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

ஈ.பி.ஆர்.எல்.எவ். மத்திய குழுக் கூட்டம் நேற்று கட்சியின் தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் தலை­மையில் வவு­னியா இந்­திரன் விடு­தியில் ஐந்து மணித்­தி­யா­லங்கள் நடை­பெற்­றது. வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் எட்டு மாவட்­டங்­க­ளையும் சேர்ந்த மத்­திய குழு உறுப்­பி­னர்கள் இதில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

சம­கால அர­சியல் சூழல்கள், புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்கை, அதில் உள்ள பல்­வேறு விட­யங்கள் உட்­பட பல விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக கூட்டம் முடி­வ­டைந்­ததன் பின்னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய கட்­சியின் தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.

செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான இந்தச் சந்­திப்பில் கட்­சியின் செய­லா­ளரும் பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சிவ­சக்தி ஆனந்தன், மட்­டக்­க­ளப்பில் இருந்து வருகை தந்­தி­ருந்த மத்­திய குழு உறுப்­பினர் ஆர்.துரை­ரத்­தினம், மன்­னாரில் இருந்து வருகை தந்­தி­ருந்த ஆர்.குமரேஸ் ஆகி­யோரும் கலந்து கொண்­டனர்.

இந்த மத்­திய குழு கூட்டம் குறித்து சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் மேலும் தெரி­வித்­த­தா­வது:

சம­கால அர­சியல் சூழல் பற்­றியும், புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை, இந்த விட­யங்­களில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தொடர்பில் தமி­ழ­ர­சுக்­கட்சி மேற்­கொண்டு வரு­கின்ற நட­வ­டிக்­கைகள் குறித்து பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­ட­டன.

மாகாண சபைத் தேர்தல் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களின் தேர்தல் அறிக்­கையில் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­பட்டு ஒரு மாகா­ண­மாக இருக்க வேண்டும், தமிழ் மக்­களின் சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும், தமிழ் மக்­க­ளு­டைய சுய­நிர்­ணய உரிமை மற்றும் இறை­யாண்மை என்­பன ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும், தமிழ் மக்­க­ளுக்கு முழு­மை­யான அதி­காரப் பகிர்­வுடன் கூடிய ஒரு சுயாட்சி உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பது போன்ற விட­யங்­களைக் குறிப்­பிட்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அதற்­கான மக்கள் ஆணை பெறப்­பட்­டது, ஆனால், தமிழ் மக்­க­ளு­டைய முக்­கி­ய­மாக இந்தக் கொள்­கைகள் எல்லாம் கைவி­டப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையில் வட­கி­ழக்கு இணைப்பு என்­பதும், சமஸ்டி என்­பதும் கைவி­டப்­பட்ட நிலையில், கூட்­ட­மைப்­புக்கு மக்கள் கொடுத்த ஆணையில் இருந்து தமி­ழ­ர­சுக்­கட்சி வெளி­யே­றி­யி­ருக்­கின்­றது என்­பதை மத்­திய குழு கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்கள் சுட்­டிக்­காட்­டி­னார்கள்.

இவ்­வா­றான சூழல் என்­பது ஆரோக்­கி­ய­மான விட­ய­மல்ல. தங்­க­ளு­டைய எதிர்­காலம் உரி­மைகள் தொடர்­பாக கூட்­ட­மைப்பு ஒரு முழு­மை­யான தீர்­மா­னத்­திற்கு வரும் என்று தமிழ் மக்கள் எதிர்­பார்த்­துள்ள போதிலும், தமி­ழ­ர­சுக்­கட்சி கூட்­ட­மைப்பில் உள்ள ஏனைய கட்­சி­க­ளுடன் ஆலோ­சிக்­காமல் அவர்கள் தனித்து தான்­தோன்­றித்­த­ன­மான முறையில் முடி­வுகள் எடுப்­பதன் ஊடாக கொள்­கைகள் அனைத்தும் கைவி­டப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதும் கூட்­டத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

அது மட்­டு­மல்­லாமல், மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைகள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் விடயம் அர­சியல் கைதிகள் விடயம் என்­ப­வற்­றுக்குத் தீர்வு காணப்­படாமை குறித்தும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. அர­சியல் கைதிகள் விட­யத்தில் குறைந்­த­பட்சம் அனு­ரா­த­பு­ரத்தில் உள்ள அவர்­க­ளு­டைய வழக்­கு­களை மீண்டும் வவு­னி­யா­வுக்கு மாற்ற முடி­யாமல் இருக்­கின்­றது. இந்த விட­யத்­தில்­கூட தங்­க­ளு­டைய நிலைப்­பாட்டை மாற்ற முடி­யா­த­வாறு, அர­சாங்கம் அர­சாங்கம் உறு­தி­யாக இருப்­பது போன்ற நிலை­மைகள் மிகவும் கண்­டிக்­கப்­பட வேண்டும் என்ற கருத்தும் முன்­வைக்­கப்­பட்­டது. அர­சாங்கம் கூறு­கின்ற நல்­லெண்ணம் எல்லாம் அர­சாங்­கத்­தி­னா­லேயே குழி­தோண்டி புதைக்­கப்­ப­டு­கின்­றது என்ற கருத்தும் எமது மத்­தி­ய­குழு தோழர்­க­ளினால் முன்­வைக்­கப்­பட்­டது.

அது மட்­டு­மல்­லாமல் நேற்­றைய தினம் வவு­னி­யா­வுக்கு விஜயம் செய்த ஜனா­தி­பதி அவர்­க­ளினால் நாமல்­கம, கலா­போ­கஸ்வௌ போன்ற இடங்­களில் யுத்­தத்­திற்குப் பிற்­பாடு, சிங்­களப் பகு­தி­களில் முக்­கி­ய­மாக அம்­பாந்­தோட்டை போன்ற பகு­தி­களில் இருந்து கொண்டு வந்து குடி­யேற்­றப்­பட்ட அதா­வது தமிழ்க்­கி­ரா­மங்­களை கப­ளீ­கரம் செய்து சிங்­கள மக்­க­ளுக்கு தாரை­வார்த்துக் கொடுப்­பது போன்று, அந்தக் காணி­க­ளுக்கு காணி உறு­திகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

தமிழ் மக்­க­ளு­டைய பிர­தே­சங்கள் இந்த நல்­லாட்சி அரசு என்று சொல்­லப்­ப­டு­கின்ற இந்த அர­சாங்­கத்­தில்­கூட எந்­த­வி­த­மான மாற்­றங்­களும் இல்­லாமல் என்­னென்ன விட­யங்­களை ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மாகச் செய்­தாரோ, அதே விட­யங்­க­ளுக்­காக, தமிழ் மக்­க­ளு­டைய காணி­க­ளுக்கு சிங்­கள மக்­க­ளுக்கு காணி உறு­திகள் வழங்கும் நட­வ­டிக்கை நேற்று நடை­பெற்­றுள்­ளது.

இந்த நிகழ்வில் சுமந்­திரன், செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­த­மை­யா­னது, இவர்கள் எல்­லோரும் சேர்ந்து தமிழ் பூமியை சிங்­கள பூமி­யாக மாற்­று­வ­தற்கு அர­சுடன் உடந்­தை­யாகப் போகின்­றார்­களா என்ற கேள­்வியும் மத்­திய குழு உறுப்­பி­னர்­க­ளினால் முன்­வைக்­கப்­பட்­டது, ஆகவே நடக்­கின்ற விட­யங்கள் ஆரோக்­கி­ய­மான விட­யங்­க­ளல்ல.

முக்­கி­ய­மாக கூட்­ட­மைப்பு என்ற பெயரில் தமி­ழ­ர­சுக்­கட்சி மிகவும் தான்­தோன்­றித்­த­ன­மான முறையில் இந்த விட­யங்­களைக் கையாள்­வ­துடன் அந்த விட­யங்­களை தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மான முறையில் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துச் செல்­கின்­றது என்ற அடிப்­ப­டையில் இது தொடர்­பான முடி­வு­களை ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி விரை­வாக எடுக்க வேண்டும் என்றும் மத்­திய குழு உறுப்­பி­னர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள். இதனையடுத்து, இது தொடர்பாக ஆராய்ந்து சரியான முடிவு எடுப்பதற்காக கட்சியினுடைய மாநாடு டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் குறித்து அரசியல் சபையும் முடிவுகளை மேற்கொள்ளும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படலாம் என்றிருந்தாலும் அது பின்போடப்படலாம் என்ற நிலைமை இருக்கின்றது. இதுபற்றியும் கலந்துரையாடப்பட்டது. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கட்சியின் அரசியல் குழு கூடிமுடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என்றார் சுரேஸ் பிரேமச்சந்திரன். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-23#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.