Jump to content

தீங்­கி­ழைக்கும் அர­சி­ய­ல­மைப்­பினை அங்­கீ­க­ரித்து கையொப்­ப­மி­டேன்


Recommended Posts

தீங்­கி­ழைக்கும் அர­சி­ய­ல­மைப்­பினை அங்­கீ­க­ரித்து கையொப்­ப­மி­டேன்

karu1-b63d013029bf83ecc4d8414aeab07ab2e04a2529.jpg

 

சபா­நாயகர் கரு ஜய­சூ­ரிய உறுதி
(ஆர்.ராம்)

பௌத்த மதத்தின் முதன்மை ஸ்தானத்­திற்கோ அல்­லது நாட்­டிற்கோ தீங்­கி­ழைக்கும் எந்­த­வொரு அர­சி­ய­ல­ மைப்பு யோச­னைக் கும் நான் கையொப்­ப­மிட மாட்டேன் என மா­நா­ய­க்கர்கள் உள்­ளிட்ட அனைத்து மதத்­த­லை­வர்­க­ளுக்கும் உறு­தி­ய­ளிக்­கின்­றேன் என்று சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்­துள்ளார்.

மீரி­கம பிர­தே­சத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற சமய நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், அண்­மைய நாட்­களில் புதிய  அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக அதி­க­மாக பேசப்­ப­டு­கின்­றது. பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அவை அனைத்தும் மக்­களை குழப்­பு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அதன் தலை­வ­ராக சபா­ந­ாயகர் என்ற அடிப்­ப­டையில் நான் இருக்­கின்றேன்.  

இது­வ­ரையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் தலைவர் என்ற அடிப்­ப­டையில் கூட அவ்­வா­றான ஒன்றை நான் கண்ணால் காணக்­கூ­ட­வில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கின்­ற­போது அது குறித்து அனைத்து தரப்­பி­ன­ரி­டத்­திலும் கருத்­துக்கள் பெறப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

அந்த அடிப்­ப­டையில் நாம் அனை­வ­ரி­டத்­திலும் தமது யோச­னை­களை முன்­வைக்­கு­மாறு கோரினோம். இதில் நாட்டை பிளவு படுத்தும் யோசனை வந்­தி­ருக்­கலாம். நாட்டில் ஒரு பகு­தியை கோரும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கலாம். அதற்­காக அவற்றை எல்லாம் அங்­கீ­க­ரிப்­பது என்று பொருள்­ப­டாது.

தற்­பொது இடைக்­கால அறிக்­கை­யொன்று வெளியி­டப்­பட்­டுள்­ளது. அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்­பாக அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் கலந்­து­ரை­யா­டல்கள் நடை­பெற்று பாரா­ளு­மன்­றத்தில் விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. இதன்­போது பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கருத்­துக்­க­ளும் உள்­வாங்­கப்­படும்.

ஒரு சில உறுப்­பி­னர்கள் அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் இருந்து நீங்­கி­யி­ருந்­தாலும் ஏனை­ய­வர்­களின் கருத்­துக்­களை நாம் உள்­வாங்­குவோம். அதன் பின்னர் இறுதி செய்­யப்­பட்டு அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் தலைவர் என்ற வகையில் நான் கையொப்­ப­மிட வேண்டும். அவ்­வாறு கையொப்­ப­மிடும் பட்­சத்­தி­லேயே அது சட்­ட­மா­கு­வ­தற்­கான அங்­கீ­கா­ரத்­தினை பெற­மு­டியும்.

ஆகவே மகா­நா­யக்­கர்கள், மற்றும் சம­யத்­த­லை­வர்கள் உள்­ளிட்ட எந்­த­வொரு தரப்­பி­னரும் அச்­ச­ம­டை­ய­வேண்­டி­ய­தில்லை. நான் அர­சி­ய­ல­மைப்பு பேரவையின் தலைவர் என்ற வகை­யிலும் சபா­நா­யகர் என்ற அடிப்­ப­டை­யிலும் பௌத்த சம­யத்தின் முதன்மைத் தானத்­திற்கோ அல்லது நாட்டிற்கோ தீங்கு விளைவிக்கின்ற எந்தவொரு விடயமும் அரசியலமைப்பு யோசனையில் காணப்பட்டால் நிச்சயமாக எனது பதவிக்காலத்தினுள் கையொப்பமிடப்போவதில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆகவே தற்போது வரையில் வரையப்படாத ஒரு அரசியலமைப்பினை மையப்படுத்தி பரப்பப்பட்டு வரும் கருத்துக்களை மையப்படுத்தி வீணாக குழப்பமடையவேண்டிய அவசியமில்லை என்றார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-23#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
    • அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.
    • இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.