Jump to content

பிரச்சினைகளில் சிக்கிய விஜய்யின் 7 படங்கள்: ஓர் அலசல் பார்வை


Recommended Posts

பிரச்சினைகளில் சிக்கிய விஜய்யின் 7 படங்கள்: ஓர் அலசல் பார்வை

 

 
Vijay%20ambujpg

2011-ம் ஆண்டிலிருந்து வெளியான விஜய் படங்கள் யாவுமே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியே வெளியாகியிருக்கிறது. இதற்கு காரணம் விஜய்யாக இல்லாவிட்டாலும், கதைக்களம், பணப்பிரச்சினை என பல காரணங்கள் அடங்கியிருக்கிறது. அவ்வாறு பிரச்சினைகளில் சிக்கிய விஜய் படங்கள் என்ன? ஏன் என்று பார்க்கலாம்

காவலன் (2011) : 'சுறா' படத்தின் பெரும் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தை விஜய் கொடுக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இறுதியில் விஜய்யுடன் பேசி பணத்தை திரும்ப அளிக்க ஒப்புதல் அளித்தவுடனே 'காவலன்' வெளியானது. முன்னதாக இரண்டு முறை வெளியீடு என அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

துப்பாக்கி (2012): படத்தின் வெளியீட்டிற்கு எந்த ஒரு பிரச்சினையுமே இல்லை. ஆனால், படம் வெளியானவுடனே முஸ்லிம் அமைப்புகள் பலரும் தங்களை இழிவுபடுத்தியிருப்பதாக போராட்டத்தில் இறங்கினார்கள். ஒட்டுமொத்த முஸ்லிம்களே தீவிரவாதிகள் என 'துப்பாக்கி' படத்தில் சித்தரித்திருப்பதாக தெரிவித்தர்கள். ஆனால், விஜய்யும், படக்குழுவும் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் தமிழக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைச் சுமுகமாக முடித்தார்கள்.

தலைவா (2013): இப்பட வெளியீட்டின் போது விஜய் அரசியலுக்கு வரவுள்ளார் என்று தகவல்கள் வெளியானது. அச்சமயத்தில் 'தலைவா' படத்தின் தலைப்புக்கு கீழே 'TIME TO LEAD' என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. இதனால், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. இறுதியாக 'TIME TO LEAD’ என்ற வார்த்தையை நீக்கியவுடன் மட்டுமே படமும் வெளியானது. ஆனால், தமிழக வெளியீட்டிற்கு முன்பாகவே இதர மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் வெளியாகிவிட்டது. இப்படத்தின் சர்ச்சைக்குப் பிறகே, விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியான செய்திகள் குறையத் தொடங்கின. 'தலைவா' வெளியீட்டிற்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி என்று விஜய் கையை கட்டிக் கொண்டு பேசிய வீடியோ தொகுப்பை வைத்து பலரும் கிண்டல் செய்தார்கள். படமும் படுதோல்வியை சந்தித்தது.

கத்தி (2014): இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், ராஜபக்சேவின் நண்பர் என்று பல்வேறு அமைப்புகள் 'கத்தி' படத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கின. சென்னை சத்யம் திரையரங்கம் உள்ளிட்ட பல இடங்களில் கற்கள் வீசப்பட்டதால் பெரும் சர்ச்சை உருவானது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய நிலையை அறிக்கையாக வெளியிடவே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக வெளியாகி படமும் பெரும் வெற்றியடைந்தது.

புலி (2015): விஜய்யின் மேலாளரான பி.டி.செல்வகுமார் தயாரித்திருந்தார். ஆனால், படம் வெளியாகும் நாளுக்கு முன்பாக அப்படம் சம்பந்தப்பட்ட நபர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மேலும், இறுதியாக பைனான்சியர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அளிக்க முடியாதால், திட்டமிட்டபடி வெளியாகாமல் வெளியீட்டு தேதியன்று மதியமே வெளியானது. படம் படுதோல்வியை சந்தித்தது.

தெறி (2016): விநியோகஸ்தர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், தமிழகத்தின் மிகப்பெரிய விநியோக ஏரியாவான செங்கல்பட்டில் வெளியாகவில்லை. ஆனால், அங்கு வெளியாகவிட்டாலும், மிகப் பெரிய வெற்றி பெற்றது.

மெர்சல் (2017): படம் தயாராகி தணிக்கை செய்யப்பட்டது. வெளியீட்டு தேதி அறிவித்தவுடன், விலங்குகள் நல வாரியத்தின் கடிதத்தால் சர்ச்சை எழுந்தது. இறுதியாக விலங்குகள் நல வாரியத்தின் சிக்கல், தணிக்கை குழுவின் சிக்கல்களை கடந்து தமிழகத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து ஜிஎஸ்டி வரி வசனங்கள், மருத்துவர்களை தவறாக சித்திரித்து இருப்பது போன்றவற்றால் பெரும் பிரச்சினை உருவாகி இருக்கிறது. இப்பிரச்சினையால் தமிழகத்தில் வசூல் பெருமளவில் அதிகரித்திருக்கிறது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19900882.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.