Jump to content

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு! – இளைஞர் உயிரிழப்பு!!


Recommended Posts

அரியாலையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு

 
அரியாலையில் சற்றுமுன்  துப்பாக்கிச்சூடு
 

அரியாலைப்பகுதியில் சற்று முன்னர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர்.

http://newuthayan.com/story/39559.html

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்!

 

 
 

யாழ்ப்பாணம்  குருநகர் பகுதியில் இன்று மதியம் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை இடம்பெற்று வருகின்றது.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் கடற்தொழில் செய்பவர் என்றும் வீதியால் சென்று கொண்டிருந்தவர் மீது குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/jaffna-kurunaker-area-shooting-one-man

Link to comment
Share on other sites

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம் ; யாழில் பதற்றம்

 

யாழ்ப்பாணம், மணியந்தோட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

jaffna0.jpg

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், உதயபுரம், கடற்கரைவீதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை மோட்டர் சைக்கிளொன்றில் வந்த இரு ஆயுததாரிகள் வழிமறித்து துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

jaffna2.jpg

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்ஷ்மன்  என்பவர் வயிற்றுப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் யாழ் . வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

jaffna.jpg

இச் சம்பவம் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

இதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/26157

Link to comment
Share on other sites

யாழில் இளைஞர்மீது துப்பாக்கிச் சூடு; படுகாயமடைந்தவர் சத்திரசிகிச்சைக்காக...!

 

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், படுகாயமடைந்த இளைஞர் தொடர்ந்தும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அரியாலை கிழக்கு உதயபுரம் பகுதியை சேர்ந்த  24 வயதுடைய டொன்பொஸ்கோ ரிக்மன் எனும் கடற்தொழில் செய்யும் இளைஞனே குறித்த சம்பவத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.

முதுகுப் பகுதியில் துப்பாக்கி குண்டு துளைத்ததனால் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது குறித்த இளைஞர் அவசர சத்திர சிகிச்சைக்காக வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

யாழில் இளைஞர்மீது துப்பாக்கிச் சூடு; படுகாயமடைந்தவர் சத்திரசிகிச்சைக்காக...!

இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞருடன் உந்துருளியில் பயணித்த மற்றுமொரு இளைஞர் பொலிஸாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/shooting-in-jaffna-oct22-hospital

Link to comment
Share on other sites

அரியாலையில் பதற்றம்; துப்பாகிச் சூடு இடம்பெற்ற பகுதியில் அதிரடிப்படை குவிப்பு!

 

யாழில் இளைஞர் ஒருவர்மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதியில் தற்பொழுது விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

இன்று பிற்பகல் குறித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின்போது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்திருந்தார். உந்துருளியில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவரும் இளைஞரின் நிலை தற்பொழுது கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது.

வலப்பக்க முதுகில் குண்டு பாய்ந்ததனால் அதிகமான இரத்தப்போக்கு நிகழ்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவரும் நிலையிலேயே சம்பவ இடத்தில் மேலெதிக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/shooting-jaffna-oct22-ariyalai

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு! – இளைஞர் உயிரிழப்பு!!

மூன்றாம் இணைப்பு

யாழ்ப்பாணம் அரியாலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

யாழ்ப்பாணம், அரியாலையில் இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

உதயபுரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். இனந்தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கூறப்படுகின்றது.

viber-image6-3-750x400.jpg

படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை அவசர சிகிச்சைப பிரிவில் சேர்க்கபபட்டுள்ளார். இவர்து மார்பில் 3 ரவைகள் பாய்ந்துள்ளன என்று கூறப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அறியப்படவில்லை. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறுகின்றனர்.

http://newuthayan.com/story/39609.html

Link to comment
Share on other sites

யாழ். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலி

(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் மணியம் தோட்ட பகுதியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு சுவாசப்பையில் ஏற்பட்ட கடுமையான இரத்த போக்கினால் அந் நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

DMwOHUFV4AA9CjJ.jpg

இன்றைய தினம் யாழ்.மணியம் தோட்டம் உதயபுரம் கடற்கரை வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தொன் போஸ்கோ ரிஸ்மன் மற்றும், நிஷாந்தன் ஆகியோர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.

 

இத் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் தொன் போஸ்கோ ரிஸ்மன் என்வர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

gfgg.jpg

இந்நிலையில் குறித்த நபரது உடல் நிலை தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் தெருவித்திருப்பதாவது,

 

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு கடுமையான இரத்த போக்கு நிலை காணப்பட்டிருந்தது. முதற்கட்டமாக அவருக்கு ஒர் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது சத்திர சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

மேலும் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் துப்பாக்கி குண்டானது அவரது நெஞ்சு பகுதியூடாக சுவாசப்பை பகுதியை துளைத்து சென்றுள்ளது. இந்திலையில் தொடர்ச்சியாக அவருக்கு தீவிர சிகிச்சையானது வழங்கப்பட்டிருந்தது. எனினும் சுவாசப்பையில் ஏற்பட்ட அதித இரத்தப் பெருக்கினால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரழந்துள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்..

http://www.virakesari.lk/article/26159

 
Link to comment
Share on other sites

எத்தனையே நாடுகளின் நகரங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணம் ஒரு மிகச் சிறிய பிரதேசம். அதில்தான் எத்தனை வாள்வெட்டுக்கள் துப்பாக்கிச் சூடுகள் பாலியல் அத்துமீறல்கள் கிலோக் கணக்கில் கஞ்சா கைமாறுல்கள் களவுகள். இத்தனைக்கும் ராணுவம் காவல்துறை கடற்படை உளவுத் துறைகள் என அனைத்தும் நிறைந்த பிரதேசம். முன்பு குண்டு வீசி படையெடுத்து அதிக சத்தத்துடன் அழித்தார்கள். இப்போது சத்தமில்லாமல் எமது கைகளை எடுத்து எமது கண்களையே குத்துகின்றார்கள். வரலாற்றில் புலியின் காலத்தில் மட்டும்தான் யாழ்பாணத்தின் உள்கட்டமைப்பு அமைதியாக இருந்தது. ஏரியாவுக்கு ஒரு அரசியல் துறைப் போராளி என்று சில பத்து போராளிகளின் நிர்வாகத்தில் காக்கப்பட்ட அமைதியை இன்று இத்தனை பெரிய அரச இயந்திரம் இருந்தும் காக்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம் அனைத்துக் குற்றங்களிலும் அவர்கள் பங்கும் இருக்ககின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, நவீனன் said:

யாழ். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலி

(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் மணியம் தோட்ட பகுதியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு சுவாசப்பையில் ஏற்பட்ட கடுமையான இரத்த போக்கினால் அந் நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

மூன்றுதமிழருக்கு ஒரு படையினர் என்று இருக்கும்போது இந்த "இனம்தெரியாத"  நபர்கள் யார்? மிகநுட்பமாகச் சிங்களம் திட்டமிட்டுச் செயலாற்றுகிறது. மக்கள் விழிப்போடு இருந்து  கண்காணிப்போடு பயணிக்க வேண்டிய சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். 

Link to comment
Share on other sites

யாழ்.துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு.

யாழ்.அரியாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த டொன் பொஸ்கோ ரிக்மன் (வயது 25) எனும் இளைஞனே வைத்திய சாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

011-1.jpg
அரியாலை கிழக்கு உதயபுரம் முதலாம் குறுக்கு தெரு பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நடைபெற்றது. குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று இரவு 9 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
 
பின்னால் இருந்தே சுட்டனர். 
 
“நானும் ரிக்மனும் , மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்த வேளை எமக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சிவில் உடை தரித்த இருவர் ரிக்மனுக்கு பின்புறமாக துப்பாக்கி பிரயோகத்தினை நடத்தி விட்டு தப்பி சென்று விட்டனர் ” என உயிரிழந்த இளைஞனுடன் பயணித்த இளைஞர் தெரிவித்தார்.
 
தொலைபேசி அழைப்பை அடுத்து வெளியில் சென்றவன். 
 
எனது மகன் கடற்தொழில் செய்பவர் , இன்றைய தினம் மதியம் வீட்டில் இருந்து உணவருந்திக்கொண்டு இருந்த வேளை தொலைபேசி அழைப்பொன்று மகனுக்கு வந்தது , அதை அடுத்து ” இதோ வாறன் ” என கூறி உணவையும் உண்ணாது வெளியில் சென்று விட்டான். வெளியில் சென்று 10 நிமிடத்திற்குள் மகன் மீது சூட்டு உள்ளார்கள் என உயிரிழந்த இளைஞனின் தாயார் தெரிவித்தார்.
 
அதிக இரத்த போக்கால் மரணம். 
 
இளைஞனின் சுவாச குழாய்களை துப்பாக்கி ரவைகள் துளைத்து சென்றமையினால் அதிகளவான இரத்த போக்கு ஏற்பட்டமையினால் தான் மரணம் சம்பவித்ததாக வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
விரைவில் கைது செய்வோம். 
 
துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்து உள்ளோம். துப்பாக்கி சூட்டை நடத்தியவர்களை விரைவில் கைது செய்வோம். என பொலிஸ் தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.
 
மூன்று பொலிஸ் குழுக்கள் களத்தில் ..
 
அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இரகசிய பொலிஸ் பிரிவு , யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியின் கீழான குழுவினர் மற்றும் யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பொலிஸ் பிரிவினர் என மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை நடவடிக்களை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://globaltamilnews.net/archives/46418

Link to comment
Share on other sites

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் மரணம் – யாழ். நகரில் அதிரடிப்படை குவிப்பு

.

shot-dead-ariyalai (2)யாழ். அரியாலை கிழக்கு, மணியம்தோட்டம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு மரணமானார். இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மணியம்தோட்டம், உதயபுரம் – கடற்கரை வீதிச் சந்தியில் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில், உந்துருளியில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது, மற்றொரு உந்துருளியில் சென்ற இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.

இந்தச் சம்பவத்தில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் மூன்று குண்டுகள் துளைத்து படுகாயமடைந்த டொன் பொஸ்கோ ரிச்மன் என்ற இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில்  அவர் மரணமானார்.

சுவாசப் பையில் குண்டுதுளைத்ததால், ஏற்பட்ட அதிக குருதிப் பெருக்கே அவரது மரணத்துக்குக் காரணம் என்று, யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

shot-dead-ariyalai (1)shot-dead-ariyalai (2)shot-dead-ariyalai (3)

“துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவருக்கு அதிக குருதிப் போக்கு காணப்பட்டிருந்தது. முதற்கட்டமாக அவருக்கு ஒரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து, இரண்டாவது அறுவைச்சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கி ரவை அவரது மார்பின் ஊடாக,  சுவாசப்பையை துளைத்துச் சென்றுள்ளது.  சுவாசப்பையில் ஏற்பட்ட அதித குருதிப் பெருக்கினால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இளைஞன் மரணமான சம்பவத்தை அடுத்து, யாழ். போதனா மருத்துவமனையில் பதற்றநிலை காணப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாண நகரத்திலும், காவல் நிலையங்களிலும், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தச் சம்பவத்துக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை.

அதேவேளை, சாதாரண உடையில் இருந்த காவல்துறையினரை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

http://www.puthinappalakai.net/2017/10/23/news/26759

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.