Jump to content

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு! – இளைஞர் உயிரிழப்பு!!


Recommended Posts

அரியாலையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு

 
அரியாலையில் சற்றுமுன்  துப்பாக்கிச்சூடு
 

அரியாலைப்பகுதியில் சற்று முன்னர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர்.

http://newuthayan.com/story/39559.html

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்!

 

 
 

யாழ்ப்பாணம்  குருநகர் பகுதியில் இன்று மதியம் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை இடம்பெற்று வருகின்றது.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் கடற்தொழில் செய்பவர் என்றும் வீதியால் சென்று கொண்டிருந்தவர் மீது குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/jaffna-kurunaker-area-shooting-one-man

Link to comment
Share on other sites

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம் ; யாழில் பதற்றம்

 

யாழ்ப்பாணம், மணியந்தோட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

jaffna0.jpg

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், உதயபுரம், கடற்கரைவீதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை மோட்டர் சைக்கிளொன்றில் வந்த இரு ஆயுததாரிகள் வழிமறித்து துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

jaffna2.jpg

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்ஷ்மன்  என்பவர் வயிற்றுப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் யாழ் . வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

jaffna.jpg

இச் சம்பவம் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

இதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/26157

Link to comment
Share on other sites

யாழில் இளைஞர்மீது துப்பாக்கிச் சூடு; படுகாயமடைந்தவர் சத்திரசிகிச்சைக்காக...!

 

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், படுகாயமடைந்த இளைஞர் தொடர்ந்தும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அரியாலை கிழக்கு உதயபுரம் பகுதியை சேர்ந்த  24 வயதுடைய டொன்பொஸ்கோ ரிக்மன் எனும் கடற்தொழில் செய்யும் இளைஞனே குறித்த சம்பவத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.

முதுகுப் பகுதியில் துப்பாக்கி குண்டு துளைத்ததனால் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது குறித்த இளைஞர் அவசர சத்திர சிகிச்சைக்காக வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

யாழில் இளைஞர்மீது துப்பாக்கிச் சூடு; படுகாயமடைந்தவர் சத்திரசிகிச்சைக்காக...!

இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞருடன் உந்துருளியில் பயணித்த மற்றுமொரு இளைஞர் பொலிஸாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/shooting-in-jaffna-oct22-hospital

Link to comment
Share on other sites

அரியாலையில் பதற்றம்; துப்பாகிச் சூடு இடம்பெற்ற பகுதியில் அதிரடிப்படை குவிப்பு!

 

யாழில் இளைஞர் ஒருவர்மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதியில் தற்பொழுது விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

இன்று பிற்பகல் குறித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின்போது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்திருந்தார். உந்துருளியில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவரும் இளைஞரின் நிலை தற்பொழுது கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது.

வலப்பக்க முதுகில் குண்டு பாய்ந்ததனால் அதிகமான இரத்தப்போக்கு நிகழ்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவரும் நிலையிலேயே சம்பவ இடத்தில் மேலெதிக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/shooting-jaffna-oct22-ariyalai

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு! – இளைஞர் உயிரிழப்பு!!

மூன்றாம் இணைப்பு

யாழ்ப்பாணம் அரியாலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

யாழ்ப்பாணம், அரியாலையில் இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

உதயபுரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். இனந்தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கூறப்படுகின்றது.

viber-image6-3-750x400.jpg

படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை அவசர சிகிச்சைப பிரிவில் சேர்க்கபபட்டுள்ளார். இவர்து மார்பில் 3 ரவைகள் பாய்ந்துள்ளன என்று கூறப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அறியப்படவில்லை. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறுகின்றனர்.

http://newuthayan.com/story/39609.html

Link to comment
Share on other sites

யாழ். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலி

(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் மணியம் தோட்ட பகுதியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு சுவாசப்பையில் ஏற்பட்ட கடுமையான இரத்த போக்கினால் அந் நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

DMwOHUFV4AA9CjJ.jpg

இன்றைய தினம் யாழ்.மணியம் தோட்டம் உதயபுரம் கடற்கரை வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தொன் போஸ்கோ ரிஸ்மன் மற்றும், நிஷாந்தன் ஆகியோர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.

 

இத் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் தொன் போஸ்கோ ரிஸ்மன் என்வர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

gfgg.jpg

இந்நிலையில் குறித்த நபரது உடல் நிலை தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் தெருவித்திருப்பதாவது,

 

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு கடுமையான இரத்த போக்கு நிலை காணப்பட்டிருந்தது. முதற்கட்டமாக அவருக்கு ஒர் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது சத்திர சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

மேலும் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் துப்பாக்கி குண்டானது அவரது நெஞ்சு பகுதியூடாக சுவாசப்பை பகுதியை துளைத்து சென்றுள்ளது. இந்திலையில் தொடர்ச்சியாக அவருக்கு தீவிர சிகிச்சையானது வழங்கப்பட்டிருந்தது. எனினும் சுவாசப்பையில் ஏற்பட்ட அதித இரத்தப் பெருக்கினால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரழந்துள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்..

http://www.virakesari.lk/article/26159

 
Link to comment
Share on other sites

எத்தனையே நாடுகளின் நகரங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணம் ஒரு மிகச் சிறிய பிரதேசம். அதில்தான் எத்தனை வாள்வெட்டுக்கள் துப்பாக்கிச் சூடுகள் பாலியல் அத்துமீறல்கள் கிலோக் கணக்கில் கஞ்சா கைமாறுல்கள் களவுகள். இத்தனைக்கும் ராணுவம் காவல்துறை கடற்படை உளவுத் துறைகள் என அனைத்தும் நிறைந்த பிரதேசம். முன்பு குண்டு வீசி படையெடுத்து அதிக சத்தத்துடன் அழித்தார்கள். இப்போது சத்தமில்லாமல் எமது கைகளை எடுத்து எமது கண்களையே குத்துகின்றார்கள். வரலாற்றில் புலியின் காலத்தில் மட்டும்தான் யாழ்பாணத்தின் உள்கட்டமைப்பு அமைதியாக இருந்தது. ஏரியாவுக்கு ஒரு அரசியல் துறைப் போராளி என்று சில பத்து போராளிகளின் நிர்வாகத்தில் காக்கப்பட்ட அமைதியை இன்று இத்தனை பெரிய அரச இயந்திரம் இருந்தும் காக்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம் அனைத்துக் குற்றங்களிலும் அவர்கள் பங்கும் இருக்ககின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, நவீனன் said:

யாழ். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலி

(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் மணியம் தோட்ட பகுதியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு சுவாசப்பையில் ஏற்பட்ட கடுமையான இரத்த போக்கினால் அந் நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

மூன்றுதமிழருக்கு ஒரு படையினர் என்று இருக்கும்போது இந்த "இனம்தெரியாத"  நபர்கள் யார்? மிகநுட்பமாகச் சிங்களம் திட்டமிட்டுச் செயலாற்றுகிறது. மக்கள் விழிப்போடு இருந்து  கண்காணிப்போடு பயணிக்க வேண்டிய சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். 

Link to comment
Share on other sites

யாழ்.துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு.

யாழ்.அரியாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த டொன் பொஸ்கோ ரிக்மன் (வயது 25) எனும் இளைஞனே வைத்திய சாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

011-1.jpg
அரியாலை கிழக்கு உதயபுரம் முதலாம் குறுக்கு தெரு பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நடைபெற்றது. குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று இரவு 9 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
 
பின்னால் இருந்தே சுட்டனர். 
 
“நானும் ரிக்மனும் , மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்த வேளை எமக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சிவில் உடை தரித்த இருவர் ரிக்மனுக்கு பின்புறமாக துப்பாக்கி பிரயோகத்தினை நடத்தி விட்டு தப்பி சென்று விட்டனர் ” என உயிரிழந்த இளைஞனுடன் பயணித்த இளைஞர் தெரிவித்தார்.
 
தொலைபேசி அழைப்பை அடுத்து வெளியில் சென்றவன். 
 
எனது மகன் கடற்தொழில் செய்பவர் , இன்றைய தினம் மதியம் வீட்டில் இருந்து உணவருந்திக்கொண்டு இருந்த வேளை தொலைபேசி அழைப்பொன்று மகனுக்கு வந்தது , அதை அடுத்து ” இதோ வாறன் ” என கூறி உணவையும் உண்ணாது வெளியில் சென்று விட்டான். வெளியில் சென்று 10 நிமிடத்திற்குள் மகன் மீது சூட்டு உள்ளார்கள் என உயிரிழந்த இளைஞனின் தாயார் தெரிவித்தார்.
 
அதிக இரத்த போக்கால் மரணம். 
 
இளைஞனின் சுவாச குழாய்களை துப்பாக்கி ரவைகள் துளைத்து சென்றமையினால் அதிகளவான இரத்த போக்கு ஏற்பட்டமையினால் தான் மரணம் சம்பவித்ததாக வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
விரைவில் கைது செய்வோம். 
 
துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்து உள்ளோம். துப்பாக்கி சூட்டை நடத்தியவர்களை விரைவில் கைது செய்வோம். என பொலிஸ் தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.
 
மூன்று பொலிஸ் குழுக்கள் களத்தில் ..
 
அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இரகசிய பொலிஸ் பிரிவு , யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியின் கீழான குழுவினர் மற்றும் யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பொலிஸ் பிரிவினர் என மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை நடவடிக்களை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://globaltamilnews.net/archives/46418

Link to comment
Share on other sites

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் மரணம் – யாழ். நகரில் அதிரடிப்படை குவிப்பு

.

shot-dead-ariyalai (2)யாழ். அரியாலை கிழக்கு, மணியம்தோட்டம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு மரணமானார். இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மணியம்தோட்டம், உதயபுரம் – கடற்கரை வீதிச் சந்தியில் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில், உந்துருளியில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது, மற்றொரு உந்துருளியில் சென்ற இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.

இந்தச் சம்பவத்தில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் மூன்று குண்டுகள் துளைத்து படுகாயமடைந்த டொன் பொஸ்கோ ரிச்மன் என்ற இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில்  அவர் மரணமானார்.

சுவாசப் பையில் குண்டுதுளைத்ததால், ஏற்பட்ட அதிக குருதிப் பெருக்கே அவரது மரணத்துக்குக் காரணம் என்று, யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

shot-dead-ariyalai (1)shot-dead-ariyalai (2)shot-dead-ariyalai (3)

“துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவருக்கு அதிக குருதிப் போக்கு காணப்பட்டிருந்தது. முதற்கட்டமாக அவருக்கு ஒரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து, இரண்டாவது அறுவைச்சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கி ரவை அவரது மார்பின் ஊடாக,  சுவாசப்பையை துளைத்துச் சென்றுள்ளது.  சுவாசப்பையில் ஏற்பட்ட அதித குருதிப் பெருக்கினால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இளைஞன் மரணமான சம்பவத்தை அடுத்து, யாழ். போதனா மருத்துவமனையில் பதற்றநிலை காணப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாண நகரத்திலும், காவல் நிலையங்களிலும், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தச் சம்பவத்துக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை.

அதேவேளை, சாதாரண உடையில் இருந்த காவல்துறையினரை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

http://www.puthinappalakai.net/2017/10/23/news/26759

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.