Jump to content

கலப்பு முறை கை கொடுக்குமா?


Recommended Posts

கலப்பு முறை கை கொடுக்குமா?

 

ள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தல்கள் தொடர்பில் தற்­போது அதி­க­மாக பேசப்­பட்டு வரு­கின்­றன. கட்­சிகள் இது குறித்து கலந்­து­ரை­யாடி வரு­வ­தோடு வேட்­பாளர் தெரி­விலும் கவனம் செலுத்தி வரு­கின்­ற­மை­யையும் அறியக் கூடி­ய­தாக உள்­ளது. இம்­முறை உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தல்கள் முதன் முறை­யாக கலப்பு முறையில் இடம்­பெற உள்­ள­மையும் தெரிந்த விட­ய­மாகும். இந்­நி­லையில் இக்­க­லப்பு முறை­யா­னது மலை­யக மக்­களை பொறுத்­த­வ­ரையில் எதிர்­பார்த்த சாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்­த­மாட்­டாது என்று பர­வ­லாக கருத்­துக்கள் எதி­ரொ­லித்து வரு­கின்­றன. மேலும் கலப்பு முறை­யி­லான உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் செல்­வாக்கு உள்­ள­வர்­க­ளுக்கே வெற்­றி­வாய்ப்பு அதி­க­மாக இருப்­ப­தா­கவும் கருத்­துகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாக உள்­ளது.

தேர்­தலின் முக்­கி­யத்­துவம்

தேர்­தல்கள் என்னும் விடயம் மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்க ஒன்­றாக கரு­தப்­ப­டு­கின்­றது. ஜன­நா­யக நாடு­களில் ஜன­நா­ய­கத்தின் உறு­திப்­பாட்­டிற்கு தேர்­தல்கள் உந்து சக்­தி­யாக விளங்­கு­கின்­றன. ஜன­நா­ய­கத்தின் மத்­திய அம்­ச­மாக மக்­களின் சுதந்­தி­ர­மான தெரிவு செய்யும் உரிமை விளங்­கு­வ­தாக எஸ்.கீத­பொன்­கலன் சுட்­டி­க் காட்டி இருக்­கின்றார். மக்கள் எந்­த­வி­த­மான இடை­யூ­று­களும் இன்றி தமது விருப்­பத்­திற்­கேற்ப பிர­தி­நி­தி­களை தெரிவு செய்தல் வேண்டும். எல்லா வயது வந்த ஆண்­களும், பெண்­களும் வாக்­க­ளிப்­ப­திலும் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­திலும் பதவி ஏற்­ப­திலும் சம­மான உரிமை உடை­ய­வர்­க­ளாக இருக்க வேண்டும். மக்கள் பேசு­வ­தற்கும், கருத்­துக்­களை வெளி­யி­டு­வ­தற்கும் ஒன்றுகூடு­வ­தற்கும் உரிமை உடை­ய­வர்­க­ளாக இருப்­பது அவர்­களின் அர­சியல் பங்­கு­பற்­று­தலை ஊக்­கு­விக்கும். இவை ஜன­நா­ய­கத்­திற்கு அவ­சி­ய­மான பண்­பு­க­ளாகும் என்றும் வலி­யு­றுத்­தல்கள் இடம் பெற்­றுள்­ளன. தேர்­தல்கள் நம்­ப­கத்­தன்­மை­மிக்­க­தாக விளங்­குதல் வேண்டும். எனினும் சம­கா­லத்தில் தேர்­தல்கள் குறித்த அதி­ருப்­தி­யான வெளிப்­பா­டுகள் அதி­க­மாக இருப்­ப­த­னையும் குறிப்­பிட்டுக் கூற­வேண்­டி­யுள்­ளது. உல­க­ளா­விய ரீதியில் இந்த அதி­ருப்தி நிலை காணப்­ப­டு­கின்­றது.

முறை­கே­டான வாக்குப் பதி­வுகள், அச்­சு­றுத்­தல்கள், அத்து மீறல்கள்,பொரு­ளா­தார ஆதிக்க நிலைகள் உள்­ளிட்ட பல விட­யங்கள் தேர்தல் குறித்த நம்­ப­கத்­தன்­மைக்கு ஊறு விளை­வித்து வரு­கின்­றன. தேர்­தல்கள் இடம்­பெ­று­ம் பட்­சத்தில் உள்ளூர் மற்றும் சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்கள் தேர்­தலின் நடை­முறை குறித்து கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இவர்­களின் அறிக்­கை­யா­னது முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக விளங்­கு­கின்­றது. தேர்­தலில் இடம்­பெறும் முறை­கே­டுகள் ஜன­நா­ய­கத்தை கேள்­விக்­கு­றி­யாக்கி விடு­கின்­றன. நேரடி ஜன­நா­யகம் பிர­தி­நி­தித்­துவ ஜன­நா­யகம் என்று ஜன­நா­ய­கத்தில் இரண்டு நிலைகள் காணப்­ப­டு­கின்­றன. மக்கள் தொகை குறை­வாக இருக்­கு­மி­டத்து நேரடி ஜன­நா­யகம் சாத்­தி­ய­முள்­ள­தாக அமையும். ஆரம்­ப­கால கிரேக்க நகர அர­சு­களில் நேரடி ஜன­நா­யகம் சிறப்­பாக பின்­பற்­றப்­பட்டு வந்­துள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. தீர்­மானம் எடுக்கும் செய்­மு­றையில் மக்கள் நேர­டி­யாக இதில் பங்­கேற்பர். எனினும் இன்று நாடு­களின் பரப்பு அதி­க­மா­கவும், மக்கள் தொகை அதி­க­மா­கவும் உள்­ளதால் பிர­தி­நி­தித்­துவ ஜன­நா­யக முறையே பின்­பற்­றப்­ப­டு­கின்­றது. தமது சார்­பாக முடி­வு­களை மேற்­கொள்­வ­தற்கு மக்கள் பிர­தி­நி­தி­களை தெரிவு செய்து அர­சி­ய­லுக்கு அனுப்பி வைக்­கின்­றார்கள். இந்­நி­லையில் மக்கள் தமது நலன்­க­ளுக்கு குரல் கொடுக்கக் கூடிய சேவை­யாற்­றக்­கூ­டிய பிர­தி­நி­தி­களை இனங்­கண்டு தெரிவு செய்ய வேண்­டிய நிலையில் உள்­ளனர். மக்­களின் நம்­பிக்­கையை வீண­டிக்கும் பிர­தி­நி­தி­களும் எம்­மி­டையே இல்­லாமல் இல்லை.

வாக்கு என்­பது ஒரு வேட்­டுக்கு சம­மா­னது என்­பார்கள். ஒரே­யொரு வாக்கு ஒரு சமூ­கத்தின் வீழ்ச்­சிக்கும் எழுச்­சிக்கும் உந்து சக்­தி­யா­கி­விடும். எனவே தேர்­தலின் போது வாக்­கினை உப­யோ­கிக்கும் வாக்­கா­ளரின் பொறுப்பு மிகவும் அதி­க­மாகும். வீணான அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும், ஆதிக்­கத்­திற்கும் பயந்து பிழை­யான வழியில் வாக்­கினை பிர­யோ­கிக்கக் கூடாது. வாக்­கு­ரி­மையின் முக்­கி­யத்­து­வத்­தினை உணர்ந்து செயற்­ப­டுதல் வேண்டும்.

விகி­தா­சார தேர்தல் முறை

ஒரு தேர்தல் மாவட்­டத்தில் அல்­லது பல் அங்­கத்­துவ தேர்தல் தொகு­தியில் ஒரு கட்­சியோ அல்­லது குழுவோ பெற்ற வாக்கு விகி­தா­சா­ரத்­திற்கு ஏற்ப ஆச­னங்­களை பகிர்ந்­த­ளிக்­கின்ற கணித ரீதி­யான ஒரு தேர்தல் முறை இது­வாகும். தேர்தல் தொகு­தி­யொன்றில் போட்­டி­யிடும் ஒவ்­வொரு கட்­சியும் குழுவும் மக்கள் மத்­தியில் பெற்­றி­ருக்கும் செல்­வாக்­கிற்கு ஏற்ப அவற்­றிற்­கு­ரிய ஆச­னங்­களை அல்­லது பிர­தி­நி­தித்­து­வத்­தினை பங்­கிட்டு வழங்கும் தேர்தல் முறை விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ தேர்தல் முறை­யாகும். 1978 ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இரண்டாம் குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக இத்­தேர்தல் முறை அறி­முகம் செய்­யப்­பட்­டது. விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ முறையை குறிப்­பாக தனி­மாற்று வாக்கு முறையை கண்­டு­பிடித்து அறி­முகம் செய்து வைத்­த­வர்கள் இரு­வ­ராவர். தனித் தனி­யாக ஆனால் கிட்­டத்­தட்ட ஒரே காலப்­ப­கு­தியில் (1850 ஆம் ஆண்­டு­களில்), அர­சி­யல்­வா­தி­யான சி.சி.ஜி.அந்­தி­ரேயும், இலண்டன் பாரிஸ்­ட­ரான தோமஸ் குரே­யுமே இவ்­வி­ரு­வர்­க­ளா­கவும் உள்­ளனர். ஆனால் இந்த முறை பிர­பல்யம் அடை­வ­தற்கு கார­ண­மாக இருந்­தவர் பிரித்­தா­னிய அர­சியல் மேதை­யான யோன்ஸ் ரூவோட் மில் என்­ப­தனை பேரா­சி­ரியர் அம்­ப­ல­வாணர் சிவ­ராஜா தனது நூல் ஒன்றில் சுட்­டிக்­காட்­டு­கின்­றார்.

நாட்டு மக்­களின் அபி­வி­ருத்தி, ஒரு­மைப்­பாடு என்ற பல இலக்­கு­களை மையப்­ப­டுத்தி விகி­தா­சார தேர்தல் முறை அறி­முகம் செய்து வைக்­கப்­பட்­டது. எனினும் விகி­தா­சார தேர்தல் முறை இந்த இலக்­கு­களை உரி­ய­வாறு நிறை­வேற்­றி­யதா? என்ற கேள்வி இப்­போது மேலெழும்பி இருக்­கின்­றது. பல­மான எதிர்க்­கட்சி ஒன்­றினை உரு­வாக்­குதல், கட்­சிகள் பெற்ற வாக்­கு­க­ளுக்கும் அவற்­றுக்கு கிடைக்கும் ஆச­னங்­க­ளுக்கும் இடையே விகி­தா­சா­ரத்தைப் பேணு­வ­தாக அமைதல் என்று சாதக விளை­வுகள் சில­வற்றை இத்­தேர்தல் முறை கொண்­டி­ருந்த போதும் குறை­பா­டு­க­ளையே விகி­தா­சார தேர்தல் முறை அதி­க­மாக கொண்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

விகி­தா­சார தேர்தல் முறை­யா­னது ஒற்­றுமைக்கு பதி­லாக வேற்­று­மை­களை வளர்ப்­ப­தாக விச­னம் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றது. தேர்­தலில் எவ்­வா­றேனும் வெற்றி பெற்று விட­வேண்டும் என்­கிற நோக்கில் வேட்­பா­ளர்கள் பல பிழை­யான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு இத்­தேர்தல் முறை வாய்ப்­ப­ளிப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ­கட்­சிக்­குள்­ளேயே விரி­சல்கள் ஏற்­ப­டு­வ­தற்கும் கார­ண­மாக விளங்­கு­கின்­றது. மேலும் தேர்தல் மாவட்­ட­மாக அல்­லது பல் அங்­கத்­துவ தேர்தல் தொகு­தி­யாக தேர்தல் தொகு­திகள் அமைந்­தி­ருப்­ப­தனால் பிர­தி­நி­தி­களின் கண்­கா­ணிப்பு எல்லை அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. இதனால் பிர­தி­நி­திகள் தமது தொகுதி பற்­றியும் அங்கு வாழும் மக்­களைப் பற்­றியும் முழு­மை­யாக அறிந்­து­கொள்­வது கடி­ன­மான செய­லாக உள்­ளது. மக்­க­ளுக்கும் பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்பு குறைந்து காணப்­ப­டு­கின்­றது. இதனால் மக்கள் மற்றும் பிர­தி­நி­திக்கும் இடை­யி­லான இடை­வெளி அதி­க­ரிக்­கின்ற நிலையில் இது பல்­வேறு சிக்­கல்கள் மேலெ­ழும்­பு­வ­தற்கும் உந்து சக்­தி­யாக அமை­கின்­றது. பல் அங்­கத்­தவர் தேர்தல் தொகுதி முறை பின்­பற்­றப்­ப­டு­வ­தனால் தமது உண்­மை­யான பிர­தி­நி­தியை அடை­யாளம் காண்­பதில் சிக்கல் நிலை உரு­வாகும். இடைத்­தேர்­தல்கள் இல்­லா­மை­யா­னது அரசின் மீதான மக்­களின் அபிப்­பி­ரா­யத்­தினை அறிந்து கொள்ள முடி­யாத நிலை ஏற்­படும். வேட்­பாளர் சுதந்­திரம் இம்­மு­றையின் கீழ் பாதிப்­ப­டை­கின்­றது.

விகி­தா­சார முறை கணித ரீதியில் அமைந்­துள்­ளது. இதனால் பாமர மக்கள் மிகவும் சிர­மப்­ப­டு­கின்­றனர். உரி­ய­வாறு உரி­ய­வர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­ப­தற்கு இவர்­க­ளுக்கு இய­லா­துள்­ளது. இந்­நி­லை­மையால் அநே­க­மான வாக்­குகள் நிரா­க­ரிப்­ப­தற்கு உள்­ளா­கின்­றன. மலை­யக பகு­தி­களில் நிரா­க­ரிக்­கப்­பட்ட வாக்­கு­களின் தொகை அதி­க­மாக உள்­ளது. அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்­களின் தபால் மூல வாக்­குகள் கூட அதி­க­ளவில் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது வாக்­க­ளிப்­பதில் உள்ள சிர­மங்­க­ளையே எடுத்துக்­காட்­டு­கின்­றது. என்­றெல்லாம் விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ தேர்தல் முறைக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. மேலும் இம்­மு­றையின் கீழ் அதி­க­ரித்த தேர்தல் செலவுகள் இடம்­பெ­று­வதால் பிழை­யான நட­வ­டிக்­கை­களை வேட்­பா­ளர்கள் பின்­பற்­று­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. விகி­தா­சார தேர்தல் முறையின் அதி­ருப்தி நிலைகள் புதிய தேர்தல் முறையின் அவ­சி­யத்­தினை வலி­யு­றுத்­தின. அர­சாங்­கமும் இது­தொ­டர்பில் விசேட கவனம் செலுத்தி இருந்­தது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள்

கீழ்­மட்ட மக்­களின் நெருக்­க­மான அர­சியல் பங்­கேற்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உந்து சக்­தி­யாக உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் விளங்­கு­கின்­றன. அவர்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி மற்றும் சமு­தாய மேம்­பாட்டு தேவை­களை அவர்­களே திட்­ட­மிட்டு தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள வேண்டும் என்­ப­தனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் ஊடான சேவை­யினை உரி­ய­வாறு மலை­யக மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்கும் நோக்கில் மலை­யக கட்­சிகள் காய் நகர்த்­தல்­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றன.

மலை­யக பகு­தி­களில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க வேண்­டு­மென்று தமிழ் முற்­போக்கு கூட்­டணி இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் உள்­ளிட்ட பல கட்­சி­களும் வலி­யு­றுத்தி வந்­தன. மலை­யக பகு­தி­களில் பிர­தேச சபை­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட உள்­ளது. இவ்­வி­ட­யத்தில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி அர­சுக்கு மிகுந்த அழுத்­தத்தைக் கொடுத்­தி­ருந்­தது. நாட்டில் பத்­தா­யிரம் அல்­லது அதற்கு குறைந்த மக்­களைக் கொண்ட பிரி­வுகள் பிர­தேச சபை­க­ளாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. எனினும் இரண்டு இலட்­சத்­துக்கும் அதி­க­மான சனத்­தொ­கையைக் கொண்ட அம்­ப­க­முவ மற்றும் நுவ­ரெ­லியா என்­ப­வற்­றுக்கு தலா ஒரு உள்­ளூ­ராட்சி மன்­றங்­களே உள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது. இதனால் உரிய அபி­வி­ருத்­தியை மலை­யக மக்­க­ளிடம் கொண்டு செல்­வதில் இடர்­பா­டுகள் உள்­ளன என்றும் தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரிடம் வலி­யு­றுத்திக் கூறி இருந்­தது. இத­ன­டிப்­ப­டையில் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பிர­தேச சபை­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க இணக்கம் காணப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது.

எவ்­வா­றெ­னினும் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பிர­தேச சபை­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளமை முக்­கி­யத்­துவம் மிக்க ஒரு விட­ய­மே­யாகும். இது மலை­யக கட்­சி­களின் ஒற்­று­மைக்கு கிடைத்த மிகப்­பெரும் வெற்­றி­யாகும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை நுவ­ரெ­லியா, அம்­ப­க­முவ பிர­தேச சபை­களை ஐந்து அல­கு­க­ளாக பிரிப்­பது குறித்து மலை­யக தமிழ் அர­சியல் கட்­சிகள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்கள் மேலும் விரி­வு­ப­டுத்­தப்­பட இருக்­கின்­றன. இதே­வேளை நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்­ளூ­ராட்சி சபை­களை அதி­க­ரிப்­பது தொடர்­பிலும் எல்லை மீள் நிர்­ணயம் குறித்தும் ஆராய்­வ­தற்­கான கூட்டம் ஒன்றும் கடந்த 17 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் அமைச்­சர்­க­ளான மனோ­க­ணேசன், பி.திகாம்­பரம் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.தில­கராஜ், வேலு­குமார் , முத்து சிவ­லிங்கம் உட்­பட மற்றும் பலரும் கலந்து கொண்­டிருந்தனர். இதன்­போது நுவ­ரெ­லியா, அம்­ப­க­முவ ஆகிய உள்­ளூ­ராட்சி சபை­களை தலா மூன்று சபை­க­ளாக பிரித்து ஆறு சபை­களை உரு­வாக்­கு­வ­தற்கு இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. அதற்­கான ஒழுங்கு முறைகள் தொடர்­பிலும் விரி­வாக ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்­றது. இத­னை­விட நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் ஹங்­கு­ரான்­கெத்த, வலப்­பனை, கொத்­மலை ஆகிய உள்­ளூ­ராட்சி சபை­களை தலா­ இ­ரண்டு சபை­க­ளாக பிரித்து ஆறாக அதி­க­ரிப்­ப­தற்கும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உள்ள ஐந்து உள்­ளூ­ராட்சி சபை­க­ளையும் 12 ஆக அதி­க­ரித்­ததன் பின்னர் அடுத்த வாரம் வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யி­டு­வது என்றும் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை அமைச்சர் பைஸர் முஸ்­தபா இவ்­வி­டயம் குறித்து கூறு­கையில், மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்­கு­மாறு அமைச்­ச­ர­வை­யிலும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. தேர்­த­லுக்கு முன் மலை­யக மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­வ­தனை அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டனர். மனோ­க­ணே­சனும் அவர்­க­ளது யோச­னை­களை வழங்­கு­வ­தாக கூறினார். ஜன­வரி தேர்­தலை இலக்கு வைத்தே அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது. மலை­ய­கத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை பிரிப்­ப­தற்கு காலம் அதி­க­ளவில் தேவைப்­ப­டாது. அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளையும் ஒரே தினத்தில் நடத்­து­வ­தற்கே திட்­ட­மிட்­டுள்ளோம். ஆகவே இதனை முடித்­து­விட்டே வர்த்­த­மா­னியில் வெளி­யிட முடியும். இதன்­படி நுவ­ரெ­லியா மற்றும் அம்­ப­க­முவ மன்­றங்­களை மும் மூன்­றாக பிரிக்க திட்­ட­மிட்­டுள்ளோம். அவர்­க­ளது யோச­னையை செவ்­வாய்க்­கி­ழமை எதிர்­பார்க்­கின்றோம் என்று முஸ்­தபா தெரி­வித்­தி­ருக்­கின்றார். மலை­யக மக்­களின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்­றினால் ஜன­நா­யகம் இலங்­கையில் மேலோங்கும் என்­பதில் சந்­தே­கமே இல்லை என்றும் அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல்

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் விரைவில் இடம்பெற உள்­ளன. இத்­தேர்­தலை விரைவில் அர­சாங்கம் நடத்தி ஜன­நா­ய­கத்­தினை வலுப்­பெற செய்ய வேண்­டு­மென்று கட்சிகள் பலவும் வலி­யு­றுத்தி வரு­கின்­றன. இந்­நி­லையில் இம்­முறை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் கலப்பு முறையில் இடம்­பெற உள்­ளமை குறித்து நீங்கள் நன்­க­றி­வீர்கள். விகி­தா­சார மற்றும் தொகு­தி­வாரி முறை­மை­களின் கலவை­யாக இத்­தேர்தல் இடம்­பெற உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். ஏற்­க­னவே கூறி­யதைப் போன்று விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ முறை­மையின் கீழ் பல்­வேறு குறை­பா­டுகள் இனங்­கா­ணப்­பட்­டி­ருந்­தன. எனவே இனியும் இத்­தேர்தல் முறை­யினை தொட­ர­வி­டு­வதால் அர்த்­த­மில்லை என்­கிற நோக்கில் புதிய தேர்தல் முறை குறித்த சிந்­தனை மேலெ­ழுந்­தது. இதன் பய­னாக உள்­ளூராட்சி மன்றத் தேர்­தல்கள் கலப்பு முறையில் இடம் பெறும் நிலை­மைக்கு வித்­தி­டப்­பட்­டது. இதே­வே­ளையில் உள்­ளூராட்சி திருத்த சட்­ட­மூ­லத்தில் 55 இற்கும் மேற்­பட்ட திருத்­தங்கள் உள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருந்­த­மையும் உங்­க­ளுக்கு நினை­வி­ருக்­கலாம். மக்கள் விடு­தலை முன்­னணி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்ட மூலத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள திட்­டங்­களில் சிக்கல் நிலை இருப்­ப­தா­கவும் சுட்டிக் காட்டி இருந்­தது. எனினும் பின்னர் மக்கள் விடு­தலை முன்­னணி திருத்தச் சட்­ட­மூலத்­திற்கு ஆதா­ர­மா­கவே வாக்­க­ளித்­தி­ருந்­தது. உள்­ளூராட்சி தேர்­தல்கள் கலப்பு முறையில் இடம்­பெற உள்ள நிலையில் இது குறித்து பல­வி­த­மான பார்­வை­யை பலரும் செலுத்­தி­யி­ருக்­கின்­றன. குறிப்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.தில­கராஜ் தனது நிலைப்­பாட்­டினை பின்­வ­ரு­மாறு தெளிவு படுத்­து­கின்­ற­மையை அவ­தா­னிக்க கூடி­ய­தாக உள்­ளது. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் புதிய தேர்தல் முறை கொண்­டு­வ­ரப்­பட்டு முதன்­மு­றை­யாக உள்­ளு­ராட்சி மன்றத் தேர்­தல்கள் இடம்­பெற உள்­ளன. இதில் வட்­டார ரீதி­யாக 60 சத­வீத உறுப்­பி­னர்­களும் விகி­தா­சார முறையின் கீழ் 40 சத­வீத உறுப்­பி­னர்­களும் தெரிவு செய்­யப்­பட இருக்­கின்­றனர். கிராம சேவகர் பிரி­வு­களை உள்­ள­டக்­கி­யதே வட்­டா­ர­மாகும். குறிப்­பிட்ட வட்­டா­ரத்தில் மக்கள் மத்­தியில் செல்­வாக்கு மிக்­க­வர்கள் சமூக நலன் சார்ந்த விட­யங்­களில் ஆர்­வத்­துடன் செயற்­ப­டு­கின்­ற­வர்கள், மனித விழு­மி­யங்­களைப் பின்­பற்றி வரு­கின்­ற­வர்கள் போன்­றோரை மக்கள் தெரிவு செய்­யக்­கூ­டிய வாய்ப்பு அதி­க­மாக இருக்­கின்­றது. இதில் பெண்­க­ளுக்கு இரு­பத்­தைந்து சத­வீத இட ஒதுக்­கீடு கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. வட்­டார முறையில் பத்து சத­வீத பெண் உறுப்­பி­னர்­களும்,விகி­தா­சார முறையில் பதி­னைந்து சத­வீத பெண் உறுப்­பி­னர்­களும் உள்­வாங்­கப்­ப­டு­வார்கள்.கடந்த காலங்­களில் பிர­தேச சபைக்கோ நகர சபைக்கோ போட்­டி­யி­டு­கின்­ற­வர்கள் தாம் சார்ந்­துள்ள பிர­தேசம் தவிர ஏனைய பிர­தேச வாக்­கு­க­ளையும் பெற்று தேர்­தலில் வெற்றிப் பெற்று வந்­தார்கள். ஆனால் புதிய முறையில் குறிப்­பிட்ட வட்­டா­ரத்தில் மாத்­தி­ரமே வாக்­கு­களை கேட்க முடியும். வட்­டா­ரத்தில் வெற்றி பெற்று உறுப்­பி­ன­ராக தெரிவு செய்­யப்­ப­டு­கி­றார்கள். வட்­டா­ரத்தின் அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்கு பொறுப்­பா­க­ இருப்­பார்கள். அதேபோல் விகி­தா­சார முறையில் நாற்­பது சத­வீத உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­படும் போது தேர்­தலில் தோல்வி கண்­ட­வர்­களும் தெரிவு செய்­யப்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு இருக்­கின்­றது. மேலும் கட்­சி­க­ளுக்கு கிடைக்கும் மொத்த வாக்­குகள் மற்றும் உறுப்­பி­னர்­க­ளுக்கு ஏற்ப விகி­தா­சார நிய­மனம் வழங்­கப்­படும். நிய­மன உறுப்­பி­னர்கள் தமது வட்­ட­ாரத்­துக்கு மாத்­திரம் அல்­லது ஏனைய வட்­டா­ரங்­க­ளுக்கும் சேவை செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருப்­பார்கள்.

எனவே தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் ஆளுமை நிறைந்­த­வர்­க­ளா­கவும் மக்கள் நலனை உரி­ய­வாறு பேணு­கின்­ற­வர்­க­ளா­கவும் தாம் சார்ந்த கட்­சியைச் சேர்ந்த வாக்­கா­ளர்­க­ளி­னதும் எதி­ரணி வாக்­கா­ளர்­க­ளி­னதும் மனங்­களை வென்­றெ­டுக்க கூடி­ய­வ­ரா­கவும் இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எல்­லோ­ரு­டனும் சுமூ­க­மான உற­வினைப் பேணு­ப­வ­ரா­கவும் இருக்க வேண்டும். உள்­ளூராட்சி மன்றத் தேர்­தலில் வட்­டாரம் மற்றும் விகி­தா­சார முறையில் அமைந்த கலப்பு முறை­யி­லான தேர்தல் முதன் முறை­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இதில் ஒவ்­வொரு வட்­டா­ரத்­துக்கும் ஒரு கட்­சியின் சார்பில் ஒரு வேட்­பாளர் மட்­டுமே போட்­டி­யி­டுவார். கட்­சியின் சின்­னத்­துக்கு மாத்­தி­ரமே வாக்­காளர் புள்­ள­டி­யிட வேண்டும் என்று தில­கராஜ் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இ.தொ.கா. என்ன சொல்­கின்­றது?

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் கலப்பு தேர்தல் முறையின் கீழ் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தனது அதி­ருப்­தி­யினை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. விகி­தா­சார தேர்தல் முறையே சிறு­பான்­மை­யி­ன­ருக்கு உகந்­தது என்­கி­றது. இ.தொ.கா. இது குறித்து இ.தொ.கா. வின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முத்து சிவ­லிங்கம் கூறு­கையில் விகி­தா­சார தேர்தல் முறை மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யி­ன­ருக்கு மிகவும் சாத­க­மா­னது. இந்த முறையின் மூல­மாக நூற்­றுக்கும் அதி­க­மான உறுப்­பி­னர்­களை இலங்கை முழு­வதும் பெற்றுக் கொள்ளக் கூடி­ய­தாக இருந்­தது. நுவ­ரெ­லியா, பதுளை, கண்டி போன்ற மாவட்­டங்­களில் மட்­டு­மல்­லாது மாத்­தளை, குரு­நாகல், அவி­சா­வளை, களுத்­துறை இங்­கெல்லாம் கூட உறுப்­பி­னர்கள் வரக்­கூ­டிய வாய்ப்பு இருந்­தது. கலப்பு முறையின் கீழ் இப்­ப­கு­தி­களில் வெற்றி வாய்ப்­புக்கள் பாதிக்­கப்­படும் அபா­யமே அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. நுவ­ரெ­லியா மாவட்டம் எமக்கு சாத­க­மாக அமை­யலாம். ஏனைய பகு­தி­களில் பிர­திநி­தித்­துவம் தொடர்பில் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. ஒரு சில உறுப்­பி­னர்­களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்­புள்­ளது. பெரும்­பான்மைக் கட்­சிகள் எமது வாய்ப்­புக்­களை தட்­டிப்­ப­றிக்கும் நிலை­ கலப்பு முறை மூலமே அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது.

மாகா­ண­சபைத் தேர்தல் குறித்தும் தொகுதி நிர்­ணயம் குறித்தும் இப்­போது கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­ற­மையே அவ­தா­னிக்க கூடி­ய­தாக உள்­ளது. இதன் போது உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மற்றும் தொகுதி நிர்­ணய விட­யத்தில் அர­சாங்கம் விட்ட குறையை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் தோட்டங்களில் குறைந்த வாக்குகளும் தோட்டத்தை சுற்றியுள்ள கிராமத்தில் அதிகளவு வாக்குகளும் உள்ள நிலையில் எமக்கு பாதிப்பே ஏற்படும். ஒன்றுக்கொன்று நிலத் தொடர்பற்ற முறையில் சிங்கள மக்களுக்கென்று பிரதேச சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை போன்ற இடங்களில் எமது மக்களின் நலன் கருதி தொகுதிகளை பிரித்துக் கொடுப்பது அவசியமாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ஜனநாயகத்தை அனுபவிக்கின்ற வாய்ப்பு மலையக மக்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும். மலையக மக்கள் வாக்களித்தும் அரசியலில் பங்கேற்க உரிய வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படாதிருக்குமிடத்து இது ஒரு அநீதியான செயல் என்றே கூறத் தேன்றுகின்றது. அரசாங்கம் மலையக மக்களுக்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது மிக முக்கிய கடமையாகும். இதிலிருந்தும் விலகிச் செல்ல அரசாங்கம் முற்படுதல் கூடாது என்கிறார் முத்துசிவலிங்கம். சமூக முன்னேற்றத்துக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அவசியமாகியுள்ள நிலைமையில் அரசாங்கம் பொறுப்புணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.

செறிந்து வாழும் இடங்களில் சாதகம்

கலப்பு தேர்தல் முறை மலையக மக்கள் செறிவாக வாழும் இடங்களில் சாதகமாகவும் பரந்து வாழும் இடங்களில் பாதகமாகவும் அமையும் என்கிறார் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். விஜய சந்திரன். நுவரெலியா மாவட்டத்தை பொறுத்த வரையில் முன்பு இருந்ததை விட அங்கத்தினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏனைய இடங்களில் இது கேள்விக் குறியாகலாம். இப்போது இருக்கும் பிரதிநிதித்துவமும் இல்லாது போகலாம். பரந்து வாழும் இடங்களில் தமிழ் மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிப்படைய கூடும். கம்பஹா போன்ற மாவட்டங்களில் எமது பிரதி நிதிகள் தெரிவாவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லாது போகும். மலையகத்தவர்கள் பரந்து வாழும் இடங்களில் இம் மக்கள் தமது அரசியல் விடயங்கள் உள்ளிட்ட ஏனைய பல நடவடிக்கைகளுக்கும் ஏனைய இனத்தவர்களை தங்கி வாழக்கூடிய ஒரு சூழ்நிலை காணப்படும். தங்கள் இன அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய விடயங்களிலும் இத்தகையோர் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்கிறார் விஜய சந்திரன்.

இதேவேளை கலப்புமுறை தேர்தல் குறித்து விளக்கங்களை உரியவாறு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. பூரண தெளிவுபடுத்தல் மிகவும் அவசியமாகும். கலப்பு முறையின் தேர்தல்களை பொறுத்திருந்து பார்ப்போம்.

துரை­சாமி நட­ராஜா

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-21#page-6

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.