Jump to content

எச்சரிக்கை மணி !


Recommended Posts

எச்சரிக்கை மணி !

 

தமிழ் மக்கள் தமது நீண்ட காலப் போராட்­டத்தில் சமஷ்டி என்ற தீர்வை நோக்­கியே நகர்ந்து வந்­துள்­ளனர். இடையில் ஏற்­பட்ட ஆயுதப் போர் காலத்தில் தனி ஈழம் என்ற தீவிரப்போக்கு உண்­டாக்­கி­ய­தற்­கான அடிப்­படைக் காரணம் சமஷ்டி மறுக்­கப்­பட்­டதன் எதிர்­வி­ளைவே. இன்றைய சூழ்நிலையில் அவற்றிலிருந்து இறங்கிவந்து பிளவுபடாத பிரிக்கப்படாத நாட்டுக்குள் (ஒருமித்த) அதிகாரப்பகிர்வை வேண்டி நிற்கின்ற போதும் அவற்றையும் இல்லாது ஆக்கும் நடவடிக்கையில் தென்னிலங்கை சமூகம் மும்முரம் காட்டுவது ஆத்திரத்தை ஊட்டுகிறது.

 

புதிய அர­சியல் யாப்பு இலங்­கைக்கு ஆபத்தை கொண்டு வர­வி­ருக்­கி­றது. நாடு பிரிந்து செல்­வ­தற்­கு­ரிய வழி­ச­மைத்துக் கொடுக்­கப்­போ­கி­றது. மக்­களின் ஆணை பெறப்­ப­டாமல் புதிய அர­சியல் யாப்பை கொண்­டு­வர அனு­ம­திக்­க­மாட்டோம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜபக் ஷ கர்ஜித்து வரு­கிறார்.

உத்­தேச அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்தம் அமுல்­ப­டுத்­தப்­பட்டால் இலங்கை ஒரு குர்திஸ்­தா­னா­கவோ அல்­லது கட்ட­லோ­னியா பாணி­யி­லான சுதந்­தி­ரத்­துக்­கான சர்­வஜன வாக்­கெ­டுப்பை எதிர்­கா­லத்தில் கொண்­ட­தா­கவே அமைந்­து­விடும் என எச்­ச­ரித்­து­முள்ளார்.

மஹிந்த ராஜபக் ஷவின் கருத்­தையே பெரும்­பா­லான சிங்­க­ளத்­த­லை­மை­களும் தென்­னி­லங்கை பெரு­ம்பான்மை சமூ­கமும் கொண்­டி­ருக்­கின்­றன. இவர்கள் மட்­டு­மன்றி பௌத்த அடிப்­படைவாதி­களும் பௌத்த பீடங்­க­ளுங்­கூட இக்­க­ருத்தை கொண்­டி­ருக்­கின்­றன. மொத்­தத்தில் புதிய அர­சியல் யாப்பை வர­வேற்­ப­வர்­க­ளிலும் பார்க்க அதை நிரா­க­ரிப்­ப­வர்­களின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்­டே­யி­ருக்­கி­றது.

கடந்த வர­லாற்றுக் காலங்­களில் இருந்து நிலை­மை­களை விட தற்­போ­தைய அர­சியல் சூழ்­நிலை இறுக்­க­மானதா­கவே இருந்து கொண்­டி­ருக்­கி­றது.

 அந்த இறுக்கத் தன்­மைக்குக் காரணம் புதிய அர­சியல் யாப்­பா­னது சமஷ்­டியை தமிழ் மக்­க­ளுக்கு உரு­வாக்கிக் கொடுக்­கப்­போ­கி­றது, நாடு பிரிந்து செல்­வ­தற்­கான வழியை அமைத்­துக்­கொ­டுக்க கால்கோள் இடு­கி­றது.

உள்ளூர் மற்றும் சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கு அளித்த உறுதி மொழி­களை நிறை­வேற்­றவே புதிய அர­சியல் யாப்பு கொண்டு வரப்­ப­டு­கி­றது. புலம்­பெயர் சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றி வைக்கும் முக­மா­கவே யாப்பு என்ற நாடகம் ஆடப்­ப­டு­கி­ற­தென கூட்டு எதி­ர­ணியைச் சேர்ந்­த­வர்கள் அர­சாங்­கத்தின் மீது குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

13 ஆவது திருத்தம் கொண்டு வரப்­பட்­ட­போது சிங்­கள தலை­மை­க­ளிடமும் மக்­க­ளி­டமும் இருந்த மனப்­பாங்கு வடக்­கு–­கி­ழக்கில் விடு­தலைப் புலி­களின் ஆதிக்கம் நில­விய காலத்­தி­லி­ருந்த எண்­ணப்­பா­டு­க­ளுக்கும் போர் முடிந்த பின்பு உள்ள போக்­கு­க­ளுக்கும் பாரிய வேறு­பா­டுகள் காணப்­ப­டு­கி­றது என்­பது கூறா­மலே விளங்கிக் கொள்ள கூடிய விட­ய­மாகும்.

பிராந்­திய சபை­களை வழங்கி தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்வு காணுவோம் என்ற நிலைமை மாறி 13க்கு அப்பால் சென்று அதி­காரப் பகிர்­வினை வழங்­கு­வோ­மென்ற உத்­த­ர­வாதம் காணாமல் போய், தற்­பொ­ழுது ஏகிய ராஜ்­ஜிய கொண்டு வரு­வ­தையும் விட மாட்டோம் என்ற நிலைமை உக்­கி­ர­ம­டைந்­து­போன நிலையே இன்­றைய இலங்­கையின் அர­சியல் சூழ்­நி­லை­யாக காணப்­ப­டு­கி­றது.

மிக அண்மைக் காலத்தின் சர்­வ­தேச அளவில் இடம்­பெற்ற அர­சியல் மாற்­றங்கள் அல்­லது சம்­ப­வங்­களே உதா­ர­ணங்­க­ளாக கொண்டு நாடு பிரிந்­து­விடும். வட­கி­ழக்கு தனி ராஜ்­ஜி­ய­மா­கி­விடும் ஆபத்து உரு­வாகி விடு­மென்ற பூச்­சாண்டி காட்­டு­கின்ற வேலை­களை சிங்­களத் தலை­மைகள் மிக இன­பூர்­வ­மாக செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள் .

கடந்த செப்­டெம்பர் மாதம் 25 ஆம் திகதி குர்திஸ் வாழ் ஈராக் மக்கள் பிரிந்து செல்­வ­தற்­கான 92% உச்ச ஆணையை வழங்­கி­யுள்­ளனர். அவ்­வாறே ஒக்­டோபர் 1 ஆம் திகதி ஸ்பெய்ன் நாட்­டி­லி­ருந்து கட்டலோனியா மாகாணம் 90 சத­வீத மக்­களின் ஆத­ர­வுடன் பிரிந்து செல்­வ­தற்­கான ஒப்­பு­தலை தந்­துள்­ளது.

அண்­மையில் நடத்­தப்­பட்ட பொது வாக்­கெ­டுப்­பென்ற -ஆயு­தமே மேற்­படி நாடு­க­ளுக்­கான பிரிந்து செல்லும் சுதந்­தி­ரத்­துக்­கான அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளது.

ஸ்பெய்ன் நாட்டின் ஒரு மாகா­ண­மாக விளங்கும் கட்டலோனியா மாகாணம் 4 பிர­தான பிரி­வு­களைக் கொண்­டது. அந்த 4 பிரி­வு­களும் முறையே பார்­சி­லோனா, கிரோனா, லிலிடா, தாரக்­கோனா என்ற பிரி­வு­களே அவை­யாகும்.

கட்டலோனியா மக்கள் நீண்ட கால­மாக பிரிந்து செல்­வ­தற்­கான போராட்­டங்­களை நடத்தி வந்­துள்­ளனர். தாங்கள் பிரிந்து செல்­வ­தற்கு பொது வாக்­கெ­டுப்பு முறை ஒன்று ெகாண்­டு­வர வேண்­டு­மென்ற கோரிக்­கையை அவர்கள் நீண்­ட­கா­ல­மாக முன்­வைத்து வந்­துள்­ள­போதும் ஸ்பெய்ன் நாட்டின் இறுக்­க­மான நட­வ­டிக்­கைகள் அதற்கு இடங்­கொ­டுக்­க­வில்லை. 1935 ஆம் ஆண்டு தொடக்கம் 1975 ஆம் ஆண்டு வரை­யி­லான ஜெனரல் மாஸ்­கோவின் சர்­வா­தி­கார ஆட்சி கார­ண­மாக கட்டலோனியா அடி­மை­யாக்­கப்­பட்­டி­ருந்­தது .

 ஸ்பெயின் ஆட்­சியின் கடு­மை­யான பிடிக்குள் கட்டலோனியா தனது மனித உரி­மைகள், அடிப்­படை உரி­மைகள், தேசிய அடை­யாளம், ஜன­நா­யகம் அனைத்­தையும் இழந்து நின்­றது. ஜெனரல் மாஸ்கோவின் மறைவின் பின் பொரு­ளா­தாரம் மற்றும் பிறதுறை­களில் வளர்ச்சி கண்­டது.

1978ஆம் ஆண்டு இலங்­கையை போலவே ஜன­நா­யக குடி­ய­ரசு நாடாக ஸ்பெய்ன் மலர்ச்சி கண்­டது. 1982 ஆம் ஆண்டு கட்டலோனியா தன்னை சுதா­­ரித்துக் கொண்­டதுடன் ஸ்பெய்னின் வட­கி­ழக்கு மாகா­ண­மான இப்பிராந்தியம் தனக்­கான சுதந்­திரப் பிர­க­ட­னத்­துக்­காக போராட முற்­பட்ட போது அது அடக்கி ஒடுக்­கப்­பட்­டது. பிரி­வி­னைக்கு எதி­ராக தனது இரா­ணு­வத்­தினை பிர­யோ­கிக்க முடி­யு­மென ஸ்பெய்ன் எச்­ச­ரித்­தது.

இந்த மக்கள் பிரிந்து செல்­வ­தற்­கான கோரிக்­கையை முன் வைத்து ஜன­நா­யக முறைப்­படி போராடி வந்த போதும் 2003 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பல பொது­வாக்­கெ­டுப்­புகளுக்கு திட்­ட­மிட்டு இருந்­த­போ­திலும் அதை நடத்த முடி­யாத நிலையும் பல­வீன நிலை­மை­களும் காணப்­பட்­ட­போதும் கடந்த 1 ஆம் திகதி ஸ்பெய்ன் நாட்­டி­லி­ருந்து கட்டலோனியா மாகாணம் பிரிந்து செல்­வ­தற்­கான 90% ஆத­ரவு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதே போன்றே குர்திஸ் இன ஈராக் வாழ் மக்கள் பிரிந்து செல்­வ­தற்­கான 92% வீத ஆணையைக் கடந்த செப்ெ­டம்பர் மாதம் 25 ஆம் திகதி வழங்­கி­யுள்­ளனர்.

உல­கத்தில் முதன்முதல் பொது வாக்­கெ­டுப்­பென்­ற ­மு­றையை அறி­முகம் செய்த நாடு சுவிட்ஸர்­லாந்து ஆகும். குறிப்­பிட்ட தொகை மக்கள் பிரிந்து செல்ல விரும்­பினால் அதற்­கென ஒரு மசோ­தாவைக் கொண்டு வந்து அதை பொது­வாக்கெடுப்­புக்கு விடுத்து அதன் மூலம் தமது சுய நிர்­ணய அடிப்­ப­டையில் பிரிந்து செல்­ல­லா­மென அர­சியல் சட்­டத்தில் முதன்முதல் புகுத்­தியது சுவிட்ஸர்­லாந்து நாடாகும். சுய­நிர்­ணய உரி­மை­களை கோரு­வ­தற்கு ஒவ்­வொரு இனத்­துக்கும் பிரி­வி­ன­ருக்கும் உரி­மை­யுண்டு என்­பதை அந்த சட்ட விதிகள் விதந்­து­ரை­க்கின்­றன.

தமது இனம் சுதந்­திரம் அடை­வ­தற்­காக பல நாடு­களில் ஆயுதம் ஏந்திப் போரா­டிய வர­லா­று­க­ளு­முண்டு. 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த எதி­ரி­க­ளாக விளங்­கிய பலஸ்­தீனம் எதிர் இஸ்­ரேல் ஆகிய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான ­போ­ராட்­டத்­துக்கு அமெ­ரிக்கா ஆயுதம் வழங்கி ஆத­ரவு கொடுத்து இஸ்­ரேலின் உரு­வாக்­கத்­துக்கு உத­வி­யது. இப்­போ­ராட்­டத்­துக்கு பிரித்­தா­னியா உதவி நல்­கி­யது.

முதன்முதல் ரஷியப் புரட்­சி­யாளர் லெனின் ஒரு தேசிய இனத்­துக்கு சுய நிர்­ணய உரி­மை­யுண்டு என்­பதை பிர­க­டனம் செய்த தலை­வ­ராவார்.

சுய­நிர்­ணய உரி­மைக்­கான பொது வாக்­கெ­டுப்­பொன்று ஸ்கண்டிநேவிய நாடு­க­ளான நோர்வே, சுவீடன், டென்­மார்க் ஆகி­ய­வற்­றுக்கு 1905 ஆம் ஆண்டு நடத்­தப்­பட்டு பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் நோர்வே தனி­நா­டா­கி­யது. 1944 இல் ஐஸ்­லாந்து பொது­வாக்­கெ­டுப்பின் மூல­மாக தனி­நா­டாக பிரிந்­தது. 1958 ஆம் ஆண்டு கயனா தனி நாடா­கி­யது. 1990 சுவே­சே­னியா பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் தனி­நா­டாக ஆகிக் கொண்­டது. குரே­ஷி­யாவும் இவ்­வாறே.

1991 இல் ஸான்யா பொது­வாக்­கெ­டுப்பில் தனி­நா­டா­கி­யது. பராத்­தீ­வுகள் சுமார் 11 ஆயிரம் மக்கள் தொகை­யை கொண்­டது. பொது­வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்ட போது 5 வீதத்தில் வெற்றி பெற்று தனி­நா­டா­கி­யது. 1991 இல் உக்ரேன் பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் தனி­நா­டாகிக் கொண்­டது. இதே­யாண்டு போஸ்­லி­னியா பிரிந்து கொண்­டது. 1993 இல் 6 இலட்சம் மக்­களைக் கொண்­ட எரித்­தி­ரிய நாடு பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் சுய­நிர்­ணய உரி­மையைப் பெற்­றுக்­கொண்­டது.

1999 இல் கிழக்கு தீமோர் பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் தனி­நா­டாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இவ்­வாக்­கெ­டுப்­புக்கு ஐ.நா. சபை நேர­டி­யா­கவே தனது கண்­கா­ணிப்பை மேற்­கொண்­டி­ருந்­தது. 2011 ஆம் ஆண்டு தென்­சூடான் பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் தனி­நா­டாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

இவ்­வா­றான உலக அனு­ப­வங்­க­ளையும் போக்­கு­க­ளையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டே பௌத்த மத­பீ­டங்­களும் தென்­னி­லங்கை தலை­வர்­களும், மக்­களும் புதிய அர­சியல் சாச­ன­மா­னது வேண்­டற்­பா­லது, நாடு பிரிக்­கப்­ப­டு­வ­தற்­கான சாச­ன­மாக புதிய அர­சியல் சாசனம் இருக்­கப்­போ­கி­றது என்ற எதிர்­வா­தத்தை நாட்டில் கிளப்பி விடு­வ­துடன் புதிய அர­சியல் சாசன உரு­வாக்­கத்­துக்கு எதிர்ப்பும் காட்டி வரு­கின்­றார்கள்.

அண்­மையில் வடக்­கு­ மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் அஸ்­கி­ரிய பீடத்­த­லை­வரைச் சந்­தித்து அர­சியல் தீர்வு விவ­காரம் சம்­பந்­த­மாக கலந்­து­ரை­யா­டிய வேளையில் அஸ்­கி­ரிய பீடத்­தினர் பிரி­வினையை அங்­கீ­க­ரிக்­கவோ ஏற்­றுக்­கொள்­ளவோ நாம் தயா­ரில்­லை­யென்­பதை முகத்தில் அறைந்­தது போல் கூறி­யி­ருந்­த­மையை நாட்­டி­லுள்ள மக்கள் அனை­வரும் அறிவர். இதே­வேளை புதிய அர­சியல் சாச­னத்­துக்கு எதி­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தலை­மையில் எலிய என்ற அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­பது நாட­றிந்த விட­ய­மாகும்.

இவை­யெல்­லா­வற்­றையும் ஒப்­பிட்டு நோக்­கு­கின்­ற­போது புதிய அர­சியல் சாச­ன­மொன்று கொண்­டு­வ­ரப்­ப­டுமா? அதன் மூலம் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­டுமா என்ற சந்­தேகம் தமிழ் மக்கள் மத்­தியில் வலுத்­துக்­கொண்டு போவது தவிர்க்­கப்­ப­ட­மு­டி­யாத விட­ய­மாகும்.

பல இழுத்­த­டிப்­புக்­களை செய்­ததன் பின்­னரே இடைக்­கால அறிக்கை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. எதிர்­க்கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் அர­சியல் தீர்வு விவ­காரம் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கி­ற­தென்­பதை நேர­டி­யா­கவே வெளி­நாட்டு ராஜ­தந்­தி­ரி­க­ளிடம் முறை­யிட்­டுள்ள சந்­தர்ப்­பங்­க­ளு­முண்டு.

அண்­மையில் (10.08.2017) இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த அமெ­ரிக்க காங்­கிரஸ் உறுப்­பி­னர்­களை எதிர்­க்கட்சித் தலைவர் சந்­தித்து உரை­யா­டி­ய­போது புதிய அர­சியல்யாப்பை தயா­ரிக்கும் விட­யத்தில் தேவை­யற்ற இழுத்­த­டிப்­புக்கள் நில­வு­கி­றது என நேர­டி­யா­கவே அர­சாங்­கத்தின் மீது குறை கூறி­யி­ருந்­த­மையை கவ­னத்தில் கொள்­ளலாம்.

நாட்டை பிரிக்க அர­சாங்கம் தயா­ராகிக் கொண்­டி­ருக்­கி­றது. அதை எதிர்க்க இந்த நாட்­டி­லுள்ள அனைத்து தேரர்­களும் முன்­வர வேண்டும். 1956 ஆம் ஆண்டு இடம்­பெற்­ற­துபோல் யுக­மாற்­றத்­துக்கு நாம் தயா­ராகி விட்டோம். அப்­ப­ய­ணத்தில் சகல பௌத்த தேரர்­களும் இணைய வேண்­டு­மென்ற அப்­பட்­ட­மான இன­வாத கோஷத்தை முத்­தட்­டுவே தேரர் கிளப்­பி­யி­ருந்தார்.

இவ்­வா­றான இன­வாத கோஷங்கள், பௌத்­த ஆதிக்க கெடு­பி­டி­க­ளி­லி­ருந்து தப்­பித்து, ஜன­நா­யக பாரம்­ப­ரி­யங்­களின் வழியில் இனப் பிரச்­சி­னைக்­கான தீர்­வைக்­காண தமிழ்த்­த­லை­மைகள் போராடி வரு­கிற நிலையில் அதைக் ­கொச்சைப்படுத்­து­வ­தற்கும் தடுப்­ப­தற்கும் சிங்­களத் தலை­மை­களும் இன­வாதக் குழுக்­களும் மேற்­கொண்­டு­வரும் முஸ்­தீபுகள் இந்­நாட்டில் நிலை­யான சமா­தா­னத்­தையோ அமை­தி­யையோ கொண்டு வரு­வ­தற்­கு­ரிய எத்­த­னங்­களை உரு­வாக்க மறுக்கும் கரு­மங்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன.

தமிழ் மக்கள் தமது நீண்ட காலப் போராட்­டத்தில் சமஷ்டி என்ற தீர்வை நோக்­கியே நகர்ந்து வந்­துள்­ளனர். இடையில் ஏற்­பட்ட ஆயுதப் போர் காலத்தில் தனி ஈழம் என்ற தீவிர போக்கு உண்­டாக்­கி­ய­தற்­கான அடிப்­படைக் காரணம் சமஷ்டி மறுக்­கப்­பட்­டதன் எதிர்­வி­ளைவே. இன்றைய சூழ்நிலையில் அவற்றிலிருந்து இறங்கிவந்து பிளவுபடாத பிரிக்கப்படாத நாட்டுக்குள் (ஒருமித்த) அதிகாரப்பகிர்வை வேண்டி நிற்கின்ற போதும் அவற்றையும் இல்லாது ஆக்கும் நடவடிக்கையில் தென்னிலங்கை சமூகம் மும்முரம் காட்டுவது ஆத்திரத்தை ஊட்டுகிறது.

நாட்டைப் பிரிக்க நாம் விரும்பவில்லை. ஒருமித்த நாட்டுக்குள் ஒன்றுபட்ட இனங்களாகவே வாழ விரும்புகின்றோம்.

ஆனால் தமிழ் மக்களின் தனித்துவம் பேணப்பட வேண்டுமென்பதற்காகவே அதிகாரப் பகிர்வினை வேண்டுகின்றோம். அதுவும் பெரும்பான்மை சமூகத்தின் நூறு வீத உடன்பாட்டுடன் பெற விரும்புகின்றோம் என்று தெளிவாகவும், சத்தியவாக்காகவும் உரைத்த பின்பும் அதை உதாசீனம் செய்வதும் நாட்டைப்பிரிக்கப் பார்க்கிறார்கள் என வக்கிர எண்ணத்துடன் பிரசாரம் செய்வதும் எந்தளவுக்கு நன்மை பயக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

நெருக்கடிகள் நிலவுகின்ற ஒரு நாட்டில் தேசிய இனப்பிரச்சினைக்கோ அல்லது ஒரு பிரிவினரின் அடிப்படை உரிமைப் போராட்டங்களுக்கோ தீர்வு காணாத பட்சத்திலோ அவற்றுக்கான தீர்வை தேடித்தரும் பல்வேறு வழிகள் உலக ஏடுகளில் உள்ளது என்பதை அண்மைக்கால அனுபவங்களைக் கொண்டு இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்கான எச்சரிக்கை மணியையே தமிழ்த்தலைமைகள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

– திரு­மலை நவம் –

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-21#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.