Jump to content

வீரப்பன் வேட்டை: அரசியல் குட்டையை கிளற விரும்பவில்லை என்கிறார் கே.விஜய்குமார்


Recommended Posts

வீரப்பன் வேட்டை: அரசியல் குட்டையை கிளற விரும்பவில்லை என்கிறார் கே.விஜய்குமார்

bbc

சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு கடந்த அக்டோபர் 18-ஆம் தேதியுடன் பதிமூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் வீரப்பனுக்குப் பின்புலமாக இருந்த அரசியல்வாதிகள் பற்றிய கதைகள் பயன் தராது என்பதால் அந்த அரசியல் குட்டையை தமது புத்தகத்தில் கிளற விரும்பவில்லை என்று பிபிசி தமிழுக்கு ஓய்வு பெற்ற ஐபிஸ் உயரதிகாரியான கே.விஜய்குமார் பேட்டியளித்துள்ளார்.

"வீரப்பன் - சேசிங் தி ப்ரிகாண்ட்" என்ற பெயரில் அவர் ஆங்கிலத்தில் வெளியிட்ட புத்தகத்தில் இடம்பெறாத பல விஷயங்கள் குறித்தும் தேடுதல் வேட்டையின்போது தமக்கு நிகழ்ந்த அனுபவங்கள் குறித்தும் பிபிசி தமிழிடம் மனம் திறந்து பேசினார் விஜய்குமார்.

"காவல்துறை மாயாஜால நிபுணரின் உத்தி போல சாதாரணமாக எதிரிகளை வீழ்த்தி விடும் என்பது எல்லோரது எதிர்பார்ப்பு.

காவல்துறையிடம் பல காலம் சிக்காமல் தண்ணீர் காட்டியதால்தான் வீரப்பன் என்பவர் மிகப் பெரிய நபர் என்பது போன்ற பிரமை மக்களிடையே நிலவி வந்தது. அதுமட்டுமின்றி, தாம் மறைந்து வாழ்ந்த பகுதிகளில் வசிக்கும் சிலருக்கு உதவி செய்து வந்ததால், அவருக்கு உள்ளூர்வாசிகளின் ஆதரவு இருந்தது.

Getty imagesபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

1997 முதல் 1999-ஆம் ஆண்டுகளில் பார்த்தீர்களேயானால், தனது ஐந்து பவுன் சங்கிலியைக் கூட வீரப்பன் அடகு வைக்கும் நிலை இருந்தது. அந்த மோசமான நிலையில் வீரப்பன் சரண் அடைவதற்கான கொள்கையை செயல்படுத்த அரசு முன்வந்தபோதும், அதை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு அமையவில்லை.

வீரப்பனும் தமிழும்

அத்தகைய சூழலில் "தமிழ்" என்ற பெயரை வைத்துக் கொண்ட ஒரு இயக்கம் இணையதளம் ஒன்றின் மூலம் மிகப் பிரபலமானது. அந்த இயக்கத்தில் தானும் பங்கேற்பதாகக் கூறி வீரப்பன் செயல்படத் தொடங்கினார்.

வீரப்பனால் எந்த அளவுக்கு தமிழ் மொழியைப் பேச முடியும் அல்லது தமிழ் மீது அவருக்கு மிகப் பெரிய தாக்கம் இருந்ததா என்பது பற்றிய தர்க்கங்களுக்குள் எல்லாம் இப்போது நான் செல்ல விரும்பவில்லை.

 

ஆனால், முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழர்கள் அதிகம் வசித்த பகுதியாக இருந்த கொள்ளேகால் தாலுகா, 1956-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கோவை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கர்நாடகத்தின் ஆளுகையின் கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்த சிலருக்கு கர்நாடக வனம் மற்றும் காவல்துறையினர் நெருக்கடி கொடுத்தபோது அவர்கள் வீரப்பனிடம் வந்தனர். அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக வீரப்பன் பயன்படுத்தத் தொடங்கினார்.

தாமதம் ஏன்?

வீரப்பன் வேட்டைக்கு பிறகு நான் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர், தேசிய காவல் பயிற்சி மையத்தில் இயக்குநர், மத்திய ரிசர்வ் காவல் படை தலைமை இயக்குநர் ஆகிய பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பு மூத்த ஆலோசகராக பணியாற்றி வருகிறேன்.

Getty imagesபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தொடர்ச்சியாக என்வசம் இருந்த ஆயிரக்கணக்கான செய்திகள், தகவல்களை ஆகியவற்றைத் தொகுத்து ஒரு புத்தகமாக வடிவமைக்கும் நேரம் எனக்கு கிடைக்கவில்லை.

எனது நண்பரும் பத்திரிகையாளருமான விகாஸ் சிங் அந்தப் பணியில் எனக்கு உதவியாக இருந்ததால் இருவரும் சேர்ந்து புத்தகத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோம்.

எனது தாமதத்துக்கு இவைதான் காரணமே தவிர, திட்டமிட்டோ, ஏதோ நோக்கத்துடனோ புத்தகத்தை தாமதித்து வெளியிடவில்லை. அது ஒரு இயல்பான தாமதம்.

புத்தகம் குறிப்பிடாத விஷயங்கள்

"வீரப்பன் - சேசிங் தி பிரிகாண்ட்" என ஆங்கிலத்தில் வெளியான எனது புத்தகத்தில் பதிவு செய்யத் தவறிய முதலாவது விஷயம், "எக்ஸ்" என்ற நபர் யார் என்பதை குறிப்பிடாமல் விட்டது.

அந்த நபர் வீரப்பன் இருக்கும் பகுதியில் இருந்து ஒரு நூறு கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதியில் வசித்தவர். அதற்கு மேல் நான் அவரைப் பற்றி விளக்குவது சரியான நெறியாகவோ நியாயமாகவோ இருக்காது.

ஏனென்றால் அந்த புரிந்துணர்வுடன்தான் எங்கள் தேடுதல் வேட்டையின் இறுதிக்கட்டம் நடந்தது.

இரண்டாவது விஷயம், அதிகம் பயன் இருக்காது என்பதால் வீரப்பன் தேடுதல் வேட்டை தொடர்பான அரசியல் குட்டையை நான் அதிகம் கிளற விரும்பவில்லை.

Getty imagesபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

காரணம், தமிழகத்தில் ஆட்சியில் இருந்து வந்த திமுக, அதிமுக ஆகிய இரு அரசுகளுக்கும் மிகவும் சவாலான வகையில் வீரப்பனின் செயல்பாடு இருந்தது.

திமுக, அதிமுகவுக்கு தலைகுனிவு

இரு கட்சிகளின் தலைமையிலான ஆட்சிகள் நடைபெற்றபோதும், அவற்றை தலைகுனிய வைத்த ஒரு நபராக வீரப்பன் விளங்கினார்.

கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் சிறைப்பிடித்த காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்தவர்கள், அரசு தனது கடமையை சரிவர செய்யத் தவறி விட்டது என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

அடுத்த கட்சி, ஆட்சிக்கு வந்தபோதும் அதே சவாலை எதிர்கொள்ள நேர்ந்தது.

எனவேதான் எனது புத்தகம் ஒரு பரபரப்பாகவும், த்ரில்லர் கதை போலவும் இருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் கவனமாக அதை எழுதினேன்.

வீரப்பனை இயக்கியது யார்?

மேட்டூர் எம்எல்ஏ, அந்தியூர் எம்எல்ஏ, மேலும் ஒரு எம்எல்ஏ என மூவருமே வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

மேலும், நாகப்பா மற்றும் கெளடா ஆகிய அரசியல்வாதிகள் எதிரெதிர் களத்தில் தேர்தலில் நின்றபோது, கொள்ளேகால் மக்களிடம் கெளடாவை ஆதரிக்குமாறு வீரப்பனை கேட்டுக் கொண்டதாகவும் தேர்தல் முடிவில் கெளடா வெற்றி பெற்றதாலும் வீரப்பனுக்கு அதுவரை அளித்து வந்த ஆதரவை தொடர்வதற்கு நாகப்பா தவறினார்.

அதனால் நாகப்பா மீது வீரப்பன் மிகவும் வெறுப்படைந்ததாகவும் எங்களுக்கு பலவிதமான செய்திகள் வந்தன.

Getty imagesபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வீரப்பனை வளர்த்து விட்டதில் முக்கிய பங்கு, அவரால் தனது வழிகாட்டி என்று கருதப்பட்ட சேவி கவுண்டர். இதுபோல, பலரும் வீரப்பனால் பயன் பெற்றுள்ளனர் என்பது உண்மைதான்.

சட்டத்தை உடைக்கும் எந்தவொரு குற்றவாளியும் பலருடைய ஆதரவில்தான் வாழ்ந்தாக வேண்டும். அந்த பாதையில் நான் கவனம் செலுத்தி ஆராய்ச்சியில் ஈடுபடக் கூடிய தன்மையும் தேவையும் எனக்கு எழவில்லை.

"அதிரடிப்படை தலைவர்" என்ற முறையில் எனக்கு வழங்கப்பட்ட பணி, எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நோக்கம், நாங்கள் சந்தித்த தடைகள், அவற்றை எவ்வாறு எதிர்கொண்டோம் என்பது பற்றிதான் நான் கவனம் செலுத்தினேன்.

அதிரடிப்படையினர் சந்தித்த பல பிரச்னைகள் பொதுமக்களுக்குத் தெரியாது. அவர்கள் அட்டூழியம் செய்தார்கள் என்பது போன்ற தோற்றம் ஊடகத்தால் ஏற்படுத்தப்பட்டது.

அதற்கான நான் ஊடகத்தை குறை கூற விரும்பவில்லை. ஊடகத்தின் பூரண ஒத்துழைப்புடன்தான் எங்களால் வீரப்பனை வீழ்த்த முடிந்தது. ஆகவேதான் மற்ற விஷயங்களுக்குள் செல்லாமல் எனக்கு வழங்கப்பட்ட பணியை மட்டுமே செய்தேன்.

மனித உரிமை மீறல்களுக்கு பதில் என்ன?

மனித உரிமைக அமைப்புகள், செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள், அரசு சாரா அமைப்புகள் போன்றவற்றின் ஊகங்களுக்கு முரணாக பேச நான் விரும்பவில்லை.

அவை அவற்றின் கடமையை செய்கின்றன. இல்லாவிட்டால் அரசு இயந்திரங்கள் கடிவாளம் இல்லாமல் செயல்படுவது போல ஆகி விடும். என்னை பொறுத்தவரை, அதிரடிப்படையினர் மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் மனித உரிமைகள் ஆணையம், உயர் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் என முறையாக விசாரணை நடத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

நாங்கள் சட்டத்தை உடைத்தோமா, வளைத்தோமா போன்ற குட்டி பட்டிமன்றங்கள் இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அது பற்றி நான் குறைகூற விரும்பவில்லை. நாங்கள் நடத்தியது ஒரு வெளிப்படையான நடவடிக்கை.

அது பற்றிய பலவிதமான விவாதங்கள் சம்பவம் நடைபெற்ற நாளுக்கு மறுதினமான 2004, அக்டோபர் 19-ஆம் தேதியே பெரிய அளவில் தொடங்கி விட்டது.

bbc

இவ்வளவு நாட்களாக மூன்று மாநில அரசுகளுக்கு தண்ணீர் காட்டிய ஒரு நபரை வீழ்த்தி விட்டோம் என்ற செய்தி வரும்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது எனக்கு பெரிய அளவில் வியப்பை அளிக்கவில்லை.

வீரப்பனை உயிருடனோ அல்லது தவிர்க்க முடியாத நிலையில் அவரை பிடிக்கவோ வேண்டும் என எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அரசின் கருவியாக செயல்பட்டு எங்களுக்கு இடப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்தோம்.

வீரப்பன் வழிபாடு

அதுபோல் நடக்கக் கூடாது என எதிர்பார்க்கிறேன். அதுபோன்ற தீய சக்திகளோ அல்லது மொழி அல்லது நாடு அல்லது இயக்கத்தின் பெயரால் அரசியலில் குற்றவாளிகள் கலக்கும் நிலை வரவே கூடாது.

எனவே, தான் சட்டத்தின் கைகளில் பிடிபட்டு விடக் கூடாது என்ற எண்ணத்துடன் மாறன் போன்ற குழுவினருடன் வீரப்பன் ஒரு புரிந்துணர்வுடன் செயல்பட்டார்.

மாறன் குழுவினருக்கு பயிற்சிக்காக ஒரு களம் தேவைப்பட்டது. அப்போது வீரப்பனிடம் பணம் இல்லை. அதனால் தான் ஆதிக்கம் செலுத்தி காட்டுப் பகுதியில் ஒரு கொடுக்கல் வாங்கல் முறை என்ற ஏற்பாட்டில் மாறன் குழுவினருக்கு பயிற்சிக் களத்துக்கான வாய்ப்பை வீரப்பன் ஏற்படுத்திக் கொடுத்தார்.

அந்த நேரத்தில்தான் சே குவேரா படம் பொறித்த தொப்பியை அணிந்து கொண்டு தமிழ் கொடியை ஏற்றுவது போல வீரப்பன் காட்சி கொடுத்த படங்கள் வெளியாகின. வீரப்பன் நினைவிடத்தை சிலர் வழிபடுவது போலவே, மத்திய பிரதேசத்தில் உள்ள சாம்பலில் ஒரு கொள்ளைக்காரருக்கு கோயிலை எழுப்பியுள்ளதையும் நீங்கள் பார்க்கலாம்.

1940 முதல் 1970-ஆம் ஆண்டுகள்வரை ஆதிக்கம் செலுத்தி வந்த அந்த கும்பலின் தலைவருக்கு கோயில் எழுப்பியிருந்தனர். கொலம்பியாவில் கூட எஸ்கோபார் என்ற போதை கடத்தல் மன்னன் ஒருவர் இருந்தார்.

அவர் மறைந்த பிறகு அவருக்கு பெரிய வழிபாட்டுத் தலமே அமைத்தனர்.

எனவே, காவல்துறையையோ அரசையோ யார் எதிர்த்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பொதுவாகவே ஒரு சிலர் மத்தியில் ஆதரவு காணப்படுவது இயல்புதான்.

நம்மால் செய்ய முடியாததை இந்த நபர் செய்கிறாரே என்ற ஆர்வத்தில் அவரது செயல்பாட்டால் ஏமாறக் கூடிய சிலர் இருக்கவே செய்கின்றனர்.

அவர்கள் பற்றி எல்லாம் கருத்து கூற விரும்பவில்லை. அவர்கள் மீது எனக்கு பெரிய வியப்பு ஒன்றும் ஏற்படவில்லை.

என்கவுன்ட்டர் இரவில் நடந்தது என்ன?

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டபோது முதல்வரின் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் இருந்தார்.

சம்பவம் நடந்த போது கிட்டத்தட்ட இரவு 11.10 மணி ஆகியிருந்தது. எனது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது. படையின் அதிகாரி கண்ணனின் செல்போன் நீங்கலாக மற்ற அனைவரது செல்போன்களும் அணைக்கப்பட்டிருந்தன.

அவரது செல்போனை எடுத்துக் கொண்டு அருகே இருந்த ஐந்து அறைகள் கொண்ட ஒரு பள்ளியின் படிக்கட்டில் ஏறி ஒரு அறைக்குச் சென்று அங்கிருந்தபடி முதல்வர் ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள முயன்றேன்.

bbc

முதல்வருடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன் என்று ஷீலா பாலகிருஷ்ணனிடம் தெரிவித்தேன்.

ஆனால், அவர் ஓய்வெடுக்கச் சென்று விட்டதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நான் கூறும் விஷயத்தை கேட்டால் அவர் எழுந்து மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்று நான் கூறினேன்.

உடனடியாக முதல்வருடன் எனக்கு இணைப்பு வழங்கப்பட்டதும், எனது தகவலை சுருக்கமாக தெரிவித்தேன்.

அப்போது வீரப்பன் உள்ளிட்டோரின் உயிர் பிரிந்து விட்ட அதிகாரப்பூர்வ தகவல் கூட இல்லாத நிலையில், அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் சக அதிகாரிகளும் வீரர்களும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

எனது தகவலை கேட்ட முதல்வர், நீங்கள் எல்லாம் நலமாக இருக்கிறீர்களா என்றும், முதல்வராக பணியாற்றும் காலத்தில் எனக்கு நிறைவைத் தந்த தகவல் இது என்று மட்டும் கூறினார்.

அன்றைய இரவு, என்கவுன்ட்டரில் சுடப்பட்டது நான்கு பேர் என்பதும் அவர்கள் அடிபட்டார்கள் என்பதும்தான் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு முதல் கட்டமாக தெரிவிக்கப்பட்டது.

வீரப்பன் உள்ளிட்டோர் இறந்து விட்டார்கள் என்ற விவரம் முதல்வர் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டபோது எனக்கும் உறுதியாகத் தெரியவில்லை. அதனால் நானும் அதுபற்றி அவரிடம் உடனடியாகக் கூறவில்லை.

எங்கள் இருவரிடையே மிகவும் சுருக்கமாகவே உரையாடல் நடைபெற்றது. பின்னர் நிகழ்வுகள் உறுதிப்படுத்தப்பட்டதும், தமிழக அதிரடிப்படையினர் மட்டுமின்றி கர்நாடக அதிரடிப்படையினருக்கும் சேர்த்து முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் கர்நாடக அதிரடிப்படையினர் இல்லாவிட்டாலும், நாங்கள் ஐந்து குழுக்களாக பிரிந்து அன்றைய தினம் வீரப்பனை பிடிக்க காத்திருந்தோம்.

நாங்கள் இரண்டு குழுக்களாகவும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் மூன்று குழுக்களாகவும் பிரிந்து அன்றைய இரவு காத்திருந்தனர்.

சம்பவ நாள் இரவில் என்ன நடந்தது என்பதை ஏற்கெனவே நான் விளக்கியிருந்தாலும், அதில் பல கேள்விகள் இயல்பாகவே பலருக்கும் எழுவது இயல்புதான்.

இவ்வளவு காலமாக, காவல்துறையினரை குறி வைத்து வீரப்பன் தாக்கியபோதும், அதன் விளைவாக நாங்கள் அடிபட்டபோதும் பொதுமக்கள் 124 பேரும் 44 வனத்துறையினரும் போலீசாரும் அவரால் கொல்லப்பட்ட போதும், வீரப்பனால் எவ்வாறு அப்படி செயல்பட முடிந்தது என்ற கேள்வி மக்கள் மனதில் நீடித்து வந்தது.

ஆனால், எங்களுக்கு கடைசி முறையாக வீரப்பனை பிடிக்க கிடைத்த அந்த வாய்ப்பு கனிந்தபோது அதை மிகவும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டோம்.

அன்றைய தினம் (2012, அக்டோபர் 18) கை தூக்கி சரண் அடைய வீரப்பன் முனைந்திருந்தால் நிச்சயம் அவரை நாங்கள் ஏற்றுக் கொண்டிருந்திருப்போம் என்றுதான் நினைக்கிறேன்.

அரசியலுக்கு ஏன் வரவில்லை?

காவல் பணி மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு, ஒரு வேட்கையோடு அந்தப் பணியில்தான் இருக்க வேண்டும் என கருதி ஒரு வேள்வி போல 1975-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இதிலேயே நீடித்து வருகிறேன். அரசியல் எனக்கு தெரிந்த பணி அல்ல.

காவல்துறை என்பது உள்நாட்டு பாதுகாவலர்களாக இருப்பவர்கள். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் எல்லையில் உள்ள காவலர்களுக்கும் உள்நாட்டில் இருக்கும் காவலர்களுக்கும் இடையே வேறுபாடில்லாத நிலை உள்ளது.

பிரான்ஸ், பெல்ஜியம், அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்படும் தாக்கங்களின் விளைவு இங்கும் எதிரொலிக்கக் கூடிய நிலை தற்போது நிலவுகிறது.

அதனால் பாரம்பரிய முறையில் எல்லையில் இருக்கும் வீரர்கள் ஆற்றி வரும் பாதுகாப்புப் பணியை நாட்டுக்கு உள்ளேயும் செய்ய வேண்டிய பொறுப்பு காவலர்களுக்கு உள்ளது. காவல் பணி என்பது எளிதானது அல்ல.

bbc

பல்வேறு இடர்பாடுகள், சிக்கல்கள், பிரச்னைகள் நிறைந்த அந்தப் பணியை சரியாக செய்து முடிக்கும்போது, உங்களுக்குள் மிகப் பெரிய மன நிறைவு ஏற்படும்.

வளர்ச்சி என்பது சரியான பாதுகாப்பு இருந்தால் மட்டுமே ஏற்படும். அத்தகைய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றுதான் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் எங்கு வேண்டுமானாலும் அச்சமின்றி சென்று வரக் கூடிய உணர்வை காவல்துறையால் மட்டுமே கொடுக்க முடியும். இது ஒரு புனிதமான தொழில்.

தேசப்பற்றை நிரூபிக்க வேறு எதிலும் சேராமல் காவல்துறையில் சேர்ந்தாலே போதும், எல்லாவித தேசப் பொறுப்பும் அதிலேயே நிறைந்துள்ளது.

 

பணி கடினமாக இருந்தாலும் மதிப்பும் மரியாதையும் இந்தப் பணியில் மட்டுமே கிடைக்கும்.

இந்திய காவல் பணி மட்டுமின்றி மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை, ஆகியவற்றில் உதவி ஆய்வாளர் பதவி மட்டுமின்றி காவலர் போன்ற பொறுப்புகளிலும் மன நிறைவைத் தரும் பணியை ஆற்ற முடியும்.

நீங்கள் எந்த நிலையில் பணியாற்றுகிறீர்கள் என்பது காவல்துறையில் முக்கியமில்லை.

உங்கள் பணியை எத்தகைய தரத்துடன் செய்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது.

உங்களைச் சுற்றி தவறுகள் நடந்தாலும் உங்களுக்குள் நல்லவராக இருந்தால் நம்பிக்கையுடன் உங்கள் பணியை வெற்றிகரமாக செய்ய முடியும்.

வீரப்பன் கைரேகை பதிவு செய்யாதது ஏன்?

எவ்வளவு சிரமப்பட்டு வீரப்பனை வீழ்த்தினோம் என்பது பற்றித்தான் எனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

நான்தான் தலைமையானவன் என்ற தொணியில் அல்லாது காவல் பணியில் அனைவருக்கும் தலைமைப் பண்பு இருக்க வேண்டிய அவசியத்தை விளக்கும் விதமாக புத்தகம் எழுதப்பட்டது.

எனக்கு முன்பு வீரப்பன் தேடுதல் வேட்டையில் திறம்பட பணியாற்றியவரும் வீரப்பன் கூட்டத்தில் பலரை அழித்தவருமான கர்நாடகத்தைச் சேர்ந்த உயரதிகாரி சங்கர் பித்ரி, வால்டர் தேவாரம், சஞ்சய் அரோரா போன்ற பலரும் மிகவும் முதிர்ச்சியாக தேடுதல் வேட்டையைக் கையாண்டனர்.

  •  

150-க்கும் அதிகமான வீரப்பன் குழுவினரை சுருங்கச் செய்ததில் அவர்கள் வழங்கிய பங்களிப்பின் தொடர்ச்சியாக வீரப்பன் சகாப்தத்தை முடித்து வைத்தபோது அவருடன் நான்கு பேர் மட்டுமே இருந்தனர்.

முந்தைய காலகட்டத்தில் எதை செய்ய முடியவில்லையோ அதை அறிந்து உளவு சேகரிப்பை மேம்படுத்தி வீரப்பனை காட்டை விட்டு வெளியே வரச் செய்து அவரது சகாப்தம் முடிவடைய உதவியாக மட்டுமே எனது பணி அமைந்தது.

தமிழில் புத்தகம் எப்போது?

ஹிந்தி, மராத்தி, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் எனது புத்தகத்தை மொழிபெயர்த்து வெளியிடுவது குறித்து பேச்சு நடத்தி வருகிறேன்.

அவ்வாறு வெளியிடும்போது கூடுதல் விவரங்களை சேர்க்க முடியுமா என்பது பற்றி சிந்தித்துப் பார்க்கிறேன்.

கூடுதல் தகவல்கள் என்றால் அது பற்றிய ஆராய்ச்சியும் நிறையவே தேவை. பரபரப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஏதாவது சேர்க்க முடியுமா என்பது பற்றி யோசிக்கிறேன்" என்று தமது பேட்டியில் விஜய்குமார் கூறியிருக்கிறார்.

http://www.bbc.com/tamil/india-41706082

 

பிபிசி தமிழ் ஃபேஸ்புக் நேரலையில் வீரப்பன் பற்றி விஜய்குமார், ஐபிஎஸ் (ஓய்வு)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.