Jump to content

அதிகாரப் பகிர்வு மக்களுக்கே அன்றி அரசியல்வாதிகளுக்கு அல்ல – வவுனியாவில் – ஜனாதிபதி


Recommended Posts

அதிகாரப் பகிர்வு மக்களுக்கே அன்றி அரசியல்வாதிகளுக்கு அல்ல – வவுனியாவில் – ஜனாதிபதி

maithri-1.jpg

அதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல, அது மக்களை பலப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவேயாகும் என்று ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன   தெரிவித்தார்.

அபிவிருத்தியின் நன்மைகளை அனைவருக்கும் பெற்றுக்கொடுத்து சமமான வசதிகளுடன் கூடிய நியாயமானதொரு சமூகத்தில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே அதிகாரப் பகிர்வின் நோக்கமென குறிப்பிட்ட ஜனாதிபதி, அது ஒருபோதும் நாட்டை பிளவுபடுத்துகின்ற, துண்டாடுகின்ற நிகழ்ச்சித்திட்டமாக இருக்கக் கூடாதென்றும் தெரிவித்தார்.

இன்று (21) முற்பகல் வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டுக்குத் தேவையான அபிவிருத்தியையும் அரசியல் சீர்திருத்தத்ததையும் மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்றபோது பல்வேறு எதிர்ப்புகள் உருவாகி வருவதாக தெரிவித்தார்.

நாட்டுக்குத் தேவையான அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொள்கின்றபோது அதற்கெதிராக செயற்படுகின்ற அனைவரும் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளுக்கான உண்மையான யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்றும் இன்று இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காது விட்டால் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு அவர்கள் அனைவரும் வகைகூற வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு எதிராக விமர்சனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கும் எவரிடமும் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்த எந்தவொரு முன்மொழிவும் கிடையாதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் ஏற்படுத்த வேண்டிய அரசியல் சீர்திருத்தம் குறித்த முன்மொழிவுகளை முன் வைக்குமாறு தான் அவர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் உத்தேச வரைபு கூட இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதுடன், அனைவரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகளை பெற்று உரையாடலுக்கு உட்படுத்தி பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் நாட்டின் ஒருமைப்பாடு, பௌத்த சமயத்திற்குரிய இடம், நாட்டில் உள்ள அனைத்து மக்கள் மத்தியிலான நல்லிணக்கம் மற்றும் சமத்துவமான சமூகம் குறித்த தெளிவான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்படாத விடயங்களை சுட்டிக்காட்டி சிலர் மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று சில பத்திரிகைககள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மக்களை பிழையாக வழிநடத்தும் போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் நாட்டுக்காக தமது பொறுப்புக்கள் என்னவென்று விளங்கி செயற்படுமாறு தான் அவர்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்டத்தில் நிரந்தர காணி உறுதிகள் இல்லாத மக்களுக்கு 5000 காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தல், இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்குதல், தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் தெங்கு அபிவிருத்தி சபையினால் தென்னங் கன்றுகளை வழங்குதல், வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்குத் தேவையான இரண்டு பௌசர்களை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, எஸ்.பி.நாவின்ன, ரிஷாட் பதுர்தீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

http://globaltamilnews.net/archives/46293

Link to comment
Share on other sites

அதிகாரப்பகிர்வு மக்களுக்கே அன்றி அரசியல்வாதிகளுக்கு அல்ல : ஜனாதிபதி

 

 

அதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல, அது மக்களை பலப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவேயாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

my3.jpg

அபிவிருத்தியின் நன்மைகளை அனைவருக்கும் பெற்றுக்கொடுத்து சமமான வசதிகளுடன் கூடிய நியாயமானதொரு சமூகத்தில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே அதிகாரப்பகிர்வின் நோக்கமென குறிப்பிட்ட ஜனாதிபதி, அது ஒருபோதும் நாட்டை பிளவுபடுத்துகின்ற,துண்டாடுகின்ற நிகழ்ச்சித்திட்டமாக இருக்கக் கூடாதென்றும் தெரிவித்தார்.

இன்று (21) முற்பகல் வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டுக்குத் தேவையான அபிவிருத்தியையும் அரசியல் சீர்திருத்தத்ததையும் மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்றபோது பல்வேறு எதிர்ப்புகள் உருவாகி வருவதாக தெரிவித்தார்.

நாட்டுக்குத் தேவையான அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொள்கின்றபோது அதற்கெதிராக செயற்படுகின்ற அனைவரும் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளுக்கான உண்மையான யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்றும் இன்று இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காது விட்டால் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு அவர்கள் அனைவரும் வகைகூற வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு எதிராக விமர்சனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கும் எவரிடமும் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்த எந்தவொரு முன்மொழிவும் கிடையாதெனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் ஏற்படுத்த வேண்டிய அரசியல் சீர்திருத்தம் குறித்த முன்மொழிவுகளை முன் வைக்குமாறு தான் அவர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் உத்தேச வரைபு கூட இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதுடன், அனைவரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகளை பெற்று உரையாடலுக்கு உட்படுத்தி பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் நாட்டின் ஒருமைப்பாடு, பௌத்த சமயத்திற்குரிய இடம், நாட்டில் உள்ள அனைத்து மக்கள் மத்தியிலான நல்லிணக்கம் மற்றும் சமத்துவமான சமூகம் குறித்த தெளிவான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி

தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்படாத விடயங்களை சுட்டிக்காட்டி சிலர் மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று சில பத்திரிகைககள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மக்களை பிழையாக வழிநடத்தும் போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் நாட்டுக்காக தமது பொறுப்புக்கள் என்னவென்று விளங்கி செயற்படுமாறு தான் அவர்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி மக்கள் சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 63 பிரதேச நிகழ்ச்சித்திட்டங்களை நிறைவு செய்து தேசிய ரீதியாக இடம்பெறும் மூன்றாவது தேசிய நிகழ்ச்சித்திட்டம் வவுனியா மாவட்டத்தை மைமயப்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் பொலன்னறுவை மற்றும் காலி மாவட்டங்களில் ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி மக்கள் சேவை நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அடுத்த நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைபெறும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்டத்தில் நிரந்தர காணி உறுதிகள் இல்லாத மக்களுக்கு 5000 காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தல், இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்குதல், தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் தெங்கு அபிவிருத்தி சபையினால் தென்னங் கன்றுகளை வழங்குதல், வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்குத் தேவையான இரண்டு பௌசர்களை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை நடைபெற்ற வளாகத்தை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், இதன்போது முன்வைக்கப்பட்ட மக்கள் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, எஸ்.பி.நாவின்ன, ரிஷாட் பதுர்தீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்ரியும் ரணிலும் வவுனியாவில் நிலமற்ற 5000 பேருக்கு காணிகளின் உறுதிப்பத்திரங்கள் வழங்கினர்.

இன்று வவுனியா சைவ பிரகாச மகளிர் வித்தியாலத்தில் இடம் பெற்ற வைபத்தில் கலந்து கொண்ட அதிபர் மைத்ரி மற்றும் பிரதமர் ரணில் நிலமற்ற 5000 மக்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களை வழங்கினார்.

அங்கு அதிபர் பேசும் போது அதிகார பகிர்வு அரசியல்வாதிகளுக்கு வேண்டிய விதத்தில் அல்ல மக்களின் தேவைகளுக்காகவே பகிர்ந்தளிக்கப்படுகிறது. இன்றை தேசிய ஊடகங்களில் உண்மையை விட பொய் பரப்புரைகளை கொண்டு வருகிறார்கள். நாங்கள் புதிய அரசியலமைப்பொன்றை இன்னும் உருவாக்கவே இல்லை. அனைவராலும் பெற்ற அறிக்கைகளை முன்வைத்துள்ளோம். இவை அரசியல் தரப்புகளால் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளை வைத்து விவாதம் ஒன்றில் ஈடுபட உள்ளோம். இவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து - விவாதம் செய்து நல்லவறை எடுத்துக் கொண்டு தேவையற்றவற்றை நீக்க முடியும். அதுவரை பொய்யான பேய்களை உலவ விடாதீர்கள் என்றார்.

இவ்விழாவில் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டனர்.

safe_image.php?d=AQAS0Vcg7l78k5pI&w=476&
Link to comment
Share on other sites

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்றை தேசிய ஊடகங்களில் உண்மையை விட பொய் பரப்புரைகளை கொண்டு வருகிறார்கள். நாங்கள் புதிய அரசியலமைப்பொன்றை இன்னும் உருவாக்கவே இல்லை. அதுவரை பொய்யான பேய்களை உலவ விடாதீர்கள் என்றார். :shocked:

 

இவ்விழாவில் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டனர். :grin:

safe_image.php?d=AQAS0Vcg7l78k5pI&w=476&

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

safe_image.php?d=AQAS0Vcg7l78k5pI&w=476&

 

ஈழஉருவைக்கொடுப்பதால் ஒன்றாக்கிவிடமுடியாதையா. ஈழமக்களுக்குத் தேவையான அடிப்படை உரிமைகளை ஏற்றால் மட்டுமே ஒன்றாக்க முடியும் என்பதை எப்போது உணர்வீர்களோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nochchi said:

 ஈழமக்களுக்குத் தேவையான அடிப்படை உரிமைகளை ஏற்றால் மட்டுமே ஒன்றாக்க முடியும் என்பதை எப்போது உணர்வீர்களோ!

ம்ம் காலம் தான் பதில சொல்ல வேணும் நாமும் கேட்கிறோம் அவங்களும்  அதே நிலையில் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.