Jump to content

மரணச் சடங்கு செலவு 90 மில்லியன் டொலர்!


Recommended Posts

மரணச் சடங்கு செலவு 90 மில்லியன் டொலர்!

தாய்லாந்தின் காலஞ்சென்ற முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் மரணச் சடங்குகளை சுமார் 90 மில்லியன் டொலர் - இலங்கை நாணய மதிப்பில் சுமார் 137 கோடி - செலவில் நடத்துவதற்கு அந்நாட்டு அரசு தயாராகிவருகிறது.

14_Thailand.jpg

மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி காலமானார். எனினும், அவரது உடல் அந்நாட்டு மன்னர்குல வழக்கப்படி ஓராண்டு காலத்தின் பின் எரித்துப் பின் புதைக்கப்படவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி அவரது உடல் எரிக்கப்படவும், மறுநாள் 27ஆம் திகதி அவரது அஸ்தி புதைக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டுகாலமாக, மன்னரின் இறுதிக் கிரியைகளுக்கான திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஐந்து நாள் நிகழ்வாக நடக்கவுள்ள இந்த இறுதிக் கிரியைகளுக்காக, ஆடம்பர அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, சுமார் 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவரது சாம்பல் புதைக்கப்படவுள்ள இடத்தில் தங்கத்தில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு பொருத்தப்படவுள்ளன.

தாய்லாந்தின் அயல் நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட தலைவர்கள், அரசியல்வாதிகள் உட்பட சுமார் ஐந்து இலட்சம் பேர் இந்த இறுதி நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலஞ்சென்ற மன்னர் ஏறக்குறைய ஆறு தசாப்தங்களாக தாய்லாந்தின் மன்னராக வீற்றிருந்தவர். தாய்லாந்தின் பெரும்பான்மையான மக்களுக்கு இன்னும் அவர் தெய்வத்துக்கு நிகரானவராகவே நோக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/26112

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.