Jump to content

போராட்டத்தின் அவசியம்


Recommended Posts

போராட்டத்தின் அவசியம்

 

அர­சியல் உரிமை சார்ந்த பிரச்­சி­னைகள் கார­ண­மா­கவே, இந்த நாட்டில் தமிழ் மக்கள் போரா­டு­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டார்கள். போராட்டம் என்­பது அவர்கள் விரும்பி ஏற்­றுக்­கொண்ட ஒரு விட­ய­மல்ல. நாட்டில் உள்ள சக இனத்­த­வர்­க­ளுடன் சம­நி­லை­யி­லான உரி­மை­க­ளோடு, ஐக்­கி­ய­மா­கவும், நல்­லி­ணக்­கத்­து­டனும் வாழ வேண்டும் என்­பதே அவர்­க­ளு­டைய ஆழ் மன விருப்­ப­மாகும்.

அர­சியல் உரிமை சார்ந்த பிரச்­சி­னை­க­ளா­யி­னும்­சரி, அத­னை­யொட்டி கிளை பரப்­பி­யுள்ள அடிப்­படை உரி­மைகள், அர­சியல் பிரச்­சி­னைகள், அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளா­யி­னும்­சரி, தமிழ் மக்கள் முகம் கொடுத்­துள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­ப­ட­வில்லை என்­பதே இந்த நாட்டின் அர­சியல் வர­லாறு. 

மாறி மாறி ஆட்­சிக்கு வந்த பேரி­ன­வாத அர­சாங்­கங்கள், தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை அவர்­க­ளு­டைய அர­சியல் வெற்­றிக்கும், அர­சியல் இருப்­புக்கும், அதி­கார சுக­போ­கங்­க­ளுக்கும் மட்­டுமே பயன்­ப­டுத்திக் கொண்­டன. அந்த மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைத்து அவர்­க­ளுடன் நிரந்­த­ர­மான நல்­லி­ணக்­கத்­தோடு ஐக்­கி­ய­மாக வாழ்­வ­தற்கு இந்த அர­சாங்­கங்கள் இதய சுத்­தி­யுடன் முயற்­சிக்­க­வில்லை. 

ஒரு கட்சி அர­சாங்­க­மா­கவும், மறு கட்சி எதிர்க்­கட்­சி­யா­கவும்  மாறி மாறி செயற்­பட்டு வரு­கின்ற இரண்டு பிர­தான தேசிய அர­சியல் கட்­சி­க­ளுமே பேரி­ன­வா­தத்­திலும், அர­சியல் முலாம் பூசிய பௌத்த மத­மோ­கத்­திலும் மீள முடி­யாத வகையில் மூழ்­கி­யுள்­ளன. இதனால், இந்த நாட்டின் தேசிய சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய அர­சியல் உரி­மைகள், அர­சியல் நலன்கள், அர­சியல் ரீதி­யான பிரச்­சி­னைகள் என்­ப­வற்றை இன­வாத, மத­வாத கண்­ணோட்­டத்­து­ட­னேயே இந்­தக்­கட்­சிகள் நோக்கிச் செயற்­பட்டு வரு­கின்­றன.

 செவிடன் காதில் ஊதிய சங்கு

ஒரு கட்சி ஆட்சி நடத்­தும்­போது, எதிர்க்­கட்­சி­யாக உள்ள மற்ற கட்சி, சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண மேற்­கொள்­கின்ற முயற்­சி­க­ளுக்கு இன­வா­தத்தைக் கிளப்பி முட்­டுக்­கட்டை போடு­வதை, இதன் கார­ண­மா­கவே வழ­மை­யான செயற்­பா­டாகக் காண முடி­கின்­றது. 

எனினும், இரண்டு தேசிய அர­சியல் கட்­சி­களும் நல்­லாட்சி அர­சாங்கம் என்ற பெயரில் இணைந்து இப்­போ­தைய அர­சாங்­கத்தை அமைத்­தி­ருப்­பதன் மூலம், வழ­மை­யான தமது ஆட்சி முறை போக்கில்  இருந்து வேறு­பட்­டி­ருக்­கின்­றன. 

எதிரும், புதி­ரு­மான செயற்­பா­டு­களைக் கொண்ட இரண்டு கட்­சி­களும் இணைந்து ஆட்சி அமைத்­துள்­ளதன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண முடியும், ஏனைய பிரச்­சி­னை­களையும் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நம்­பப்­பட்­டது.  இரண்டு தேசிய அர­சியல் கட்­சி­களும் இணைந்து ஆட்சி அமைத்­தி­ருப்­பது, இதற்கு அர­சியல் ரீதி­யாகக் கிடைத்­துள்ள, கிடைத்­தற்­க­ரிய நல்­ல­தொரு வாய்ப்­பா­கவே கரு­தப்­பட்­டது. 

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், இதில் மிக ஆழ­மான  நம்­பிக்கை கொண்­டி­ருந்தார். அதன் கார­ண­மா­கவே, 2015 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அடுத்த வரு­டமே – 2016 ஆம் ஆண்டு இறு­திக்குள் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­படும் என்று வெளிப்­ப­டை­யாகக் கூறி­யி­ருந்தார். அது மட்­டு­மல்­லாமல், அந்த நம்­பிக்­கையை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளி­டத்­திலும், தமிழ் மக்கள் மத்­தி­யிலும் அர­சியல் ரீதி­யாக வேரூன்றச் செய்­தி­ருந்தார். ஆனால் 2016 ஆம் ஆண்டு  கடந்து, 2017 ஆம் ஆண்டு முடிவை நெருங்­கி­யி­ருக்­கின்ற நிலை­யிலும், அந்த எதிர்­பார்ப்பு  நிறை­வே­ற­வில்லை. 

ஆனால் நல்­லாட்சி அர­சாங்­கத்தை அமைத்­துள்ள, எதிரும் புதி­ரு­மான போக்கைக் கொண்ட இரண்டு தேசிய கட்­சி­க­ளுமே, அர­சியல் தீர்வு உட்­பட பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும்  விட­யத்தில் அர­சியல் ரீதி­யாக உற்­சா­கத்தைக் காட்­ட­வில்லை. துடிப்­புடன் செயற்­ப­டு­வ­தற்கு முன்­வ­ர­வில்லை. மாறாக மந்த கதி­யி­லான போக்கே கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது.  இதனால், பாதிக்­கப்­பட்ட மக்­களின் பல்­வேறு வேதனை குரல்­களும், அந்த மக்­களின் நியா­ய­மான பல கோரிக்­கை­களும் செவிடன் காதில் ஊதிய சங்­கா­கவே இந்த இரண்டு கட்சி அர­சாங்­கத்­திடம் எதி­ரொ­லித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. 

போராட்ட அர­சியல் போக்கு 

இதனால் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்கள், பெரும் ஏமாற்­றத்­திற்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றார்கள். இந்த ஏமாற்­றமே, தாங்­களே உரு­வாக்­கிய அர­சாங்­கத்­திற்கு எதி­ராக வீதி­களில் இறங்கி போரா­டு­வ­தற்கு அவர்­களைத் தூண்­டி­யி­ருக்­கின்­றது. இரா­ணு­வத்தின் பிடியில் சிக்­கி­யுள்ள தமது சட்­ட­ரீ­தி­யான உரித்­து­டைய காணி­களை மீட்­ப­தற்­காக அவர்கள் வீதியில் இறங்­கி­யி­ருக்­கின்­றார்கள். அதே­போன்று காணாமல் ஆக்­கப்பட்டவர்­க­ளுக்கு பொறுப்பு கூறு­மாறு வலி­யு­றுத்தி மற்­று­மொரு போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. நீண்­ட­கா­ல­மாக சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான போராட்டம் இப்­போது வீச்­சுடன் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்தப் போராட்­டங்கள் அனைத்­திலும் ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட வழி­மு­றை­களைக் காண முடி­ய­வில்லை. அர­சியல் தலை­மை­களை எடுத்­தெ­றிந்­துள்ள பாதிக்­கப்­பட்ட மக்கள், தங்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தாங்­களே தீர்வு காண முற்­பட்­டுள்ள தீவி­ர­மா­னதோர் அர­சியல் போக்கே, இதில் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் தலை­மை­யாகக் கரு­தப்­ப­டு­கின்ற போதிலும், மக்­க­ளு­டைய எரியும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய வலு­வான செயன்­மு­றை­களை முன்­னெ­டுப்­ப­தி­லும்­பார்க்க, நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குப் பாதிப்பு ஏற்­ப­டுத்­தி­விடக் கூடாது என்­ப­தி­லேயே அது, கண்ணும் கருத்­து­மாகச் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. 

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு உறு­து­ணை­யாக இருந்து ஆத­ர­வ­ளிக்­கின்ற தலை­மையின் இந்தப் போக்கு, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களை வெறுப்­ப­டையச் செய்­தி­ருக்­கின்­றது. அந்தக் கட்­சி­களில் ஒன்­றா­கிய ஈ,பி,­ஆர்­,எல்,எவ், மாத்­தி­ரமே அர­சியல் ரீதி­யான இந்தக் கசப்­பு­ணர்வை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றது. ஏனைய கட்­சிகள் பட்டும் படாத, தொட்டும் தொடாத ஒரு போக்கைக் கடைப்­பி­டித்து வரு­கின்­றன. கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யா­கிய தமி­ழ­ர­சுக்­கட்­சியைச் சேர்ந்த முக்­கி­யஸ்­தர்கள் மத்­தி­யிலும் இந்த கசப்­பான உணர்வு காணப்­ப­டு­கின்ற போதிலும், தலை­மையின் சீற்­றத்­திற்கு அஞ்­சியும் தமது அர­சியல் எதிர்­கா­லத்தைக் கருத்திற் கொண்டும் அவர்கள் அதனை மென்று விழுங்கிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த நிலை­மை­களின் அடிப்­ப­டை­யி­லேயே, தமிழ் மக்­க­ளுக்­கான ஒரு மாற்று அர­சியல் தலை­மைக்­கான சிந்­த­னையும், அதனைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் துளிர்­விட்­டி­ருக்­கின்­றன. 

மாற்­றுத்­த­லை­மைக்­கான செயற்­பா­டுகள் ஒரு­பு­ற­மி­ருக்க, செயல்­வ­லி­மை­யற்ற அர­சியல் தலை­மைத்­து­வத்­தினால் ஏற்­பட்­டுள்ள வெற்­றி­டத்தை நிரப்­பு­வ­தற்கு சிவில் அமைப்­புக்­களும் பொது அமைப்­புக்­களும் முற்­பட்­டி­ருக்­கின்ற ஓர் அர­சியல் போக்கு தலை­யெ­டுத்­துள்­ளது. தாங்­களே தங்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு முற்­பட்­டுள்ள பாதிக்­கப்­பட்ட மக்­களின் போராட்­டத்­திற்கு இது வலு சேர்த்­தி­ருப்­ப­தையும் காண முடி­கின்­றது. 

குறிப்­பாக வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் விசா­ரணை செய்­யப்­பட்டு வந்த மூன்று அர­சியல் கைதி­களின் வழக்­கு­களை அனு­ரா­த­ர­புரம் மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றிய சட்­டமா அதி­பரின் நட­வ­டிக்­கையை எதிர்த்து உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் குதித்­தி­ருந்த அர­சியல் கைதி­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்தும், தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதிகள் அனை­வ­ரையும் நிபந்­த­னை­யின்றி விடு­தலை செய்ய வேண்டும் என கோரியும் மாகாணம் தழு­விய அளவில் வடக்கில் நடத்­தப்­பட்ட கடை­ய­டைப்பு, அதனைத் தொடர்ந்து இடம்­பெற்ற கறுப்­புக்­கொடி போராட்­டமும், இந்த புதிய அர­சியல் போக்கை வெளிச்சம் போட்டு காட்­டி­யி­ருக்­கின்­றது.

அழுத்தம் கொடுப்­ப­தற்­கான போராட்டம்

அது மட்­டு­மல்­லாமல், அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­காக யாழ்ப்­பா­ணத்தில் நடத்­தப்­பட்ட கறுப்­புக்­கொடி போராட்டம், தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் போராட்ட வழி­மு­றைகள் குறித்து  ஆழ்ந்து சிந்­திக்கத் தூண்­டி­யி­ருக்­கின்­றது. 

அர­சியல் கைதி­களின் விடு­தலை

பொது­வாக அரச தலை­வ­ரா­கிய ஜனா­தி­ப­தியின் கைகளில் குறிப்­பாக அவ­ரு­டைய தீர்­மா­னத்­தி­லேயே தங்­கி­யி­ருப்­ப­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. நிறை­வேற்று அதி­காரம் கொண்­ட­வ­ரா­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால நினைத்தால், அர­சியல் கைதிகள் அனை­வ­ரையும் பொது­மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்ய முடியும் என்­பது அநே­கரின் எதிர்­பார்ப்பு. 

முன்­னைய அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருந்­த­போது, தன்னைக் கொலை செய்­வ­தற்கு சதித்­திட்டம் தீட்­டினார் என்று சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்­டி­ருந்த முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­ன­ரான சிவ­ராஜா ஜெனிபன் என்ற இளை­ஞனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­தி­ருந்தார். ஜனா­தி­பதி பத­வியில் தனது ஒரு வருடப் பூர்த்­தியை முன்­னிட்டு இடம்­பெற்ற வைபவம் ஒன்றில் இந்த சம்­பவம் நடை­பெற்­றி­ருந்­தது. 

அத்­துடன் முன்­னைய அர­சாங்­கத்தில் நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­ப­தி­யாக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன இரா­ணு­வத்தின் பிடியில் இருந்த முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­க­ளான 12 ஆயிரம் பேரை மன்­னித்து, இரா­ணுவ புனர்­வாழ்வுப் பயிற்­சியின் பின்னர் விடு­தலை செய்­தி­ருந்தார். இவற்றை முன்­னு­தா­ர­ண­மாகக் கொண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தற்­போது சிறைச்­சா­லை­களில் உள்ள 132 அர­சியல் கைதி­க­ளையும் விடு­தலை செய்ய வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தும் வகையில் அவ­ருக்கு எதி­ராகக் கறுப்­புக்­கொடி ஏந்தி யாழ்ப்­பா­ணத்தில் போராட்டம் நடத்­தப்­பட்­டது. இலங்கை தமிழ்­மொ­ழித்­தின விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்­வ­தற்­காக யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தந்­த­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ராக இந்த கறுப்­புக்­கொ­டி­களை ஏந்தி ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­டது. அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் அவ­ருக்கு அழுத்தம் கொடுப்­பதே இந்தப் போராட்­டத்தின் முக்­கிய நோக்கம். 

மன்னார் எச்­ச­ரிக்­கையும் யாழ்ப்­பாண போராட்­டமும் 

இந்தப் போராட்­டத்­திற்கு முன்னர், மத நல்­லி­ணக்­கத்­திற்கு முர­ணான வகையில், மன்னார் திருக்­கே­தீஸ்­வரம் பகு­தியில் புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள பௌத்த விகா­ரையின் திறப்­பு­வி­ழா­வுக்கு வருகை தர­வி­ருந்த அவ­ரு­டைய விஜ­யத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து கறுப்­புக்­கொடி ஏந்தி விழாவைப் பகிஷ்­க­ரித்து போராட்டம் நடத்­தப்­படும் என மன்னார் பொது அமைப்­புக்­களின் ஒன்­றியம் எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்­தது. அந்த ஒன்­றி­யத்தின் தலைவர் சிவ­கரன் இந்த எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்தார். ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்த நிகழ்­வுக்கு வருகை தர­வில்லை. அதனால் போராட்டம் நடை­பெ­ற­வில்லை.

இலங்­கையின் தமிழ்ப்­பி­ர­தே­சத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் விஜ­யத்­திற்கு கறுப்­புக்­கொடி ஏந்தி எதிர்ப்பு தெரி­விப்­பது என்­பது நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு உள்­ளு­ரிலும், சர்­வ­தேச அள­விலும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்றே பல­ராலும் கரு­தப்­பட்­டது. இத்­த­கைய எதிர்ப்­புக்கு அச்­ச­ம­டைந்­ததன் கார­ண­மா­கவே, மன்­னா­ருக்­கான ஜனா­தி­ப­தியின் விஜயம் இடம்­பெ­ற­வில்லை என்று அப்­போது பலரும் எண்­ணி­னார்கள். அதே­போன்று யாழ்ப்­பா­ணத்தில் ஏற்­பா­டா­கி­யி­ருந்த கறுப்­புக்­கொடி போராட்டம் கார­ண­மாக அவ­ரு­டைய விஜயம் இடம்­பெ­றாமல் போகலாம் என்ற எதிர்­பார்ப்பும் நில­வி­யது. 

ஆனால், இந்த ஆர்ப்­பாட்­டத்­திற்கு எதி­ராக பொலிசார் நீதி­மன்­றத்தில் தடை­யுத்­த­ரவைப் பெற்­றி­ருந்த நிலையில், அந்த நிகழ்­வுக்கு ஜனா­தி­பதி வருகை தந்­தி­ருந்தார். திட்­ட­மிட்­ட­வாறு கறுப்­புக்­கொடி ஏந்­திய ஆர்ப்­பாட்­டமும் இடம்­பெற்­றது. ஆனால் இத்­த­கைய போராட்­டங்­க­ளின்­போது, அர­சி­யல்­வா­தி­க­ளும்­சரி முக்­கி­யஸ்­தர்­க­ளும் ­சரி, போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு முகம் கொடுக்­காமல் விலகிச் செல்­வதைப் போன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பாணப் போராட்­டத்தைப் புறக்­க­ணித்­து­விட்டுச் செல்­ல­வில்லை. 

மாறாக தனது வாக­னத்தில் இருந்து இறங்கி, போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களை நாடிச் சென்று, என்ன பிரச்­சினை என்று வின­வினார். அந்த இடத்தில் போராட்­டத்தின் முன்­ன­ணியில் இருந்த வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம், ஈ.பி.­ஆர்­.எல்.எவ். கட்­சியின் தலை­வரும் முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் உள்­ளிட்­ட­வர்கள் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்கள். ஆனால் இந்த விடயம் குறித்து தெரி­யாத வகையில் தொனி செய்த அவர், அது­பற்றி பேச்­சுக்கள் நடத்­தலாம் வாருங்கள் என அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த அழைப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­க­ளினால் நிர­ாக­ரிக்­கப்­பட்­டது. 

எச்­ச­ரிக்கை

இந்த நிகழ்வு குறித்து யாழ் இந்துக் கல்­லூ­ரியில் நடை­பெற்ற தமிழ்த்­தின விருது வழங்கும் விழாவில் குறிப்­பிட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, கறுப்­புக்­கொடி ஏந்­து­வதை விடுத்து, வெள்­ளைக்­கொ­டியை ஏந்­து­மாறு போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­க­ளுக்கு அறி­வு­றுத்தும் வகையில் கூறி­யி­ருந்தார். வன்­முறை வேண்டாம். சமா­தா­ன­மாகப் பேச்­சுக்­களை நடத்தி பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணலாம் என்­ப­தையும் அவர் அங்கு ஆற்­றிய உரை­யின்­போது குறிப்­பிட்­டி­ருந்தார். தமிழ் மக்­க­ளு­டைய வாக்குப் பலத்­தினால் பத­விக்கு வந்­துள்­ளதை நினை­வூட்­டிய அவர் தனது கரங்­களைப் பலப்­ப­டுத்த வேண்டும் என கேட்­டுக்­கொண்டார். அவ்­வாறு பலப்­ப­டுத்­தா­விட்டால், பேய்கள் தலையெ­டுத்­து­விடும் என்றும் அவர் எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்தார். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்தப் போராட்­டத்தை எதிர்­கொண்ட விதம் குறித்து, பல்­வேறு வித­மான அர­சியல் வியாக்­கி­யா­னங்கள் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. இருந்­தாலும், கறுப்­புக்­கொடி போராட்­டத்தை துணிச்­ச­லோடு எதிர்­கொண்­டி­ருந்தார் என்­பதை எவரும் மறுக்க முடி­யாது. அதனை அவரும் அவரைச் சார்ந்­த­வர்­களும் தங்­க­ளு­டைய அர­சியல் நலன்­க­ளுக்­கான பிர­சா­ரங்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­து­வார்கள் என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. 

 

ஆனால், இத்­த­கைய போராட்­டங்கள் தங்­க­ளு­டைய அர­சியல் போக்கில் எந்­த­வி­த­மான மாற்­றங்­க­ளையும் கொண்டு வரப் போவ­தில்லை என்­பதை, தனது வாக­னத்தில் இருந்து இறங்கி வந்து போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களைச் சந்­தித்து, பேசலாம் வாருங்கள் என அழைப்பு விடுத்­ததன் மூலம் அவர் உறு­தி­யாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.     

அத்­துடன் கறுப்­புக்­கொடி ஏந்­தா­தீர்கள். வெள்ளைக் கொடியை ஏந்­துங்கள். வன்­மு­றையைக் கைவி­டுங்கள். எனது கரங்­களைப் பலப்­ப­டுத்­துங்கள். இல்­லையேல் பேய்கள் பலம் பெற்­று­வி­டு­வார்கள் என கூறி­யதன் மூலம் அவர் பல விட­யங்­களைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இந்தக் கூற்று, முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன, அவ­ரு­டைய ஆட்சிக் காலத்தில் வன்­மு­றை­களில் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களை நோக்கி, சமா­தானம் என்றால் சமா­தானம். போர் என்றால் போர் என கர்ச்­சனை செய்­தி­ருந்­ததை நினை­வூட்டச் செய்­தி­ருக்­கின்­றது. 

வன்­மு­றையில் ஈடு­ப­டா­தீர்கள் வெள்ளைக் கொடியை ஏந்­துங்கள். பேய்­களை பலம் பெறச் செய்­யா­தீர்கள் என்ற கூற்றை ஆழ்ந்து செவி­ம­டுக்­கும்­போது, அர­சாங்­கத்­துடன், இணைந்து செல்­லுங்கள், அர­சாங்கம் தரு­வதை ஏற்­றுக்­கொண்டு அமை­தி­ய­டை­யுங்கள். இல்­லையேல் விப­ரீ­தங்கள் ஏற்­ப­டலாம் என்ற எச்­ச­ரிக்கை தொனியின் சாயலை உணர முடி­கின்­றது. 

தீர்வை நோக்கி நகரச் செய்யும் போராட்ட வடிவம் அவ­சியம் 

யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற கறுப்­புக்­கொடி ஆர்ப்­பாட்­டத்தில் வன்­மு­றைகள் இருக்­க­வில்லை. அசம்­பா­வி­தங்கள் எதுவும் அங்கு இடம்­பெ­ற­வில்லை. அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய வேண்டும் என்ற கோரிக்­கையை அழுத்தி உரைக்கும் வகை­யிலும், அதன் அழுத்­தத்தை உணர்ந்து அவர்­களை விடு­தலை செய்ய ஜனா­தி­ப­தியைத் தூண்டும் வகை­யிலும் அந்தப் போராட்டம் கார­சா­ர­மாக அமைந்­தி­ருந்­தது. 

ஆனால் அந்தப் போராட்டம் அந்த இலக்கை எட்­ட­வில்லை. மாறாக அந்தப் போராட்­டத்தை தூசு தட்­டி­யதைப் போன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தட்­டிச்­சென்­றுள்ளார் என்றே கருத வேண்­டி­யி­ருக்­கின்­றது. இந்தப் போராட்டத்தின் போது ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த விழாவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது. அந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்குப் பலம் சேர்க்கும் வகையில் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் பாளுமன்றத்தில் கொண்டு வந்த ஒத்திவைப்புப் பிரேரணைக்கு அரச தரப்பிடமிருந்து கிடைத்த எதிர் உணர்வும், ஜனாதிபதியைப் போலவே அரசாங்கமும் இந்தப் பிரச்சினையைத் தூசு தட்டும் விடயமாகவே கருதியிருப்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது. 

 

இருந்த போதிலும், அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும், அதற்கு போராட்டங்கள் அவசியமானவை என்பதிலும் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் அந்த மக்கள் எதிர்பார்க்கின்ற அளவில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதென்பது, ஆட்சியாளர்களின் அரசியல் இருப்பை ஆட்டம் காணச் செய்கின்ற ஒரு விடயமாகவே நோக்கப்படுகின்றது. 

 

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் தமிழ் மக்களுடைய ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், ஐக்கியம், ஒற்றுமை, அரசியல், பொருளாதார முன்னேற்றம் என்பவற்றுக்கு அடிப்படையானவை என்பதை அரச தரப்பினர் இன்னும் சரியான முறையில் உணரவில்லை என்பதே அரசியல் யதார்த்தமாகும். 

செயல்வலு மிக்க அரசியல் தலைமையும், ஒருங்கிணைந்த - சீராக ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டச் செயற்பாடுகளும், தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமையும் அவசியம் என்பது இப்போது உணரப்பட்டிருக்கின்றது. அதேவேளை, வழமையான போராட்ட வடிவங்களிலும் பார்க்க, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுகின்ற புள்ளியை நோக்கி அரசாங்கத்தை நகரச் செய்கின்ற வகையிலான போராட்ட வடிவங்கள் குறித்தும் உணர வேண்டிய தருணம் இது என்பதும் உணரப்பட வேண்டும்.    

பி.மாணிக்­க­வா­சகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-21#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.