Jump to content

ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: தெஹிவளை பகுதியிலேயே ஐந்து பேரை கடத்தினோம்


Recommended Posts

ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: தெஹிவளை பகுதியிலேயே ஐந்து பேரை கடத்தினோம்

 

முதலாம், இரண்டாம் சந்தேக நபர்களின் கீழ் சேவையாற்றிய மூவர் சி.ஐ.டி.க்கு வாக்குமூலம் 

(எம்.எப்.எம்.பஸீர்)

தெஹிவளை பகுதியில் வைத்தே கடந்த 2008.09.17 அன்று ஐந்து பேரை தாம் உள்ளிட்டோரே கடத்தியதா கவும், லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி யின் தலைமையிலேயே அந்த நடவடிக்கை இடம்பெற்ற தாகவும் கடற்படை வீரர்கள் இருவர் குற்றப் புலனாய் வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.  

அத்துடன் இவ்வாறு கடத்தப்பட்டோரை கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப் போது இருந்த லெப்டினன்ட் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமாண்டராக பதவி உயர்த்தப் பட்டுள்ள சுமித் ரணசிங்கவிடம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் அவ்வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.  

இதனைவிட கடத்தப்பட்ட பலர் குறித்த கன்சைட் இரகசிய வதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பிலும் மற்றொரு கடற்படை வீரர் சி.ஐ.டி. விசேட விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையிலான அகுழுவினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நேற்று கோட்டை நீதிவானுக்கு அறிவித்து அறிக்கை சமர்பித்தார். 

இதனைவிட விசாரணைக்கு தேவையான பல இரகசிய ஆவணங்களுட்டவற்றை கடற்படை தொடர்ந்து குற்றப் புலனயவுப் பிரிவுக்கு வழங்க மறுத்துவருவதாக விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா சுட்டிக்காட்டியதையடுத்து, குற்றவியல் சட்டத்தின் 124 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக அந்த அத்தனை ஆவணங்களையும் சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க நீதிவான் லங்கா ஜயரத்ன கடற்படை தளபதிக்கு கட்டளையிட்டார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்க அஜயரத்ன முன்னிலையில் மீளவும் விசாரணைக்கு வந்தது.

இதன்போதே விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவின் கோரிக்கையை ஏற்று இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் இந்த விவகாரத்தில் தற்போது கைது செய்யப்படுவதற்காக தேடப்ப்ட்டு வரும் கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சியைக் கைது செய்ய பகிரங்க பிடியாணையும் நீதிம்னறினால் நேற்று பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­க­ப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­ததிருந்தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­தர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமான்டர் ராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சம்பத் முனசிங்க பிணையில் உள்ள நிலையில் ஏனையோர் தொடர்ந்து விளக்கமறியலில் இருந்து வருகின்றனர்.

நேற்றைய விசாரணைகள் ஆரம்பமான போது சந்தேக நபர்களில் தஸாநாயக்க தவிர ஏனையோர் மன்றில் ஆஜர்செய்யப்பட்டனர்.

இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த குற்றப் புலனயவுப் பிரிவின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா, மேலதிக விசாரணை அறிக்கை ஊடாக மன்றுக்கு விசாரணை நிலைமையை தெளிவுபடுத்தினார்.

கனம் நீதிவான் அவர்களே, கடற்படையிடம் விசாரணைகளுக்காக நாம் கோரியிருந்த ஆவணங்கள் எதுவும் எமக்கு இன்னும் கிடைக்கவில்லை. குற்றப் புலனயவுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கையொப்பத்துடன் இந்த கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் இதுவரை பதிலில்லை. அதனால் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலவுகிறது. அதனால் அந்த ஆவணங்களை எமக்கு ஒப்படைக்க கடற்படை தளபதிக்கு கட்டளையிடுமாறு கோருகின்றோம்.

இதனைவிட, திருகோணமலை கடற்படை முகாமுக்கு சென்று, ஏற்கனவே நீதிமன்றுக்கு அறிவித்ததன் பிரகாரம் நாம் விசாரணைகளை நடத்தினோம். இதன்போது கன்சைட் எனும் நிலத்தடி வதை கூடங்களையும் நாம் மேற்பார்வை செய்து புகைப்படங்களும் எடுத்துள்ளோம். இதன்போது நாம் 19 கடற்படையினரிடம் வாக்கு மூலம் பதிவு செய்தோம். இவர்கள் முதலாம் இரண்டாம் சந்தேக நபர்களின் கீழ் சேவையாற்றியவர்களாப்வர். 2 ஆம் சந்தேக நபரின் கீழ் சேவையாற்றிய தர்ஷன எனும் கடற்படை வீரர் வழங்கிய வாக்கு மூலத்தில் கடத்தப்பட்டவர்கள் கன்சைட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இரவு நேரத்தில் தான் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைவிட முதலாம் சந்தேக நபரின் கீழ் சேவையாற்றிய சந்ரகுமார மற்றும் சுசந்த எனும் இரு கடற்படை வீரர்கள் வழங்கிய வாக்கு மூலத்தில், 2008.09.17 அன்று தெஹிவளையில் வைத்து ஐந்து பேரை தாங்கள் கடத்தியதாக குறிப்பிட்டனர். லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சியின் கீழ் இந்த கடத்தல்கள் இடம்பெற்றதாகவும் அதன்பின்னர் அவர்கள் இரண்டாவது சந்தேக நபரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர்கள் வாக்கு மூலத்தில் வெளிப்படுத்தினர்.

 இதனைவிட, அமலன் லியோன், ரொஷான் லியோன் மற்றும் அலி அன்வர் ஹாஜியார் ஆகியோர் கோட்டையில் உள்ள பிட்டு பம்பு எனும் இடத்தில் இரகசிய சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்ப்ட்டு பின்னர் அவர்களும் இரண்டாம் சந்தேக நபரிடம் கையளிக்கப்பட்டதாகவும் அந்த அவர்கள் வககு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எந்த பயங்கரவாத செயற்பாடுகளுடனும் தொடர்பு அற்றவர்கள். இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் 16 நிறுவனக்களிடம் நாம் இது தொடர்பில் அறிக்கை கோரிய நிலையில், அதில் 15 நிறுவங்கள் இவர்களுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என உறுதி செய்துள்ளன. கடற்படை மட்டும் இன்னும் அது தொடர்பிலான அறிக்கையை தரவில்லை.

இவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கன்சைட் சிறை, வர்த்தமானியூடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறையல்ல. அது ஒரு வதைக் கூடம் என்பதை அங்கு சென்று பார்க்கும் போது நாம் தெரிந்துகொண்டோம்.

 இதனைவிட நாம் கடற்படையிடம் கோரிய ஒரு அறிக்கை தான், கப்பம் கோரல், கடத்தல் தொடர்பில் சந்தேக நபர்கள் சிலரை 8 நாட்கள் தடுத்து வைத்து அப்போது கடற்படை புலனாய்வு பிரதானி ஆனத்த குருகே நடாத்திய விசாரணையின் அறிக்கை. இந்த அறிக்கை தற்போது திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. அதனை எமக்கு வழங்க உத்தரவிட வேண்டும். என கோரினார்.

 இதனையடுத்தே ஆவணங்கள் அறிக்கைகளை சி.ஐ.டி.க்கு கையளிக்க நீதிவான் கடற்படை தளபதிக்கு கட்டளையிட்டு வழக்கை எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிக்கு ஒத்தி வைத்தார். அதுவரை சந்தேக நபர்களில் முதலாமவர் தவிர ஏனைய அறுவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-21#page-1

Link to comment
Share on other sites

தஸ­நா­யக்க தொடர்ந்து வெலி­சறை கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெறு­வது ஏன்?

 

அறிக்கை சமர்­ப்பிக்குமாறு சிறைச்­சாலை பிரதான வைத்­திய அத்­தி­யட்­ச­கருக்கு நீதி­மன்றம் உத்­த­ரவு

(எம்.எப்.எம்.பஸீர்)

பதி­னொரு பேர் காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில் கைது செய்­யப்பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­டுள்ள முன்னாள் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டி.கே.பி. தஸ­நா­யக்க, தொடர்ச்­சி­யாக வெலி­சறை கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் தங்­கியி­ருந்து சிகிச்சை பெறு­வ­தற்­கான காரணம் உள்­ளிட்ட விரி­வான அறிக்­கையை மன்­றுக்கு சமர்­ப்பிக்­கு­மாறு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையின் அத்­தி­யட்­ச­கருக்கு நேற்று உத்­த­ரவு பிறப்­பித்தார்.

கடத்தல் மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்ட விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போது, 7 ஆவது சந்­தேகநப­ரான டி.கே.பி.தஸ­நா­யக்க மன்றில் ஆஜர்செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்லை. அவர் அவ்­வாறு ஆஜர்செய்­யப்­ப­டா­மைக்­கான காரணம் அறிக்கை ஊடாக நீதி­மன்றுக்கு சமர்­ப்பிக்­கப்­ப­ட­வில்லை.

இது தொடர்பில் சிறைச்­சாலை அதி­கா­ரி­களை கடு­மை­யாக எச்­ச­ரித்த நீதிவான் அடுத்த தவ­ணையின் போது தஸ­நா­யக்­கவை கண்­டிப்­பாக மன்றில் ஆஜர்செய்ய வேண்டும் எனவும் நேற்று மன்றில் ஆஜ­ராக்­கா­மைக்­கான கார­ணத்­தையும் பிரத்­தி­யேக அறிக்கை ஊடாக மன்­றுக்கு அறி­விக்க வேண்டும் எனவும் உத்­தரவிட்டார்.

இவ் வழக்கின்போது விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்­வா, பாதிக்­கப்பட்ட தரப்பு சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்­னவும் தஸ­நா­யக்க வெலி­சறை கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் தொடர்ந்தும் தங்­கி­யி­ருப்­பது தொடர்பில் ஆட்­சே­பம் தெரி­வித்து நீதி­வானின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­தனர்.

இதன்­போது கருத்து தெரி­வித்த நீதி வான், தஸ­நா­யக்­க­வுக்கு எந்த நோயும் இல்லை என சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்கை உள்ள நிலையில், அவர் தொடர்ச்­சி­யாக கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் தங்­க­வைக்­கப்பட்­டி­ருப்­பது தொடர்பில் தமக்கும் தெளி­வில்­லாமல் இருப்­ப­தாக கூறினார். இதுதொடர்பில் முடி­வொன்­றினை எடுப்­ப­தாக அறிவித்த நீதிவான், தஸநாயக்க கடற்படை வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் அடங்கிய அறிக்கையை மன்றுக்கு சமர்ப் பிக்க சிறைச்சாலை வைத்தியசாலை அத்தி யட்சகருக்கு உத்தரவிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-21#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.