Jump to content

ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமா?


Recommended Posts

ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமா?

 

சபையில் தினேஷ் , பிரதமர் ரணில் இடையே வாக்குவாதம்

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

உள்­ளூ­ராட்சி மன்ற திருத்தச் சட்­ட­மூலம் இன்னும் அமைச்­ச­ரினால் வர்த்­த­மா­னியில் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. ஆகையால் ஜன­வரி மாதம் தேர்தல் நடத்­தப்­ப­டுமா? இல்லை தாம­திக்­கப்­ப­டுமா? என தினேஷ் குண­வர்­தன எம்.பி வின­விய‍ போது சபையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் தினேஷ் குண­வர்­த­ன­வுக்கும் இடையில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது.

இதன்­போது எழுந்த வாக்­கு­வா­தத்தை அடுத்து உள்­ளூ­ராட்சி மன்ற சட்­ட­மூ­லத்தில் திருத்­தங்கள் பல செய்ய வேண்டி உள்­ள­மை­யினால் இது தொடர்­பி­லான அறிக்­கையை அமைச்சர் அடுத்த வாரம் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­க­வுள்ளார். எவ்­வா­றா­யினும் இது­தொ­டர்பில் அடுத்­த­வாரம் செவ்­வாய்­கி­ழமை கட்சி தலை­வர்கள் கூடி தீர்­மானம் எடுப்போம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதி­ல­ளித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன எழுப்­பிய விசேட கேள்­விய‍ை அடுத்தே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் தினேஷ் குண­வர்­த­ன­வுக்கும் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது.

இதன்­போது தினேஷ் குண­வர்­தன எம்.பி கேள்வி எழுப்பும் போது, உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் திருத்­தச்­சட்­ட­மூ­லத்தை வர்த்­த­மா­னியில் அறி­விப்­ப­தாக சம்­பந்­தப்­பட்ட அமைச்சர் கூறி­னாலும் இது­வ­ரையில் வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. எனவே இதன்­கா­ர­ண­மாக ஜன­வரி தேர்தல் நடத்தும் நோக்கம் உள்­ளதா? இல்­லையேல் தாமதம் செய்­யப்­ப­டுமா? என கேள்வி எழுப்­பினார்.  

இத­னை­ய­டுத்து பத­ல­ளிப்­ப­தற்கு எழுந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க,

நான் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருடன் இது பற்றி பேச்­சு­வார்த்தை நடத்­தினேன் என கூறிய போது தினேஷ் குண­வர்­தன எம்.பி சிரித்து கொண்டே ஒரு சில திருத்­தங்­க­ளுக்­காக ஏன் வர்த்­த­மானி வெளி­யி­டப்­ப­ட­வில்லை. சபையின் கவ­னத்தை திசை­தி­ருப்ப வேண்­டாம.அர­சாங்­கத்­திற்கு ஜன­வ­ரியில் தேர்தல் நடத்தும் நோக்கம் உள்­ளதா?

இதன்­போது தனது உரையை தொடர்ந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­சிங்க, நான் சொல்­வ­தனை சற்று கேளுங்கள். நான் இது தொடர்­பாக தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருடன் பேசினேன்.அத்­துடன் அடுத்த வாரம் திருத்­தங்கள் தொடர்­பான அறிக்­கையை அமைச்சர் அடுத்த வாரம் அமைச்­ச­ர­வைக்கு முன்­வைப்பார். அதன்­பின்னர் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண முடியும் என நம்­பு­கின்றேன் என்றார். 

பிர­தமர் அவர்­களே, திருத்­தங்­களை அமைச்­ச­ர­வையில் முன்­வைத்து அதன்­பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்ற வேண்டும். குறித்த செயல்­மு­றை­யா­னது ஒரு மாதம் வரை நீடிக்கும். இது காலத்தை தாழ்த்தும் போக்­காகும் என தினேஷ் குண­வர்­தன எம்.பி சுட்­டிக்­காட்­டினார்.

இத­னை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பி­டு­கையில்,

இங்கு திருத்­தங்கள் சார்ந்த பிரச்­சி­னை­களே காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக அமைச்சர் ஆங்­கி­லத்தில் முன்­வைத்த திருத்­தங்­க­ளுக்கும் சிங்­கள மொழி­மூ­ல­மான சட்­ட­மூ­லத்­திற்கும் இடையில் பல்­வேறு முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. அத்­துடன் அம்­ப­க­முவ மற்றும் கல்­முனை உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் சார்ந்த திருத்­தங்­களும் செய்ய வேண்­டி­யுள்­ளது. இதுதான் இங்­குள்ள பிரச்­சி­னை­யாகும். எனினும் எமக்கு முடி­யு­மாயின் வர்த்­த­மானி அறி­வித்­தலை விடுத்த பின்னர் திருத்­தங்கள் செய்ய முடி­யுமா என்­ப­தனை பற்றி ஆராய முடியும் என்றார்.

அமைச்சர் ஏன் ஆங்­கில மொழியில் திருத்­தங்­களை முன்­வைத்தார். சிங்­கள மொழியில் முன்­வைத்­தி­ருக்­க­லாமே. இது எமது பிரச்­சினை மாத்­திரம் அல்ல. நாட்டு பிர­ஜைகள் அனை­வரும் தேர்­தலை எதிர்­பார்த்­துள்­ளனர் என தினேஷ் குண­வர்­தன எம்.பி குறிப்­பிட்டார்.

இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பி­டு­கையில், எமக்கு தேர்தல் தொட்ர்பில் எந்­த­வொரு பிரச்­சி­னையும் கிடை­யாது. இது தொடர்­பாக சட்­டமா அதி­ப­ரு­டனும் பேச வேண்­டி­யுள்­ளது. ஏனெனில் சட்­டமா அதி­பரும் வெளிநாடு சென்றுள்ளார் என்றார். 

உங்களுக்கும் பிரச்சினையில்லை. எமக்கும் பிரச்சினையில்லை. அப்படியாயின் அமைச்சரா இடையூறு விளைவிக்கின்றார் என தினேஷ் குணவர்தன கேட்டார். இதற்கு பிரதமர் பதிலளிக்கும் போது, அமைச்சர் இது தொடர்பாக அமைச்சரவையில் தகவல்களை சமர்ப்பிப்பார். அத்துடன் இது தொடர்பாக அமைச்சரையும் அழைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிப்போம் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-21#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.