Jump to content

நீதிக்­காக காத்­தி­ருந்த இரு தாய்மார் மரணம் சட்­டத்­த­ர­ணியின் உருக்­க­மான வாதத்தில் கண் கலங்­கிய நீதிவான்


Recommended Posts

நீதிக்­காக காத்­தி­ருந்த இரு தாய்மார் மரணம்

 

சட்­டத்­த­ர­ணியின் உருக்­க­மான வாதத்தில் கண் கலங்­கிய நீதிவான்

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­கா­ரத்தில், தமது பிள்  ளைகள் மற்றும் உற­வுகள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு நீதி கிடைக்கும் என காத்­தி­ருந்த இரு தாய்­மார்கள், காணாமல்போன உற­வு­களின் ஏக்­கத்­தி­லேயே மர­ண­ம­டைந்­துள்­ள­தாக பாதிக்­கப்பட்டோர் தரப்பில் மன்றில் ஆஜ­ராகும் சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன  கோட்டை நீதிவான் லங்காஜ­ய­ரத்­னவின் கவ­னத்­துக்கு நேற்று கொண்டு வந்தார்.  

ஐந்து மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­காரம் தொடர்பில் வழக்கு விசா­ரணை நேற்று கோட்டை நீதிவான் லங்க ஜய­ரத்ன முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்த போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இதன்­போது அது தொடர்பில் ஆழ்ந்த அனுதா­பங்­களை தெரி­வித்த நீதிவான் லங்கா ஜய­ரத்ன, விசா­ர­ணைகள் தற்­போது துரி­த­மாக இடம்­பெ­று­வ­தா­கவும், இயன்­றவை விரை­வாக நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்­கவே தான் முயற்­சிப்­ப­தா­கவும் கண் கலங்­கிய நிலையில் தெரி­வித்தார். ஆரம்­பத்தில் சட்­டத்தை அமுல் செய்­வதில் தாம­தங்கள் இருந்தை ஒப்­புக்­கொண்ட நீதிவான் தற்­போது சந்­தேக நபர்கள் பலர் கைதாகி­யுள்ள நிலையில் அந் நிலைமை மாற்­ற­ம­டைந்­துள்­ள­தா­கவும், தாய்மார் இருவர் நீதிக்­கான ஏக்­கத்­தி­லேயே மனம் வருத்­த­துடன் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் எனவும் அது தொடர்பில் தான் கவ­லை­ய­டை­வ­தா­கவும் நீதிவான் சுட்­டிக்­காட்­டினார்.

 நேற்று வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது பாதிக்­கப்பட்ட தரப்பின் சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன, விஷேட கருத்­து­ரையை முன்­வைத்து பின்­வ­ரு­மாறு கூறினார்.

' கனம் நீதிவான் அவர்­களே, இந்த வழக்கில் சந்­தேக நப­ரான தஸ­நா­யக்­க­வுக்கு எந்த நோயும் இல்லை என சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்­கை­யூ­டாக தெளி­வா­கி­யுள்ள நிலையில், அவர் நீதி­மன்றை தவ­றாக வழி நடாத்தி தொடர்ந்தும் கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யுள்ளார். ஏன் அவ­ருக்கு மட்டும் இப்­படி விஷேட சலுகை வழங்­கப்பட்­டுள்­ளது. இது தொடர்பில் நீதி­மன்றம் கவ­னத்தில் கொண்டு ஆராய வேண்டும்.

இவர்­க­ளுக்கு இப்­படி வரப்­பி­ர­சாதம் கிடைக்கும் நிலையில், தமது பிள்­ளை­களை பறி­கொ­டுத்த தாய்மார் இருவர் நீதிக்­காக ஏங்­கிய நிலை­யி­லேயே இது­வரை உயி­ரி­ழந்­துள்­ளனர். ஏற்­க­னவே ஒரு தாய் மர­ண­ம­டைந்த நிலையில் கடந்­த­வாரம் தனது இரு பிள்­ளைகள் விட­யத்தில் நீதி கிடைக்கும் என ஒவ்­வொரு முறையும் நீதி­மன்ற படி­யேறி, நீதிக்­காக காத்துக் கிடந்த மேரி வசந்தா பீரிஸ் அல்­லது யசோ­தரா எனும் தாய் உயி­ரி­ழந்­துள்ளார்.

 இவ்­வாறு தாய்மார் உயிரி­ழக்கும் போது அவர்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய நீதி தொடர்ந்து தாம­த­ம­டைந்­து­கொண்டே செல்­கி­றது. என தெரி­வித்தார்.

இதன்­போது அதற்கு பதி­ல­ளித்த நீதிவான் லங்கா ஜய­ரத்ன, தற்­போது விசா­ர­ணைகள் சரி­யாக இடம்­பெ­று­கின்­றன. ஹெட்டி ஆராச்­சியை கைது செய்­யாது இந்த வழக்கை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்­து­வது கடி­ன­மா­ன­தாகும். இயன்­ற­வரை சீக்­கிரம் நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்­கவே நான் முயற்­சிக்­கின்றேன். அந்த தாய்மார் இறப்­ப­தற்கு தமது பிள்­ளைகள் தொடர்­பி­லான நீதியைக் கோரும் ஏக்கம் பிர­தான கார­ண­மாக இருக்­கலாம். நான் அது தொடர்பில் ஆழ்ந்த கவ­லை­ய­டை­கின்றேன். என கலங்கிய கண்களுடன் அறிவித்தார்.

ஏற்கனவே கடத்தப்பட்ட 11 பேரில் உள்ளடங்கும் திலகேஸ்வரனின் தாய் உயிரிழந்திருந்த நிலையில் கடந்தவாரம் கடத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள அமலன் லியோன், ரொஷான் லியோன் ஆகியோரின் தாயான யசோதரா உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-21#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதி உயிரிழந்து அநீதி கோலோச்சும் தேசத்தில் சிறிலங்கா அரச கட்டமைப்பு  நீதியைவழங்குமெனில் அது அதிசயமாகவே இருக்கும். இனஅழிப்பைச் செய்துவரும் நாடு எப்படி இனஅழிப்புக்குற்றவாளிகளுக்கு எதிராகச் செயற்படும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌வ‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.