Jump to content

"த சீக்ரெட் " காணொளி (தமிழ்)


Recommended Posts

த சீக்ரெட்

ரோண்டா பிரயன் எழுதிய சீக்ரெட் என்ற நூல் 2006ம் ஆண்டில் வெளியான நூல்களில் ஒன்றாகும். 46 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த நூல், ஈர்ப்பு விதியைப் பற்றியும், அதனை கையாளும் முறைகளையும், நேர்மறை சிந்தனைகளைப் பற்றியும் விவரிக்கிறது. நேர்மறை சிந்தனையே ஒருவர் தன் வாழ்வில் வெற்றி பெறுவதற்கும், தன்னிறைவு அடைவதற்கும், அடித்தளமாக அமைகிறது என்பதை வலியுறுத்துகிறது. இந்த நூல், நூலாக வெளிவருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே காணொளி வடிவில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

.facebook.com/tamilnewsonly/posts/1248728485156759

ரோந்த பிர்ய்நே எழுதிய த சீக்ரெட் (The Secret, மர்மம்) என்பது பிரைம் டைம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். இத்திரைப்படமானது எண்ணங்களின் வலிமை விதி பற்றிய நேர்காணல்களின் தொகுப்பை கொண்டிருக்கிறது.
இத்திரைப்படம் டிவிடி மற்றும் இணைய ஊடகம் மூலமாக விநியோகிக்கப்பட்டது. இத்திரைப்படத்தினைத் தொடர்ந்து த சீக்ரெட் என்ற புத்தகம் வெளியாது. இது ஓபரா வின்ஃப்ரே, எலென் டிஜெனெரெஸ் மற்றும் லாரி கிங் போன்ற ஊடக பிரபலங்களின் ஆர்வத்தை ஈர்த்து, முன்னணி பத்திரிகைகளில் இருந்து விமர்சனங்களையும் பெற்றது.

இந்த நூலை பற்றி நண்பர் ஒருவரின் முன்னுரை :

 

ரகசியம் (தி சீக்ரெட்) இந்தப் புத்தகத்தை முதலில் படிக்கும் முன், எனக்கு இதன் வீடியோ தான் கிடைத்தது. அதை ஐபாட் ஃபார்மட்டிற்கு (mp4)மாற்றிவிட்டு, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பார்த்து முடித்தேன். இதை மொழிமாற்றம் செய்து தொடராக எழுதக் காரணம், இந்தப் படத்தை ஒரு தடவை பார்த்தாலோ அல்லது இந்த புத்தகத்தை ஒரு தடவைப் படித்தாலோ எல்லாவற்றையும் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்வது கடினம்.இது ஒருவருடைய வாழ்க்கைக் குறிப்போ அல்லது ஒரு சம்பவமோ கிடையாது. பல அறிஞர்கள், விஞ்ஞானிகள், தத்துவமேதைகள் அவர்களின் வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமாக கண்டுபிடித்ததன் மொத்தத் தொகுப்பு. அவர்கள் கண்டுபிடித்தது நமக்கு ஏன்? அவர்களைப் போலவே நமக்கும் வாழ்க்கையில் நடக்கவா போகிறது? அவர்கள் வாழ்ந்த முறை வேறு, நாம் வாழும் முறை வேறு, நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமில்லை என்பதைப் போன்ற எதிர்மறை எண்ணங்களை நீங்கள் கொண்டிருப்பீர்களேயானால் இது உங்களுக்கான தொடர் இல்லை. நான் போன பதிவிலே சொன்னது போல் எனது சொந்தக் கருத்தை நான் இதில் கூறப் போவதில்லை. இந்த தொடர் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்து இருக்காது. ஆனால் அவர்களின் போதனைகள், கருத்துக்கள் மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும். இந்த புத்தகத்தில் மொத்தம் 10 தலைப்புகள் உள்ளது.

http://orathanadukarthik.blogspot.ch/2014/05/blog-post_3409.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன்,  இப்படியான... அறிவியல்  சம்பந்தமான, பதிவுகளை  வரவேற்கின்றேன். :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.