Jump to content

லண்டனில் ஒரு பவுண்டு சம்பளம் கொடுக்கும் கோழிக் கடை முதலாளிகள் sky TV


Recommended Posts

லண்டனில் ஒரு பவுண்டு சம்பளம் கொடுக்கும் கோழிக் கடை முதலாளிகள் sky TV

 

சமீபத்தில் லண்டனில் உள்ள sky TV ஒரு நிகழ்சியை ஒளிபரப்பி இருந்தது. அதில் ஈழத் தமிழ் இளைஞர்கள் படும் அவஸ்த்தையை தெளிவாக காட்டி இருந்தார்கள். நாள் முழுவதும் (15மணி நேரம்) வேலை செய்தால் தமக்கு 15 பவுண்டுகள் சம்பளமாக கிடைக்கும் என்றும். ஏன் என்றால் தமது கையில் விசா இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கோழிக் கடையில் வேலைசெய்து விட்டு, இரவில் யாருக்கும் தெரியாமல், புதருக்கு அருகே உள்ள கராஜ் ஒன்றில் இவர்கள் தங்கி இருக்கிறார்கள். ஒரு மணித்தியாலத்திற்கு 1 பவுண்டு படி சம்பளம் வாங்கிக் கொண்டு. மறைவாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு பொலிசாரைப் பார்த்தால் பயம், பொதுமக்களை பார்த்தாலும் பயம் என்கிறார்கள். ஆனால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிவதனால், பல மில்லியன் மக்கள் வெளியேற உள்ளார்கள். இன் நிலையில் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, சில வேளைகளில் தமக்கு விசா கிடைக்க கூடும் என்று இவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு வேதனைகள் இப்படித்தான் மத்திய கிழக்கில் கூட கூடாத கம்பனிகள் சம்பளம் தர மறுக்கும் கம்பனிகளிடமிருந்து பாய்ந்து சென்று விலகி வேலை செய்பவர்கள் பாலைவ்னத்திலே தங்கியிருப்பார்கள் வேதனைகளான விடயம் இவை 

இங்கே கேட்டால் பிள்ளை லண்டன் வெளிநாடு என்று சொல்லி கொள்ளும் உறவினர்களுக்கு தெரியாது அங்கே தரை மப்வ் மண்ணுவது குப்பைகளை அள்ளுவதையும்  யாரை குறித்து சொல்ல வில்லை இதெல்லம் நேராக பார்த்தவன் என்ற வகையில் சொல்ல வந்தேன் நம்ம தமிழ் சனங்கள் கடைகள் இல்லையா அல்லது இவர்களை சேர்த்தால் பொலிஸ் பிரச்சினை வருமா என்ன 

விளக்கம் தாங்கோவன் லண்டன் மகா ஜனங்களே!!tw_cold_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவர்களின் நிலை தாயகத்தில் இருப்பவர்களை விட மோசமானது சொந்தம் கூட இவர்களை கவனிப்பதில்லை வீட்டில் வேலையில்  வைத்திருந்தால் 20000 ஆயிரம் பவுன் தண்டப்பணம் கட்டணம் வரும் எனும் பயம்.இவர்களையும் விட இன்னும் மோசமான நிலையில் தமிழ் கூட்டம் உண்டு அவர்கள் குடிக்கு அடிமையானவர்கள் இவர்களை போலிசும் போடர் முகவர்களும் கண்டுகொள்வதில்லை  சவுத்ஹாரோ ,வெம்பிளி போன்ற சாப்பாட்டு கடைகள் பக்கம் காணலாம் பொருள்கள் ஏத்தும் மரபலகை களும் காட்போர்ட் பெட்டியும் தான் அவர்களின் படுக்கை அறை கடும் குளிர் நேரம் அவர்கள் தப்பி பிழைப்பது நாய் படா பாடு போன குளிருக்கும் மூன்று பேருக்கும் மேல் ரிக்கட் எடுத்தவையல் அதில் ஒருவர் மட்டகளப்பு முஸ்லிம் என்பது அவர் இறந்தபின்பே தெரியும் ஏனென்றால் அவ்வளவு குடி ஒருமறை வெறியில் முகத்தில் சுடுதண்ணியை தனக்கு தானே ஊத்தி முகம் அகோராமாகிவிட்டுது  சவுத்கரோ பக்கம் அடிக்கடி போய் வருபவர்கள் இவரை கண்டு இருப்பார்கள் ஒரு வோட்கா குடி யுடன் -10குளிர் ரிக்கெட் எடுத்தவர். வரும் குளிருக்கும் யார் யாரோ தெரியவில்லை .

படத்தில் காணப்படுவது போல் இங்குள்ள வேறு இனத்தவர் நிறைய பேர் இப்படி வாழுகின்றனர் நம்மவர் கதை மட்டும் cnn படம் போடுது கடை முதலாளிகளும் தவிச்சமுயல் அடிப்பினம் ஆனால் இந்த விடையத்தில் என்ன தீர்வு என்பது பெரும் குழப்பமே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் நீங்கள் இணைத்ததை யே திரும்பவும் இணைக்கிறீர்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.