Jump to content

அரசியல் கைதிகளை மறந்து மோதிக்கொள்ளும் அரசியல்வாதிகள்


Recommended Posts

அரசியல் கைதிகளை மறந்து மோதிக்கொள்ளும் அரசியல்வாதிகள்
 

அநுராதபுர சிறைச்சாலையில், மூன்று அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதை வைத்து அரசியல் நலன் தேடுவதற்காக இன்னொரு போராட்டமும், தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது.  

image_259715f03f.jpg

வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த தமது விசாரணைகள், திடீரென அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் தமது வழக்குகள் வவுனியாவிலேயே விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரியே, மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கடந்த 13ஆம் திகதி, வடக்கில் முழு அளவிலான அடைப்புப் போராட்டம் ஒன்றும் நடாத்தப்பட்டது. வட மாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடாத்தப்பட்டது.  

அதற்கு மறுநாள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நடைபெறும் சில நிகழ்வுகளில் பங்கேற்பதாக இருந்தது.  

அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் வருவதற்கு எதிர்ப்புக் கிளம்பியது.  

யாழ்ப்பாணத்தில், ஜனாதிபதி கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வு, தேசிய மட்டப் பாடசாலை தமிழ் மொழித்தின விழா ஆகும். அந்த நிகழ்வை ஒழுங்கமைத்திருந்தவர், கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன்.  

அந்த நிகழ்வில் பங்கேற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, எந்த இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், அமைச்சர் இராதாகிருஷ்ணனின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமைச்சர் மனோ கணேசனும் கூடுதல் அக்கறை கொண்டிருந்தார்.  

அவர் ஜனாதிபதியை அவசரமாகச் சந்தித்து, அரசியல் கைதிகள் விவகாரம், யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ள போராட்டம் குறித்துப் பேசியிருந்தார்.  

எப்படியாவது, ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வில் குழப்பம் நிகழ்ந்து விடக் கூடாது என்பதே, அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.  

முன்னதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்துத் தாம் பேசியதாகவும், அரசியல் கைதிகளின் போராட்டம் குறித்து, தமக்கு எதுவும் தெரியாது என்று ஜனாதிபதி தம்மிடம் கூறியதுடன், வழக்குகளை வவுனியாவுக்கு மாற்றுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஏற்கெனவே பணிப்புரை விடுத்திருந்ததாக ஜனாதிபதி கூறியதாகவும், அமைச்சர் மனோ கணேசன் தான், தகவல் வெளியிட்டிருந்தார்.  

அவ்வாறு கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் கைதிகள் போராட்டம் நடத்துவதை அறிந்து கொண்ட பின்னரும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக வழக்குகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.  

ஆக, தமக்குத் தெரியாது என்று கூறிய ஜனாதிபதிக்கு, எல்லாம் தெரிந்த பின்னரும் கூட, எந்த மாற்றமும் நிகழவில்லை.   

யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழித்தின விழா, எந்த இடையூறும் இன்றி நடத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.   

போராட்டம் நடத்துவோரை ஜனாதிபதி சென்று சந்திக்கவும் திட்டமிடப்பட்டது.  
அதற்கமைய, மறுநாளான கடந்த 14ஆம் திகதி, கறுப்புக் கொடியுடன் யாழ். இந்துக் கல்லூரிச் சந்தியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி, காரில் இருந்து இறங்கி, ஜனாதிபதி நடந்து சென்றார். அவர்களுடன் பேச முனைந்தார்.   

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், தம்பிராசா போன்றவர்கள் ஜனாதிபதியுடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.  

ஆனால், சிரித்தபடியே ஜனாதிபதி அவர்களைப் பேச்சு நடத்த வருமாறு அழைத்தார். ஆனால், அவர்கள் அதற்கு இணங்கவில்லை.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காரை விட்டு இறங்கி, போராட்டம் நடத்துவோரை நோக்கிச் சென்ற போது, அந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமாரும், செயலாளர் கஜேந்திரனும், பின்னால் சென்று விட்டனர்.  

அவர்கள் ஜனாதிபதியுடன் பேசாமல் ஒதுங்கியிருந்து விட்டு, மைத்திரிபால சிறிசேனா காரில் மீண்டும் ஏறிக் கொண்டதும், “வெளியேறு வெளியேறு மைத்திரியே வெளியேறு” என்று கோசமிட்டனர்.  

இந்தப் போராட்டம் முடிந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், போராட்டம் நடத்துவோருடன் ஜனாதிபதி சந்தித்துப் பேசுவது, ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நாடகம் என்றும், அதற்கு சிவாஜிலிங்கம் துணைபோனதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.  

வடக்கில் முழு அடைப்புப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, ஆளுநர் செயலகத்தில் நடந்த போராட்டத்தின் பின்னர், சிவாஜிலிங்கம், ஆளுநர் மாளிகைக்குச் சென்று பேச்சு நடத்தியிருந்தார்.  

அதை அடிப்படையாக வைத்து, சிவாஜிலிங்கம் அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படுவதாகவும், அரசியல் கைதிகளின் போராட்டத்தையும், அவர்களின் குடும்பத்தினரையும் தவறாக வழிநடத்துவதாகவும் கஜேந்திரகுமார் குற்றம் சாட்டினார்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தியது தவறானது என்றும், அரசாங்கத்துக்கு நற்பெயரைத் தேடிக்கொடுக்க முயன்றார் சிவாஜிலிங்கம் என்றும் அவர் சாடியிருந்தார்.  

எனினும், ஜனாதிபதியுடன் இந்த விவகாரம் குறித்து முதலில் பேசியவர் சுரேஷ்  பிரேமச்சந்திரன் தான். அவரைக் கஜேந்திரகுமார் விமர்சிக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் இருவரும் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் பங்காளிகள்.  

கூட்டமைப்பை விட்டுத் தனியாக வெளியேறும் நிலை வந்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து செயற்பட சுரேஷ்  பிரேமச்சந்திரன் திட்டமிட்டுள்ளார்.   

அதுபோல, சுரேஷ்  பிரேமச்சந்திரனைக் கூட்டமைப்பை விட்டு வெளியே கொண்டு வருவதற்கு கஜேந்திரகுமாரும் முயற்சிக்கிறார். கஜேந்திரகுமார் பகிரங்கமாகவே பலமுறை இதற்கான அழைப்பையும் விடுத்திருந்தார்.  

கஜேந்திரகுமாரின் குற்றச்சாட்டுகளை அடுத்து, சிவாஜிலிங்கம் பதிலுக்கு ஒரு செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி, அவருக்குச் சவால் விடுத்துள்ளார்.  

அரசாங்கத்துடன் இணைந்து தாம் எதையும் செய்யவில்லை என்றும், ஊரார் பிள்ளைகளின் உயிருடன் விளையாட வேண்டாம் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.  

அரசியல் கைதிகள் விடயத்தில், அரசியல் இலாபம் தேட முனைய வேண்டாம் என்றும், யாருடனாவது பேச்சு நடத்தி, அவர்களை மீட்பதே ஒரே வழியாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.  

சிவாஜிலிங்கம் மீது துரோகக் குற்றச்சாட்டை கஜேந்திரகுமார் வீசியதால், அவர் ஆவேசமடைந்திருக்கிறார். இதனால், கஜேந்திரகுமாரை நோக்கிப் பகிரங்க விவாதத்துக்கு வருமாறும் சவால் விடுத்திருக்கிறார்.  

போர் முடிவுக்கு வந்த நான்காவது நாள், புதுடெல்லிக்குச் சென்றது, போரின் இறுதிநாட்களில் புலிகளின் அரசியல் தலைவர்களின் சரணடைவுக்கு பசில் ராஜபக்ஷவுடன் பேசியது, விமானத்தில் முதல்வகுப்பில் ஜெனிவாவுக்குச் செல்வது, வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து ஐ.நாவில் சாட்சியமளிக்காமை என்று கஜேந்திரகுமார் மீது அடுக்கடுக்கான கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் தொடுத்திருக்கிறார் சிவாஜிலிங்கம்.  

அதற்கும் அப்பால், சம்பந்தன், சுமந்திரனைக் குற்றம்சாட்டுவதே கஜேந்திரகுமாருக்குத் தெரிந்த அரசியல் என்றும் அதை விட்டால் வேறு ஏதும் தெரியாது என்றும் சாடியிருக்கிறார் அவர்.  

ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நடத்தப்பட்ட கறுப்புக்கொடிப் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்ததை அறிந்தவுடன் தயங்கிய கஜேந்திரகுமார், தாம் அந்த இடத்துக்கு வந்து போராட்டம் நடத்திய பின்னரே அங்கு வந்து சேர்ந்தார் என்றும் கூறியிருந்தார்.  

சிவாஜிலிங்கத்தின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு கஜேந்திரகுமார் நிச்சயம் பதிலளிக்காமல் இருக்க முடியாது. விரைவில் அவர் மற்றொரு செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்.  

இது, வடக்கு அரசியலில் புதியதொரு குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.  
தேர்தல்கள் நெருங்கும் சூழலில், கூட்டணிகளும், கூட்டமைப்புகளும் மாறலாம் என்ற எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டிருந்த சூழலில், வடக்கின் அரசியல் பிரமுகர்கள் ஒருவர் மீது மற்றவர் சேற்றை வாரியிறைக்கத் தொடங்கியுள்ளனர்.  

இதனால், அரசியல் கைதிகளின் போராட்டமும் அவர்களின் பிரச்சினையும் மறக்கப்படும் நிலைக்கு வந்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  

அரசியல் கைதிகள் விவகாரம் என்றாலும் சரி, காணிகள் விடுவிப்பு விவகாரம் என்றாலும் சரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம் என்றாலும் சரி, தொடர்ச்சியாகப் போராட்டங்களை ஊக்குவிக்கும் தரப்புகளாக இருக்கும் அரசியல் கட்சிகள் எதுவுமே, அதற்காக முற்றுமுழுதாக நின்று குரல் கொடுப்பதில்லை.  

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, செந்தூரன் என்ற மாணவனின் உயிர் இழக்கப்பட்டது. அதற்குப் பின்னாலும், அரசியல் காரணிகள் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.  

அந்த மாணவனின் மரணம் நிகழ்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், அரசியல் கைதிகளின் விவகாரத்துக்கு தீர்வு காணப்படவில்லை.   

அதேவேளை, அரசியல் கைதிகளுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட மாணவனை யாரும் நினைவில் கொள்வதாகவோ, அவர்களின் குடும்பத்தினரைத் திரும்பிப் பார்ப்பதாகவோ தெரியவில்லை.  

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில், சில பொதுவான குணாம்சங்களைக் கொண்டிருப்பார்கள். அது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் கூடப் பொருத்தமானது.  

கடிதம் எழுதுதல், நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வருதலே தமது கடப்பாடு என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் போன்றவர்களும், போராட்டங்களை நடத்தி, மக்களின் கவனத்தைத் தமது பக்கம் ஈர்ப்பது தான் தமது கடப்பாடு என்று வேறு சிலரும், கருதிக் கொண்டிருக்கிறார்கள்.  

இவை மாத்திரமே, அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிகள் என்றால், இந்தளவுக்கும் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியல்-கைதிகளை-மறந்து-மோதிக்கொள்ளும்-அரசியல்வாதிகள்/91-205843

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.