Jump to content

ரணிலின் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்தார் மல்வத்துப்பீட செயலாளர்


Recommended Posts

ரணிலின் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்தார் மல்வத்துப்பீட செயலாளர்

 

ரணிலின் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்தார் மல்வத்துப்பீட செயலாளர்

புதிய அரசியலமைப்பு அவசியமற்றது என்பதை இரண்டு பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைப்படியே அறிவிக்கப்பட்டதாக அஸ்கிரிப்பீட செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் அவர் முற்றாக நிராகரித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று முன்தினம் கூடிய அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீட மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான சங்க சபையில் புதிய அரசியலமைப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதனையடுத்து தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தேவையற்றது என்ற முடிவுக்கு சங்க சபை வந்ததோடு அதனை ஊடகங்கள் மூலமாகவும் அவர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அலரிமாளிகையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சங்க சபை ஊடகங்களை பிழையான திசைக்கு இட்டுச்செல்வதாக குற்றம் சாட்டினார்.

மல்வத்துப்பீட மகாநாயக்க தேரர் வெளிநாடு சென்றிருக்கும் சந்தர்ப்பத்தில் சங்க சபை தனித்து இப்படியான முடிவுகளை எடுத்திருப்பதாகவும் அதனை ஊடகங்கள் பெரிதுபடுத்தி காட்டுவதாகவும் பிரதமர் கூறினார்.

இந்த நிலையில் பிரிவினைக்குரிய அரசியலமைப்பு வேண்டாம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மெதகம தம்மானந்த தேரர் பிரமரின் கருத்து தொடர்பில் பதில் அளித்தார்.

மகாநாயக்க தேரரின் ஆலோசனை படியே சங்க சபை கூடி புதிய அரசியலமைப்பு அவசியமற்றது என்ற முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/politics/medagama-dammananda-thero-comment-on-ranil

Link to comment
Share on other sites

மகாசங்கத்தினரின் அறிவுறுத்தலுக்கு அமையவே அறிவிப்பு வெளியிட்டோம்

 

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க மெதகம தம்மானந்த தேரர் தெரிவிப்பு

(லியோ நிரோஷ தர்ஷன்)

புதிய அர­சி­ய­ல­மைப்பு நட­வ­டிக்­கை­க­ளி னால் மகா­சங்­கங்­க­ளி­டையே பிள­வுகள் ஏற்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று தற்­போது தேவை­யில்லை என்ற மகா­சங்­கத்­தி­னரின் நிலைப்­பாட்டில் எவ்­வி­த­மான மாற்­றமும் இல்லை. நடை­முறையில் உள்ள அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை கொண்டு புதிய சட்­டங்­களை சேர்த்துக் கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்று அஸ்­கி­ரிய பீடத்தின் அனு  நா­யக்க மெத­கம தம்­மா­னந்த தேரர்   தெரி­வித்தார்.  

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான இடைக்­கால வரைபு அறிக்­கையில் பல்­வேறு நெருக்­க­டி­யான விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரை அழைத்து இந்த விடயம் தொடர்பில் கலந்­து­ரை­யா­ட உள்ளோம் என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் குறித்து மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங்­களின் நிலைப்­பா­டு­களை தௌிவுப்­ப­டுத்தும் போதே அஸ்­கி­ரிய பீடத்தின் அநு­நா­யக மெத­கம தம்­மா­னந்த தேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில் ,

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான இடைக்­கால வரைபு அறிக்­கையை அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய மாநா­யக்க தேரர்­க­ளிடம் கைய­ளித்து ஆலோ­சை­னைகள் மற்றும் தேவை­யான பரிந்­து­ரை­களை முன்­வைக்­கு­மாறு குறிப்­பிட்­டி­ருந்தார். நாட்டில் தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­யங்­களை முன்­னெ­டுக்கும் போது அது குறித்து மாகா­சங்­கத்­தி­னரின் பங்­க­ளிப்­புகள் காணப்­ப­டு­வது வழ­மை­யான விட­ய­மாகும்.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் குறித்து பௌத்த மாகா­சங்­கத்­தி­னரின் அவ­தானம் செலுத்தப்பட்டுள்ளது. வெ ளியி­டப்­பட்­டுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான இடைக்­கால வரைபு அறிக்­கையை அவ­தா­னத்தில் கொண்­ட­போது பல்­வேறு நெருக்­க­டி­யான விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. எனவே இதனை அவ­ச­ர­மாக முன்­னெ­டுக்க வேண்­டி­ய­தில்லை.

தற்­போது நடை­மு­றையில் உள்ள அர­சி­ய­ல­மைப்பை தொடர்ந்தும் முன்­னெ­டுக்­க வேண்டும். புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சிறிது காலம் கடந்து தீர்­மா­னங்கள் எடுக்க வேண்டும் என்­பதே மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய மகா­சங்­கத்­தி­னரின் நிலைப்­பா­டாக உள்­ளது. அவ­ச­ர­மாக சில விட­யங்­களை சட்­ட­மாக்க வேண்டும் என்று அர­சாங்கம் நினைத்தால் அவற்றை திருத்த சட்­டங்­க­ளாக தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்­பிற்குள் கொண்டு வரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளோம்.

ஆனால் இடைக்­கால அறிக்­கையை முன் வைத்து அநா­வ­சி­ய­மான பிரச்­சி­னை­களை உரு­வாக்கும் நிலை­மையே தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. தமிழ் மக்­களுக்கும் எமக்கும் இடையில் விரிசல் நிலை ஏற்­பட்­டுள்­ளது. சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் பிரி­வுகள் ஏற்­பட்­டுள்­ளன. அதை விட மோச­மான விடயம் யாதெனில் தேரர்­க­ளுக்கு இடை­யிலும் இன்று பிள­வுகள் ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான பல்­வேறு பிரச்­சி­னை­களை தோற்­று­விப்­ப­தற்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு நட­வ­டிக்­கைகள் கார­ண­மா­கி­யுள்­ளன.

எனவே தான் ஜனா­தி­பதி மற்றம் பிர­த­ம­ருக்கு தௌிவா­கவே குறிப்­பிட்­டுள்ளோம். பௌத்த மதத்­திற்­கான சிறப்­பு­ரி­மைகள் மற்றும் தேசிய பாது­காப்பு தொடர்­பி­லான விட­யங்கள் குறித்து திருத்­தங்கள் தேவை­யில்லை. ஆனால் தற்­போ­தைய இடைக்­கால வரைபில் பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்டு அவை வேறு பிரி­வு­க­ளுக்கு செல்லும் நிலையே காணப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட வேண்டும் என்­ப­தற்­காக மொத்த அதி­கா­ரமும் இல்­லாமல் போவ­தற்­கான திருத்­தங்கள் மிகவும் ஆபத்­தா­ன­தா­கவே அமையும்.

இத­ன­டிப்­ப­டை­யி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றிக்­கான தேவை தற்­போது இல்லை என அறி­வித்தோம். அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து மகா­சங்­கத்­தி­னரின் அறி­வு­றுத்­தல்­க­ளுக்கு அமை­வா­கவே அந்த அறி­விப்பை செய்தோம். மகா­சங்­கத்­தி­ன­ருக்கு தெரி­யாது செய்து விட்­ட­தாக கூறு­வதில் எவ்விதமான உண்மை தன்மையும் இல்லை. ஊடகங்கள் சரியாகவே செய்திகளை பிரசுரித்துள்ளன.

அந்தவகையில் புதிய அரசியலமைப்பு ஒன்று தற்போது தேவையில்லை என்ற மகாசங்கத்தினரின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை. தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு புதிய சட்டங்களை சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . ஜனாதிபதி மற்றும் பிரதமரை அழைத்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது என அநுநாயக்க தேரர் மேலும் குறிப்பிட்டார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-21#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.