Jump to content

இந்­தியா உள்­ளிட்ட நா­டு­கள் தமி­ழ­ருக்கு பெரிதும் உதவா


Recommended Posts

இந்­தியா உள்­ளிட்ட நா­டு­கள் தமி­ழ­ருக்கு பெரிதும் உதவா

 

இலங்­கை­யில் தமிழ் மக்­கள் எதிர்­கொள்­ளும் அர­சி­யல் சவால்களை வென்­றெ­டுப்­ப­தற்கு இந்­தியா உட்­பட உலக நாடு­க­ளின் பங்­க­ளிப்பை சம­கால பூகோள அர­சி­ய­லில் பெரி­ய­ள­வில் எதிர்­பார்க்க முடி­யாது என்று வடக்கு மாகாண சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா தெரி­வித்­தார்.

இந்­தி­யப் பய­ணத்­தின்­போது இதனை உண­ரக் கூடி­ய­தாக இருந்­தது என்று அவர் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:இந்­தி­யா­வில் தலை­சி­றந்த பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் ஒன்­றான ஓ.பி ஜிந்­தால் குளோ­பல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் அரச மற்­றும் பொதுத்­து­றைக் கொள்­கை­யாக்­கல் கல்­லூ­ரி­யால் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கும், அதி­கா­ரி­க­ளுக்­கும் நடை­பெற்ற ‘வலு­வூட்­டல் கருத்­த­ரங்­கில்’ உரை­யாற்­றிய பேரா­சி­ரி­யர்­கள், புத்­தி­ஜீ­வி­கள், மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் ஜதார்த்­தத்தை உணர்ந்து அதன் அடிப்­ப­டை­யி­லேயே தமிழ் மக்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க முன்­வர வேண்­டு­மென்ற கருத்­தினை முன்­வைப்­பது போன்று உண­ரக்­கூ­டி­ய­தாக இருந்து.

இரண்­டாம் உல­கப் போரின்­பின் இன­ரீ­தி­யான போராட்­டங்­கள் உல­கில் வெற்றி பெற்­றது மிக அரிது என்ற கருத்­தி­னை­யும், அதே­வேளை போராட்­டம் ஓர­ளவு பலத்­தைக் கொண்­டி­ருந்த காலப்­ப­கு­தி­க­ளில் தீர்வை நோக்­கிச் சென்­ற­வர்­கள் ஓர­ளவு அதி­கார வலு­வு­டைய தீர்­வு­க­ளைப் பெற்­றி­ருக்­கின்­ற­னர்.

ஆனால் போராட்­டங்­கள் வலு­வி­ழந்த நிலை­யில், தங்­க­ளது அர­சி­யல் அபி­லா­ஷை­க­ளைப் முழு­மை­யா­கப் பூர்த்தி செய்­யக் கூடிய தீர்­வி­னைப் பெறு­வ­தற்­கான சாத்­தி­யக் கூறு­கள் அரிது என­வும் குறிப்­பிட்­ட­னர்.

அவுஸ்­தி­ரே­லிய நிதிப்­பங்­க­ளிப்­பு­டன், ஆசிய மன்­றத்­தின் ஏற்­பாட்­டில் நடை­பெற்ற இந்­தக் கருத்­த­ரங்­கில் வடக்கு மாகாண சபை­யின் 14 உறுப்­பி­னர்­க­ளும், ஐந்து அதி­கா­ரி­க­ளும் பங்­கு­பற்றியிருந்தனர் – என்­றார்.

http://newuthayan.com/story/38271.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவா தான்.

சைனாக்காரன் அம்பாந்தோட்டை வந்தால்....?

Link to comment
Share on other sites

45 minutes ago, Nathamuni said:

உதவா தான்.

சைனாக்காரன் அம்பாந்தோட்டை வந்தால்....?

சைனாகாரன் கச்சதீவு வந்தகதை என்னாச்சு. ??? :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கள் உதவுவது இருக்கட்டும். முதலில் நாம் உறுதியோடும் சூழலை மதிப்பீடுசெய்தும் நகரும் ஆற்றல் இருக்கிறதா? என்று வடமாகாண எதிர்க்கட்சித்தலைவரும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித்தலைவரும்  சிந்திப்பார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப தொடக்கம் தவராசு அரசியல் ரியூசன் குடுக்க வெளிக்கிட்டது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி.. பிரபாகரன் இறந்ததும் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்.. இப்படி எல்லாம் பேசி.. ஹிந்தியாவின் அட்டூழியங்களுக்கு ஈழத்தில் இடம் வழங்கினவை..

இப்ப சாத்தான் வேதம் ஓதினம்.

இவை இப்ப சொல்வதை.. 1987 இல் சுதுமலையில் வைச்சு.. தேசிய தலைவர் சொல்லிட்டார். நல்லூரில் வைச்சு தியாகி திலீபன் சொல்லிட்டார். tw_angry::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியா இதை பொதுவாவே கூறி வந்துள்ளது அதனுடைய உண்மையான கொள்கைகளையும் நோக்கங்களையும் மறைப்பதற்கு.

ஆயினும்,  இந்த கருத்தரங்கின் தேவையும் நோக்கமும் இப்போது ஏன் என்பதயே கேள்வி?

ஒன்று, தமிழ் ஊடகவியலாருக்கு சீனாவின் அழைப்பும் தன வரவேற்றப்பும், முக்கியமாக சீனாவின் வெளிப்படையான அறிவித்தலான தமிழர்கள் இயக்கையாவே போராட்ட குணமுமுள்ளவர்கள். இது சீன தமிழர்களை பாபாவின் ஏற்றுவதத்திற்கு கூட இருக்கலாம். அனால் அதில் அர்த்தம் பொதிந்த சீனாவின் எதிர்கால உந்துதல்களும் இல்லாமல் இல்லை.  

மற்றது, சிங்கள அரசு  படம் காட்டும் யாப்பு பற்றிய இடைக்கால அறிக்கை கூட குப்பையில் எறியப்பட்டுவிட்டது.

அதனால், கிந்தியாவின் முக்கிய பிரச்சாரமான புலிகளே தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்விட்ற்கு தடையா இருக்கும் பயங்கவாதிகள் என்ற பிரச்சாரம் முக்கியமாக மேட்குலத்தில் அடிபட்டு போய்க்கொண்டிருக்கிறது. சிங்கல அரசை சீர்திருதுவைதம்ன் மூலம் இந்த பிரச்னையை தீர்க்கலாம் என்ற கருது வலுவிலந்துகொண்டிருக்கிறது. முக்கியமாக UNHRC இல் கொடுக்கப்பட்ட 2 வருடம், ஓர் சிறிதளவேனும் சீர்திருத்தப்பட்ட யாப்பை சிங்கள மாக்கள் மதீயில் எடுத்து செல்வதத்திற்கே.

இதை ரணிலின் உணர்ச்சி மயப்பட்ட எதிர் கருதிலிருந்தே, அதாவது இடைக்கால அறிக்கைக்கு மகாசங்கத்தின் எதிர்ப்பிற்கு, இதை ஊகிக்கலாம்.  

 கிந்தியாவின் தேவை, இதை இலங்கைத்தீவிதிற்குள் அமுக்கிவிடுவதே.

சம்பந்தனும் சுமந்திரனும், பல்வேறுபட்ட விமர்சனங்கள் இருந்தாலும்,   இரு விடயங்களில் அழுங்குப்பிடியாக உள்ளனர். அதவாது நிதி அதிகாரம் (குறிப்பாக இது ஹிந்தியை மாநிலங்களுக்கு இல்லை), சர்வசன வாக்கெடுப்பு. இது ஒரு புறம் சிங்கள அரசுகானா பிடி, மறுபுறம் கிந்தியாவிடற்கான பிடி.

கிந்தியா தற்போது இவற்றையும் தமிழ் தரப்பு கோராமல் (குழப்பாமல்), தான் பின்னிருந்து வரைந்த  இடைக்கால அறிக்கையை மேலும் சிங்களத்துக்கு ஏற்ப்புடையதாக்கி, சர்வசன வாக்கெடுப்பு இல்லாமல் யாப்பு ஆக்குவதே.  இதாய் எதிர்க்கும் அல்லது குழப்பும் தரப்பு தமிழ் தரப்பு மட்டுமே, அதை கதைகள் விட்டு இல்லாமல் ஆக்குவதே கிந்தியாவின் நோக்கம்.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
    • இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை. ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎
    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.