Jump to content

“கமல் சார் எனக்குக் கடவுள் மாதிரி!”


Recommended Posts

“கமல் சார் எனக்குக் கடவுள் மாதிரி!”

 

சனா - படங்கள்: கே.ராஜசேகரன்

 

 தமிழ்நாடே ஓவியா ஃபீவரில் இருக்க செம உற்சாகத்தில் இருக்கிறார் ஓவியா. ``நிறைய பேசணும். ஆனா எல்லாத்தையும் பேச முடியுமான்னு தெரியல” என கேஷுவலாகப் பேசுகிறார். ஓவியாவுடன் காரில் சென்னையைச் சுற்றிக்கொண்டே பேசிய அரை மணி நேரமும் சிரிப்பு, கலாய்ப்பு, அழுகை என உருக வைத்தார் ஓவியா.

20p1.jpg

``அப்புறம்... சொல்லுங்க, எப்படி இருக்கீங்க?’’

``இப்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன். கொஞ்சம் மன உளைச்சல்ல இருந்ததால்தான் பிக்பாஸ் வீட்டிலிருந்தே வெளியே வந்தேன். வெளியே வந்ததும் மனசு ஒரு மாதிரி இருந்துச்சு. சாப்பிடப் பிடிக்கல. தூக்கம் வரல. நான் நானாவே இல்ல. என்னைச் சுத்தி எப்போதும் இருந்த மைக்கையும்,  கேமராவையும் ரொம்ப மிஸ் பண்ணுனேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாத்தான் வழக்கமான   லைஃப்புக்கு வந்து,  ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் பார்த்தேன். செம சந்தோஷம்.  எனக்கு இவ்ளோ மக்கள் சப்போர்ட்டானு ஆச்சர்யமா இருந்துச்சு.  அப்புறம் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்னு  `வெர்கலா’ போயிட்டு வந்தேன். ட்ரிப்பை நல்லா என்ஜாய் பண்ணுனேன். எனக்கு டூர் போறது அவ்ளோ பிடிக்கும். இப்போ ஐ’ம் நார்மல்.’’

``பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்ததுதான் ரியல் ஓவியாவா?’’

``எந்தக் கவலையும் இல்லாம குழந்தைகள் ரொம்ப ஹேப்பியா இருப்பாங்க. அதுமாதிரிதான் நானும். எனக்குள்ள நிறைய குழந்தைகள் இருக்கு. அதனால்தான், குழந்தைத்தனமா இருக்கேன். பிக்பாஸ் வீட்டுக்குள்ளே நீங்க பார்த்ததுதான் ரியல் ஓவியா.’’

``ஹெலன் எப்படி ஓவியாவா மாறினாங்க?’’

``சின்ன வயசிலிருந்தே ரொம்ப சுதந்திரமா  இருக்கணும்னு நினைக்கிற பொண்ணு நான்.   யாருகிட்டயும் எந்த ஹெல்ப்பும் கேட்கமாட்டேன். என் செலவைக்கூட நானே பார்த்துக்குவேன். அந்த வயசுல பணம் சம்பாதிக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் மாடலிங் சான்ஸ் வந்துச்சு. மாடலிங், சின்னச் சின்ன விளம்பரங்கள்  பண்ண ஆரம்பிச்சேன். என் பாக்கெட் மணிக்கு அது சரியா இருந்துச்சு. அப்போதான் என் மாடலிங் போட்டோஸ் பார்த்துட்டு ‘களவாணி’ படத்தின் டைரக்டர் கூப்பிட்டார். ‘களவாணி’ படத்திலிருந்து ஹெலன் ஓவியாவா மாறியாச்சு.’’

``பிக்பாஸ் ஷோ பற்றி நல்லா தெரிஞ்சுதானே உள்ள போனீங்க. பாதியிலயே வெளியே வந்துட்டோமேன்னு ஃபீல் பண்ணுனீங்களா?’’

``எனக்கு எதையாவது புதுசு புதுசா எக்ஸ்பீரியன்ஸ் பண்ணிட்டே இருக்கணும்.  அனுபவங்கள்தான் ரொம்ப முக்கியம்னு நினைப்பேன். அது புது மனுஷங்ககூடப் பழகறப்பதான் கிடைக்கும். அதனால புது மனுஷங் களைப் பார்க்க, அவங்ககிட்ட பேச ரொம்பப் பிடிக்கும். என்னோட ஆசைகள் ஒவ்வொண்ணா நிறைவேத் திட்டே இருக்கும்போதுதான் பிக்பாஸ் சான்ஸ் வந்துச்சு.

20p2.jpg

ஒரு ரியாலிட்டி ஷோ அப்படிங் குறதையும் தாண்டி அந்த வீட்டுக்குள்ளே இருக்கிறது ஒரு புது அனுபவமா இருக்கும்னுதான் நான் பிக்பாஸ் ஷோ-க்கு ஓகே சொன்னேன். பிக் பாஸ் வீட்ல இருந்த சில நாள்களிலேயே எனக்கு அந்த அனுபவம் கிடைச்சிருச்சு. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் திரும்பவும் வீட்டுக்குள்ளே போகணும்னு தோணுச்சு. ஆனா, அப்பா அதை விரும்பல. கொஞ்சம் பயந்துட்டார். வீட்ல அப்பா, பாட்டி, என் செல்ல நாய்க்குட்டினு ரொம்பக் குட்டியான குடும்பம் எங்களுடையது. திரும்பவும் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே போய் ஏதாவது கஷ்டம் எனக்கு வந்துருமோனு அப்பா யோசிச்சார். அதனால்தான் நான் திரும்பவும் அந்த வீட்டுக்குள்ளே போகல.’’

``பிக்பாஸ் உங்களுக்கு நிறைய புகழ் கொடுத்திருக்கு. இப்ப பணமும் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு. என்னென்ன படங்கள் பண்றீங்க?’’

``உண்மையைச் சொல்லணும்னா, பிக்பாஸ் முன்னாடி சினிமா சான்ஸ் ரொம்ப கம்மியா இருந்துச்சு. ஆனா, இப்போ நிறைய சான்ஸஸ் வருது.  பட், இவ்ளோ சான்ஸஸ் வருதுனு எல்லாப் படத்துலயும் நடிக்க விரும்பல. எனக்குப் பிடிச்ச படங்கள் மட்டும் பண்றதுன்னு தெளிவா இருக்கேன். இப்போதைக்கு  `காஞ்சனா 3’ மட்டும்தான் பண்றேன். எனக்கு `காஞ்சனா’ படம் ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் லாரன்ஸ் கேட்டவுடன் படத்தில் நடிக்கச் சம்மதிச்சேன். எந்த இமேஜுக்குள்ளயும் சிக்காம நல்ல படங்கள் பண்ணணும்னு நினைக்கிறேன்.’’

`` `ஓவியா ஆர்மி’ பத்தி என்ன நினைக்கிறீங்க?’’

``ரொம்ப ரொம்ப ஹேப்பி. ஓவியா ஒரு நடிகையா இருக்கும்போது எனக்கு இவ்ளோ ஃபேன் ஃபாலோயர்ஸ், சப்போர்ட் இல்ல. என் நடிப்புக்காக ஓவியா ஆர்மி வரல. என்னுடைய ரியல் கேரக்டரைப் பார்த்துட்டுத்தான் இவ்ளோ ரசிகர்கள். பிக் பாஸ் வீட்டுக்குள்ளே இருக்கும்போதே மக்களுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு எனக்குத் தெரிஞ்சுச்சு. ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமை வரும்போதும் கமல் சார், ‘ஓவியா, உங்கள் பேக்கையெல்லாம் பேக் பண்ணிட்டீங்களா’னு கேட்பார். `யெஸ்’னு தலையாட்டுவேன். ஆனா, எனக்குத் தெரியும், ஃபேன்ஸ் என்னைக் காப்பாத்திடுவாங்கனு. ஃபேன்ஸூக்கு என்னைப் பிடிச்சிருக்குனு தெரிஞ்சுச்சு. ஆனா, இந்தளவுக்கு,  ஓவியா ஆர்மி எல்லாம் இருக்கும்னு தெரியாது. இதெல்லாம் ஓர் ஆசீர்வாதம். எல்லோருக்கும் கிடைக்காது. ரொம்ப சந்தோஷம்.’’

``வெளியே வந்ததும் செலிபிரிட்டீஸ் யாரெல்லாம் போன் பண்ணுனாங்க?’’

``பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததுமே என் போன் நம்பரை மாத்திட்டேன். அதனால் எனக்கு யாரும் நேரடியா போன் பண்ணமுடியல. நண்பர்கள் மூலமா சிவகார்த்திகேயன் கூப்பிட்டுப் பேசினார். `ரொம்ப ஹேப்பியா இருக்கு ஓவியா. பிக் பாஸ் உங்களுக்குக்காகவே டெய்லி பார்ப்பேன்’னு சொன்னார்.

அப்புறம் கீர்த்தி சுரேஷ் என்னை நேரா வீட்டுக்கே வந்து பார்த்தாங்க. என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டாங்க. அதுக்கு முன்னாடி கீர்த்தியை நான் பார்த்ததே இல்லை. ஒரு ஆக்ட்ரஸ் இன்னொரு ஆக்ட்ரஸைப் புகழ்கிறதெல்லாம் பெரிய விஷயம். எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு.  அப்புறம் சிம்பு. எல்லோருக்குமே ரொம்ப நன்றி.’’

20p3.jpg

``பிக் பாஸ் கமல் பற்றிச் சொல்லுங்க?’’

``ஸ்கூல் போற பசங்களுக்கு எப்படா சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வரும்னு இருக்குமோ அப்படித்தான் எனக்கும் இருக்கும். அவரைப் பார்க்க  அவ்ளோ ஆர்வமா இருப்பேன். ரொம்ப மன உளைச்சல்ல இருந்தப்பெல்லாம் யாராவது நம்மகிட்ட பேசினா நல்லாயிருக்கும்னு தோணும். அதைக் கமல் பண்ணுவார். அவரைப் பார்த்தாலே புது உற்சாகம் வரும். பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். அவருடைய ஸ்டைல், ஷோ பண்ணுற விதம் எல்லாம் எனக்குப் பிடிக்கும். எனக்கு ரொம்பப் பிடிச்சவங்ககிட்ட அதிகமா பேச மாட்டேன். கொஞ்சம் ஒதுங்கிப் போவேன். கமல் சாரை  தூரத்திலிருந்து அவ்ளோ ரசிப்பேன். அவர் எனக்குக் கடவுள் மாதிரி. ‘மன்மதன் அம்பு’ படத்தில் நடிக்கும்போது எனக்கு அவருடன் சீன்ஸ் இல்லை. அப்போ கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் ஒருமுறை ஃப்ளைட்டில் பார்த்திருக்கேன். அவ்ளோதான். ஆனா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமா  என் ஆசையெல்லாம் நிறைவேறிடுச்சு.’’

``பிக்பாஸ் வீட்டுக்குள்ள நீங்க டாக்டர்ஸ்கிட்ட பேசுறதைப் பார்த்தோம். டாக்டர்ஸ் உங்ககிட்ட என்ன சொன்னாங்க?’’

``பிக்பாஸ் வீட்டுக்குள்ளே எனக்கு மூணு முறை கவுன்சலிங் கொடுக்க டாக்டர்ஸ் வந்தாங்க. என்கிட்ட நிறைய நேரம் பேசினாங்க. (தேம்பித் தேம்பி அழுகிறார்). ஸாரி ப்ளீஸ்...’’

``பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்த கொஞ்ச காலத்திலேயே  எப்படி ஆரவ்வை அவ்ளோ பிடிச்சிருச்சு?’’

``ஆரவ், ரொம்ப ஸ்ட்ராங்கான பெர்ஸன். அவர் ரொம்ப கம்போஸ்டான ஆள். கோபம்கூட அவ்வளவு சீக்கிரம் ஆரவ்க்கு வராது. அதனாலகூட அவரை எனக்குப் பிடிச்சிருக்கலாம்.’’

``ஆரவ் பிக் பாஸ் டைட்டிலை ஜெயிப்பார்னு நினைச்சீங்களா?’’

``சினேகன், ஆரவ் ரெண்டு பேரில் யாராவது நிச்சயம் பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ணுவாங்கன்னு நினைச்சேன். நூறு நாளை நிச்சயம் ஆரவ் கம்ப்ளீட் பண்ணுவார்ங்கிற கான்ஃபிடன்ஸ் எனக்கு இருந்துச்சு.’’

``ஆரவ்கூட சேர்ந்து நடிப்பீங்களா?’’

``எங்களுக்குள்ள எந்தப் பிரச்னையும் இல்ல. கதை பிடிச்சிருந்தா நிச்சயம் நடிப்பேன்.’’

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, நவீனன் said:

 

20p3.jpg

``பிக் பாஸ் கமல் பற்றிச் சொல்லுங்க?’’

``ஸ்கூல் போற பசங்களுக்கு எப்படா சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வரும்னு இருக்குமோ அப்படித்தான் எனக்கும் இருக்கும். அவரைப் பார்க்க  அவ்ளோ ஆர்வமா இருப்பேன். ரொம்ப மன உளைச்சல்ல இருந்தப்பெல்லாம் யாராவது நம்மகிட்ட பேசினா நல்லாயிருக்கும்னு தோணும். அதைக் கமல் பண்ணுவார். அவரைப் பார்த்தாலே புது உற்சாகம் வரும். பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். அவருடைய ஸ்டைல், ஷோ பண்ணுற விதம் எல்லாம் எனக்குப் பிடிக்கும். எனக்கு ரொம்பப் பிடிச்சவங்ககிட்ட அதிகமா பேச மாட்டேன். கொஞ்சம் ஒதுங்கிப் போவேன். கமல் சாரை  தூரத்திலிருந்து அவ்ளோ ரசிப்பேன். அவர் எனக்குக் கடவுள் மாதிரி. ‘மன்மதன் அம்பு’ படத்தில் நடிக்கும்போது எனக்கு அவருடன் சீன்ஸ் இல்லை. அப்போ கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் ஒருமுறை ஃப்ளைட்டில் பார்த்திருக்கேன். அவ்ளோதான். ஆனா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமா  என் ஆசையெல்லாம் நிறைவேறிடுச்சு.’’

 

அடுத்த அன்னலச்சுமி உருவாகிறார்... :grin:Ähnliches Foto

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.