Jump to content

புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை என வெளியான செய்தி தொடர்பில் ரணில் ஆவேசம்


Recommended Posts

புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை என வெளியான செய்தி தொடர்பில் ரணில் ஆவேசம்

 

 

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

மல்வத்து, அஸ்கிரிய பீடங்களினது மகாநாயகக்கர்கள் பங்கேற்காத கூட்டத்திலேயே புதிய அரசியலமைப்பொன்றோ அல்லது தற்போதைய அரசியலமைப்பில் திருத்தமொன்றோ அவசியம் கிடையாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களை தவறாக வழிநடத்துவது யார் எனவும் கேள்வி எழுப்பினார்.

ranil.jpg

புதிய அரசியலமைப்பு தொடர்பாக இலங்கை ஊடக கல்லூரி உட்பட மூன்று நிறுவனங்கள் மேற்கொண்டிருந்த ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றிருந்தது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

புதன்கிழமையும் வியாழக்கிழமையும் அனைத்து ஊடகங்களினையும் அவதானதித்திருந்தேன்.  அவை அனைத்தும் தலைப்புச் செய்தியாக புதிய அரசியலமைப்போ அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் திருத்தங்களோ தேவையில்லை என அஸ்கிரிய மற்றும், மல்வத்து பீடங்கள் தீர்மானித்ததாக அவர்களின் படங்களை பிரசுரித்து தலைப்புச் செய்திகளை வெளியிட்டிருந்தன. 

அதிலும் குறிப்பாக மல்வத்து பீட மகாநாயக்கரின் படத்தை பிரசுரித்திருந்தன.  மல்வத்து பீட மகாநாயக்கர் தற்போது நாட்டில் இல்லை. நான் இன்று அவருடன் தெலைபேசியில் பேசினேன். அவர் இலங்கையில் இல்லை. பின்னர் எப்படி அவருடைய படத்தினை பிரசுரிக்க முடியும். 

புதிய அரசியலமைப்பொன்று தேவையில்லை என்ற தலைப்புடன் செய்திகளில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடதிபதிகளின் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளபோதிலும், அந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த கூட்டத்திற்கு அவ்விரு மகாநாயக்கர்களும் சென்றிருக்கவில்லை.

அப்படியிருக்கையில், உண்மையை திரிபுபடுத்தி உண்மைக்கு புறம்பான செய்தியே வெளியிடப்பட்டுள்ளமையானது ஏன் என்பது தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்கள் , ஊடக செய்தி பிரதானிகளிடம் உடனடியாக கேட்டுச் சொல்லமுடியுமா? என்று நான் உங்களிடம் (ஊடகவியலாளர்களிடம்)  கேட்கின்றேன். எனது கேள்விக்குப் பதிலொன்றை பெற்றுத் தந்தால் தான அதற்கு என்னால் பதிலளிக்க முடியும். அப்போது அதனையும் இணைத்து செய்தியாக பிரசுரிக்கு முடியும். 

புதிய அரசியலமைப்பொன்று இன்னும் உருவாக்கப்பட்டிருக்கவில்லை என ஜனதிபதியும் நானும் (பிரதமர்) கூறுவதை ஏற்றுக் கொள்வதாக மல்வத்து பீட மகாநாயக்கர் தமது அபிப்பிராயத்தை அண்மையில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார். அவ்வாறான நிலையில் குறித்த கூட்டம் சம்பந்தமான செய்தியை வெளியிடுவது தொடர்பில் யாருடைய படத்தினை பிரசுரிக்க வேண்டும் என்று சிந்தித்திருக்க வேண்டும். குறித்த கூட்டத்திற்கு கண்டி தியவடன நிலமேயினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் மகாநாயக்கர்களின் படங்களுக்கு பதிலாக நிலமேயின் புகைப்படமே செய்தியில் பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆகவே இந்தக் கூட்டத்தினை மையப்படுத்தி மக்களை  தவறாக வழி நடத்தவேண்டாம். மகாநாயக்கர்கள் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்துக் கூறுவார்களாக இருந்தால் அதைச் செய்தியாக வெளியிடுங்கள். அதற்கு நாங்கள் தடை விதிக்கப்போவதில்லை. அதைவிடுத்து இல்லாதவொன்றை செய்தியாக பிரசுரிக்க வேண்டாம் என்று நான் அனைத்து ஊடகங்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருக்காத நிலையில் அவர்களது படங்களை மையமாகக் கொண்டு தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில்,  நான் தெரிவிக்கும் பதில் கருத்துக்களுக்கும் அந்தளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டு தலைப்புச் செய்தியாக வெளியிடப்படுமா?  எனது கருத்துக்களை தலைப்புச்செய்தியாக  செய்தியாக வளியிடுவதாக உறுதிமொழியொன்று தருவீர்களா? 

அரசாங்கத்துக்கு மக்கள் ஆணையொன்றை வழங்கியிருக்கின்றார்கள். அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (சிங்கள, ஆங்கில ஊடங்களின் பெயர்களை குறிப்பிட்டு) இந்த விளையாட்டுக்களை நடத்த வேண்டாம். புதிய அரசியலமைப்புக்கான  வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான நடவடிக்கைகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் விவாதமொன்று நடைபெறவிருக்கின்றது. அதன்போது நாம் வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிந்துகொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/26023

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் எண்டால், இரண்டு வெள்ளைவானை அனுப்பி கதையை முடிச்சிருப்பார்.

உந்தாள், பாவம் குய்யோ, முறையோ எண்டு குளறுது.

பிக்கர்மார் நூல் விட்டுப் பாத்திருக்கினம். இவற்ற பலவீனம் இப்ப தெரிஞ்சுட்டுது.

இனி வெளையாட்டுத்தான்.:cool:

Link to comment
Share on other sites

ஊடக அறிக்கையிடல் தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு

 


ஊடக அறிக்கையிடல் தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு
 

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் இலங்கை இதழியல் கல்லூரி உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது, புதிய அரசியலமைப்பு சீர்திருத்தப் பணிகளை நிறுத்துமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடத்தின் செயற்குழு வலியுறுத்திய செய்தியை ஊடகங்கள் சில வௌியிட்டிருந்த விதம் தொடர்பில் பிரதமர் கருத்துக்களை வௌியிட்டார்.

 

http://newsfirst.lk/tamil/2017/10/112916/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.