Jump to content

இந்தோனேசியாவில் யாழ் இளைஞன் உயிரிழப்பு


Recommended Posts

இந்தோனேசியாவில் யாழ் இளைஞன் உயிரிழப்பு: ஈழ அகதிகள் நிர்க்கதி

 

இந்தோனேசிய தடுப்பு முகாமொன்றில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜெயதேவ் (வயது – 36) என்ற இளைஞன் இவ்வாறு வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த சுமார் 450 தமிழ் அகதிகள் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் உள்ளதாகவும், இவர்களில் சிலர் மூடிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து புலம்பெயர்ந்து தமிழக அகதி முகாமொன்றில் தங்கியிருந்த குறித்த இளைஞன், அங்கிருந்து படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டு இந்தோனேசிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.

ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்தினால், இந்தோனிஷியாவின் மிலான் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருவதாக ஐ.பி.சி.தமிழ் செய்திகளிடம் அழுது புலம்பியுள்ளனர்.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக எந்தவிதமான உதவிகள் இல்லாமலும் கவனிப்பார் இன்றியும் தமது பிள்ளைகளுடன் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டதாகவும் அவர்கள் கண்ணீர்மல்க கூறுகின்றனர். நோய்கள் ஏற்பட்டால் சிகிச்சைகள் கூட மறுக்கப்படுவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஏனைய நாடுகளைச் சேர்ந்த அகதிகள், மேற்குலக நாடுகளில், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளினால் குடியமர்த்தப்படுகின்றனர்.

ஆனால் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக தங்களை தொடர்ந்தும் அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் முறையிட்டுள்ளனர்.

பலர் தாயகத்தில் தங்கள் குடும்பங்களை விட்டு தனியாக வந்துள்ளனர். அவர்கள் எந்தவிதமான தொடர்புகளும் இன்றி தவிக்கின்றனர்.

தங்களில் பலருக்கு மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் வேறு சிலர் நடைப்பிணமாக திரிவதாகவும் கூறி அவர்கள் அழுது புலம்புகின்றனர்.

சேறு சகதிகள் நிறைந்த, மலசல கூட வசதிகள் அழுக்காக உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் ஐ.பி.சி.தமிழ் செய்திகளுக்கு வேதனைடன் கூறுகின்றனர்.

மனித சமூகம் இருக்க முடியாத இடத்தில், சுமார் ஐந்து ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த அகதிகள் தாயகத்தில் இருந்து படகுகள் மூலம் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/srilankan-tamil-boy-death-in-indonesiya

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்நாட்டுப்போரின்போதும் அல்லது வேறு காரணங்களுக்காகவோ சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு புறப்பட்டு பாதியில் வேற்றுநாடுகளில் தங்கவைக்கப்பட்டு கஸ்டத்தை அனுபவித்துவரும் இலங்கைத் தமிழர்களை ஐநா உதவியுடன் சுயவிருப்பின் அடிப்படையில் மீட்டுக்கொண்டுவந்து இலங்கையில் குடியேற்றுவதையும் தமது செயற்திட்டங்களில் ஒன்றாக மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் நடைமுறைப்படுத்தவேண்டும். அரசியல்வாதிகள் இதுபோன்ற விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் வெளிநாட்டு அகதிகளை குடியமர்த்துவதுபற்றி பேசிவருவது கவலையளிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்  மீண்டும் இலங்கை வர மாட்டார்கள் வேறு நாடாவது இவர்களை பொறுப்பேற்க்காத என்ன இந்த தமிழர் நலன் சார்ந்த அமைப்புக்கள் எத்தனை இருக்கிறது இவைகளால் ஏதும் செய்ய இயலாதா என்ன அவர்களை மீண்டும் இலங்கையில் கூட விரும்பியோரை குடியேற்ற நடவடிக்கை எடுக்க இய்லாதா என்ன??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.