Jump to content

சமஷ்­டியை வழங்­கினால் வடக்கில் என்ன நடக்கும்? : கறுப்­பு­பட்டி போராட்டம் சிறந்த ஒத்­திகை என்­கிறார் கெஹ­லிய


Recommended Posts

சமஷ்­டியை வழங்­கினால் வடக்கில் என்ன நடக்கும்? : கறுப்­பு­பட்டி போராட்டம் சிறந்த ஒத்­திகை என்­கிறார் கெஹ­லிய

keheliya1-38b054e3e67e71cbb36fcebe7f50291836096f85.jpg

 

(ரொபட் அன்­டனி)

சமஷ்டி முறை­மையில் நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு கண் டால் என்ன நடக்கும் என்­ப­தற்­கான ஒரு ஒத்­தி­கை­யையே நாம் கடந்த

சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்தில் கண்டோம். வடக்கு முத­லமைச்­ச­ருக்கு

பொலிஸ் அதி­காரம் இருந்­தி­ருந்தால் அன்று என்ன நடந்­தி­ருக்கும் என்­பதை எம்மால் புரிந்­து­கொள்ள முடி­கின்­றது என்று

 கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்தர் பாரா­ளு­மன்ற

உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார்.

அத்­துடன் ஒரு­மித்த நாடு என்­பது சமஷ்­டிக்கு ஒப்­பா­ன­தாகும். எனவே இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அர­சி­ய­ல­மைப்பை தயா­ரித்து சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்­புக்கு விடு­வது அபா­ய­க­ர­மா­ன­தாகும். இது வெற்­றி­ய­டைந்­தாலும் தோல்­வி­ய­டைந்­தாலும் அது நாட்டின் ஒற்­று­மைக்கு பாத­க­மாக அமையும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கடந்த சனிக்­கி­ழமை ஜனா­தி­ப­தியின் யாழ். விஜ­யத்­திற்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆர்ப்­பாட்டம் மற்றும் ஒரு­மித்த நாடு என்ற முறைமை என்­பன தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல இந்த விடயம் குறித்து மேலும் கூறு­கையில்;

கடந்த சனிக்­கி­ழமை ஜனா­தி­பதி யாழ்ப்­பா­ணத்­திற்கு சென்­ற­போது அவ­ருக்கு எதி­ராக கறுப்­புக்­கொடி ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இந்த ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்ட சம்­ப­வ­மா­னது எமக்கு பல்­வேறு செய்­தி­களை வலி­யு­றுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கி­றது.

அதா­வது பொலிஸ் அதி­காரம் இல்­லா­ம­லேயே வடக்கு மாகாண அர­சி­யல்­வா­திகள் இவ்­வாறு நடந்­து­கொள்­வதை எம்மால் அவ­தா­னிக்க முடிந்­தது. இந்­நி­லையில் மாகா­ண­ச­பை­க­ளுக்கு பொலிஸ் அதி­காரம் வழங்­கப்­பட்டால் என்ன நடக்கும் என்­பதை எம்மால் புரிந்­து­கொள்ள முடி­கின்­றது.

வடக்கு முத­ல­மைச்­ச­ருக்கு பொலிஸ் அதி­காரம் இருந்­தி­ருந்தால் கடந்த சனிக்­கி­ழமை என்ன நடந்­தி­ருக்கும் என்­ப­தனை நாம் நினைத்துப் பார்க்­க­வேண்டும். ஒரு­வேளை ஜனா­தி­ப­திக்கு வட­மா­கா­ணத்­திற்கு செல்ல முடி­யாத நிலை­மை­கூட ஏற்­பட்­டி­ருக்­கலாம்.

இத­னால்தான் பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் மாகா­ண­ச­பை­க­ளுக்கு வழங்­கப்­பட முடி­யா­தவை என நாங்கள் கூறி­வ­ரு­கின்றோம்.

மேலும் ஒரு­மித்த நாடு என்ற விட­யத்தைக் கூறி அர­சாங்கம் நாட்டு மக்­களை ஏமாற்­று­கி­றது. ஒற்­றை­யாட்சி எனும் பொழுது அந்த நாடு தொடர்­பான முழு­மை­யான சட்­டங்­களும் மத்­திய அர­சாங்­கத்­தினால் நிறை­வேற்­றப்­படும். ஆனால் ஒரு­மித்த நாடு அல்­லது ஒற்­றை­யாட்சி தவிர்ந்த ஏனைய முறை­மைகள் வரும்­போது மாநி­லங்கள் சட்­டங்­களை நிறை­வேற்றி மத்­திய அர­சாங்­கத்­திற்கு அறி­விக்கும் நிலைமை ஏற்­ப­டலாம். அதனால் தான் நாங்கள் ஒற்­றை­யாட்சி முறை­மை­யி­லேயே நாடு நீடிக்­க­வேண்டும் என வலி­யு­றுத்­து­கிறோம்.

ஒரு­மித்த நாடு என்­பது அல­கு­களின் கூட்­டி­ணைவை குறிக்­கின்­றது. எனவே இது ஒற்­றை­யாட்­சி­யா­காது. இதனை வைத்து மக்­களை ஏமாற்ற அர­சாங்கம் முற்­ப­டக்­கூ­டாது.

இதே­வேளை இவ்­வாறு ஒரு­மித்த நாடு என்ற அடிப்­ப­டையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­பட்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு விட­யப்­பட்டால் நிச்­சயம் அது மக்­களால் தோற்­க­டிக்­கப்­படும். ஆனால் இந்த சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் வெற்றி ஏற்­பட்­டாலும் தோல்வி ஏற்­பட்­டாலும் அது கூட்­ட­மைப்­பிற்கு வெற்­றி­யா­கவே அமையும். காரணம் இதில் வெற்­றி­பெற்றால் கூட்­ட­மைப்பு எதிர்­பார்த்த ஆட்சி முறைமை நாட்டில் இடம்­பெறும்.

ஒரு­வேளை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு தோல்வி ஏற்­பட்டால் அதனை வைத்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஐக்­கி­ய­நா­டுகள் பொதுச்­ச­பையில் ஒரு பிரே­ர­ணையை முன்­வைக்கும். அதா­வது 70 வரு­ட­கா­ல­மாக நாங்கள் அர­சியல் அதி­கா­ரத்­திற்­காக போராடி வரு­கின்றோம் ஆனால் கிடைக்­க­வில்லை தற்­போது குறைந்­த­பட்ச அதிகாரமுறையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் வடக்கு, கிழக்கில் 95 வீதமான மக்கள் இதனை ஆதரித்துள்ளனர். எனவே எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தாருங்கள் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கையை முன்வைக்கும் நிலைமை காணப்படுகின்றது. இது நாட்டுக்கு பாரிய பாதகத்தை ஏற்படுத்தும். எனவே இதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவதும் அபாயகரமானதுதான் என்றார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-19#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலீஸ் அதிகாரத்துக்கு தான் போராடடம்... வெண்ணெய்...tw_angry:

இதெல்லாம் அரசியலில இருக்குது. ஆஸ்திரேலியாவில், அரச விருந்தினரய்ப் போய் தண்ணிய போட்டு, கதவு என்று நினைத்து, ஹோட்டல் பால்கனியில் பாய்ந்து காலை முறித்த மனிதர்.:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.