Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீபா­வளி தின அடி­த­டி­க­ளில் 29 பேர் காயம்


Recommended Posts

தீபா­வளி தின அடி­த­டி­க­ளில் 29 பேர் காயம்

 
தீபா­வளி தின  அடி­த­டி­க­ளில் 29 பேர் காயம்
 

யாழ்ப்­பா­ணத்­தில் தீபா­வளி தின­மான நேற்று ஒரே நாளில் மட்­டும் அடி தடி, வாள்­வெட்­டுக்­க­ளில் காய­ம­டைந்த 29 பேர் வைத்­தி­ய­சா­லை­க­ளில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் 23 பேரும், பரு­த்தித்­துறை மந்­திகை ஆதார வைத்­தி­ய­சா­லை­யில் 6 பேரும் நேற்­றுச் சேர்க்­கப்­பட்­ட­னர்.

வட்­டுக்­கோட்­டை­யில் இருந்து 3பேரும், சாவல்­காட்­டுப் பகு­தி­யில் இருந்து 5 பேரும், மானிப்­பா­யில் இருந்து 2 பேரும், நாவற்­கு­ழிப் பகு­தி­யில் இருந்து 3 பேரும், மாத­கல் இருந்து 2 பேரும் யாழ்ப்­பாண போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

வேறு இடங்­க­ளி­லி­ருந்து 8 பேரும் காயங்­க­ளு­டன் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யின் 24ஆம் விடு­தி­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

பரு­தித்­துறை சுப்­பர் மடத்­தைச் சேர்ந்த 3பேரும், கர­வெட்­டி­யைச் சேர்ந்த 2பேரும், வர­ணி­யைச் சேர்ந்த ஒரு­வ­ரு­மாக 6 பேர் மந்­திகை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

வாள்­வெட்டு, கத்­திக்­குத்து, கொட்­டன்­க­ளால் தாக்­கு­தல், போத்­த­லால் குத்­தி­யமை உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் இவர்­கள் காய­ம­டைந்­துள்­ள­னர்.

http://newuthayan.com/story/38237.html

Link to comment
Share on other sites

தீபா­வளி பட்­டா­சுத் தர்க்­கம் வந்து முடிந்­தது வாள்வெட்­டில்

 

தீபா­வளி தின­மான நேற்று வெடி­கொளுத்­தி­ய­தில் ஏற்­பட்ட வாய்த் தர்க்­கம் வாள்­வெட்­டில் முடிந்­தது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

பரு­த்தித்­துறை சுப்­பர்­ம­டம் பகு­தி­யில் நேற்­று­ மாலை 5.30 மணிக்கு இடம்­பெற்ற இந்­தச் சம்­ப­வத்­தில் காய­ம­டைந்­த­வர்­கள் என்று தெரி­வித்து மூவர் மந்­திகை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

‘‘சுப்­பர்­ம­டப் பகு­தி­யில் இளை­ஞர்­கள் சிலர் வெடி­கொ­ழுத்தி விளை­யா­டி­னர். அங்­கி­ருந்த வீடு ஒன்­றி­னுள்­ளும் வெடி­கள் வீழ்ந்­துள்­ளன. வீட்­டுக்­குள் ஏன் வெடி­கொ­ழுத்­திப் போட்­டீர்­கள் என்று இளை­ஞர்­க­ளி­டம் வீட்டு உரி­மை­யா­ளர் கேட்­டுள்­ளார். இது வாய்த்­தர்க்­க­மாக மாறி­யது. திடீ­ரென வீட்டு உரி­மை­யா­ள­ரை­யும் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளை­யும் இளை­ஞன் ஒரு­வன் வாளால் வெட்­டி­யுள்­ளான். மூவர் இதில் காய­ம­டைந்­த­னர். மூவ­ரும் மந்­திகை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். வாளால் வெட்­டிய இளை­ஞன் உள்­ளிட்ட தர்க்­கத்­தில் ஈடு­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­ப­டும் மூன்று இளை­ஞர்­களை தேடி­வ­ரு­கின்­றோம்’’ என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

http://newuthayan.com/story/38513.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

வாள்­வெட்டு, கத்­திக்­குத்து, கொட்­டன்­க­ளால் தாக்­கு­தல், போத்­த­லால் குத்­தி­யமை உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் இவர்­கள் காய­ம­டைந்­துள்­ள­னர்.

அப்பப்ப பியொ(BIO) ஆயுதங்களையும் பாவிக்கினம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அப்பப்ப பியொ(BIO) ஆயுதங்களையும் பாவிக்கினம்.:grin:

ஒ அது வேறயா நல்ல பெருநாளில் தண்ணியை போட்டு ரகளைபண்ணாட்டால் அவன் தமிழன் இல்லையே :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒ அது வேறயா நல்ல பெருநாளில் தண்ணியை போட்டு ரகளைபண்ணாட்டால் அவன் தமிழன் இல்லையே :cool:

கொண்டாட்ட நாளுகளிலை வெள்ளையள் செய்யுற அட்டகாசம் இஞ்சையும் குறைவில்லை..... என்ன ஒண்டு வாள்,கொட்டன்,துவக்கு ஒண்டுமில்லை....மற்றும் படி ஆஸ்பத்திரி ஃபுல்.:grin:

எதுக்கெடுத்தாலும் தமிழனை தாழ்த்தப்படாது கண்டியளோ.tw_blush:

Link to comment
Share on other sites

இப்பத்த பெடியல்கள் நிறைய கெட்டுப் போய் விட்டார்கள்.

நாங்கள் எல்லாம் படிக்கிற காலத்தில எங்களோட கூட படிக்கிற பெட்டையள் வீட்டுக்குள் தான் வெடியை கொளுத்திப் போடுவம். இல்லாட்டி இருக்கவே இருக்குது போஸ்ட் பொக்ஸ். இவர்கள் என்னடாவென்றால் சும்மா ஆட்டையோ வீட்டுக்குள் வெடியை கொளுத்தி போட்டிரிக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைத்தலைமை நாடுகள் இணைந்து பெற்றுக் கொடுத்த தமிழர்களுக்கான சன நாய் அகம் இது.

ஒரு இனம் நாடு.. கஞ்சா.. விபச்சாரம்.கொலை...வன்முறை.. களவு கொள்ளை..  மற்றும் விபத்துக்கள்.. பிரச்சனை இன்றி வாழ்ந்தால்.. அது பயங்கரவாதமாகும். இப்படி.. கஞ்சா.. விபச்சாரம்.. கொலை.. களவு.. கொள்ளை.. விபத்துன்னு வாழ்வது தான் சன நாயகப் பண்புகளாகும்.

இது தான் சன நாயகம் என்று இதை உருவாக்க... பல தசாப்தங்களாக எதிரிகளுக்கு காட்டிக்கொடுத்தோரும்.. கட்டுரை வரைந்தோரும்.. கடிதம் எழுதியோரும்.. இப்போ.. சன நாயகத்தின் அதி உச்ச பண்புகளை தமிழகள்  அனுபவிப்பதை இட்டு மிக மகிழ்ச்சி அடைவார்கள்.

----

என்ன ஒரு உலகம்..??! :rolleyes:tw_anguished:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

கொண்டாட்ட நாளுகளிலை வெள்ளையள் செய்யுற அட்டகாசம் இஞ்சையும் குறைவில்லை..... என்ன ஒண்டு வாள்,கொட்டன்,துவக்கு ஒண்டுமில்லை....மற்றும் படி ஆஸ்பத்திரி ஃபுல்.:grin:

எதுக்கெடுத்தாலும் தமிழனை தாழ்த்தப்படாது கண்டியளோ.tw_blush:

நான் எங்க தாழ்த்தினான் தமிழன் லேசு பட்ட ஆள் கிடையாது ஆளப் போறான் தமிழன் என்றதுக்கே 60 அடில கட்டவுட்ட வச்ச ஆட்களப்பா மற்றும் தண்ணிய போட்டு தகராறு பண்ணாட்டா அவன் தமிழன் கிடையாது  இன்னும் இருக்கு தை பொங்கல்  சித்திரை வருட பிறப்பு அதுக்கிடையில் கிறிஸ்மஸ் சும் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nedukkalapoovan said:

இணைத்தலைமை நாடுகள் இணைந்து பெற்றுக் கொடுத்த தமிழர்களுக்கான சன நாய் அகம் இது.

ஒரு இனம் நாடு.. கஞ்சா.. விபச்சாரம்.கொலை...வன்முறை.. களவு கொள்ளை..  மற்றும் விபத்துக்கள்.. பிரச்சனை இன்றி வாழ்ந்தால்.. அது பயங்கரவாதமாகும். இப்படி.. கஞ்சா.. விபச்சாரம்.. கொலை.. களவு.. கொள்ளை.. விபத்துன்னு வாழ்வது தான் சன நாயகப் பண்புகளாகும்.

இது தான் சன நாயகம் என்று இதை உருவாக்க... பல தசாப்தங்களாக எதிரிகளுக்கு காட்டிக்கொடுத்தோரும்.. கட்டுரை வரைந்தோரும்.. கடிதம் எழுதியோரும்.. இப்போ.. சன நாயகத்தின் அதி உச்ச பண்புகளை தமிழகள்  அனுபவிப்பதை இட்டு மிக மகிழ்ச்சி அடைவார்கள்.

----

என்ன ஒரு உலகம்..??! :rolleyes:tw_anguished:tw_angry:

விடுதலைப்புலிகளின் காலத்தில்.....
அவர்களை..
கொலைகாரர்களாக விமர்சித்தவர்களை காணவில்லை.
போதைவஸ்து கடத்துபவர்கள் என விமர்சித்தவர்களை காணவில்லை.
தமிழினத்தின் வன்முறையாளர்கள் என விமர்சித்தவர்களை காணவில்லை.
சிறுவர் இராணுவம் என கூக்குரலிட்டவர்களை வித்யாவின் கொடூரத்தில் காணவில்லை.

இத்தனைக்கும்.... 
புலிகளின் ஆட்சி முடிந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள்  ஆகின்றது.

இன்று தமிழர் பிரதேசங்களில் பாலாறும் தேனாறுமா  ஓடுகின்றது?


புலிகளை சாய்த்துவிட்டோம் என புளகாங்கிதம்  அடைபவர்களுக்கு இதெல்லாம் புரியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இது அந்த விமர்சகர்களுக்கு கிடைத்த வெற்றி. அந்த  திருப்தியில் அவர்கள்அமைதியாகி விட்டார்கள். இதெல்லாம் நடக்கவில்லையே என்கின்ற ஏக்கத்தினாற்தான் அவர்களெல்லாம் அவ்வாறு விமர்சித்திருந்தார்கள்.   அவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடுவதில் பிஸி. அவர்களை இங்கு அழைத்து வீணான  தொந்தரவு செய்யாதீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.