Jump to content

தீபா­வளி தின அடி­த­டி­க­ளில் 29 பேர் காயம்


Recommended Posts

தீபா­வளி தின அடி­த­டி­க­ளில் 29 பேர் காயம்

 
தீபா­வளி தின  அடி­த­டி­க­ளில் 29 பேர் காயம்
 

யாழ்ப்­பா­ணத்­தில் தீபா­வளி தின­மான நேற்று ஒரே நாளில் மட்­டும் அடி தடி, வாள்­வெட்­டுக்­க­ளில் காய­ம­டைந்த 29 பேர் வைத்­தி­ய­சா­லை­க­ளில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் 23 பேரும், பரு­த்தித்­துறை மந்­திகை ஆதார வைத்­தி­ய­சா­லை­யில் 6 பேரும் நேற்­றுச் சேர்க்­கப்­பட்­ட­னர்.

வட்­டுக்­கோட்­டை­யில் இருந்து 3பேரும், சாவல்­காட்­டுப் பகு­தி­யில் இருந்து 5 பேரும், மானிப்­பா­யில் இருந்து 2 பேரும், நாவற்­கு­ழிப் பகு­தி­யில் இருந்து 3 பேரும், மாத­கல் இருந்து 2 பேரும் யாழ்ப்­பாண போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

வேறு இடங்­க­ளி­லி­ருந்து 8 பேரும் காயங்­க­ளு­டன் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யின் 24ஆம் விடு­தி­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

பரு­தித்­துறை சுப்­பர் மடத்­தைச் சேர்ந்த 3பேரும், கர­வெட்­டி­யைச் சேர்ந்த 2பேரும், வர­ணி­யைச் சேர்ந்த ஒரு­வ­ரு­மாக 6 பேர் மந்­திகை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

வாள்­வெட்டு, கத்­திக்­குத்து, கொட்­டன்­க­ளால் தாக்­கு­தல், போத்­த­லால் குத்­தி­யமை உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் இவர்­கள் காய­ம­டைந்­துள்­ள­னர்.

http://newuthayan.com/story/38237.html

Link to comment
Share on other sites

தீபா­வளி பட்­டா­சுத் தர்க்­கம் வந்து முடிந்­தது வாள்வெட்­டில்

 

தீபா­வளி தின­மான நேற்று வெடி­கொளுத்­தி­ய­தில் ஏற்­பட்ட வாய்த் தர்க்­கம் வாள்­வெட்­டில் முடிந்­தது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

பரு­த்தித்­துறை சுப்­பர்­ம­டம் பகு­தி­யில் நேற்­று­ மாலை 5.30 மணிக்கு இடம்­பெற்ற இந்­தச் சம்­ப­வத்­தில் காய­ம­டைந்­த­வர்­கள் என்று தெரி­வித்து மூவர் மந்­திகை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

‘‘சுப்­பர்­ம­டப் பகு­தி­யில் இளை­ஞர்­கள் சிலர் வெடி­கொ­ழுத்தி விளை­யா­டி­னர். அங்­கி­ருந்த வீடு ஒன்­றி­னுள்­ளும் வெடி­கள் வீழ்ந்­துள்­ளன. வீட்­டுக்­குள் ஏன் வெடி­கொ­ழுத்­திப் போட்­டீர்­கள் என்று இளை­ஞர்­க­ளி­டம் வீட்டு உரி­மை­யா­ளர் கேட்­டுள்­ளார். இது வாய்த்­தர்க்­க­மாக மாறி­யது. திடீ­ரென வீட்டு உரி­மை­யா­ள­ரை­யும் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளை­யும் இளை­ஞன் ஒரு­வன் வாளால் வெட்­டி­யுள்­ளான். மூவர் இதில் காய­ம­டைந்­த­னர். மூவ­ரும் மந்­திகை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். வாளால் வெட்­டிய இளை­ஞன் உள்­ளிட்ட தர்க்­கத்­தில் ஈடு­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­ப­டும் மூன்று இளை­ஞர்­களை தேடி­வ­ரு­கின்­றோம்’’ என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

http://newuthayan.com/story/38513.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

வாள்­வெட்டு, கத்­திக்­குத்து, கொட்­டன்­க­ளால் தாக்­கு­தல், போத்­த­லால் குத்­தி­யமை உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் இவர்­கள் காய­ம­டைந்­துள்­ள­னர்.

அப்பப்ப பியொ(BIO) ஆயுதங்களையும் பாவிக்கினம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அப்பப்ப பியொ(BIO) ஆயுதங்களையும் பாவிக்கினம்.:grin:

ஒ அது வேறயா நல்ல பெருநாளில் தண்ணியை போட்டு ரகளைபண்ணாட்டால் அவன் தமிழன் இல்லையே :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒ அது வேறயா நல்ல பெருநாளில் தண்ணியை போட்டு ரகளைபண்ணாட்டால் அவன் தமிழன் இல்லையே :cool:

கொண்டாட்ட நாளுகளிலை வெள்ளையள் செய்யுற அட்டகாசம் இஞ்சையும் குறைவில்லை..... என்ன ஒண்டு வாள்,கொட்டன்,துவக்கு ஒண்டுமில்லை....மற்றும் படி ஆஸ்பத்திரி ஃபுல்.:grin:

எதுக்கெடுத்தாலும் தமிழனை தாழ்த்தப்படாது கண்டியளோ.tw_blush:

Link to comment
Share on other sites

இப்பத்த பெடியல்கள் நிறைய கெட்டுப் போய் விட்டார்கள்.

நாங்கள் எல்லாம் படிக்கிற காலத்தில எங்களோட கூட படிக்கிற பெட்டையள் வீட்டுக்குள் தான் வெடியை கொளுத்திப் போடுவம். இல்லாட்டி இருக்கவே இருக்குது போஸ்ட் பொக்ஸ். இவர்கள் என்னடாவென்றால் சும்மா ஆட்டையோ வீட்டுக்குள் வெடியை கொளுத்தி போட்டிரிக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைத்தலைமை நாடுகள் இணைந்து பெற்றுக் கொடுத்த தமிழர்களுக்கான சன நாய் அகம் இது.

ஒரு இனம் நாடு.. கஞ்சா.. விபச்சாரம்.கொலை...வன்முறை.. களவு கொள்ளை..  மற்றும் விபத்துக்கள்.. பிரச்சனை இன்றி வாழ்ந்தால்.. அது பயங்கரவாதமாகும். இப்படி.. கஞ்சா.. விபச்சாரம்.. கொலை.. களவு.. கொள்ளை.. விபத்துன்னு வாழ்வது தான் சன நாயகப் பண்புகளாகும்.

இது தான் சன நாயகம் என்று இதை உருவாக்க... பல தசாப்தங்களாக எதிரிகளுக்கு காட்டிக்கொடுத்தோரும்.. கட்டுரை வரைந்தோரும்.. கடிதம் எழுதியோரும்.. இப்போ.. சன நாயகத்தின் அதி உச்ச பண்புகளை தமிழகள்  அனுபவிப்பதை இட்டு மிக மகிழ்ச்சி அடைவார்கள்.

----

என்ன ஒரு உலகம்..??! :rolleyes:tw_anguished:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

கொண்டாட்ட நாளுகளிலை வெள்ளையள் செய்யுற அட்டகாசம் இஞ்சையும் குறைவில்லை..... என்ன ஒண்டு வாள்,கொட்டன்,துவக்கு ஒண்டுமில்லை....மற்றும் படி ஆஸ்பத்திரி ஃபுல்.:grin:

எதுக்கெடுத்தாலும் தமிழனை தாழ்த்தப்படாது கண்டியளோ.tw_blush:

நான் எங்க தாழ்த்தினான் தமிழன் லேசு பட்ட ஆள் கிடையாது ஆளப் போறான் தமிழன் என்றதுக்கே 60 அடில கட்டவுட்ட வச்ச ஆட்களப்பா மற்றும் தண்ணிய போட்டு தகராறு பண்ணாட்டா அவன் தமிழன் கிடையாது  இன்னும் இருக்கு தை பொங்கல்  சித்திரை வருட பிறப்பு அதுக்கிடையில் கிறிஸ்மஸ் சும் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nedukkalapoovan said:

இணைத்தலைமை நாடுகள் இணைந்து பெற்றுக் கொடுத்த தமிழர்களுக்கான சன நாய் அகம் இது.

ஒரு இனம் நாடு.. கஞ்சா.. விபச்சாரம்.கொலை...வன்முறை.. களவு கொள்ளை..  மற்றும் விபத்துக்கள்.. பிரச்சனை இன்றி வாழ்ந்தால்.. அது பயங்கரவாதமாகும். இப்படி.. கஞ்சா.. விபச்சாரம்.. கொலை.. களவு.. கொள்ளை.. விபத்துன்னு வாழ்வது தான் சன நாயகப் பண்புகளாகும்.

இது தான் சன நாயகம் என்று இதை உருவாக்க... பல தசாப்தங்களாக எதிரிகளுக்கு காட்டிக்கொடுத்தோரும்.. கட்டுரை வரைந்தோரும்.. கடிதம் எழுதியோரும்.. இப்போ.. சன நாயகத்தின் அதி உச்ச பண்புகளை தமிழகள்  அனுபவிப்பதை இட்டு மிக மகிழ்ச்சி அடைவார்கள்.

----

என்ன ஒரு உலகம்..??! :rolleyes:tw_anguished:tw_angry:

விடுதலைப்புலிகளின் காலத்தில்.....
அவர்களை..
கொலைகாரர்களாக விமர்சித்தவர்களை காணவில்லை.
போதைவஸ்து கடத்துபவர்கள் என விமர்சித்தவர்களை காணவில்லை.
தமிழினத்தின் வன்முறையாளர்கள் என விமர்சித்தவர்களை காணவில்லை.
சிறுவர் இராணுவம் என கூக்குரலிட்டவர்களை வித்யாவின் கொடூரத்தில் காணவில்லை.

இத்தனைக்கும்.... 
புலிகளின் ஆட்சி முடிந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள்  ஆகின்றது.

இன்று தமிழர் பிரதேசங்களில் பாலாறும் தேனாறுமா  ஓடுகின்றது?


புலிகளை சாய்த்துவிட்டோம் என புளகாங்கிதம்  அடைபவர்களுக்கு இதெல்லாம் புரியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இது அந்த விமர்சகர்களுக்கு கிடைத்த வெற்றி. அந்த  திருப்தியில் அவர்கள்அமைதியாகி விட்டார்கள். இதெல்லாம் நடக்கவில்லையே என்கின்ற ஏக்கத்தினாற்தான் அவர்களெல்லாம் அவ்வாறு விமர்சித்திருந்தார்கள்.   அவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடுவதில் பிஸி. அவர்களை இங்கு அழைத்து வீணான  தொந்தரவு செய்யாதீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌வ‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.