Jump to content

தென் மாகாணத்தின் சில பகுதிகளில் வெடிப்புச்சத்தம்


Recommended Posts

தென் மாகாணத்தின் சில பகுதிகளில் வெடிப்புச்சத்தம்

 

தென் மாகாணத்தின் சில பகுதிகளில் வெடிப்புச்சத்தம்
 

தென் மாகாணத்தின் சில பகுதிகளில் இன்று இரவு 9 மணியளவில் வெடிப்புச்சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, கடற்கரையை அண்மித்த பல பகுதிகளில் பிரகாசமான வௌிச்சத்தினை அவதானிக்க முடிந்ததாகவும் சிலர் கூறினர்.

இது குறித்து மேலதிகத் தகவல்களை எதிர்பாருங்கள்…

 

http://newsfirst.lk/tamil/2017/10/தென்-மாகாணத்தின்-சில-பகு/

 

 

தென்னிலங்கை வானில் திடீரென தோன்றிய தீப்பிழம்பு; பதறியடித்து ஓட்டமெடுத்த மக்கள்!

 

இலங்கையின் தெற்கே மாத்தறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் பாரிய வெளிச்சத்துடனான சத்தமொன்று கேட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள் பதறித்துடித்து வீடுகளுக்குள்ளும் கட்டடங்களுக்குள்ளும் ஓடியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

தென்னிலங்கை வானில் திடீரென தோன்றிய தீப்பிழம்பு; பதறியடித்து ஓட்டமெடுத்த மக்கள்!

இது ஒரு வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுக்கள் பிரவேசிப்பதற்கான முன்னாயத்தமாக இருக்கலாம் என அங்குள்ள மக்கள் கருதுகின்றனர். இதனால் குறித்த பகுதிகளில் அமைதியின்மை நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிபிட்டுள்ளார்.

இது இவ்வாறு இருக்கையில், குறித்த சம்பவம் வேற்று கிரகவாசிகளின் பிரவேசமா அல்லது வேறு ஏதேனும் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/The-fire-appeared-in-the-sky

 

Meteor explosion cause for bright light, sound in SP - Prof. Jayaratne

image_1508352238-c27c97768d.jpgColombo University Physical Science Department Prof. Chandana Jayaratne confirmed that the bright light and sound which was heard from the Southern Province (SP) this evening was because of an explosion caused by a meteor.

Speaking to the Daily Mirror he said the explosion was known as a 'fireball explosion' and occurs after an astroid enters the earth’s atmosphere.

“The astroid could be a size of 50 centimetres. Every astroid enters the earth’s photosphere at a speed of 65 kilometers per second. With that speed one side of the astroid gets heated up due to friction and the other side does not, therefore causing an explosion,” Prof Jayaratne said.

“People who saw the asteroid entering our atmosphere at about 8.30p.m, saw different colour lights. Most of it was green and yellow due to its elements reacting to the heat,” he said.

“The explosion could have caused damage, but fortunately it broke into small pieces. People should not touch parts of the astroid because those astroid can contain radiation which cause harm to the human body and my contains unknown bacteria,” he warned.

The light of the astroid was seen in several parts of the country including the Southern Province.

Military Spokesman and Army Media Director Roshan Seneviratne, said they were yet to detect any incidents caused by the light. The Sri Lanka Navy and Air Force also confirmed that they did not detect any incidents. (Chaturanga Pradeep)

 

 

 

http://www.dailymirror.lk/article/Meteor-explosion-cause-for-bright-light-sound-in-SP-Prof-Jayaratne-138768.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயமாய் இருக்கு நாளைக்கு இதை வைச்சு நம்ம அரைகுறை கொப்பி பேஸ்ட் செய்தி  கூட்டம்  cnn effectக்கு கதை அடிக்கப்போறதை நினைத்து  .

Link to comment
Share on other sites

காரணம் வெளியாகியது ! தெற்கில் பாரிய சத்தத்துடன் வெடித்த மர்மப்பொருள் என்ன ?

 

 

இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் நேற்றையதினம் இரவுவேளையில் பிரகாசமான ஒளியுடன் பாரிய சத்தமொன்று கேட்டதாக அப்பகுதி மக்கள் பலரும் தெரிவித்திருந்த நிலையில், குறித்த சத்தத்திற்கும் வெளிச்சத்திற்கும் காரணத்தை ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

meteor-explosion.jpg

விண்கல் ஒன்றின் பாகம் எனக் கருதப்படும் மர்மப்பொருள் ஒன்று மாத்தறை பிரதேசத்தில் நேற்று இரவு வீழ்ந்துள்ளதாக ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.  

 

இதுதொடர்பில் விளக்கமளித்துள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன, குறித்த பிரகாசமான ஒளியும் பாரிய சத்தமும் எரிகற்களின் வீழ்ச்சியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒரு மர்மப்பொருள் வானில் இருந்து வீழ்வதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். 

விண்ணில் இருந்து ஏதேனும் ஒரு பொருள் புமியை நோக்கி விழும் போது வெளிச்சம் மற்றும் சத்தம் ஏற்படும் என பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இரவு 8.45 முதல் 9 மணி வரையில் இந்த சத்தம் ஒளியும் தென்பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இதனை காலி, மாத்தறை, அக்குரஸ்ஸ மற்றும் தெனியாய ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானித்துள்ளனர்.

தென் கடற்பரப்பிற்கு அருகில் வசிக்கும் மக்கள் வானில் இருந்து மர்மமான ஒளி ஒன்று வீழ்வதை அவதானித்துள்னர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உறுதிசெய்துள்ள, அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம், காலி மற்றும் மாத்தறை பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிறிய அளவான நில அதிர்வையும் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, புவியின் வளிமண்டலத்தில் திடீரென நுழைந்த விண்கல் ஒன்றின் பாகம் எனக் கருதப்படும் மர்மப்பொருள் ஒன்று மாத்தறை பிரதேசத்தில் நேற்று இரவு வீழ்ந்துள்ளது.

 

குறித்த எரிகல்லை பொது மக்கள் அணுக முயற்சிக்க வேண்டாம் எனவும் அது பற்றி தகவல் தெரிவிக்க 0714800800 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவலை வழங்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

http://www.virakesari.lk/article/25975

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி கொண்டாடியிருப்பார் இராவணன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.