Jump to content

கொழும்பு றோயல் கல்லூரியை வீழ்த்தியது யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி


Recommended Posts

கொழும்பு றோயல் கல்லூரியை வீழ்த்தியது யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி

 

21316254_1121281688002575_1805261200259028646_o.jpg

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி அணியினை 10 ஓட்டங்களால் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி கிரிக்கெட் அணி.

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவு 2இன் (டிவிஷன் ll) குழு D அணிகளுக்கான ஒரு போட்டியாக இவ்விரு அணிகளும் மோதிய இந்த ஆட்டம் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

இப்போட்டியில் நணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு றோயல் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர்களின் விக்கெட்டுக்களை றோயலின் பந்து வீச்சாளர்கள் விரைவாகத் தகர்த்தெறிந்தனர்.

உதிரிகளாக பெற்ற 17 ஓட்டங்கள், 10ஆம் இலக்க வீரர் அபிலக்சனின் 16 ஓட்டங்கள், அணித் தலைவர் யதுசனின் 12 ஓட்டங்கள் என்பவற்றுடன் 29.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த சென். ஜோன்ஸ் அணியினர் முதல் இன்னிங்சுக்காக  வெறுமனே 65 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர்.

பந்து வீச்சில் இடதுகை லெக் ஸ்பின் பந்து வீச்சாளர் மஞ்சுள பெரேரா 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், வலது கை வேகப்பந்து வீச்சாளர் கவிந்து பத்திரன 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் தமது முதல் இனிங்சுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த றோயல் கல்லூரியின் ஆரம்ப விக்கெட்டுகள் விரைவாக வீழ்த்தப்பட்டன. 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள் என்ற நிலையிலிருந்த றோயல் கல்லூரிக்கு 5ஆவது விக்கெட்டிற்காக இணைந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கஜான் திஸ்ஸாநாயக்க மற்றும் கவிந்து சத்துரங்க ஆகியோர் அரைச்சத இணைப்பாட்டத்தினை பெற்றிருந்த வேளையில் கவிந்து சத்துரங்க (29) ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரிலேயே கஜான் திஸ்ஸாநாயக்க (30) ரன் அவுட் முறை மூலம் ஆட்டமிழக்க, றோயல் கல்லூரியின் ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வந்த வீரர்கள் ஒற்றையிலக்கத்தில் ஆட்டமிழக்க, உதிரிகளாக 19 ஓட்டங்களைப் பெற்ற றோயல் கல்லூரி அணி 33.2 ஓவர்களில் 111 ஓட்டங்களைப் பெற்று 46 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

மீள வேண்டிய கட்டாயத்துடன் இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் விக்கெட்டுக்கள் ஒரு முனையில் சரிக்கப்பட்ட போதும், மறுமுனையில் சரோபன் 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

68 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 6ஆவது  விக்கெட்டிற்காக யதுசன் மற்றும் அபினாஷ் பெற்றுக்கொடுத்த அரைச்சத இணைப்பாட்டத்துடன் ஓட்ட எண்ணிக்கையினை அதிகரித்தது.

அவ்வணிக்காக 9ஆவது இலக்கத்தில் களம்புகுந்த பந்து வீச்சாளர் கபில்ராஜ் 12 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 30 ஓட்டங்களை அதிரடியாகப் பெற்றுக்கொடுத்தார். அவற்றின் நிறைவில் யாழ் தரப்பினர் 34.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் 3.3 ஓவர்கள் வீசிய கமில் மிஸ்ஸிற 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். தருச றுக்ஷான் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து 117 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களம்புகுந்த றோயல் கல்லூரி முதல் இரண்டு விக்கெட்டுகளையும் 25 ஓட்டங்களுக்கு இழந்திருந்தது.

எகன் சச்சித்த 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். கவிந்து சத்துரங்க ஒரு முனையில் நிதானமாகத் துடுப்பெடுத்தாட, மறுமுனையில் அபினாஷ், கபில்ராஜ், யதுசன் இணை விக்கெட்டுக்களைப் கைப்பற்றினர்.

கவிந்து சச்சித 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து 8ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அடுத்த இரண்டு விக்கெட்டுக்களும் அபினாஷின் பந்துவீச்சில் விரைவாக வீழ்த்தப்பட சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 10 ஓட்டங்களால் வரலாற்று வெற்றிபெற்று தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

சென். ஜோன்ஸ் கல்லூரி (முதல்  இன்னிங்ஸ்): 65/10 (29.1) – அபிலக்சன் 16*, யதுசன் 12, மஞ்சுள பெரேரா 4/13, கவிந்து பத்திரன 3/ 17

றோயல் கல்லூரி  (முதல் இன்னிங்ஸ்): 111/10 (33.2) – கஜான் திஸ்ஸநாயக்க 30,  தெவிந்து சேனாரத்ன 29, கபில்ராஜ் 6/ 39

சென் ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 163/10 (34.3) – செரோபன் 37, யதுசன் 32, கபில்ராஜ் 30, அபினாஷ் 29, கமில் மிஷ்ற 5/23, தரூச றுக்ஷான் 2/45

றோயல் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 107/10 (33) – கமில் மிஸாற 17, எகன் சச்சித 28, அபினாஷ் 6/32, யதுசன் 2/30, கபில்ராஜ் 2/ 34  

போட்டி முடிவுசென். ஜோன்ஸ் கல்லூரி 10 ஓட்டங்களால் வெற்றி

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.