Jump to content

கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்து செயற்பட்டால் தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகமாகவே அமையும்


Recommended Posts

கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்து செயற்பட்டால் தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகமாகவே அமையும்

 

கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்து செயற்பட்டால் தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகமாகவே அமையும்

 

 
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வெளியேறிச்சென்று தனித்துவமாக செயற்பட முனைவார்களானால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இன்று (18) மட்டக்களப்பு கண்ணகியம்மன் ஆலய வீதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

வடகிழக்கு தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.

ஒட்டு மொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பும் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதே உள்ளது.

வடகிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடுவதை மக்கள் யாரும் விரும்பவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்புகள் இருந்துவெளியேறி எந்த கட்சியாவது செயற்படுமானால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாக செயற்பாடாகவே அமையும்.

இன்று தேசிய அரசியல் கட்சிகள் உள்ளுராட்சி தேர்தலை கருத்தில்கொண்டு தங்களது அமைப்பாளர்களை பிரதேசங்களில் நியமித்து தமது அரசியலை வடகிழக்கில் பலப்படுத்திவரும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து நிற்குமானால் தமிழர்களின் பலம் உடையும் நிலையேற்படும்.

உள்ளுராட்சி சபை தேர்தல் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு முக்கியத்துவமாக தேர்தலாக உள்ளதுடன் அது ஒரு பலப்பரீட்சையாகவும் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=96570

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் மக்களை மீட்டெடுங்கள் கட்சிதானாகவே  மீண்டெழும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

வடகிழக்கு தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.

இவ்வளவு காலமும் இருந்து எண்ணத்தை வெட்டி கிழிச்ச நீங்கள்?

தரபட்ட சந்தர்ப்பம் முடியும் நேரம் இந்த கீறல் விழுந்த cd யை சுத்த விடுவீங்கள் என்று மக்களுக்கும் தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

வடகிழக்கு தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.

ஒட்டு மொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பும் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதே உள்ளது.

வடகிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடுவதை மக்கள் யாரும் விரும்பவில்லை.

அவர்களுக்கு தமிழர் தான் வோட்டுப்போடப் போகிறார்கள். தேர்தலில் மக்கள் விருப்பம் என்னவென்று அவர்களே தீர்மானிப்பார்கள். நீங்கள் ஒன்றும் ஆரூடம் சொல்லத் தேவையில்லை. மக்களுக்குத் தெரியும் யாரைத் தெரிவு செய்ய வேணுமென்று.  உங்களுக்கு இப்ப தேர்தல் பயத்தில உதறல் எடுத்து வாய் பிதற்றுவதற்கு மக்களை பகடைக் காயாகப் பாவிக்காதீர்கள். இவ்வளவு நாளும் மக்கள் நினைப்பு வரவில்லை இப்ப வருகுதாக்கும். இன்னும் மக்கள் தங்களுக்குத்தான் வாக்களிப்பினம் எண்டு கனவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே இந்த பேச்சை கேட்டு கேட்டு கேடு கெட்டு போனோம்  வியாழேந்திரன் நீங்களெல்லாம் தேர்தல் வந்தால் மட்டுமே கூவுகிறீர்கள்  மற்ற நேரம் யாரோ கைப்பொம்மைகளாக இருக்கிறீர்கள் எத்தனை கட்சிகளும் கேட்கட்டும் மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களே தீர்மானிக்கட்டும் இன்று கிழக்கு மாகாணத்தில் இத்தனை பேர் இருந்தும் தமிழ் மக்கள் அடைந்த பயன்களை கூறுங்கள்   ஆற்றுக்கு வந்ததை கால்வாய்க்கு திருப்பின நிகழ்வுதான் நடந்திருக்கு மற்ற படி உருப்படியாய் ஒன்றும் நடக்கவில்லை தமிழர் நிலங்கள் மட்டும் நாளுக்கு நாள் பறி போய் கொண்டிருக்கு தெருந்தும்  நீங்களெல்லாம் செகிட்டு மந்தைகள் போல் திரிந்தாலும் தேர்தல் வந்தால் மட்டும் உங்களால் எப்படித்தா ன் விழித்தெழ முடிகிறதோ....................................... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.