Jump to content

தேர்தலில் வடக்கு, கிழக்கில் தனித்து போட்டியிடப்போகிறேன் - கருணா


Recommended Posts

தேர்தலில் வடக்கு, கிழக்கில் தனித்து போட்டியிடப்போகிறேன் - கருணா

 

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்து போட்டியிடப்போவதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி  முரளாரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி  தெரிவித்துள்து.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு  துரோகம் இழைத்துள்ளதாக தெரிவித்துள்ள  விநாயகமூர்த்தி  முரளாரன், இவ்வாறான நிலையிலே தாம் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டார்.     

எதிர்கால தேர்தல் திட்டங்கள் தொடர்பாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர்  விநாயகமூர்த்தி தலைமையிலான குழுவினருக்கும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று  இடம்பெற்றது.

இந்த சந்திப்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கை பொது ஜன பெரமுனயின் காரியாலத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட  விநாயகமூர்த்தி  முரளாரன், தேர்தல் பிரிவுகளை நியமிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர் அரசியல் அறிவு அற்றவர்கள் எனவும் விமர்சித்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/I-am-compete-North--East-election

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு  துரோகம் இழைத்துள்ளதாக தெரிவித்துள்ள  விநாயகமூர்த்தி  முரளாரன், இவ்வாறான நிலையிலே தாம் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டார்.     

பசிலின் பினாமியாகக் களமிறங்குகிறாரோ!  நீங்கள் செய்த இரண்டகத்தை விடவா? இதனைத்தான் சாத்தான் வேதம் ஓதுவதென்பதோ!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.