Jump to content

“தேர்தலில் போட்டியிடுவது சந்தேகமே”


Recommended Posts

“தேர்தலில் போட்டியிடுவது சந்தேகமே”

 

 

ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தாம் போட்டியிடுவது சந்தேகமே என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

9_MR.jpg

தீபாவளி தினமான இன்று (18) தெஹிவளை விஷ்ணு கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திய மகிந்த ராஜபக்சவிடம், கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தின் கீழ், நுவரெலியாவில் நான்கு புதிய பிரதேச சபைகளை நிறுவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, அம்பகமுவ பிரதேச சபை மூன்றாகப் பிரிக்கப்பட்டு அம்பகமுவ, நோர்வூட் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை என்று பெயரிடப்படவுள்ளது.

மேலும், அக்கரப்பத்தனை பிரதேச சபை இரண்டாகப் பிரிக்கப்பட்டு அக்கரப்பத்தனை மற்றும் கொட்டகலை பிரதேச சபைகள் என்று பெயரிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வாரம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/25970

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.