Jump to content

சென்னையில் ஒரு நாள் 2 திரை விமர்சனம்


Recommended Posts

சென்னையில் ஒரு நாள் 2 திரை விமர்சனம்
 
 
card-bg-img
 

சரத்குமார், ராதிகா, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளிவந்து ஹிட் அடித்த படம் சென்னையில் ஒரு நாள். இப்படத்தின் இரண்டாம் பாகமாக நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது JPR இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் சென்னையில் ஒரு நாள்-2. முந்தைய பாகத்தை போல் இதுவும் கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

சரத்குமார் போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டில் உயர் அதிகாரியாக இருக்கின்றார், படத்தின் முதல் காட்சியே ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா? என ஒரு போஸ்டர் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இந்த சம்பவத்தின் தீவிரத்தை அறிந்த சரத்குமார் களத்தில் இறங்கி ஏஞ்சல் யார்? என்பதை தேட முயற்சிக்கின்றார். ஒவ்வொரு இடமாக இவர் தேடி சென்றாலும் எங்குமே ஏஞ்சல் யார் என்பதை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

பிறகு தான் அவருக்கு ஒரு கட்டத்தில் தெரிகின்றது, இப்படி ஒரு விஷயத்தை செய்துவிட்டு, போலிஸாரின் கவனத்தை திசை திருப்பி, மர்ம கும்பம் ஒன்று வேறு ஏதோ பெரிய விஷயத்தை செய்யவிருக்கின்றது என்று. அந்த விஷயம் என்ன? சரத்குமார் அதை கண்டுப்பிடித்து சதி செயலை முறியடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சரத்குமார் ஒரு சில வருடங்களுக்கு பிறகு திரையில் பார்ப்பது சந்தோஷம் தான். மேலும், ஒரு ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு, ஆனால், இது சரத்குமாருக்கான களமாக தெரியவில்லை. பெரிதும் அவர் படத்தில் தன் நடிப்பை பதிய வைத்தது போல் எந்த இடத்திலும் தோன்றவில்லை.

படத்தின் டைட்டிலேயே சென்னையில் ஒரு நாள் இந்த முறை கோயம்புத்தூரில் என்று தான் விளம்பரப்படுத்தியுள்ளார்கள். படம் முழுவதும் ஒரு வீட்டை சுற்றி தான் கதை நடக்கின்றது, சில காட்சிகளில் கோயம்புத்தூர் போர்டை காட்டுகின்றனர்.

இதற்கு இவர்கள் சென்னையில் என்றே படத்தை தொடங்கியிருக்கலாம், மேலும், படத்தின் கதையை கேட்கும் போது மிக சுவாரசியமாக இருக்கும், புதிய மருந்து, மெமரிலாஸ் என பல விஷயங்கள் இருந்தாலும் அதற்கான காட்சிகள் வலுவாக இல்லை என்பதே உண்மை.

படத்தின் பட்ஜெட் மிக குறைவு என்பது டெக்னிக்கல் விஷயங்கள் பார்க்கும் போதே தெரிகின்றது, ஆனால், அதையும் தாண்டி Jakes Bejoy-யின் பின்னணி இசை மிரட்டல்.

க்ளாப்ஸ்

கதைக்களம், மிக சுவாரசியமான ஒரு கதையை கையில் எடுத்துள்ளனர்.

Jakes Bejoy-ன் பின்னணி இசை.

பல்ப்ஸ்

ஒரு நல்ல கதையை படமாக்கிய விதம், திரைக்கதையில் எந்த ஒரு இடத்திலும் சுவாரசியம் ஏற்படவில்லை.

மொத்தத்தில் சென்னையில் ஒரு நாளுடனே (முதல் பாகத்துடனே) இருந்திருக்கலாம்.

http://www.cineulagam.com/films/05/100877?ref=review_section

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.