Jump to content

டெங்குவே உன்னைச்சுற்றி


Recommended Posts

டெங்குவே உன்னைச்சுற்றி

நாளும் நாளும் உயிர்களை பறித்து
கோர ஆட்டம் போடும் டெங்குவே!
உன் கொட்டத்தை அடக்கி,
மக்கள் உயிரைக் காத்திட மனிதரில்லை.
உன்னை வைத்து அரசியல் நடத்த 
ஆயிரம் பேர் கிளம்பியுள்ளார்கள்.
கேட்க யாருமில்லை என்பதால்
நீயும் ஆவேசமாய் உயிர்களை
பறித்தெடுக்கும் வெறியாட்டத்தை தொடர்கிறாய்.
ஆயிரம் கேள்விகள்,குற்றச்சாட்டுகளை
மாறி மாறி எதிர் எதிராக தொடுத்து,
அட்டகாசம் புரியும் கேடு கெட்ட மனிதர்களால்
நாளும் நாளும் வேதனைக்குள் தத்தளிக்கும்
மக்களை காத்திட யார் வருவார்.
உன்னிடமிருந்து மக்களை காத்திட
எவருமே உள்ளத்தால் நினைக்கவில்லை.
உன்னை வைத்து தமக்கு இலாபம் ஈட்ட
எண்ணில்லாதோர் முளைத்துவிட்டார்கள்.
மருத்துவமனைக்கு செல்லல்,ஆறுதல் கூறல்
வீதிக்குப்பைகளை துப்புரவு செய்தல், 
தொலைக்காட்சிகளில் விவாதங்கள் என
ஆயிரம் நாடகங்கள் அரங்கேறுகின்றன.
ஆனால் உயிர்களோ தொடர்ந்து பறிக்கப்படுகின்றன.
இதுவும் போதாது என இன்னுமொரு கொடுமை.
ஏழைமக்களுக்கு இலகுவாக கிடைக்கும்
சித்தமருந்தாம் நிலவேம்பு குடிநீரும் ஆகாது என
விளக்கம் சொல்ல பலர் புறப்பட்டு விட்டார்கள்.
உண்மையிலேயே உன்னிடமிருந்து 
மக்களை காக்க நினைப்பவர்கள்
செய்யவேண்டியது என்ன என சிந்தித்தார்களா?
தமது அனைத்து வழமையான நிகழ்ச்;சிகளை
சில நாட்கள் நிறுத்திவிட்டு,
டெங்கு ஒழிப்புக்கான பரப்புரைகளை ஒளிபரப்ப
தொலைக்காட்சிகள் தயாரா?
தங்கள் அரசியல் கூத்துகளை ஒதுக்கிவிட்டு
மக்கள் உயிர்களை பாதுகாக்கும் வேலையில்
முழுமையாக இறங்கி வேலை செய்ய
அரசியல்வாதிகள் முன்வருவார்களா?
சமூகசெயற்பாடுகளில் ஈடுபடுவதாக சொல்லும்
திரைப்படத்துறையினர் இதற்காக நேரம் ஒதுக்குவார்களா?
இத்தனையும் நடந்தால் மக்கள் உயிர் காக்கப்படும்?
நடக்குமா இது?


மந்தாகினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் டெங்கு பரவிக்கொண்டே வருகிறது டெங்குக்கு கவிதை சூப்பரு தொடர்ட்டும் 

Link to comment
Share on other sites

நன்றி.

டெங்குவால் மக்கள் சாவுக்கு பலியாகிக்கொண்டிருக்க அதனையிட்டு கவலைப்படாமல் ஆளுக்காள் நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.மிகவும் வேதனையாக இருந்தது.அதனால்தான் இந்த வரிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சமூக பிரக்ஞை உள்ள கவிதை மந்தாகினி....!  tw_blush:

டாங்கிலிருந்து ஒழுகும் நீர் கிடங்கில் தேங்கி டெங்குவை வளர்கிறது......!

Link to comment
Share on other sites

நன்றி.உண்மைதான். தடுப்பு வழிகளை கையாளவும் எவருமில்லை. படையாக உலா வந்து மாறி மாறி விமர்சித்துகொண்டருக்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் களத்தில் இறங்கி துப்புரவு பணியில் ஈடுபடலாமே.தொலைக்காட்சிகள் இது தொடர்பான விழிப்புணர்ச்சி பரப்புரையில்ஈடுபடலாமே. அதனை விடுத்து அவர் அரசியல் வந்தால் என்ன என்ற ஆய்விலும்,திரைப்பட ஆய்விலும் காலத்தை வீணடிக்கிறார்கள். சாவுகள் அதிகரிக்கின்றன. மிகவும் வேதனையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/19/2017 at 2:19 PM, manthahini said:

நன்றி.

டெங்குவால் மக்கள் சாவுக்கு பலியாகிக்கொண்டிருக்க அதனையிட்டு கவலைப்படாமல் ஆளுக்காள் நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.மிகவும் வேதனையாக இருந்தது.அதனால்தான் இந்த வரிகள்.

ம்ம் உன்மைதான் இலங்கையில் தற்போது மழை ஆரம்பமாகிவிட்டது மாலை நேரம் மழை கொட்டுகிறது இதனால் இன்னும் பரவும்  அபாயம் உள்ளது  அரசாங்கத்தால் புகை மட்டும் விசிரப்படுகிறது  கட்டுப்படுத்த முடியாதுள்ளது எல்லா இடங்களும் தண்ணிராக உள்ளதால் :104_point_left: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.