Jump to content

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு – பிரான்ஸில் மாபெரும் ஒன்றுகூடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு - பிரான்ஸில் மாபெரும் ஒன்றுகூடல்

 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்” இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் இலங்கை வடமாகணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்படு குறுகிய கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 27 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூர்வதுடன் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமகாலத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்கால வளமான வாழ்கைக்கான வாழிகாட்டுதலையும் அதே போல்*இலங்கை மக்களின் உரிமையை பாதுகாத்தல் *இலங்கை சிறுபான்மை இனமான நாம் ஏனைய சக இன சமூகத்துடன் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தல் சமூகங்களுடன் எவ்வாறு சகோதரத்துவமாக வாழ வேண்டும் எம் சமூகத்திற்கு ஏதிராக கட்டவிழ்தப்படும் சதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் *முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் சகோதர பரஸ்பர அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தல்.

மிக குறிப்பாக இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமை மிக்க பலமான ஒரு குடையின் கீழ் கட்டுக்கோப்பான சமூகமாக வாழ வேண்டும் என்றாரோக்கியமான தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. இதில் பிரதம, முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொள்ள விருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இந்நிகழ்வில் சகல நாட்டு இலங்கை மக்களும், ஜே எம் சி அமைப்பின் உயர்பீட உருப்பினர்கள், ஆலோசனை குழுவினர் மற்றும் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறும் சகல இலங்கை மக்களையும் அழைத்து வருமாறு மிகத்தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம். விஷேடமாக பல புதிய மாற்றங்களுடன் ,புதுப் பொலிவுடன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான அமைப்பின் வருடாந்த மத்திய குழு கூட்டமும் இடம்பெறவுள்ளது. இதிலும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நேரம்:- 17-30 – 20-30 காலம்:-29 OCTOBER 2017

இடம்:- UFB center, 91 av Paul Vaillant Couturier , La Courneuve. ( JAFFNA MUSLIM COMMUNITY INTERNATIONAL )

தலைமை பணியகம், France

http://www.akuranatoday.com/news/?p=174942 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா பிஸ்மில்லாக்காரர்களே இப்போ ரொகிங்கா முஸ்லீம்கள் உண்மையான இனச்சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் அதற்கு ஏதாவது உருப்படியாகச் செய்யவும் 

தவிர இஸ்லாம் மதத்தின் வரலாற்றுப்பொக்கிசங்கள் மெக்கா மற்றும் மதீனாவை அண்டியபகுதிகளில் அழிக்கப்பட்டு அங்கு உல்லாச விடுதிகளும் சாப்பிங்மால்களும் கட்டப்படுகின்றன அதையும் உங்கள் ஓரக்கண்ணால் உத்துப்பாக்கவும். உங்களுக்கெல்லாம் ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்காலத்தில் யாழில் நிகழ்ந்த முஸ்லிம்களின் இடம்பெயர்வை இனச்சுத்திகரிப்பு என்று  முஸ்லிம்கள் அபத்தமாக தமது சுய இலாபத்தை மட்டும் கருத்தில்கொண்டு அடையாளப்படுத்தினால் இவர்கள் என்றென்றைக்கும் தமிழினத்துடன் சேர்ந்துவாழ முடியாது. அன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் இனத்தின் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தான் இவர்களை பத்திரமாக வெளியேறு ம்படி பணிக்கப்பட்டனரேயன்றி அதை இனச்சுத்திகரிப்பு என்று ஒருபோதும் கருதமுடியாது. இவர்கள் மீள தமது இடங்களுக்கு திரும்புவதற்குக்கூட எதுவித தடையும் இருக்கவில்லை. இறுதிக்கட்ட போரின்பின்னர் நிலைமை வேறுவிதமாக மாற சிங்கள அரசியல்வாதிகளாலும் இனவாத முஸ்லிம்களாலும் திரிபுபடுத்தப்பட்டுலிகளுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

rரிசாத்து அண்ணை சொல்லிப்போட்டார்....அரபு நாடுகல் எமக்கும் கைவிரிக்கும் என்று...அப்ப இவை அசைலத்தை இறுக்கத்தானே வேணும்....இப்ப புலிவாலை இறுக்கிப் பிடித்தால்த்தான்...பிரன்சு திருப்பி அனுப்பாது....இதுக்கு எங்கடை சருகளும் ஒத்துஊதுவினம்....மூனக்களுக்கு பிரான்சு இனி சிம்ம சொப்பனமாக இருக்கும்.....இதைவிட இவைக்கு வேற வழியும்இல்லை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு இணையக்கூடாது  எனவும் ரிசாட்டு அறிக்கை விட்டுருக்கிறார்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2017 at 8:31 AM, colomban said:

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு - பிரான்ஸில் மாபெரும் ஒன்றுகூடல்

 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்” இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் இலங்கை வடமாகணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்படு குறுகிய கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 27 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூர்வதுடன் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமகாலத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்கால வளமான வாழ்கைக்கான வாழிகாட்டுதலையும் அதே போல்*இலங்கை மக்களின் உரிமையை பாதுகாத்தல் *இலங்கை சிறுபான்மை இனமான நாம் ஏனைய சக இன சமூகத்துடன் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தல் சமூகங்களுடன் எவ்வாறு சகோதரத்துவமாக வாழ வேண்டும் எம் சமூகத்திற்கு ஏதிராக கட்டவிழ்தப்படும் சதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் *முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் சகோதர பரஸ்பர அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தல்.

மிக குறிப்பாக இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமை மிக்க பலமான ஒரு குடையின் கீழ் கட்டுக்கோப்பான சமூகமாக வாழ வேண்டும் என்றாரோக்கியமான தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. இதில் பிரதம, முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொள்ள விருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இந்நிகழ்வில் சகல நாட்டு இலங்கை மக்களும், ஜே எம் சி அமைப்பின் உயர்பீட உருப்பினர்கள், ஆலோசனை குழுவினர் மற்றும் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறும் சகல இலங்கை மக்களையும் அழைத்து வருமாறு மிகத்தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம். விஷேடமாக பல புதிய மாற்றங்களுடன் ,புதுப் பொலிவுடன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான அமைப்பின் வருடாந்த மத்திய குழு கூட்டமும் இடம்பெறவுள்ளது. இதிலும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நேரம்:- 17-30 – 20-30 காலம்:-29 OCTOBER 2017

இடம்:- UFB center, 91 av Paul Vaillant Couturier , La Courneuve. ( JAFFNA MUSLIM COMMUNITY INTERNATIONAL )

தலைமை பணியகம், France

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=174942 .

கூடுறது கூடுங்கோ....

தயவு செய்து பிரஞ்சு அரசு ரகசிய சேவைகள் அரண்டு போற மாதிரி கதையாதீங்கோ...

யாழ்ப்பாண பெயரை வேற இழுக்கிறியள்... பயமாய்க் கிடக்குது....:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18.10.2017 at 11:18 AM, vanangaamudi said:

போர்காலத்தில் யாழில் நிகழ்ந்த முஸ்லிம்களின் இடம்பெயர்வை இனச்சுத்திகரிப்பு என்று  முஸ்லிம்கள் அபத்தமாக தமது சுய இலாபத்தை மட்டும் கருத்தில்கொண்டு அடையாளப்படுத்தினால் இவர்கள் என்றென்றைக்கும் தமிழினத்துடன் சேர்ந்துவாழ முடியாது. அன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் இனத்தின் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தான் இவர்களை பத்திரமாக வெளியேறு ம்படி பணிக்கப்பட்டனரேயன்றி அதை இனச்சுத்திகரிப்பு என்று ஒருபோதும் கருதமுடியாது. இவர்கள் மீள தமது இடங்களுக்கு திரும்புவதற்குக்கூட எதுவித தடையும் இருக்கவில்லை. இறுதிக்கட்ட போரின்பின்னர் நிலைமை வேறுவிதமாக மாற சிங்கள அரசியல்வாதிகளாலும் இனவாத முஸ்லிம்களாலும் திரிபுபடுத்தப்பட்டுலிகளுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

இனச்சுத்திகரிப்புக்கும்  பாதுகாப்பான வெளியேற்றத்துக்கும் வேறுபாடு தெரியாது மாறுபாடாகப் பரப்புரை செய்து எதைத்தான் சாதிக்கப்போகிறீர்கள். ஒருவேளை அரபுநாடுகளின் இரக்கத்தைம் பார்வையையும் நாடியோ! ஒரு வினா உங்களிடம். ஏன் நீங்கள் எந்தவொரு அரபுநாட்டிலும் அரசியல் தஞ்சம் கோரவில்லை. வரலாறுகளைப் பின்னோக்கிப்பாருங்கள். அதுதான் முன்னே செல்வதற்கான  நெம்புகோலாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை அப்பவே இனச்சுத்திகரிப்புச் செய்து விட்டிருக்கனும். பாதுகாப்பாக வெளியேற்றினது தான் தப்பாப் போச்சு. 

அவங்கள்.. மூதூரிலும்.. கல்முனையிலும்.. அம்பாறையிலும்.. மட்டக்களப்பிலும் தமிழ் மக்களைக் கொன்று குவித்து செய்ததைப் போல செய்துவிட்டிருக்கனும்.. tw_angry::rolleyes:

Link to comment
Share on other sites

இவ்விடயம் தொடர்பாக அப்போதைய முஸ்லிம் தலைமையுடனும்  வன்னியில் புலிகளுடனும் அதிக சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவன் என்கிற முறையில் ஒன்றை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். விடுதலைப் புலிகள் தவறு வருந்துகிறோம் என்று அறிக்கை விட்டதை நிராகரித்துவிட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என இங்கு தமிழர்கள் சிலர் கருத்துச் சொல்வது அபத்தமானது. தயவு செய்து அநீதியாக பாதிக்கப்பட்ட வடபகுதி முஸ்லிம்களையும்   போராளிகளின் மன்னிப்பையும் கொச்சைப்படுத்த வேண்டாம். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தமிழர்கள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவில்லை.

Link to comment
Share on other sites

 1990 ம் ஆண்டு முஸ்லீம்கள் வெளியேறறப்பட்டார்கள். மிகக்குறுகிய காலத்தில் அதாவது 1995 ம் ஆண்டு யாழ்பாணம் இலங்கை அரச படைகளால் கைபற்றப்பட்டது. பெரும்பகுதி முஸ்லீம்கள் அபபோதை குடியமர எந்த தடையும் இருககவில்லை.தாராளமாக குடியமர்திருககலாம். அதற்கான அரச படைப்பலமும் அவர்களிடம் இருந்தது.  அவர்கள் இருந்த பகுதிகளில் தமிழ் மககள் குடியேறவில்லை. அப்படி குறியேற விடுதலைபுலிகள் அனுமதிககவும் இல்லை. இந்த சம்பவம். நடக்க முதலே கிழக்கில்  பல தமிழ்க்கிராமங்கள் முஸ்லீம்களால் அபகரிபப்பட்டு முழுமையாகவே முஸ்லீம் கிராமங்களாக மாற்றப்பட்டு விட்ட நிலையில் எந்த முஸ்லீம் தலைவரும் அதற்காக ஒரு வருத்தம் கூட தெரிவி்க்கவில்லை.அம்பாறை வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் 400 க்கும் அதிகமான தமிழ் மக்கள் முஸ்லீம் ஊர்காவற்படைகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்படட சம்பவத்திற்கு எந்த முஸ்லீமும் வருத்தம் தெரிவிக்கவில்லை. முஸ்லீம்களால் கிழககில் தமிழருக்கு இழைக்கபட்ட அநீதிகள் பழைய கதை என்றால் வடக்கு சம்பவமும் பழைய கதைதான்.அதை கிளறி லாபம் அடைய சில முஸ்லீம் இனவாதிகள் முயல்வது தெரிகிறது. இன்னும் நூறு ஆண்டுகளானாலும் இதை கூறியே இலாமடைய முஸ்லீம்கள் முயற்சி செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இப்படியான தமிழர்கள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவில்லை.

அதைத்தான் நானும் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதோடு சரி! ஆனால் முஸ்லிம்கள் கிழக்கிலே செய்த கொடுமைகளால் இன்றுவரை அகதிகளாகவும் காணிகளை இழந்தோராகவும் உள்ளவர்களோடு கண்டு பேசினால் புரிந்தகொள்ள முடியும். ஆனால் அதன் வலியைப்புரிந்துகொள்ள  முடியாது. கனவான்களாக நட்புவட்டங்களோடு  நகர்ந்தவர்களால் அன்றாடம்காய்சிகளின் அவலத்தைப் புரிந்துகொள்ளமுடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொயற் நீங்கள் வேறு ஏதோ விடயத்தையும் இங்கு சொல்ல வந்துவிட்டு சொல்லாமல் செல்வதாக தெரிகிறது. இன்னும் சற்று கூர்மையாக சிந்தியுங்கள் நினைவுக்குவரும்.

Link to comment
Share on other sites

இப்படியான தமிழர்கள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவில்லை. - MEERA, குமாரசாமி.
.
 
தமிழர் விடுதலைக்காகன உங்கள் பங்கை மதிக்கிறேன். பணம் திரட்டுவதும் உசார் ஏற்றுவதும் முக்கியம்தான். உங்கள் பணிகளை மதிக்கிறேன். பணம் திரட்டுவதும் உசார் ஏற்றுவதும் மட்டுமே விடுதலை அரசியல் என்று எண்ணியவர்களால்தான் 2006ல் பாலசிங்கம் ஓரங்கட்டபட்டு பெருந்தோல்வியையும் இனக்கொலையையும் நாம் எதிர்கொள்ள நேர்ந்தது. . இடிப்பாரை இல்லதா மன்னன் கெடுப்பர் இல்லாமல் கெடும் என்கிறார் வள்ளுவர். இடித்துரைத்து வழிதவறல்களைச் சுட்டிக்காட்டும் பணியில் ஈடுபடுகிறவர்களை 2006 புறந்தள்ளியதால்தான் நாம் தோற்றோம்.
 
1995ல் நீங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் எங்களை இடித்துரையுங்கள் சில குறிப்பிட்ட பணிகளை செய்யுங்கள் என கேட்டுக்கொண்டதன் தொடற்ச்சிதான் என் விமசனங்கள். கருணா பிரிந்தபோது “பிரபாகரனுக்கு கிழக்கு போராளிகளுக்கு துப்பாக்கி நீட்ட மக்கள் ஆனையில்லை. ஆனால் அவர்களை வீடுகளுக்கு திரும்பிச் செல்ல சொல்லலாம்” என சூரியன் எ.எமில் குருபரன்மூலமும் (குளோபல் தமிழ் றேடியோ) வீரகேசரியிலும் அறிக்கைவிட்டுவிட்டு ஊரும் உறவும் தடுக்க வன்னிக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தக்கூடியதாக இருந்தது. வன்னியில் உங்கள் அறிக்கையை கேட்டோம் என்பதுதவிர வன்னியில் வேறு எதுவும் சொல்லவில்லை. கிழக்கில் ஒரு இரத்தக் களரியைத் தடுக்க ஆக வேண்டியதை பேசினோம். இட்மிட்ஸ்ம்கத்ளுடத்னுரைப்பது எஞ்சிய பாலங்களை செம்மைப்படுத்திப் பாதுகாப்பதும் சிங்கள ஜனநாயக சக்திகளுடன் தொடர்புகளை மேம்படுத்துவதும் சர்வதேச உறவுகளை நேர்செய்வது எல்லாம்கூட முக்கியமான விடுதலைப் பணிதான்.
.
என்னை நீங்களும் திட்டுகிறீர்கள் முஸ்லிம்களும் திட்டுகிறார்கள். வடகிழக்கு மாகாணம் தமிழர்களதும் தமிழ்பேசும் முஸ்லிம்களதும் தயக பூமியாக அமைந்துள்ளது.
சுயநிர்ணய உரிமைக்கு நிபந்தனைகளோடு இணைந்து போராடப்போகிறோமா அல்லது தனித்தனியே போராடபொகிறோமா என்கிற வரலாற்றுக் கேழ்வி நம்முன்னும் வடகிழக்கு முஸ்லிம் மக்கள் முன்னும் இலங்கை மற்றும் சர்வதேச சமூகங்களின் முன்பும் உள்ளது. இவற்றையெல்லாம் நாம் சிந்திக்கவேணும். முஸ்லிம்களை அடக்கிவிடலாம் என தமிழ் இனவாதிகளோ வடகிழக்கு தமிழர்களை பிழவுபடுத்திவிடலாமென முஸ்லிம் இனவாதிகளோ காணும் கனவு பலிக்கப்போவதில்லை. நாம் பேசித்தான் இப்பிரச்சினையை தீர்த்தாகவேண்டும்.இதைச் சொன்னால் இரண்டு தரப்பில் இருந்தும் என்னை வசைபாடுகிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சவில்லை.
 
வடகிழக்கு மாகாணத்தின் இணைந்த விடுதலை பற்றிய பாரிய பணிபற்றி நாம் விவாதிக்கிறோம். முஸ்லிம்களும் நாமும் இணைந்து சுயநிர்ணய உரிமைக்குப் போராடுவதானால் அதற்க்கு நிபந்தனைகள் உண்டு. அல்லது வடகிழக்கு தமிழர்கள் தனித்தும் முஸ்லிம்கள் தனித்தும் தம்
 
விடுதலையில் உங்க பங்களிப்புகளை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் உங்கள் கண்ணுக்கு அப்பாய் இயங்கும் அரசியலில் முகம் பார்க்காமல் ஆள்தெரியாமல் சேறு அடிக்காதீர்கள். ஏனெனில் நாம் எல்லோரும் விடிவுக்காக தேரிழுக்க கூடியிருக்கிறோம். ஓடும் தேரை நிறுத்த திருப்ப முட்டுக்கட்டை போடுகிறவர்களை வசைபாடாதீர்கள். வடகிழக்கு மக்களின் விடுதலைக்காக பலங்களைப் பெருக்கியும் நம் தவறுகளை திருதியும் நாம் உலகை வென்றாகவேணும். மீராவுக்கும் குமாரசாமிக்கும் என் நல்வாழ்த்துக்கள்
.
- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, poet said:
இப்படியான தமிழர்கள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவில்லை. - MEERA, குமாரசாமி.
.
 
தமிழர் விடுதலைக்காகன உங்கள் பங்கை மதிக்கிறேன். பணம் திரட்டுவதும் உசார் ஏற்றுவதும் முக்கியம்தான். உங்கள் பணிகளை மதிக்கிறேன். பணம் திரட்டுவதும் உசார் ஏற்றுவதும் மட்டுமே விடுதலை அரசியல் என்று எண்ணியவர்களால்தான் 2006ல் பாலசிங்கம் ஓரங்கட்டபட்டு பெருந்தோல்வியையும் இனக்கொலையையும் நாம் எதிர்கொள்ள நேர்ந்தது. . இடிப்பாரை இல்லதா மன்னன் கெடுப்பர் இல்லாமல் கெடும் என்கிறார் வள்ளுவர். இடித்துரைத்து வழிதவறல்களைச் சுட்டிக்காட்டும் பணியில் ஈடுபடுகிறவர்களை 2006 புறந்தள்ளியதால்தான் நாம் தோற்றோம்.
 
1995ல் நீங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் எங்களை இடித்துரையுங்கள் சில குறிப்பிட்ட பணிகளை செய்யுங்கள் என கேட்டுக்கொண்டதன் தொடற்ச்சிதான் என் விமசனங்கள். கருணா பிரிந்தபோது “பிரபாகரனுக்கு கிழக்கு போராளிகளுக்கு துப்பாக்கி நீட்ட மக்கள் ஆனையில்லை. ஆனால் அவர்களை வீடுகளுக்கு திரும்பிச் செல்ல சொல்லலாம்” என சூரியன் எ.எமில் குருபரன்மூலமும் (குளோபல் தமிழ் றேடியோ) வீரகேசரியிலும் அறிக்கைவிட்டுவிட்டு ஊரும் உறவும் தடுக்க வன்னிக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தக்கூடியதாக இருந்தது. வன்னியில் உங்கள் அறிக்கையை கேட்டோம் என்பதுதவிர வன்னியில் வேறு எதுவும் சொல்லவில்லை. கிழக்கில் ஒரு இரத்தக் களரியைத் தடுக்க ஆக வேண்டியதை பேசினோம். இட்மிட்ஸ்ம்கத்ளுடத்னுரைப்பது எஞ்சிய பாலங்களை செம்மைப்படுத்திப் பாதுகாப்பதும் சிங்கள ஜனநாயக சக்திகளுடன் தொடர்புகளை மேம்படுத்துவதும் சர்வதேச உறவுகளை நேர்செய்வது எல்லாம்கூட முக்கியமான விடுதலைப் பணிதான்.
.
என்னை நீங்களும் திட்டுகிறீர்கள் முஸ்லிம்களும் திட்டுகிறார்கள். வடகிழக்கு மாகாணம் தமிழர்களதும் தமிழ்பேசும் முஸ்லிம்களதும் தயக பூமியாக அமைந்துள்ளது.
சுயநிர்ணய உரிமைக்கு நிபந்தனைகளோடு இணைந்து போராடப்போகிறோமா அல்லது தனித்தனியே போராடபொகிறோமா என்கிற வரலாற்றுக் கேழ்வி நம்முன்னும் வடகிழக்கு முஸ்லிம் மக்கள் முன்னும் இலங்கை மற்றும் சர்வதேச சமூகங்களின் முன்பும் உள்ளது. இவற்றையெல்லாம் நாம் சிந்திக்கவேணும். முஸ்லிம்களை அடக்கிவிடலாம் என தமிழ் இனவாதிகளோ வடகிழக்கு தமிழர்களை பிழவுபடுத்திவிடலாமென முஸ்லிம் இனவாதிகளோ காணும் கனவு பலிக்கப்போவதில்லை. நாம் பேசித்தான் இப்பிரச்சினையை தீர்த்தாகவேண்டும்.இதைச் சொன்னால் இரண்டு தரப்பில் இருந்தும் என்னை வசைபாடுகிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சவில்லை.
 
வடகிழக்கு மாகாணத்தின் இணைந்த விடுதலை பற்றிய பாரிய பணிபற்றி நாம் விவாதிக்கிறோம். முஸ்லிம்களும் நாமும் இணைந்து சுயநிர்ணய உரிமைக்குப் போராடுவதானால் அதற்க்கு நிபந்தனைகள் உண்டு. அல்லது வடகிழக்கு தமிழர்கள் தனித்தும் முஸ்லிம்கள் தனித்தும் தம்
 
விடுதலையில் உங்க பங்களிப்புகளை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் உங்கள் கண்ணுக்கு அப்பாய் இயங்கும் அரசியலில் முகம் பார்க்காமல் ஆள்தெரியாமல் சேறு அடிக்காதீர்கள். ஏனெனில் நாம் எல்லோரும் விடிவுக்காக தேரிழுக்க கூடியிருக்கிறோம். ஓடும் தேரை நிறுத்த திருப்ப முட்டுக்கட்டை போடுகிறவர்களை வசைபாடாதீர்கள். வடகிழக்கு மக்களின் விடுதலைக்காக பலங்களைப் பெருக்கியும் நம் தவறுகளை திருதியும் நாம் உலகை வென்றாகவேணும். மீராவுக்கும் குமாரசாமிக்கும் என் நல்வாழ்த்துக்கள்
.
- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்
 

2004இல் ஜி8 நாடுகள் விடுதலைப்புலிகளையும் 
சோமாலிய கப்பல் கடுத்துபவர்களையும் 
துடைத்து அழிக்க வேண்டும் எனும் முடிவை எட்டி இருக்கிறார்கள். 

காகம் இருக்க பணம்காய் விழுந்த மாதிரி 
நீங்கள் கதை பேசுவதுபோல் தான் நான் எண்ணுகிறேன்.
சொல்வதை கேட்கவில்லை என்பதை ........ ஏற்றுக்கொள்கிறேன் 
நீங்கள் சொன்ன விடயம் என்ன ?

கவுசல்யான் முதல் கொண்டு முழு அரசியல் போராளிகள் மேலும் 
துப்பாக்கி நீண்டது மட்டுமல்ல .... கண்காணிப்பு குழுமீதே மண்டைதீவில் இருந்து 
செல் வீசினார்கள்.
போட்ட திட்ட்ங்கள் படி மேள தாளங்களுடன்தான் போர் தொடங்கியது 
மாவிலாறு புலிகள் மூட முன்பே இந்திய இராணுவம் வவுனியாவில் நிற்கிறது 

ஏன் நீங்கள் யாரும் 
அந்த நேரத்தில் கோத்தபாயாவுக்கு ஏன் எதுவும் சொல்லவில்லை ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, poet said:
 
. வன்னியில் உங்கள் அறிக்கையை கேட்டோம் என்பதுதவிர வன்னியில் வேறு எதுவும் சொல்லவில்லை.
.
- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

திரு பாலா அண்ணா அவர்கள் புலத்திலே நடைபெற்ற கூட்டத்திலே போராட்டம் தொடர்பான கருத்துகளை எழுதுமாறு கேட்டதற்கு, தமது  சொந்தக்குத்து வெட்டுகளைத் தலைமைக்கு எழுதியவர்களே அதிகமெனச் சுட்டிய வியமொன்று நினைவுக்குவருகிறது.  இங்கே கருத்துகளைக் கேட்பதில்லையென்ற கருத்து பொருத்தமின்றிப்போகிறது. ஆனால் சிலவிடயங்கள் கைமீறிப்போனபின்  பிடிக்கமுயல்வதால் பயனுண்டாகுமா? இங்கே போராட்ட காலத்திலாகட்டும் பின்வந்த போரற்ற காலத்திலாகட்டும் தமிழினமே பெருமளவிலான அழிவுகளையும் துன்பங்களையும் சுமக்கிறது. எனவே மரத்திலிருந்து விழுந்தவன்மேல் மாடேறியதுபோல் எமது சகோதரத் தமிழ்பேசும் முஸ்லிம்கள் நடக்காதிருப்பதே பொருத்தமாகும்.  எல்லாப்பிரச்சினைகளுக்கும் வீழ்ச்சியோ எழுச்சியோ இறுதியில் பேச்சுவார்த்தையே உலக இயல்பு. ஆனால் உலகநடைமுறைக்கு விரோதமான இனமொன்றோடு நாம் பேசவேண்டியிருப்பதும் சரியான தலைமையற்ற நிலைமையுமே பெரும் அனர்த்தமாகவுள்ளது. 

தமிழரிட ம்ஆயுதபலம்  இருந்தபோது அடக்கிவாசித்தவர்கள் இன்று சிங்களத்தைமேவியவாறு நிலப்பிடிப்பும் மதமாற்றமுமாக எமது இனத்தையும் நிலத்தையும் சிதைத்தவாறு நீதியைக்கோரும் உரிமை இருக்கிறதா என்பதுகுறித்து மதிப்புக்குரிய கவிஞரையா  அவர்கள் என்ன நினைக்கிறீர்கள். ஏனென்றால் வயதிலும் அனுபவத்திலும்  அமைப்புடனான நெருக்கம் போன்றவற்றில்  பெரியவரான உங்கள் கருத்தை  மதிக்கும் அதேவேளை இதுபோன்ற  இவர்களது நயவஞ்சகச் செயற்பாடுகளைப் பார்த்துக் கைதட்டமுடியாதென்பதையும்  மனம்கொள்ள வேண்டுமல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஒக்டோபர் – இலங்கை முஸ்லிம்களை திரண்டு வரும்படி அழைப்பு

கறுப்பு ஒக்டோபர் - இலங்கை முஸ்லிம்களை திரண்டு வரும்படி அழைப்பு

 

கறுப்பு ஒக்டோபர் - இலங்கை முஸ்லிம்களை திரண்டு வரும்படி அழைப்பு

 

அழுகை விபரம்: http://www.akuranatoday.com/news/?p=178691 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் போயட்

உங்கள் மீதிருந்த  மதிப்பும்

நம்பிக்கையும்

நான் கேட்க கேள்வி  ஒன்றை  முகநூலில் நீங்கள்  நீக்கியதுடன் போய்விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2017 at 9:31 AM, colomban said:

குறிப்பாக இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமை மிக்க பலமான ஒரு குடையின் கீழ் கட்டுக்கோப்பான சமூகமாக வாழ வேண்டும் என்றாரோக்கியமான தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. இதில் பிரதம, முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொள்ள விருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இந்நிகழ்வில் சகல நாட்டு இலங்கை மக்களும், ஜே எம் சி அமைப்பின் உயர்பீட உருப்பினர்கள், ஆலோசனை குழுவினர் மற்றும் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறும் சகல இலங்கை மக்களையும் அழைத்து வருமாறு மிகத்தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம். விஷேடமாக பல புதிய மாற்றங்களுடன் ,புதுப் பொலிவுடன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான அமைப்பின் வருடாந்த மத்திய குழு கூட்டமும் இடம்பெறவுள்ளது. இதிலும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நேரம்:- 17-30 – 20-30 காலம்:-29 OCTOBER 2017

இடம்:- UFB center, 91 av Paul Vaillant Couturier , La Courneuve. ( JAFFNA MUSLIM COMMUNITY INTERNATIONAL )

தலைமை பணியகம், France
 

தமிழர்கள்  அதிகம்  வாழும்  La Courneuve பகுதியில்   தொடங்குகிறார்கள்

இங்கேயும் கலகங்களையும் நரித்தனங்களையும்  செய்து  ஒற்றுமையாக வாழும் சமூகங்களுக்கிடையில் விசத்தை  விதைக்கப்பார்க்கிறார்கள்

இதை  நிச்சயம் சிறீலங்கா  அரசு  ஊதிப்பெருப்பிக்கும்

குளிர் விட்டுப்போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தோழர் போயட்

உங்கள் மீதிருந்த  மதிப்பும்

நம்பிக்கையும்

நான் கேட்க கேள்வி  ஒன்றை  முகநூலில் நீங்கள்  நீக்கியதுடன் போய்விட்டது

நீங்கள் அதிஷ்ட சாலி விசுகர்  
ஏனெனில் வ.ஐ.ஜெயபாலனிடம் கேள்வி கேட்டால்
ஆளையே தன் நட்பு வட்டாரத்தில்
இருந்து நீக்கிவிடுவார்.
அவர் சொல்வதை
நாம் கேட்க வேண்டுமே ஒழிய
நாம் அவரை நாம்
கேள்வி ஏதும் கேக்க கூடாது

 

18 hours ago, nochchi said:

 

தமிழரிட ம்ஆயுதபலம்  இருந்தபோது அடக்கிவாசித்தவர்கள் இன்று சிங்களத்தைமேவியவாறு நிலப்பிடிப்பும் மதமாற்றமுமாக எமது இனத்தையும் நிலத்தையும் சிதைத்தவாறு நீதியைக்கோரும் உரிமை இருக்கிறதா என்பதுகுறித்து மதிப்புக்குரிய கவிஞரையா  அவர்கள் என்ன நினைக்கிறீர்கள். ஏனென்றால் வயதிலும் அனுபவத்திலும்  அமைப்புடனான நெருக்கம் போன்றவற்றில்  பெரியவரான உங்கள் கருத்தை  மதிக்கும் அதேவேளை இதுபோன்ற  இவர்களது நயவஞ்சகச் செயற்பாடுகளைப் பார்த்துக் கைதட்டமுடியாதென்பதையும்  மனம்கொள்ள வேண்டுமல்லவா?

இவர்கள் தாம்
நடுநிலை வாதிகள் என்ற
வேடத்தை போட்டு விட்டார்கள்
முஸ்லீம் தமிழ் மக்கள் உறவுக்காக
உழைப்பவர்கள் என்ற
அரிதாரம் பூசி விட்டார்கள்

இது தான் இவர்களின்
அரசியல்
அடையாளம்.
இதை மாற்றினால்
தம் இருப்பு போய்விடும்
என்ற பயம்

முஸ்லீம் மக்கள் மீதான
புலிகளின் அடக்குமுறையை
பேசும் இவர்கள்
எப்போதாவது முஸ்லிம்கள்
செய்த படுகொலைகளை
பற்றி வாய் திறந்து உள்ளார்களா

கிழக்கில் பரவும்
இஸ்லாமியவாதம் பற்றி
வாய் திறக்கின்றார்களா?

வஹாபி இஸ்லாமியம்
கிழக்கு முழுதும் படிப்படியாக
பரவி தமிழ் மக்களை
அடிமைப்படுத்த முனைவதை
என்றாவது எதிர்த்து இருக்கின்றார்களா?

றிசாட் போன்ற பச்சை
இனவாதிகளுக்கு எதிராக
கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்களா?

முல்லையில் முஸ்லிம்களால்
கமுகு தோட்டம் எரிக்கப்பட்டது
தொடர்பாக
இவர் என்ன அறிக்கை விட்டார்?

இல்லை
இவரை போன்றவர்கள்
அப்படி செய்ய மாட்டார்கள்
அப்படி எதிர்த்தால்
போட்டுக் கொண்டு இருக்கும்
வேடம் கலைந்து விடும்

இவர்களிடம் கேள்வி கேட்டால்
நான் பெரிய பருப்பு
என்ற மாதிரி பதில்
மட்டும் தான் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, வைரவன் said:

நீங்கள் அதிஷ்ட சாலி விசுகர்  
ஏனெனில் வ.ஐ.ஜெயபாலனிடம் கேள்வி கேட்டால்
ஆளையே தன் நட்பு வட்டாரத்தில்
இருந்து நீக்கிவிடுவார்.
அவர் சொல்வதை
நாம் கேட்க வேண்டுமே
நாம் அவரை நாம்
கேள்வி கேக்க கூடாது

இங்கே  தம்பிமார்  அவருடன் முரண்பட்டு மல்லுக்கட்டியபோது

அவர்களுடன் முரண்பட்டிருக்கின்றேன்

காரணம்  எதோ  சொல்லவருகின்றார் என்று.

ஆனால் அவர் சொன்னதற்கு ஒரு  விளக்கம்  கேட்டதையே  அவரால் நேர்மையாக பரிசீலிக்கமுடியாத போது

உணர்ந்து கொண்டேன்

தம்பிகள் என்னைவிட நேர்மையாக சிந்தித்திருக்கிறார்கள்  என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் ...
என்ன பாடு பட்டாலும் அக்குறணை செய்தியை பட்டி தொட்டியெல்லாம்
பரவ செய்கிறேன் என்று சபதம் எடுத்து விட்டீர்கள் போல் தெரிகிறது.

"முஸ்லீம் சமூகம்"  என்ன தான் கூட்டம் போட்டு *********************   ***************** 
ஒன்னும் வேலைக்குஆகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

இங்கே  தம்பிமார்  அவருடன் முரண்பட்டு மல்லுக்கட்டியபோது

அவர்களுடன் முரண்பட்டிருக்கின்றேன்

காரணம்  எதோ  சொல்லவருகின்றார் என்று.

ஆனால் அவர் சொன்னதற்கு ஒரு  விளக்கம்  கேட்டதையே  அவரால் நேர்மையாக பரிசீலிக்கமுடியாத போது

உணர்ந்து கொண்டேன்

தம்பிகள் என்னைவிட நேர்மையாக சிந்தித்திருக்கிறார்கள்  என்று.

விசுகர்! இன்னும் நிறைய வரும் காத்திருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.