Jump to content

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு – பிரான்ஸில் மாபெரும் ஒன்றுகூடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு - பிரான்ஸில் மாபெரும் ஒன்றுகூடல்

 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்” இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் இலங்கை வடமாகணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்படு குறுகிய கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 27 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூர்வதுடன் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமகாலத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்கால வளமான வாழ்கைக்கான வாழிகாட்டுதலையும் அதே போல்*இலங்கை மக்களின் உரிமையை பாதுகாத்தல் *இலங்கை சிறுபான்மை இனமான நாம் ஏனைய சக இன சமூகத்துடன் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தல் சமூகங்களுடன் எவ்வாறு சகோதரத்துவமாக வாழ வேண்டும் எம் சமூகத்திற்கு ஏதிராக கட்டவிழ்தப்படும் சதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் *முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் சகோதர பரஸ்பர அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தல்.

மிக குறிப்பாக இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமை மிக்க பலமான ஒரு குடையின் கீழ் கட்டுக்கோப்பான சமூகமாக வாழ வேண்டும் என்றாரோக்கியமான தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. இதில் பிரதம, முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொள்ள விருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இந்நிகழ்வில் சகல நாட்டு இலங்கை மக்களும், ஜே எம் சி அமைப்பின் உயர்பீட உருப்பினர்கள், ஆலோசனை குழுவினர் மற்றும் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறும் சகல இலங்கை மக்களையும் அழைத்து வருமாறு மிகத்தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம். விஷேடமாக பல புதிய மாற்றங்களுடன் ,புதுப் பொலிவுடன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான அமைப்பின் வருடாந்த மத்திய குழு கூட்டமும் இடம்பெறவுள்ளது. இதிலும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நேரம்:- 17-30 – 20-30 காலம்:-29 OCTOBER 2017

இடம்:- UFB center, 91 av Paul Vaillant Couturier , La Courneuve. ( JAFFNA MUSLIM COMMUNITY INTERNATIONAL )

தலைமை பணியகம், France

http://www.akuranatoday.com/news/?p=174942 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா பிஸ்மில்லாக்காரர்களே இப்போ ரொகிங்கா முஸ்லீம்கள் உண்மையான இனச்சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் அதற்கு ஏதாவது உருப்படியாகச் செய்யவும் 

தவிர இஸ்லாம் மதத்தின் வரலாற்றுப்பொக்கிசங்கள் மெக்கா மற்றும் மதீனாவை அண்டியபகுதிகளில் அழிக்கப்பட்டு அங்கு உல்லாச விடுதிகளும் சாப்பிங்மால்களும் கட்டப்படுகின்றன அதையும் உங்கள் ஓரக்கண்ணால் உத்துப்பாக்கவும். உங்களுக்கெல்லாம் ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்காலத்தில் யாழில் நிகழ்ந்த முஸ்லிம்களின் இடம்பெயர்வை இனச்சுத்திகரிப்பு என்று  முஸ்லிம்கள் அபத்தமாக தமது சுய இலாபத்தை மட்டும் கருத்தில்கொண்டு அடையாளப்படுத்தினால் இவர்கள் என்றென்றைக்கும் தமிழினத்துடன் சேர்ந்துவாழ முடியாது. அன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் இனத்தின் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தான் இவர்களை பத்திரமாக வெளியேறு ம்படி பணிக்கப்பட்டனரேயன்றி அதை இனச்சுத்திகரிப்பு என்று ஒருபோதும் கருதமுடியாது. இவர்கள் மீள தமது இடங்களுக்கு திரும்புவதற்குக்கூட எதுவித தடையும் இருக்கவில்லை. இறுதிக்கட்ட போரின்பின்னர் நிலைமை வேறுவிதமாக மாற சிங்கள அரசியல்வாதிகளாலும் இனவாத முஸ்லிம்களாலும் திரிபுபடுத்தப்பட்டுலிகளுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

rரிசாத்து அண்ணை சொல்லிப்போட்டார்....அரபு நாடுகல் எமக்கும் கைவிரிக்கும் என்று...அப்ப இவை அசைலத்தை இறுக்கத்தானே வேணும்....இப்ப புலிவாலை இறுக்கிப் பிடித்தால்த்தான்...பிரன்சு திருப்பி அனுப்பாது....இதுக்கு எங்கடை சருகளும் ஒத்துஊதுவினம்....மூனக்களுக்கு பிரான்சு இனி சிம்ம சொப்பனமாக இருக்கும்.....இதைவிட இவைக்கு வேற வழியும்இல்லை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு இணையக்கூடாது  எனவும் ரிசாட்டு அறிக்கை விட்டுருக்கிறார்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2017 at 8:31 AM, colomban said:

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு - பிரான்ஸில் மாபெரும் ஒன்றுகூடல்

 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்” இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதியுடன் இலங்கை வடமாகணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்படு குறுகிய கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் 27 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூர்வதுடன் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமகாலத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்கால வளமான வாழ்கைக்கான வாழிகாட்டுதலையும் அதே போல்*இலங்கை மக்களின் உரிமையை பாதுகாத்தல் *இலங்கை சிறுபான்மை இனமான நாம் ஏனைய சக இன சமூகத்துடன் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தல் சமூகங்களுடன் எவ்வாறு சகோதரத்துவமாக வாழ வேண்டும் எம் சமூகத்திற்கு ஏதிராக கட்டவிழ்தப்படும் சதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் *முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் சகோதர பரஸ்பர அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தல்.

மிக குறிப்பாக இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமை மிக்க பலமான ஒரு குடையின் கீழ் கட்டுக்கோப்பான சமூகமாக வாழ வேண்டும் என்றாரோக்கியமான தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. இதில் பிரதம, முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொள்ள விருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இந்நிகழ்வில் சகல நாட்டு இலங்கை மக்களும், ஜே எம் சி அமைப்பின் உயர்பீட உருப்பினர்கள், ஆலோசனை குழுவினர் மற்றும் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறும் சகல இலங்கை மக்களையும் அழைத்து வருமாறு மிகத்தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம். விஷேடமாக பல புதிய மாற்றங்களுடன் ,புதுப் பொலிவுடன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான அமைப்பின் வருடாந்த மத்திய குழு கூட்டமும் இடம்பெறவுள்ளது. இதிலும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நேரம்:- 17-30 – 20-30 காலம்:-29 OCTOBER 2017

இடம்:- UFB center, 91 av Paul Vaillant Couturier , La Courneuve. ( JAFFNA MUSLIM COMMUNITY INTERNATIONAL )

தலைமை பணியகம், France

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=174942 .

கூடுறது கூடுங்கோ....

தயவு செய்து பிரஞ்சு அரசு ரகசிய சேவைகள் அரண்டு போற மாதிரி கதையாதீங்கோ...

யாழ்ப்பாண பெயரை வேற இழுக்கிறியள்... பயமாய்க் கிடக்குது....:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18.10.2017 at 11:18 AM, vanangaamudi said:

போர்காலத்தில் யாழில் நிகழ்ந்த முஸ்லிம்களின் இடம்பெயர்வை இனச்சுத்திகரிப்பு என்று  முஸ்லிம்கள் அபத்தமாக தமது சுய இலாபத்தை மட்டும் கருத்தில்கொண்டு அடையாளப்படுத்தினால் இவர்கள் என்றென்றைக்கும் தமிழினத்துடன் சேர்ந்துவாழ முடியாது. அன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் இனத்தின் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தான் இவர்களை பத்திரமாக வெளியேறு ம்படி பணிக்கப்பட்டனரேயன்றி அதை இனச்சுத்திகரிப்பு என்று ஒருபோதும் கருதமுடியாது. இவர்கள் மீள தமது இடங்களுக்கு திரும்புவதற்குக்கூட எதுவித தடையும் இருக்கவில்லை. இறுதிக்கட்ட போரின்பின்னர் நிலைமை வேறுவிதமாக மாற சிங்கள அரசியல்வாதிகளாலும் இனவாத முஸ்லிம்களாலும் திரிபுபடுத்தப்பட்டுலிகளுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

இனச்சுத்திகரிப்புக்கும்  பாதுகாப்பான வெளியேற்றத்துக்கும் வேறுபாடு தெரியாது மாறுபாடாகப் பரப்புரை செய்து எதைத்தான் சாதிக்கப்போகிறீர்கள். ஒருவேளை அரபுநாடுகளின் இரக்கத்தைம் பார்வையையும் நாடியோ! ஒரு வினா உங்களிடம். ஏன் நீங்கள் எந்தவொரு அரபுநாட்டிலும் அரசியல் தஞ்சம் கோரவில்லை. வரலாறுகளைப் பின்னோக்கிப்பாருங்கள். அதுதான் முன்னே செல்வதற்கான  நெம்புகோலாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை அப்பவே இனச்சுத்திகரிப்புச் செய்து விட்டிருக்கனும். பாதுகாப்பாக வெளியேற்றினது தான் தப்பாப் போச்சு. 

அவங்கள்.. மூதூரிலும்.. கல்முனையிலும்.. அம்பாறையிலும்.. மட்டக்களப்பிலும் தமிழ் மக்களைக் கொன்று குவித்து செய்ததைப் போல செய்துவிட்டிருக்கனும்.. tw_angry::rolleyes:

Link to comment
Share on other sites

இவ்விடயம் தொடர்பாக அப்போதைய முஸ்லிம் தலைமையுடனும்  வன்னியில் புலிகளுடனும் அதிக சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவன் என்கிற முறையில் ஒன்றை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். விடுதலைப் புலிகள் தவறு வருந்துகிறோம் என்று அறிக்கை விட்டதை நிராகரித்துவிட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என இங்கு தமிழர்கள் சிலர் கருத்துச் சொல்வது அபத்தமானது. தயவு செய்து அநீதியாக பாதிக்கப்பட்ட வடபகுதி முஸ்லிம்களையும்   போராளிகளின் மன்னிப்பையும் கொச்சைப்படுத்த வேண்டாம். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தமிழர்கள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவில்லை.

Link to comment
Share on other sites

 1990 ம் ஆண்டு முஸ்லீம்கள் வெளியேறறப்பட்டார்கள். மிகக்குறுகிய காலத்தில் அதாவது 1995 ம் ஆண்டு யாழ்பாணம் இலங்கை அரச படைகளால் கைபற்றப்பட்டது. பெரும்பகுதி முஸ்லீம்கள் அபபோதை குடியமர எந்த தடையும் இருககவில்லை.தாராளமாக குடியமர்திருககலாம். அதற்கான அரச படைப்பலமும் அவர்களிடம் இருந்தது.  அவர்கள் இருந்த பகுதிகளில் தமிழ் மககள் குடியேறவில்லை. அப்படி குறியேற விடுதலைபுலிகள் அனுமதிககவும் இல்லை. இந்த சம்பவம். நடக்க முதலே கிழக்கில்  பல தமிழ்க்கிராமங்கள் முஸ்லீம்களால் அபகரிபப்பட்டு முழுமையாகவே முஸ்லீம் கிராமங்களாக மாற்றப்பட்டு விட்ட நிலையில் எந்த முஸ்லீம் தலைவரும் அதற்காக ஒரு வருத்தம் கூட தெரிவி்க்கவில்லை.அம்பாறை வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் 400 க்கும் அதிகமான தமிழ் மக்கள் முஸ்லீம் ஊர்காவற்படைகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்படட சம்பவத்திற்கு எந்த முஸ்லீமும் வருத்தம் தெரிவிக்கவில்லை. முஸ்லீம்களால் கிழககில் தமிழருக்கு இழைக்கபட்ட அநீதிகள் பழைய கதை என்றால் வடக்கு சம்பவமும் பழைய கதைதான்.அதை கிளறி லாபம் அடைய சில முஸ்லீம் இனவாதிகள் முயல்வது தெரிகிறது. இன்னும் நூறு ஆண்டுகளானாலும் இதை கூறியே இலாமடைய முஸ்லீம்கள் முயற்சி செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இப்படியான தமிழர்கள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவில்லை.

அதைத்தான் நானும் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதோடு சரி! ஆனால் முஸ்லிம்கள் கிழக்கிலே செய்த கொடுமைகளால் இன்றுவரை அகதிகளாகவும் காணிகளை இழந்தோராகவும் உள்ளவர்களோடு கண்டு பேசினால் புரிந்தகொள்ள முடியும். ஆனால் அதன் வலியைப்புரிந்துகொள்ள  முடியாது. கனவான்களாக நட்புவட்டங்களோடு  நகர்ந்தவர்களால் அன்றாடம்காய்சிகளின் அவலத்தைப் புரிந்துகொள்ளமுடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொயற் நீங்கள் வேறு ஏதோ விடயத்தையும் இங்கு சொல்ல வந்துவிட்டு சொல்லாமல் செல்வதாக தெரிகிறது. இன்னும் சற்று கூர்மையாக சிந்தியுங்கள் நினைவுக்குவரும்.

Link to comment
Share on other sites

இப்படியான தமிழர்கள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவில்லை. - MEERA, குமாரசாமி.
.
 
தமிழர் விடுதலைக்காகன உங்கள் பங்கை மதிக்கிறேன். பணம் திரட்டுவதும் உசார் ஏற்றுவதும் முக்கியம்தான். உங்கள் பணிகளை மதிக்கிறேன். பணம் திரட்டுவதும் உசார் ஏற்றுவதும் மட்டுமே விடுதலை அரசியல் என்று எண்ணியவர்களால்தான் 2006ல் பாலசிங்கம் ஓரங்கட்டபட்டு பெருந்தோல்வியையும் இனக்கொலையையும் நாம் எதிர்கொள்ள நேர்ந்தது. . இடிப்பாரை இல்லதா மன்னன் கெடுப்பர் இல்லாமல் கெடும் என்கிறார் வள்ளுவர். இடித்துரைத்து வழிதவறல்களைச் சுட்டிக்காட்டும் பணியில் ஈடுபடுகிறவர்களை 2006 புறந்தள்ளியதால்தான் நாம் தோற்றோம்.
 
1995ல் நீங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் எங்களை இடித்துரையுங்கள் சில குறிப்பிட்ட பணிகளை செய்யுங்கள் என கேட்டுக்கொண்டதன் தொடற்ச்சிதான் என் விமசனங்கள். கருணா பிரிந்தபோது “பிரபாகரனுக்கு கிழக்கு போராளிகளுக்கு துப்பாக்கி நீட்ட மக்கள் ஆனையில்லை. ஆனால் அவர்களை வீடுகளுக்கு திரும்பிச் செல்ல சொல்லலாம்” என சூரியன் எ.எமில் குருபரன்மூலமும் (குளோபல் தமிழ் றேடியோ) வீரகேசரியிலும் அறிக்கைவிட்டுவிட்டு ஊரும் உறவும் தடுக்க வன்னிக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தக்கூடியதாக இருந்தது. வன்னியில் உங்கள் அறிக்கையை கேட்டோம் என்பதுதவிர வன்னியில் வேறு எதுவும் சொல்லவில்லை. கிழக்கில் ஒரு இரத்தக் களரியைத் தடுக்க ஆக வேண்டியதை பேசினோம். இட்மிட்ஸ்ம்கத்ளுடத்னுரைப்பது எஞ்சிய பாலங்களை செம்மைப்படுத்திப் பாதுகாப்பதும் சிங்கள ஜனநாயக சக்திகளுடன் தொடர்புகளை மேம்படுத்துவதும் சர்வதேச உறவுகளை நேர்செய்வது எல்லாம்கூட முக்கியமான விடுதலைப் பணிதான்.
.
என்னை நீங்களும் திட்டுகிறீர்கள் முஸ்லிம்களும் திட்டுகிறார்கள். வடகிழக்கு மாகாணம் தமிழர்களதும் தமிழ்பேசும் முஸ்லிம்களதும் தயக பூமியாக அமைந்துள்ளது.
சுயநிர்ணய உரிமைக்கு நிபந்தனைகளோடு இணைந்து போராடப்போகிறோமா அல்லது தனித்தனியே போராடபொகிறோமா என்கிற வரலாற்றுக் கேழ்வி நம்முன்னும் வடகிழக்கு முஸ்லிம் மக்கள் முன்னும் இலங்கை மற்றும் சர்வதேச சமூகங்களின் முன்பும் உள்ளது. இவற்றையெல்லாம் நாம் சிந்திக்கவேணும். முஸ்லிம்களை அடக்கிவிடலாம் என தமிழ் இனவாதிகளோ வடகிழக்கு தமிழர்களை பிழவுபடுத்திவிடலாமென முஸ்லிம் இனவாதிகளோ காணும் கனவு பலிக்கப்போவதில்லை. நாம் பேசித்தான் இப்பிரச்சினையை தீர்த்தாகவேண்டும்.இதைச் சொன்னால் இரண்டு தரப்பில் இருந்தும் என்னை வசைபாடுகிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சவில்லை.
 
வடகிழக்கு மாகாணத்தின் இணைந்த விடுதலை பற்றிய பாரிய பணிபற்றி நாம் விவாதிக்கிறோம். முஸ்லிம்களும் நாமும் இணைந்து சுயநிர்ணய உரிமைக்குப் போராடுவதானால் அதற்க்கு நிபந்தனைகள் உண்டு. அல்லது வடகிழக்கு தமிழர்கள் தனித்தும் முஸ்லிம்கள் தனித்தும் தம்
 
விடுதலையில் உங்க பங்களிப்புகளை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் உங்கள் கண்ணுக்கு அப்பாய் இயங்கும் அரசியலில் முகம் பார்க்காமல் ஆள்தெரியாமல் சேறு அடிக்காதீர்கள். ஏனெனில் நாம் எல்லோரும் விடிவுக்காக தேரிழுக்க கூடியிருக்கிறோம். ஓடும் தேரை நிறுத்த திருப்ப முட்டுக்கட்டை போடுகிறவர்களை வசைபாடாதீர்கள். வடகிழக்கு மக்களின் விடுதலைக்காக பலங்களைப் பெருக்கியும் நம் தவறுகளை திருதியும் நாம் உலகை வென்றாகவேணும். மீராவுக்கும் குமாரசாமிக்கும் என் நல்வாழ்த்துக்கள்
.
- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, poet said:
இப்படியான தமிழர்கள் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவில்லை. - MEERA, குமாரசாமி.
.
 
தமிழர் விடுதலைக்காகன உங்கள் பங்கை மதிக்கிறேன். பணம் திரட்டுவதும் உசார் ஏற்றுவதும் முக்கியம்தான். உங்கள் பணிகளை மதிக்கிறேன். பணம் திரட்டுவதும் உசார் ஏற்றுவதும் மட்டுமே விடுதலை அரசியல் என்று எண்ணியவர்களால்தான் 2006ல் பாலசிங்கம் ஓரங்கட்டபட்டு பெருந்தோல்வியையும் இனக்கொலையையும் நாம் எதிர்கொள்ள நேர்ந்தது. . இடிப்பாரை இல்லதா மன்னன் கெடுப்பர் இல்லாமல் கெடும் என்கிறார் வள்ளுவர். இடித்துரைத்து வழிதவறல்களைச் சுட்டிக்காட்டும் பணியில் ஈடுபடுகிறவர்களை 2006 புறந்தள்ளியதால்தான் நாம் தோற்றோம்.
 
1995ல் நீங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் எங்களை இடித்துரையுங்கள் சில குறிப்பிட்ட பணிகளை செய்யுங்கள் என கேட்டுக்கொண்டதன் தொடற்ச்சிதான் என் விமசனங்கள். கருணா பிரிந்தபோது “பிரபாகரனுக்கு கிழக்கு போராளிகளுக்கு துப்பாக்கி நீட்ட மக்கள் ஆனையில்லை. ஆனால் அவர்களை வீடுகளுக்கு திரும்பிச் செல்ல சொல்லலாம்” என சூரியன் எ.எமில் குருபரன்மூலமும் (குளோபல் தமிழ் றேடியோ) வீரகேசரியிலும் அறிக்கைவிட்டுவிட்டு ஊரும் உறவும் தடுக்க வன்னிக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தக்கூடியதாக இருந்தது. வன்னியில் உங்கள் அறிக்கையை கேட்டோம் என்பதுதவிர வன்னியில் வேறு எதுவும் சொல்லவில்லை. கிழக்கில் ஒரு இரத்தக் களரியைத் தடுக்க ஆக வேண்டியதை பேசினோம். இட்மிட்ஸ்ம்கத்ளுடத்னுரைப்பது எஞ்சிய பாலங்களை செம்மைப்படுத்திப் பாதுகாப்பதும் சிங்கள ஜனநாயக சக்திகளுடன் தொடர்புகளை மேம்படுத்துவதும் சர்வதேச உறவுகளை நேர்செய்வது எல்லாம்கூட முக்கியமான விடுதலைப் பணிதான்.
.
என்னை நீங்களும் திட்டுகிறீர்கள் முஸ்லிம்களும் திட்டுகிறார்கள். வடகிழக்கு மாகாணம் தமிழர்களதும் தமிழ்பேசும் முஸ்லிம்களதும் தயக பூமியாக அமைந்துள்ளது.
சுயநிர்ணய உரிமைக்கு நிபந்தனைகளோடு இணைந்து போராடப்போகிறோமா அல்லது தனித்தனியே போராடபொகிறோமா என்கிற வரலாற்றுக் கேழ்வி நம்முன்னும் வடகிழக்கு முஸ்லிம் மக்கள் முன்னும் இலங்கை மற்றும் சர்வதேச சமூகங்களின் முன்பும் உள்ளது. இவற்றையெல்லாம் நாம் சிந்திக்கவேணும். முஸ்லிம்களை அடக்கிவிடலாம் என தமிழ் இனவாதிகளோ வடகிழக்கு தமிழர்களை பிழவுபடுத்திவிடலாமென முஸ்லிம் இனவாதிகளோ காணும் கனவு பலிக்கப்போவதில்லை. நாம் பேசித்தான் இப்பிரச்சினையை தீர்த்தாகவேண்டும்.இதைச் சொன்னால் இரண்டு தரப்பில் இருந்தும் என்னை வசைபாடுகிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சவில்லை.
 
வடகிழக்கு மாகாணத்தின் இணைந்த விடுதலை பற்றிய பாரிய பணிபற்றி நாம் விவாதிக்கிறோம். முஸ்லிம்களும் நாமும் இணைந்து சுயநிர்ணய உரிமைக்குப் போராடுவதானால் அதற்க்கு நிபந்தனைகள் உண்டு. அல்லது வடகிழக்கு தமிழர்கள் தனித்தும் முஸ்லிம்கள் தனித்தும் தம்
 
விடுதலையில் உங்க பங்களிப்புகளை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் உங்கள் கண்ணுக்கு அப்பாய் இயங்கும் அரசியலில் முகம் பார்க்காமல் ஆள்தெரியாமல் சேறு அடிக்காதீர்கள். ஏனெனில் நாம் எல்லோரும் விடிவுக்காக தேரிழுக்க கூடியிருக்கிறோம். ஓடும் தேரை நிறுத்த திருப்ப முட்டுக்கட்டை போடுகிறவர்களை வசைபாடாதீர்கள். வடகிழக்கு மக்களின் விடுதலைக்காக பலங்களைப் பெருக்கியும் நம் தவறுகளை திருதியும் நாம் உலகை வென்றாகவேணும். மீராவுக்கும் குமாரசாமிக்கும் என் நல்வாழ்த்துக்கள்
.
- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்
 

2004இல் ஜி8 நாடுகள் விடுதலைப்புலிகளையும் 
சோமாலிய கப்பல் கடுத்துபவர்களையும் 
துடைத்து அழிக்க வேண்டும் எனும் முடிவை எட்டி இருக்கிறார்கள். 

காகம் இருக்க பணம்காய் விழுந்த மாதிரி 
நீங்கள் கதை பேசுவதுபோல் தான் நான் எண்ணுகிறேன்.
சொல்வதை கேட்கவில்லை என்பதை ........ ஏற்றுக்கொள்கிறேன் 
நீங்கள் சொன்ன விடயம் என்ன ?

கவுசல்யான் முதல் கொண்டு முழு அரசியல் போராளிகள் மேலும் 
துப்பாக்கி நீண்டது மட்டுமல்ல .... கண்காணிப்பு குழுமீதே மண்டைதீவில் இருந்து 
செல் வீசினார்கள்.
போட்ட திட்ட்ங்கள் படி மேள தாளங்களுடன்தான் போர் தொடங்கியது 
மாவிலாறு புலிகள் மூட முன்பே இந்திய இராணுவம் வவுனியாவில் நிற்கிறது 

ஏன் நீங்கள் யாரும் 
அந்த நேரத்தில் கோத்தபாயாவுக்கு ஏன் எதுவும் சொல்லவில்லை ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, poet said:
 
. வன்னியில் உங்கள் அறிக்கையை கேட்டோம் என்பதுதவிர வன்னியில் வேறு எதுவும் சொல்லவில்லை.
.
- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

திரு பாலா அண்ணா அவர்கள் புலத்திலே நடைபெற்ற கூட்டத்திலே போராட்டம் தொடர்பான கருத்துகளை எழுதுமாறு கேட்டதற்கு, தமது  சொந்தக்குத்து வெட்டுகளைத் தலைமைக்கு எழுதியவர்களே அதிகமெனச் சுட்டிய வியமொன்று நினைவுக்குவருகிறது.  இங்கே கருத்துகளைக் கேட்பதில்லையென்ற கருத்து பொருத்தமின்றிப்போகிறது. ஆனால் சிலவிடயங்கள் கைமீறிப்போனபின்  பிடிக்கமுயல்வதால் பயனுண்டாகுமா? இங்கே போராட்ட காலத்திலாகட்டும் பின்வந்த போரற்ற காலத்திலாகட்டும் தமிழினமே பெருமளவிலான அழிவுகளையும் துன்பங்களையும் சுமக்கிறது. எனவே மரத்திலிருந்து விழுந்தவன்மேல் மாடேறியதுபோல் எமது சகோதரத் தமிழ்பேசும் முஸ்லிம்கள் நடக்காதிருப்பதே பொருத்தமாகும்.  எல்லாப்பிரச்சினைகளுக்கும் வீழ்ச்சியோ எழுச்சியோ இறுதியில் பேச்சுவார்த்தையே உலக இயல்பு. ஆனால் உலகநடைமுறைக்கு விரோதமான இனமொன்றோடு நாம் பேசவேண்டியிருப்பதும் சரியான தலைமையற்ற நிலைமையுமே பெரும் அனர்த்தமாகவுள்ளது. 

தமிழரிட ம்ஆயுதபலம்  இருந்தபோது அடக்கிவாசித்தவர்கள் இன்று சிங்களத்தைமேவியவாறு நிலப்பிடிப்பும் மதமாற்றமுமாக எமது இனத்தையும் நிலத்தையும் சிதைத்தவாறு நீதியைக்கோரும் உரிமை இருக்கிறதா என்பதுகுறித்து மதிப்புக்குரிய கவிஞரையா  அவர்கள் என்ன நினைக்கிறீர்கள். ஏனென்றால் வயதிலும் அனுபவத்திலும்  அமைப்புடனான நெருக்கம் போன்றவற்றில்  பெரியவரான உங்கள் கருத்தை  மதிக்கும் அதேவேளை இதுபோன்ற  இவர்களது நயவஞ்சகச் செயற்பாடுகளைப் பார்த்துக் கைதட்டமுடியாதென்பதையும்  மனம்கொள்ள வேண்டுமல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஒக்டோபர் – இலங்கை முஸ்லிம்களை திரண்டு வரும்படி அழைப்பு

கறுப்பு ஒக்டோபர் - இலங்கை முஸ்லிம்களை திரண்டு வரும்படி அழைப்பு

 

கறுப்பு ஒக்டோபர் - இலங்கை முஸ்லிம்களை திரண்டு வரும்படி அழைப்பு

 

அழுகை விபரம்: http://www.akuranatoday.com/news/?p=178691 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் போயட்

உங்கள் மீதிருந்த  மதிப்பும்

நம்பிக்கையும்

நான் கேட்க கேள்வி  ஒன்றை  முகநூலில் நீங்கள்  நீக்கியதுடன் போய்விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2017 at 9:31 AM, colomban said:

குறிப்பாக இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமை மிக்க பலமான ஒரு குடையின் கீழ் கட்டுக்கோப்பான சமூகமாக வாழ வேண்டும் என்றாரோக்கியமான தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. இதில் பிரதம, முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொள்ள விருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக இந்நிகழ்வில் சகல நாட்டு இலங்கை மக்களும், ஜே எம் சி அமைப்பின் உயர்பீட உருப்பினர்கள், ஆலோசனை குழுவினர் மற்றும் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறும் சகல இலங்கை மக்களையும் அழைத்து வருமாறு மிகத்தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம். விஷேடமாக பல புதிய மாற்றங்களுடன் ,புதுப் பொலிவுடன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான அமைப்பின் வருடாந்த மத்திய குழு கூட்டமும் இடம்பெறவுள்ளது. இதிலும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நேரம்:- 17-30 – 20-30 காலம்:-29 OCTOBER 2017

இடம்:- UFB center, 91 av Paul Vaillant Couturier , La Courneuve. ( JAFFNA MUSLIM COMMUNITY INTERNATIONAL )

தலைமை பணியகம், France
 

தமிழர்கள்  அதிகம்  வாழும்  La Courneuve பகுதியில்   தொடங்குகிறார்கள்

இங்கேயும் கலகங்களையும் நரித்தனங்களையும்  செய்து  ஒற்றுமையாக வாழும் சமூகங்களுக்கிடையில் விசத்தை  விதைக்கப்பார்க்கிறார்கள்

இதை  நிச்சயம் சிறீலங்கா  அரசு  ஊதிப்பெருப்பிக்கும்

குளிர் விட்டுப்போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தோழர் போயட்

உங்கள் மீதிருந்த  மதிப்பும்

நம்பிக்கையும்

நான் கேட்க கேள்வி  ஒன்றை  முகநூலில் நீங்கள்  நீக்கியதுடன் போய்விட்டது

நீங்கள் அதிஷ்ட சாலி விசுகர்  
ஏனெனில் வ.ஐ.ஜெயபாலனிடம் கேள்வி கேட்டால்
ஆளையே தன் நட்பு வட்டாரத்தில்
இருந்து நீக்கிவிடுவார்.
அவர் சொல்வதை
நாம் கேட்க வேண்டுமே ஒழிய
நாம் அவரை நாம்
கேள்வி ஏதும் கேக்க கூடாது

 

18 hours ago, nochchi said:

 

தமிழரிட ம்ஆயுதபலம்  இருந்தபோது அடக்கிவாசித்தவர்கள் இன்று சிங்களத்தைமேவியவாறு நிலப்பிடிப்பும் மதமாற்றமுமாக எமது இனத்தையும் நிலத்தையும் சிதைத்தவாறு நீதியைக்கோரும் உரிமை இருக்கிறதா என்பதுகுறித்து மதிப்புக்குரிய கவிஞரையா  அவர்கள் என்ன நினைக்கிறீர்கள். ஏனென்றால் வயதிலும் அனுபவத்திலும்  அமைப்புடனான நெருக்கம் போன்றவற்றில்  பெரியவரான உங்கள் கருத்தை  மதிக்கும் அதேவேளை இதுபோன்ற  இவர்களது நயவஞ்சகச் செயற்பாடுகளைப் பார்த்துக் கைதட்டமுடியாதென்பதையும்  மனம்கொள்ள வேண்டுமல்லவா?

இவர்கள் தாம்
நடுநிலை வாதிகள் என்ற
வேடத்தை போட்டு விட்டார்கள்
முஸ்லீம் தமிழ் மக்கள் உறவுக்காக
உழைப்பவர்கள் என்ற
அரிதாரம் பூசி விட்டார்கள்

இது தான் இவர்களின்
அரசியல்
அடையாளம்.
இதை மாற்றினால்
தம் இருப்பு போய்விடும்
என்ற பயம்

முஸ்லீம் மக்கள் மீதான
புலிகளின் அடக்குமுறையை
பேசும் இவர்கள்
எப்போதாவது முஸ்லிம்கள்
செய்த படுகொலைகளை
பற்றி வாய் திறந்து உள்ளார்களா

கிழக்கில் பரவும்
இஸ்லாமியவாதம் பற்றி
வாய் திறக்கின்றார்களா?

வஹாபி இஸ்லாமியம்
கிழக்கு முழுதும் படிப்படியாக
பரவி தமிழ் மக்களை
அடிமைப்படுத்த முனைவதை
என்றாவது எதிர்த்து இருக்கின்றார்களா?

றிசாட் போன்ற பச்சை
இனவாதிகளுக்கு எதிராக
கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்களா?

முல்லையில் முஸ்லிம்களால்
கமுகு தோட்டம் எரிக்கப்பட்டது
தொடர்பாக
இவர் என்ன அறிக்கை விட்டார்?

இல்லை
இவரை போன்றவர்கள்
அப்படி செய்ய மாட்டார்கள்
அப்படி எதிர்த்தால்
போட்டுக் கொண்டு இருக்கும்
வேடம் கலைந்து விடும்

இவர்களிடம் கேள்வி கேட்டால்
நான் பெரிய பருப்பு
என்ற மாதிரி பதில்
மட்டும் தான் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, வைரவன் said:

நீங்கள் அதிஷ்ட சாலி விசுகர்  
ஏனெனில் வ.ஐ.ஜெயபாலனிடம் கேள்வி கேட்டால்
ஆளையே தன் நட்பு வட்டாரத்தில்
இருந்து நீக்கிவிடுவார்.
அவர் சொல்வதை
நாம் கேட்க வேண்டுமே
நாம் அவரை நாம்
கேள்வி கேக்க கூடாது

இங்கே  தம்பிமார்  அவருடன் முரண்பட்டு மல்லுக்கட்டியபோது

அவர்களுடன் முரண்பட்டிருக்கின்றேன்

காரணம்  எதோ  சொல்லவருகின்றார் என்று.

ஆனால் அவர் சொன்னதற்கு ஒரு  விளக்கம்  கேட்டதையே  அவரால் நேர்மையாக பரிசீலிக்கமுடியாத போது

உணர்ந்து கொண்டேன்

தம்பிகள் என்னைவிட நேர்மையாக சிந்தித்திருக்கிறார்கள்  என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் ...
என்ன பாடு பட்டாலும் அக்குறணை செய்தியை பட்டி தொட்டியெல்லாம்
பரவ செய்கிறேன் என்று சபதம் எடுத்து விட்டீர்கள் போல் தெரிகிறது.

"முஸ்லீம் சமூகம்"  என்ன தான் கூட்டம் போட்டு *********************   ***************** 
ஒன்னும் வேலைக்குஆகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

இங்கே  தம்பிமார்  அவருடன் முரண்பட்டு மல்லுக்கட்டியபோது

அவர்களுடன் முரண்பட்டிருக்கின்றேன்

காரணம்  எதோ  சொல்லவருகின்றார் என்று.

ஆனால் அவர் சொன்னதற்கு ஒரு  விளக்கம்  கேட்டதையே  அவரால் நேர்மையாக பரிசீலிக்கமுடியாத போது

உணர்ந்து கொண்டேன்

தம்பிகள் என்னைவிட நேர்மையாக சிந்தித்திருக்கிறார்கள்  என்று.

விசுகர்! இன்னும் நிறைய வரும் காத்திருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.