Jump to content

2297 பேர் உயிரிழந்த அவலம் - பொலிஸ் ஊடக பேச்சாளர்


Recommended Posts

2297 பேர் உயிரிழந்த அவலம் - பொலிஸ் ஊடக பேச்சாளர்

 

இந்த வருடத்தில் கடந்த 10 மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 2297 பேர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸ் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர  தெரிவித்துள்ளார்.

2297 பேர் உயிரிழந்த அவலம் -  பொலிஸ் ஊடக பேச்சாளர்

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

வீதிகளில்  வீதி ஒழுங்குகளை விதிகளை மீறி  வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் பொலிஸ் தலைமையகம், வீதி ஒழுங்குகளை பின்பற்றுபவர்களை கௌரவிக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களில் கடந்த காலங்களில்  இந்த கௌரவிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் அதிகமாக மோட்டார் சைக்கிள்களில்  பயணித்தவர்களே என பொலிஸ் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன்,  பாதசாரிகளில் பலரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/dead-2297-persons-in-lanka-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.