Jump to content

சசிகலாவை முதல்வராக்க அழைக்காதது ஏன்? - முன்னாள் ஆளுநர் விளக்கம்


Recommended Posts

சசிகலாவை முதல்வராக்க அழைக்காதது ஏன்? - முன்னாள் ஆளுநர் விளக்கம்

 

 
Sasikala1

சட்டப்பேரவை தலைவராக எம்எல்ஏக்களால் சசிகலா தேர்வு செய்யப்பட்டு கடிதம் கொடுத்தபோதும், சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியாக இருந்ததால், முதல்வர் பதவியேற்க அவரை அழைக்கவில்லை என்று முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தன் நூலில் விளக்கியுள்ளார்.

தமிழக பொறுப்பு ஆளுநராக சி.எச்.வித்யாசாகர் ராவ் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல், ஓராண்டு பணியாற்றினார். ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்த பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்ட ஸ்திரமற்ற தன்மையை சமயோஜிதமாக கையாண்டார். அவர் இதுதொடர்பாக எழுதிய புத்தகத்தை நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில், தமிழகத்தில் ஆளுநராக இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 6-ம் அத்தியாயத்தில், சசிகலா தொடர்பாக சில விளக்கங்களை அளித்துள்ளார். ஓபிஎஸ், பிப்.5-ம் தேதி பதவி விலகினார். அன்றே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலா தலைவராக தேர்வானார். உடனடியாக, ஆளுநரை சந்தித்து ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், ஆளுநர் உடனடியாக அழைக்கவில்லை.

இது தொடர்பாக அவர் தன் புத்தகத்தில்,‘‘ சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரினார். மறுநாள் ஓபிஎஸ் ராஜினாமாவை ஏற்றேன். அன்று, உச்ச நீதிமன்றம், சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தது. இந்த நேரத்தில் சசிகலாவை பதவியேற்க அழைப்பதா அல்லது தீர்ப்புக்காக காத்திருப்பதா என்ற மிகப்பெரிய சவால் என் முன் இருந்தது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடிவு செய்தேன். சசிகலாவை பதவியேற்க அழைக்கவில்லை. இந்த விவகாரத்தை சாதுர்யமாக கையாண்டதால், சட்டச்சிக்கல் மற்றும் அரசியலில் கரும்புள்ளி விழுவதும் தவிர்க்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19877881.ece?homepage=true

Link to comment
Share on other sites

சசிகலாவால் முதல்வராக முடியாமல் போனது ஏன்?
வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் விரிவான பதில்
 
 
 

'தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், இந்திய பண்பாட்டில் வேரூன்றி உள்ள அகிம்சை போராட்டத்திற்கு, அழகிய விளம்பர மாக அமைந்தது' என, தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த, வித்யாசாகர் ராவ் தெரிவித்து உள்ளார்.

 

சசிகலாவால்,முதல்வராக,முடியாமல்,போனது,ஏன்?

மஹாராஷ்டிர கவர்னராக உள்ள, வித்யாசாகர் ராவ், 2016 செப்., 2 முதல், இந்தாண்டு அக்., 1 வரை, தமிழக பொறுப்பு கவர்னராக இருந்தார். அவர் கவர்னராக இருந்த போது, முதல்வராக இருந்த ஜெ., மறைவு, அதனால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் என, தமிழக அரசியல் பெரும் பரபரப்பாக இருந்தது.

இது குறித்து, 'அந்த பரபரப்பான நாட்கள்' என்ற தலைப்பில், வித்யாசாகர் ராவ் புத்தகம் எழுதி உள்ளார். இப்புத்தகத்தை, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
 

12 அத்தியாயம்


இப்புத்தகம், 148 பக்கங்கள் உடையது. அதில், கவர்னராக இருந்த போது நடந்த நிகழ்வுகளை, 12 அத்தியாயங்களாக தொகுத்து உள்ளார். முதல் தொகுப்பில், அவரது பதவியேற்பு நிகழ்ச்சி விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டாவது தொகுப்பில், ஜெ., மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது, அவரது துறைகள் மாற்றம் செய்யப்பட்ட விபரங்கள் உள்ளன.இது பற்றி, வித்யாசாகர் ராவ் கூறியுள்ளதாவது:

ஜெ., உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது எதிர்பாராதது. இது, மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் சில நாட்களில், உடல் நலம் தேறி, வீடு திரும்புவார் என, அனைவரும் நம்பினர். ஆனால், நாட்கள் கடந்து

மாதங்களாகின. அவர் சிகிச்சை பெற்று வந்த, சென்னை, அப்பல்லோ மருத்துவமனை முன், ஏராளமான மக்கள் திரண்டனர்.

மாற்றப்பட்டன:இந்த சூழ்நிலையில், மருத்துவ மனைக்கு சென்று, முதல்வருக்கு சிகிச்சை அளித்த, மருத்துவர்களை சந்தித்தேன். அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில், அவர் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டேன். அதன்பின், அரசு முறையாக நடைபெற வேண்டும் என்பதற்காக, எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் இருந்த போது, மேற்கொண்டது போல,ஜெ., கவனித்து வந்த துறைகள், நிதி அமைச்சர், பன்னீர்செல்வத்திற்கு மாற்றப்பட்டன.இவ்வாறு அவர் கூறிஉள்ளார். மூன்றாவது தொகுப்பில், ஜெ., மறைவு மற்றும் இறுதி சடங்கு விபரங்களை, வித்யாசாகர் ராவ் தெரிவித்து உள்ளார்.

நான்காவது தொகுப்பில், 'வர்தா' புயலால் ஏற்பட்ட பாதிப்பு, மீட்பு நடவடிக்கை குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. புயலில், ஏராளமான மரங்கள் சேத மடைந்ததால், மரக்கன்றுகளை, அதிகளவில் நடும்படி, பல்கலை நிர்வாகங்களுக்கு உத்தரவிட்ட தாகவும், அதன்படி, கவர்னர் மாளிகையிலும், ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
 

அழகிய விளம்பரம்


ஐந்தாவது தொகுப்பில், ஜல்லிக்கட்டு போராட்ட நிகழ்வுகளை விவரித்து உள்ளார். மெரினா போராட்டம் குறித்து குறிப்பிடும் போது, 'தமிழகத் தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், இந்திய பண்பாட்டில் வேரூன்றி உள்ள அகிம்சை போராட்டத்திற்கு, அழகிய விளம்பரமாக அமைந்தது' என, வர்ணித்து உள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம், அதன் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது, அதற்கு தான் உதவியது போன்ற விபரங்களையும் விளக்கி உள்ளார். லட்சக்கணக்கான மக்கள் திரண்ட போதும், சிறு அசம்பாவிதம் ஏற்படாததை,பெருமையாக குறிப் பிட்டு உள்ளார். ஆறாவது தொகுப்பில், 'அரசியல் கொந்தளிப்பு' என்ற தலைப்பில், முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா, அதன் தொடர்ச்சி யாக, முதல்வராக சசிகலா முயற்சி மற்றும் சட்டப் போராட்டங்களை விவரித்து உள்ளார்.
 

கடிதம்:

சசிகலாவை, முதல்வர் பதவியேற்க

 

அழைக்க கோரி, என்னிடம் கடிதம் தரப்பட்டது. அதில், நான் உடனடியாக எந்த முடிவும் எடுக்க வில்லை. அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு வர உள்ள தகவல் கிடைத்தது.

'எனவே, தீர்ப்பு வரும் வரை, காத்திருக்க முடிவு செய்தேன். அதன்பின், நான் அவசரம் காட்டாத தையும், அரசியல் சட்டப்படி செயல்பட்டதை யும், தமிழக மக்கள் பாராட்டினர்' என, அவர் எடுத்துரைத்து உள்ளார்.

ஏழாவது தொகுப்பில், உயர் கல்வித் துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்களை பட்டியலிட்டு உள்ளார். மற்ற தொகுப்புகளில், ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சிகள் குறித்த விபரங்கள் இடம் பெற்று உள்ளன.அனைத்து பக்கங்களிலும், வண்ண புகைப்படங்கள் நிறைந்துள்ளன. கவர்னர் மாளிகை புகைப்படங்கள், ஜல்லிக் கட்டு போராட்டப் படங்கள், ஜெ., இறுதி சடங்கு புகைப்படங்களும் உள்ளன.
 

சிறு குறிப்பு


திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி குறித்து, அதிகம் அறிந்தவர் வித்யாசாகர் ராவ். அதை வெளிப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு பக்கத்திலும், திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி யின் ஆங்கில வடிவம் இடம் பெற்றுள்ளது. அதே போல், 'வர்தா' புயலின் போது, எவ்வளவு வேகத்தில் காற்று வீசியது, எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்ற விபரங்களையும் பட்டியலிட்டு உள்ளார்.

ஜெ., சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவ மனையில், எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெற்றது பற்றியும், சிறு குறிப்பாக, ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1879572

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.