Jump to content

வட கொரியா பற்றி நாடகம் தயாரித்த பிரிட்டன் தொலைக்காட்சி மீது இணையத் தாக்குதல்


Recommended Posts

வட கொரியா பற்றி நாடகம் தயாரித்த பிரிட்டன் தொலைக்காட்சி மீது இணையத் தாக்குதல்

வட கொரியா பற்றிய நாடகம் ஒன்றை உருவாக்கிய பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனத்தை குறிவைத்து வட கொரிய ஹேக்கர்கள் இணையத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைக்கதை ஆசிரியர் ஒருவர் எழுதவிருந்த இந்த நாடகத் தொடர் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

"மிகவும் தைரியமான மற்றும் ஆர்வத்தைத் தூண்டுகின்ற புதியதொரு நாடகத் தொடராக இந்த தொலைக்காட்சி தொடர் இருக்கும்" என்று 2014 ஆம் ஆண்டு, சேனல்4 அறிவித்தது.

"ஆப்போசிட் நம்பர்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் கதைக் கரு, ஒரு பிரிட்டன் அணு விஞ்ஞானி வட கொரியாவுக்கு கைதியாக கொண்டு செல்லப்படுவதாக அமைந்தது.

இதனைத் தயாரிப்பதில் 'மேமோத் ஸ்கிரீன்' நிறுவனம் ஈடுபடத் தொடங்கியதை, அடுத்து, அதனுடைய கணினிகள் தாக்குதலுக்கு உள்ளாயின.

இந்த நிகழ்ச்சியை தயாரிப்பதற்கான நிதி ஆதாரத்தை திரட்டுவது தோல்வியடைந்ததை அடுத்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என்று இந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

மிகுந்த வலையளித்த நடவடிக்கை

இந்த தொலைக்காட்சி தொடர் பற்றிய தகவல்கள் வெளியானதும் வட கொரிய அதிகாரிகள் மிகவும் கோபத்துடன் மறுமொழி கூறினர்.

இந்த தொலைக்காட்சித் தொடரின் கதைக்கருவை "அவதூறான நாடகம்" என்று விவரித்திருந்த பியோங்யாங், ராஜீய உறவுகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்று பிரிட்டனைக் கோரியிருந்தது.

வட கொரியர்கள் எதிர்ப்பு மட்டுமே தெரிவிக்கவில்லை. நாடகம் தயாரிக்கவிருந்த நிறுவனத்தின் கணினி வலையமைப்புகளில் புகுந்து சேதம் விளைவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி முதன்முதலில் 'நியூ யார்க் டைம்ஸ்' வெளியிட்ட தகவலில், சேனல் 4 இந்த தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்தது என்று தெரிவித்திருந்தது.

கதாசிரியர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால், உண்மையில் 'மாமோத் ஸ்கிரீன்' நிறுவனம்தான் உணைமையில் ஹேக்கர்களால் தாக்குக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பது பிபிசி-யின் புரிதல்.

இந்த இணையத் தாக்குதலால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், இந்த திட்டத்தில் வட கொரிய ஹேக்கர்கள் இருப்பது தெரிய வந்துள்ளதே, அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்ற எச்சரிக்கையைத் தந்தது.

"இந்த நடவடிக்கை மிக விரைவாக இந்நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்து திக்குமுக்காடவைத்தது" என்று அந்த நிறுவனத்தின் கவலையை பற்றி விவரிக்கும்போது, இன்னொரு நிறுவனத்தை சோந்த தொலைக்காட்சி செயலதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த இணைய தாக்குதல் பற்றி பிரிட்டன் உளவுத் துறையும் அறிந்திருந்தது.

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 'சோனி பிச்சர்ஸ்' நிறுவனம் மிக மோசமான இணைய தாக்குதலுக்கு உள்ளானதால் இந்த கவலை மிக அதிகமாகவே இருக்கிறது.

'கார்டியன் ஆப் பீஸ்' என்கிற நிறுவனம் இதனை செய்ததாக தெரிவித்திருந்தாலும், வட கொரியாதான் இதற்கு பின்னர் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

சோனி நிறுவனம் தயாரித்திருந்த 'தி இண்டர்வியூ' என்ற திரைப்படம், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் படுகொலை செய்யப்பட்டதாக வர்ணிக்கும் அரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், அந்த இணைய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

சோனி நிறுவனத்தின் மின்னஞ்சல்கள் திருடப்பட்டு, பொதுவெளியில் வெளியிடப்பட்டன. கணினி வலையமைப்பின் முக்கியமானதொரு பகுதி ஹேக்கர்களால் அழிக்கப்பட்டது.

மிரட்டல்கள் வந்ததால், திரையரங்குகள் இதனை வெளியிடாது என்ற கவலைகளுக்கு மத்தியில் இந்தத் திரைப்படம் இணையத்தில் வெளியானது.

இதனால், ஒபாமா நிர்வாகத்திலிருந்த வெள்ளை மாளிகை மிக வலுவான பதிலடி வழங்கியது. வட கொரியா மீது தடைகள் விதிக்கப்பட்டன.

இன்டர்வீயூபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

'சோனி பிச்சர்ஸ்' போன்று பாதிக்கப்படாமல் இருந்தாலும், பிரிட்டனின் நிறுவனம் ஒன்றும் அப்போது இலக்கு வைக்கப்பட்டது என்று அதிகாரிகள் அறிந்திருந்தனர். ஆனால், அமெரிக்கா அளவுக்கு பிரிட்டன் அரசிடம் இருந்து தீவிர எதிர்வினை இல்லை. சோனி பிக்சர்ஸ் பாதிக்கப்பட்ட அளவுக்கு பிரிட்டன் நிறுவனத்துக்குப் பாதிப்பு இல்லை.

அதிகரித்த தீவிரம்

பிரிட்டனில் "ஆப்போசிட் நம்பர்" தொலைக்காட்சித் தொடர் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சேனல்4-ல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச நாடகப் பிரிவின் இரண்டாவது பணித்திட்டமாக இந்த தொலைக்காட்சி நாடகம் இருந்தது.

இந்நேரத்தில், "மாமோத் ஸ்கிரீன்" நிறுவனமும், அதன் விநியோக கூட்டளி நிறுவனமான "ஐடிவி ஸ்டுடியோஸ் குளோபல் எண்டர்டெயின்மன்ட்" டும் சர்வதேச கூட்டாளி நிறுவனம் ஒன்றை இதற்காக தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தன.

ஆனால், 2015 ஆம் ஆண்டு 'மம்மோத் ஸ்கிரீன்' நிறுவனத்தை 2015ல் வாங்கிவிட்ட 'ஐடிவி ஸ்டுடியோஸ்' செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் பிப்ரவரி மாதம் பேசியபோது, "மூன்றாவது நிறுவனத்தின் நிதி ஆதரவு கிடைக்காததால், கூட்டு தயாரிப்பில் முன்னேற்றம் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.

விக்டோரியா தொடர்படத்தின் காப்புரிமைMAMMOTH SCREEN

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரிக்க நிதி ஆதரவை பெறுவதிலும், தயாரிப்பை முன்னெடுப்பதிலும் ஏற்பட்ட தோல்வி, ஏதாவது விதத்தில் இந்த இணையத் தாக்குதலோடு தொடர்புடையதா என்று இதில் ஈடுபட்டுள்ள யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. .

வட கொரியாவில் இருந்து வரும் இணைய தாக்குதல் அச்சுறுத்ததல்கள் நின்றபாடில்லை. அந்நாட்டு ஹேக்கர்கள் தென் கொரிய வங்கிகள் மற்றும் ஊடகங்கள் மீது இணைய தாக்குதல் நடத்தி தங்கள் தீவிரத்தையும், கூர்மையையும் உறுதி செய்தனர்.

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட வான்னாக்ரை ரேன்சம்வேர் (இணையத் தாக்குதல் நடத்தி பணயப் பணம் கோரும் வைரஸ்) தாக்குதலுக்கு பின்னால் வட கொரியா இருப்பதாக பிரிட்டன் அதிகாரிகள் நம்பினர். பிரிட்டன் தேசிய சுகாதார சேவையின் முக்கிய பகுதிகள் இதனால் பாதிக்கப்பட்டது.

ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக, பிரிட்டன் அரசிடம் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ பதிலும் இல்லை.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட இணைய தாக்குதல், வட கொரியா என்னவெல்லாம் செய்யவல்லது என்பது குறித்தும், இத்தகைய இணைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றபோது, பிரிட்டன் நிறுவனங்களும், அரசும் என்வாறு பதிலடி அளிக்கும் என்றும் கவலைகளைத் தந்துள்ளது.

http://www.bbc.com/tamil/global-41648891

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.