Jump to content

அருட்தந்தை இமானுவெல் சந்திரிக்காவுடன் சந்திப்பு


Recommended Posts

அருட்தந்தை இமானுவெல் சந்திரிக்காவுடன் சந்திப்பு

 

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் அடிகளார் இன்றைய தினம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான செயலகத்தின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்கவை சந்தித்துள்ளார். 

புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களில் ஒன்றாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேரில் தற்போது கொழும்புக்கு விஜயம் செய்து அங்கு தங்கியுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குழந்தைகள் ஊடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி இன ஒற்றுமையை ஏற்படுத்தி நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருடனான இன்றைய சந்திப்பு பயனுள்ளதாக அமைந்திருந்ததாக அருட்தந்தை இமானுவெல் அடிகளார் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

அருட்தந்தை இமானுவெல்  சந்திரிக்காவுடன் சந்திப்பு

இதேவேளை கடந்தவாரம் கொழும்பில் வைத்து ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதும் மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/good-meeting-with-Madam-Chandrika

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமி! சந்திரிக்காவோடை கதைச்சு வெல்லலாம் எண்டு நினைக்கிறாரோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.