Jump to content

வாய்ச்­சொல்­லில் வீர­ரடி!


Recommended Posts

வாய்ச்­சொல்­லில் வீர­ரடி!

 

நெஞ்­சில் உர­மு­மின்றி, நேர்­மைத் திற­னு­மின்றி வஞ்­சனை சொல்­வா­ரடி, கிளியே, வாய்ச்­சொல்­லில் வீர­ரடி. இது புரட்­சிக் கவி பார­தி­யின் வரி­கள்.

இலங்­கை­யின் 70ஆவது சுதந்­திர தினம் அடுத்த ஆண்டு கொண்­டா­டப்­ப­டும்­போது புதிய அர­ச­மைப்­பின் ஊடாக இனங்­க­ளுக்கு இடை­யில் முழு­மை­யான நல்­லி­ணக்­கத்­தைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யும் என்று நம்­பு­கின்­றோம் எனத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சொல்­லி­யி­ருப்­ப­தைப் பார்க்­கின்­ற­போது பார­தி­யின் இந்த வரி­கள்­தான் ஏனோ ஞாப­கத்­திற்கு வரு­கின்­றன.

தலைமை அமைச்­ச­ரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­ல­மான அலரி மாளி­கை­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற தீபா­வ­ளிப் பண்­டி­கைக் கொண்­டாட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யில் தலைமை அமைச்­சர் இத­னைத் தெரி­வித்­தார்.

அதே நிகழ்­வில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க் கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், ‘‘இந்­தத் தீபா­வ­ளிப் பண்­டி­கை­யை­விட அடுத்த ஆண்டு தீபா­வ­ளிப் பண்­டிகை மிக­வும் சிறப்­பான, மகிழ்ச்­சி­யான சூழ­லில் நடை­பெ­றும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே இன்­றைய தேசிய தீபா­வ­ளிப் பண்­டி­கை­யில் கலந்­து­கொள்­கிறேன்’’ என்றார்.

கடந்த ஆண்­டும், இதே­போன்று அலரி மாளி­கை­யில் இடம்­பெற்ற தீபா­வ­ளிப் பண்­டி­கை­யில் உரை­யாற்­றிய சம்­பந்­தர், நல்­லாட்­சி­யில் தமிழ் மக்­க­ளுக்­கான வெளிச்­சம் தென்­ப­டத் தொடங்­கி­யுள்­ளது, அடுத்த ஆண்டு தீபா­வ­ளித் திரு­நா­ளுக்கு முன்­னர் இந்த வெளிச்­சம் நிரந்­த­ர­மா­கி­வி­டும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

கடந்த ஆண்டு நம்­பிக்­கை­யோடு தெரி­விக்­கப்­பட்ட அவ­ரது அந்தக் கருத்து இந்த ஆண்­டில் மேலும் வலுப்­பெற்­றி­ருக்­க­வேண்­டும். ஆனால், யாழ்ப்­பா­ணத்­தில் நடந்த, அரச தலை­வ­ரும் கலந்­து­கொண்ட நிகழ்­வில் கலந்­து­கொள்­ளா­மல் விடு­வ­தன் மூலம் நாட்­டின் தலை­மைக்­குத் தமது அதி­ருப்­தி­யையும் கண்­ட­னத்­தை­யும் தெரி­விக்­க­வேண்­டிய நில­மையே அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.

கடந்த ஆண்­டை­விட முன்­னேற்­றம் கண்­டிருக்­க­வேண்­டிய நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­கள், உண்­மை­யில் பின்னடை­வை­யையே சந்­தித்­துள்­ளன.

வடக்­கில் மக்­கள் போராட்­டங்­கள் பல கடந்த 7 மாதங்­க­ளாக நடை­பெற்று வரு­கின்­றன. அரசு மீது தமிழ் மக்­கள் மட்­டு­மல்­லர், சிறு­பான்மை மக்­கள் அனை­வ­ருமே அதி­ருப்­தி­ய­டைந்­தி­ருக்­கின்­ற­னர்.

அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­றுதி­கள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அத­னால் நில­மை­கள் இன்­னும் இன்­னும் மோச­ம­டைந்து வரு­கின்­ற­னவே தவிர, மேம்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.

முழு அடைப்­பு­க­ளும் போராட்­டங்­க­ளு­மாக வடக்கு அர­சி­யல் களம் இன்­ன­மும் சூடே­றிக்­கொண்டே இருக்­கின்­றது. தீர்­வுக்­கான அடிப்­படை என்று முன்­வைக்­கப்­பட்டுள்ள புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யும்­கூட சிங்­க­ள­வர்­கள் மத்­தி­யி­லும் தமி­ழர்­கள் மத்­தி­யி­லும் ஒரு சாரா­ரி­டத்­தில் கடும் விச­னத்­தையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அத­னைக் கிழித்­தெ­றி­வ­தற்­கும் அவர்­கள் தயா­ராக இருக்­கின்­ற­னர். இன­வா­தத்­தைக் கிளப்­பி­யா­வது புதிய அர­ச­மைப்­பைத் தோற்­க­டிப்­ப­தற்­கும் சில தரப்­பு­கள் தயா­ராக இரு­கக்­கின்­றன.

இவற்­றை­யெல்­லாம் தாண்டி, அர­சில் பங்­கா­ளி­யாக இருக்­கக்­கூ­டிய சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யே­கூட புதிய அர­ச­மைப்­புக்­குப் பல­மான எதிர்ப்­பைக் காட்­டி­யுள்­ளது. ஒற்­றை­யாட்­சியை மாற்­றக்­கூ­டாது, பௌத்த மதத்­துக்­கான முன்­னு­ரி­மையை மாற்ற இட­ம­ளிக்க முடி­யாது என்று போர்க்­கொடி தூக்­கி­யுள்­ளது.

மறு­பு­றத்­தில் வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்பு மற்­றும் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்பட்ட அதி­கா­ரங்­களை மீளப்­பெ­ற­மு­டி­யாத பொறி­முறை என்­பவை இல்­லாத புதிய அர­ச­மைப்பு ஒன்­றைத் தாம் ஏற்­கப்­போ­வ­தில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பும் பிடி­வா­த­மாக நிற்­கின்­றது.

இத்­த­கைய நிலை­யில் எதிர்­வ­ரும் பெப்­ர­வரி 4ஆம் திக­திக்கு முன்­பா­கத் தீர்வை அடைய முடி­யும் என்று தலைமை அமைச்­சர் கூறி­யி­ருப்­பது எப்­ப­டிச் சாத்­தி­ய­மா­னது என்­பதை அவர் தெரி­விக்­க­வில்லை.

இந்த மாதம் இடைக்­கால அறிக்கை மீதான விவா­தம் நாடா­ளு­மன்­றத்­தில் இடம்­பெ­றும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இடைக்­கால அறிக்கை மற்­றும் ஏற்­க­னவே வெளி­யான 7 உப குழுக்­க­ளின் அறிக்­கை­க­ளின் மீது விவா­தம் நடத்தி, இணக்­கப்­பாடு ஒன்­றைக் கண்­ட­டைந்த பின்­னர் அதன் அடிப்­ப­டை­யில் ஒரு புதிய அர­ச­மைப்பை வரைந்து அதற்கு நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை நிரூ­பிக்­க­வேண்­டும்.

அது நிறை­வே­றி­ய­தும் அந்­தப் புதிய அர­ச­மைப்பை மக்­க­ளி­டம் எடுத்­துச் சென்று அவர்­க­ளின் அங்­கீ­கா­ரத்­தைப் பெற­வேண்­டும்.

பெப்ரவரி மாதத்­திற்­குள் இவற்­றை­யெல்­லாம் எப்­படி முடிக்­கப்­போ­கி­றார்­கள் என்­கிற வழி­காட்­டல் வரை­ப­டம் ஒன்று வெளி­யி­டப்­ப­டாத நிலை­யில் அவர்­க­ளின் கதை­க­ளைக் கேட்­கும்­போது பார­தி­தான் நினை­வுக்கு வரு­கின்­றான்.

http://newuthayan.com/story/37591.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.